என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heat"

    • தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இன்று மற்றும் நாளை வரை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

    தமிழகத்தில் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இன்று மற்றும் நாளை வரை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

    26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
    • தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவானது.

    கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டின் அனேக இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.

    இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவானது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
    • சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது.

    திருப்பூர் :

    மலைக்கிராமங்கள், மற்றும் கிராமப்புற பகுதி களில் கோடைக்காலங்கள் வந்துவிட்டாலே பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து விடும். குளிர், மற்றும் மழைக்காலங்களில் பதுங்கி கிடக்கும் பாம்புகள் வெயில் காலம் அதற்கு ஏற்ற காலம் என்பதால் வசிப்பிடங்களில் எளிதாக வந்து செல்லும். இரவு நேரங்களில் மனிதர்கள் மிதித்துவிட்டாலோ அல்லது அதன் அருகில் சென்று விட்டாலோ அது தனது சுய பாதுகாப்புகாக கடித்து விடுகிறது. வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் பாம்பு கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து திருப்பூர் மருத்துவர்கள் கூறுகை யில்;- கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள், மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். செங்கற்கள், தேங்காய் மட்டைகள் மற்றும் பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறை ஆகியவற்றை அடி க்கடி பராமரித்து வைத்தி ருக்க வேண்டும்.. கூடிய வரைக்கும் செங்கற்கள், தேங்காய் மட்டைகளை வீட்டுக்கு அருகில் வைத்தி ருப்பதை தவிர்ப்பது நல்லது. சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது. குழித்தோண்டி அதில் புதைத்து விட வேண்டும். இரவு நேரம் மின்விளக்குகள் எரிய வேண்டும்.

    பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்த த்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதனை செய்ய கூடாது. காலம் பொன் போன்றது என்பது பாம்பு கடித்தவருக்கு தான் பொருந்தும். பாம்பு கடிப்ப ட்டவரை விரைவாக அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது தான் நல்லது. பெரும்பாலான தனியார் மருத்துவமனை களில் பாம்பு கடி மருந்துகள் இருப்பதில்லை.

    இயற்கை மருத்துவம் எனும் பெயரில் பாம்பு கடித்த இடத்தின் அருகே கிடைக்கும் பச்சை இலை சாறை ஊற்ற வேண்டும் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இதுவரை இதற்கு அறிவியல்பூர்வமான நிரூபணம் எதுவும் இல்லை. ஆனால் இவை யாவும் அறிவியலுக்குப் பொருந்தா தவை மட்டு மல்ல, உண்மை யும் அல்ல. இவற்றால் நேரம் வீணாகி பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட வருக்கு உயிர் போகும் ஆபத்துதான் அதிகமாகும்.

    எந்த வகை பாம்பு கடித்தது என்பதை மருத்து வர்களுக்கு தெரியப்படுத்து வதற்காக அந்தப்பாம்பின் வகையை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

    பாம்பு கடித்த இடத்தின் அருகே இறுக்கமான கயிறு உள்ளிட்டவற்றை கொண்டு கட்டுவதால் எந்த ஒரு பயனும் இருக்காது. ஒரு வேளை அப்படி கட்டப்ப ட்டால் ,அந்தக்கட்டு அக ற்றப்படுவதை நல்ல மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடைய பெரிய மருத்துவ மனைகள், மருத்துவக்க ல்லூரி மருத்துவமனை கள் உள்ளிட்டவற்றில் செய்வதே நல்லது. ஏனென்றால், இறுக்கமாக கட்டப்பட்டி ருந்த கட்டு பிரிக்கப்படும் பொழுது அந்த இடத்தில் இருந்து ரத்த ஓட்டம் அதிக மாகும். இதன் காரணமாக உடலின் பிற பாகங்களுக்கும் விஷம் சென்றடைந்து பாதிப்பும் அதிகமாகும். நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இந்த பாதிப்பை குறைப்பதற்கான சிகிச்சைகளை எளிதில் செய்ய முடியும்.

