என் மலர்
நீங்கள் தேடியது "girl death"
- எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும்.
- குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும். குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் விரும்பத்தகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- தாளாளர், முதல்வரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்திய நிலையில் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, நேற்று மாலை பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில், வகுப்பு ஆசிரியை ஏற்கனவே நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செயின்ட் மேரீஸ் பள்ளி தாளாளர், முதல்வருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தாளாளர், முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால், தாளாளர், முதல்வரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்திய நிலையில் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர், தாளாருக்கு வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
- சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள்.
- ஆசிரியர்கள் தேஜஸ்வினியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பதனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜு. இவரது மனைவி ஸ்ருதி. இந்த தம்பதியின் ஒரே மகள் தேஜஸ்வினி (வயது 6). இவள் சாம்ராஜ்நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் நேற்று காலை சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள். 2 வகுப்புகள் முடிந்த நிலையில், வீட்டு பாட நோட்டை ஆசிரியரிடம் காண்பிக்க தேஜஸ்வினி வெளியே வந்துள்ளாள். அப்போது திடீரென்று அவள் மயக்கம் போட்டு கீழே விழுந்தாள். இதனால் சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர்கள் தேஜஸ்வினியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது தேஜஸ்வினி மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்.கே.ஜி. மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி மூவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் விழுப்புரத்தில் பெய்த கனமழையின் காரணமாக தொட்டி பராமரிக்கப்படாமல் இருந்ததால் குழந்தை வழி மாறி சென்றதன் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியின் தாளாளர், முதல்வர், வகுப்பு ஆசிரியர் ஆகிய 3 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி, மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.
மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
- அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின.
- அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அபி (வயது28). இவருடைய மனைவி நாகவேணி (25). இவர்களுக்கு கவிநிலா (6) என்ற மகள் இருந்தாள். கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.
காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி கிராமத்தில் வசிக்கும் வள்ளி என்ற பெண்ணும், நாகவேணியுடன் பெங்களூருவில் வேலைபார்த்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வள்ளி தனது சொந்த கிராமமான பூமாண்டஅள்ளிக்கு சிறுமி கவிநிலாவை மட்டும் அவரது பெற்றோர் அனுமதியுடன் அழைத்து வந்துள்ளார். வள்ளியின் பக்கத்து வீட்டில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார்.
நேற்று மதியம் சிறுமி கவிநிலா வள்ளியிடம் கூறிவிட்டு தர்மன் வீட்டின் மொட்டை மாடிக்கு விளையாட சென்றாள். அந்த மொட்டை மாடியில் சிறிய அறை ஒன்று உள்ளது.
அந்த அறையில் நாட்டு வெடிகள் (கயிற்றால் சுற்றப்பட்ட குண்டு வெடிகள்) அங்கு வைத்திருந்தனர். இதனிடையே அந்த அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் எதிர்பாராத விதமாக அந்த அறையின் ஒரு பக்க சுவர் கீழே இடிந்து விழுந்துள்ளது. மேலும் அந்த அறையும் இடிந்து சேதம் அடைந்தது.
அதே நேரத்தில் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி கவிநிலாவும் தூக்கி வீசப்பட்டு உடல் துண்டு, துண்டாகி கருகிய நிலையில் பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயங்களையும் சேகரித்தனர். பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி உயிரிழந்த செய்தி பெங்களூருவில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே விரைந்து வந்து தனது மகள் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் பன்றிகளை வேட்டையாட வெடி மருந்துகளை வாங்கிக் கொண்டு தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேர் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.
இதனால் தயாரித்த வெடிகளை காய வைத்து மொட்டை மாடியில் அறை யில் வைத்துள்ள போது எதிர்பாராதவிதமாக வெடி த்ததில் சிறுமி பலியாகி யுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீ சார் வழக்குபதிவு செய்து வீட்டின் உரிமையாளர் தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் வெடிக்காத நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.
- கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
- இடிபாடுகளில் சிக்கி சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் நேற்று மாலை புதிதாக கட்டப்பட்ட 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டெல்லி காவல்துறை, டெல்லி தீயணைப்பு துறையினர், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்தார். கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கி சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கட்டட விபத்தில் 12 பேர் பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண். விவசாயி. இவரது மனைவி கமலாதேவி. சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிப்புரிந்து வரும் இவர், தியாகராயநகரில் தனது 11 வயது மகள் ஹரிணியுடன் வசித்து வந்தார். ஹரிணி அதேப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி ஹரிணி வீட்டின் 3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி 3-வது மாடியில் இருந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஹரிணியை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுமியின் கண் மற்றும் தோல் பெற்றோரின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தலிங்க மடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்ப ராஜ் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மகள் சைலத்மீரா (10). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று சைலத்மீரா மற்றும் அவரது குடும்பத்தினர் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஏனாதிமங்கலம் கிராமத்திற்கு சென்றனர். அதன்பின்னர் சைலத்மீரா, தாய் மகாலட்சுமி இருவரும் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சைலத்மீரா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த தாய் மகாலட்சுமி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் ஆற்றில் சைலத்மீராவை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர் ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சைலத்மீராவின் உடல் மீட்கப்பட்டது.
இறந்த சைலத்மீராவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் தாய் கண்முன் மகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:
கோபி மொடச்சூர் ரோட்டை சேர்ந்தவர் தர்மதுரை. சோன்பப்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மனைவி பெயர் கமலேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகள் பெயர் சன்மதினா (வயது7).மகன் பெயர் கிருஷ்ணன்(8). இந்த நிலையில் சன்மதினா. கோபி அருகே உள்ள குழவி கரட்டில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றாள்.
நேற்று இரவு சிறுமி சன்மதினா பாட்டி வீட்டு முன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்தாள். இதில் படுகாயத்துடன் துடித்த சிறுமியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சன்மதினா பரிதாபமாக இறந்தாள். சிறுமியின் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவளது உடலை பார்த்து பெற்றோர் உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மகராஜன். இவரது மகள் வினிதா (வயது 3). இவள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். இன்று காலை சிறுமி வினிதா வழக்கம்போல் அங்கன்வாடிக்கு தனியாக நடந்து சென்றாள். ஆனால் அங்கன்வாடி பூட்டப்பட்டிருந்தது.
அப்போது அங்கு சிறுமியின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த செல்லப்பசாமி மகன் ராஜ்குமார் டிராக்டரில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் டிராக்டரை இயக்கி நகர்த்த முயன்றார். ராஜ்குமாரை பார்த்த சிறுமி வினிதா, மாமா என்று அழைத்தவாறு அவரை நோக்கி சென்றது. இதை கவனிக்காத ராஜ்குமார் டிராக்டரை பின்நோக்கி நகர்த்தினார்.
இதில் டிராக்டர் சிறுமி மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுமி வினிதா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் சப்-இன்பெக்டர் உமா மகேஷ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி பலியாகி கிடந்ததை பார்த்து அவரது தாய், பாட்டி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
வேலூர்:
வேலூர் அடுத்த நாயக்கன் நேரியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி இவரது மகள் ஹரிணி (வயது 5). இவர் கார்த்திகை தீபத்தன்று வீட்டில் அகல்விளக்குகளை ஏற்றி உள்ளார்.
அப்போது எதிர்பாராமல் அவர் அணிந்திருந்த ஆடையில் விளக்கில் இருந்து தீபற்றி எரிந்தது. உடல் முழுவதும் பற்றிய தீயால் சிறுமி அலறிதுடித்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிகக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு ஹரிணி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் ஆண்டிபட்டி நாச்சியார் புரத்தை சேர்ந்த ராஜகோபால் மகள் மீனாவிற்கும் கடந்த 2½ வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் பெண் குழந்தையும், 18 நாளில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மீனாவின் தந்தை ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் மீனா தற்கொலை செய்யவில்லை. அவரை கணவரும், மாமியாரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுவதாக குறிப்பிட்டு உள்ளார்.
திருமணமான நாளில் இருந்தே கூடுதல் வரதட்சணை கேட்டு மீனாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தங்களிடம் கூட பேச அனுமதிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணை அடிப்படையில் மீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மணிகண்டன், அவரது தாயார் பாக்கியலட்சுமி, சகோதரி ராஜாத்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மீனாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.