    கடித்தது எந்த வகை பாம்பு என்று ஆராய்ச்சி செய்து நேரத்தை கடத்து வதை விட, விரைவில் பாதிக்கப்பட்டவரை மருத்து வமனைக்கு கொண்டு செல்வதில்தான் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெ ன்றால், எந்த வகைப் பாம்பு கடித்து இருந்தாலும் பாம்பு கடிக்கு எதிராக வழங்க ப்படும் மருந்து ஒன்றுதான் கடிப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பாம்புக்கடி பட்ட பின்பு கயிறு கட்டுவதால் பலனி ல்லை என்பதையும் தாண்டி அந்த நச்சு கடிபட்ட இடத்திலேயே அதிகமாக தேங்கி இருப்பத ற்கும் கயிறு கட்டப்படுவது வழி வகுக்கும். இதன் காரணமாக கடிபட்ட இடத்தில் அணு க்கள் பாதிக்கப்பட்டு, சீழ் பிடிக்கும் நிலை கூட உண்டாகலாம் என்கிறார் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கோபால கிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில், நாக பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன். இந்த நான்கு வகைப் பாம்புகளே இந்தியாவில் அதிக பாம்பு க்கடி மரணத்துக்கு காரண மாக உள்ளன.

    ஒருவருக்கு பாம்பு கடித்தது தெரியவந்தாலோ அது கடித்து இருப்பது போல உணர்ந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்ற சில வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது. உடனடியாக கடி பட்ட இடத்தில் இறுக்க மான ஆடை அணிந்து இருந்தால் அதை அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம். பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்க மாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்க மாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும். பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி நச்சு உடலின் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது. எலாஸ்டிக் அல்லது பேண்டேஜ் இல்லாதபோது துணி, துண்டு ஆகியவற்றை கிழித்து பயன்படுத்தலாம். கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும். பார ம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளை விக்க கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூ டாது. மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்க ப்பட்டவரை இடது பக்க மாக ரெக்கவரி பொசி ஷனில் படுக்க வைக்கவும். மேலும் பாம்பு கடிப்பட்ட வரிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசி அவர் மனப்பயத்தை போக்க வேண்டும். வாகன வசதிகள் இல்லாத கிராமப்புறங்கள் என்றால் அரசு ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்தி பாம்பு கடித்து 1 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையை மேற்கொ ண்டால் பாம்பு கடிப்பட்ட வர் உயிரை காப்பாற்றி விடலாம். இவ்வாறு அவர் கூறினார். 

    • குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சுமை தூக்குவோர் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது.
    • நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், இளநீர் ஆகிய வற்றை விநியோகித்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. பொது மக்கள் வெப்பத்தின் தாக்கு தலில் இருந்து சமாளிக்க இளநீர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்கள் ஆகிய வற்றை உண்டு வருகின்றனர்.

    கோடை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பொதுமக்களுக்கு உதவும் வகையில், பொதுமக்கள் தாகம் தீர்க்க குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சுமை தூக்குவோர் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது.

    நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், இளநீர் ஆகிய வற்றை விநியோகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், கவுன்சிலர் ஜேம்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • 3 நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
    • அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் தஞ்சையில் கனமழை கொட்டியது.

    தஞ்சை அடுத்த திருவையாறில் கனமழை பெய்தது.

    தொடர்ந்து இடைவிடாத பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    திருவையாறில் மட்டும் ஒரே நாளில் 70 மி.மீ. அளவுக்கு மழை கொட்டியது.

    இதேபோல் வல்லம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், அய்யம்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யுமா? அல்லது அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

    திருவையாறு -70, திருக்காட்டுப்பள்ளி -55.40, பூதலூர் -53, அய்யம்பேட்டை -42, பாபநாசம்-32, தஞ்சாவூர் -25, வல்லம் -12.

    • வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.
    • கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் அளவு 106 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.

    மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் கடல் காற்று உள்ளே வர தாமதமாவதால் மாலையிலும் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.

    நேற்று பகலில் 106 டிகிரி வெயிலை கடந்த நிலையில் பிற்பகலில் ஆந்திர கடலோரத்தில் இருந்து தெற்கு நோக்கி வீசிய கடல் காற்று சென்னையின் வெப்பத்தை ஓரளவு தணித்தது. அடுத்த சில நாட்களுக்கும் வெயில் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.

    நேற்று பகல் 11 மணிக்கு மேல் கடல் காற்று வந்ததால் வெப்பம் குறைந்தது. அதே போல் இன்றும் வருமா? என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

    கொளுத்தும் இந்த வெயிலுக்கு இடையேயும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
    • வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

    இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    • அக்னி நட்சத்திர வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.
    • வெயிலின் காரணமாக பெரும்பாலானோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் என்று அழைக்கக்கூடிய அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் திடீரென கோடை மழை பெய்த நிலையில், தற்போது கடுமை யான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள அக்னி வெயிலால் மாநகரப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் பகலில் வெகுவாக குறைந்து ள்ளது. பெரும்பா லான வாகன ஓட்டிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் குடை பிடித்தபடியும், முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்கின்றனர். ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசுகிறது.

    கடுமையான வெயிலின் காரணமாக பெரும்பாலா னோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பணிக்கு செல்லும் பெண்கள் குடைபிடித்தபடி சாலைகளில் செல்கின்றனர். பெரும்பாலா னோர் வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள் இருக்கும் கடைகளை நாடி செல்கின்றனர்.

    இதனால் இளநீர், தர்பூசணி, பதநீர், நுங்கு, வெள்ளரிக்காய் கடைகளில் கூட்டமாக சென்று அவர்கள் அருந்துவதை காண முடிகிறது. ஒரு இளநீர் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், ஒரு நுங்கு ரூ.20 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சிலர் நுங்கு சர்பத், இளநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து வழங்குவது உள்ளிட்ட வித்தியாசமான முறைகளில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    அக்னி நட்சத்திரம் முடிவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் வெயிலின் தாக்கம் விரைவில் குறைந்து விடும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • தார்ச்சாலை வெப்பத்தால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
    • பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர்பானம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    விசாக திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லுக்கு பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்ற னர்.

    சாலையில் தண்ணீர்

    இதன்படி அவர்கள் நேற்று கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் போது வெயிலின் உக்கிரத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டனர். அத்துடன் தார்ச்சாலை வெப்பத்தால் சூடு தாங்காமல் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலான பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் ஏற்பாட்டில் பக்தர்கள் செல்லும் சாலைகளில் டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பக்தர்கள் மகிழ்ச்சி

    இதனால் ஏற்பட்ட குளுமை காரணமாக பக்தர்கள் மகிழ்ந்தனர். மேலும் பேரூராட்சியின் பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர் பானம் இலவசமாக வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் விபத்து களை தவிர்க்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்க ர்களை பக்தர்களின் பின்புறம் ஒட்டு வதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டன.

    இதில் வார்டு கவுன்சி லர்கள் வெங்கடேஷ், ஆறுமுக நயினார், பேரூ ராட்சி சுகாதார மேற்பார் வையாளர் கார்த்திக் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
    • கோழி இறைச்சி கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர் :

    அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் கோழி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.250க்கு விற்பனையான கோழி இறைச்சி தற்போது கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.

    இறைச்சி கோழி வி கோப்புபடம். ற்பனையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், வெயில் காலத்தில் உற்பத்தி குறைந்து கோழி இறைச்சி விலை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு வெயில் மிகவும் அதிகம் என்பதால் விலை அதிகரித்துள்ளது. இன்னும் 15 நாட்கள் வரை விலையில் மாற்றமிருக்காது. மழை துவங்கினால் விலை குறையும் என்றார். 

    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சீர்காழி:

    வளிமண்டலத்தில் நிலவும் வறண்ட நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் கடலோர மாவட்டங்களில் காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×