search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hollywood"

    • பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
    • இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார்.

    பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா நடித்துள்ள சிடாடெல் ஹனி பன்னி (CITADEL HONEY BUNNY) ஹாலிவுட் வெப் தொடர் நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜ் & டிகே இயக்கியுள்ள இந்த வெப் தொடரின் ட்ரைலர் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது.

    ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரின் யூனிவர்சின் ஒரு அங்கமாக தான் இந்த புதிய சிடாடெல் வெப் தொடர் உருவாகியுள்ளது.

    இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இது கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 13-வது படம் ஆகும்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மேட் டிமன் நாயகனாக நடிக்கவுள்ளார்.

    மேட் டிமன் இதற்கு முன்னதாக கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2014-ல் வெளிவந்த இன்டர்ஸ்டெல்லர் மற்றும் ஓபன் ஹெய்மர் படங்களில் நடித்துள்ளார்.தற்போது 3 ஆவது முறையாக நோலன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

    இந்தப் படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நோலனின் மனைவி எம்மா தாமஸ் தயாரிக்கிறார். இது கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 13-வது படம் ஆகும்.

    இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்ஸ் ஃபார்மெட்டில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான 'ஓபன்ஹெய்மர்' திரைப்படத்திற்கு 7 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 60 வயதான கீனு ரீவ்ஸ் முதல் முறையாக தொழில்முறை கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.
    • கார் பந்தயத்தில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மேட்ரிக்ஸ், ஜான்விக் போன்ற படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் இண்டியானாபோலிஸ் மோட்டார் ஸ்பீட்வேயில், டொயோட்டா ஜிஆர் கோப்பையில் பங்கேற்றார். இதன்மூலம் தொழில்முறை கார் பந்தயத்தில் அவர் அறிமுகமானார்.

    60 வயதான கீனு ரீவ்ஸ் பந்தயத்தின் 45 ஆவது நிமிடத்தில் ரேஸ் தடத்திலிருந்து வெளியேறி புல் தரைக்குள் சென்றார். பின்னர் சுதாரித்து கொண்டு மீண்டும் ரேஸ் தடத்திற்குள் நுழைந்தார். இதனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

    35 போட்டியாளர்களின் முதல் 31 இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர். அவ்வகையில் இப்போட்டியில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
    • அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.

    பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சமீபத்தில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் 'சத்குரு' அவர்களின் படமும் இடம்பெற்று உள்ளது. அந்தப் புகைப்படங்களுடன் வலிமையான காப்பாளர்கள் தன்னை என்றும் சூழ்ந்து இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளார்.

    நடிகர் வில் ஸ்மித், உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பேட் பாய்ஸ் (Bad Boys), மென் இன் பிளாக்(Men in Black), ஐ ரோபாட் (I Robot), தி பர்சுயூட் ஆப் ஹாப்பினஸ் (The Pursuit of Happiness) ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். அவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

    அதில் அவர், 'நான் எப்பொழுதும் வலிமையான காப்பாளர்களால் சூழப்பட்டு உள்ளேன்' என்று குறிப்பிட்டு உள்ளார். முதல் புகைப்படத்தில் வில் ஸ்மித் அவரின் தந்தை மற்றும் கார்த்தே கிட் படத்தில் நடித்து புகழ்பெற்ற அவரின் முதல் மகன் இருக்கின்றனர். அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.

    மேலும் மூன்றாவது புகைப்படத்தில் வில் ஸ்மித், பிரபல எழுத்தாளர் ஜெய் ஷெட்டி மற்றும் சத்குரு ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

    கடந்த 2020-ஆம் ஆண்டு சத்குரு அவர்கள் அமெரிக்காவில் உள்ள பூர்வகுடிமக்களின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக அந்நாட்டில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

    அப்போது சத்குருவை தனது வீட்டிற்கு வில் ஸ்மித் அவர்கள் அழைத்து இருந்தார். அதன்படி சத்குரு அவர்களும் ஸ்மித்தின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வெளியான புகைப்படங்களும், வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.



    • மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
    • ஆஸ்கார் விழாவில், ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது.

    WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.

    16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெறவுள்ளார்.

    47 வயதாகும் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர்.

    2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41 இல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜான் சீனா அறிவித்தார்.

    மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

    • பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து கான்சர்ட் நடந்துள்ளது.
    • 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர்

    அமரிக்கவைச் சேர்த்த பிரபல பாடகியான டெய்லர் ஸ்விப்ட் இசைத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஐகானாக உள்ளவர். எல்லைகள் தாண்டி உலாமெங்கிலும் இவரின் பாடல்களுக்கு பலர் பைத்தியாக உள்ளனர். தனது பாடலக்ளை தானே இயற்றி கான்சர்ட்களில் பாடிவரும் டெய்லர் ஸ்விப்ட் நின்றால் செய்தி உட்கார்ந்தால் செய்தி என ஆகிவிட்ட நிலையில் பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து நடந்த இவரின் கான்சர்ட்டில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

     

    அந்த கான்சர்ட்டில் தனது சிறந்த பாடல்களில் ஒன்றான 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர். இந்த பாடல் சுமார் 10 நிமிட நீளம் உடையது ஆகும். 'All Too Well' பாடலை விடமால் தம் கட்டி சிவப்பு நிற ஆடையில் ஜொலித்த டெய்லர் ஸ்விப்ட் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அவரது வாய்க்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பூச்சி நுழைந்ததால் பாடலைத் தொடர அவர் சிரமப்பட்டார்.

    இடையில் பாடுவதை நிறுத்திவிட்டு இருமத் தொடங்கிய டெய்லர் ஸ்விப்ட், நான் ஒரு பூச்சியை விழுங்கிவிட்டேன், நீங்கள் தொடர்ந்து பாடுங்கள் என்று ரகிகர்களிடம் கூறினார். பின்னர் நிலைமையை சமாளித்துக்கொண்டு மீண்டும் அவர் பாடத்தொடங்கினார்.இந்த சமபவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கான்சர்ட்டில் ஹாலிவுட் நடிகர்கள் டாம் குரூஸ், மிலா குனிஸ், ஆஸ்டோன் குட்சர், டெய்லர் ஷிப்டட்டின் காதலன் கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டது குறிபிடித்தக்கது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக பிரியங்கா சோப்ரா வலம் வந்தார்.
    • ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.

    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

    கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோன்சை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரத்த காயங்களுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஹாலிவுட் திரைப்படமான தி பிளப் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்படும் போது இந்த காயங்கள் ஏற்பட்டதாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.

    • தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.
    • கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ரீமேக்.

    மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

    இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.

    திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகத்தினை தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்து ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், திரிஷ்யம் திரைப்படத்தின் 1ம் மற்றும் 2ம் பாகம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒரு இந்தியத் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

    கடந்த ஆண்டு கொரிய மொழியில் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமத்தை பனோரமா ஸ்டுடியோஸ் பெற்ற நிலையில், தற்போது கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டிலும் அதனை ரீமேக் செய்ய முன்வந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆதிபுருஷ் திரைப்படத்தை ஒப்பிட்டால் இதற்கு 6 மடங்கு அதிகம் செலவானது
    • இங்கிலாந்தில் படப்பிடிப்பு நடந்ததால் தயாரிப்பில் 25 சதவீதம் வரி சலுகை கிடைத்தது

    சில வருடங்களாக இந்திய திரைப்படங்கள் உலகெங்கும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் புதிய உச்சங்களை தொடுகின்றன.

    வசூலை வாரி குவிப்பதில் இந்திய திரைப்படங்கள் சாதனைகள் புரிவதால், அடுத்தடுத்து உருவாக்கப்படும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களை தயாரிக்கும் செலவும் பல கோடிகள் அதிகரிப்பதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த வருடம் வெளியான "ஆதிபுருஷ்" திரைப்படம், சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாரானது.


    2015ல், ஹாலிவுட்டில் உருவாகி உலகெங்கும் வெளியான "ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்" (Star Wars: The Force Awakens) எனும் ஆங்கில படம், திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம்.

    பிரபல ஹாலிவுட் முன்னணி ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு (Harrison Ford) கதாநாயகனாக நடித்து, ஜே ஜே அப்ரம்ஸ் (JJ Abrams) இயக்கிய இப்பட செலவு சுமார் ரூ.3000 கோடி ($447 மில்லியன்) மதிப்பை தொட்டது.

    படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனமும் இணைந்து முடிவெடுத்தனர். எனவே, திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகளை இங்கிலாந்தின் பைன்வுட் ஸ்டூடியோவில் படம் பிடித்தனர். இதன் மூலம் 25 சதவீத செலவு தொகை அந்நாட்டில் வரிவிலக்கு மூலம் திரும்ப கிடைத்தது.

    இத்திரைப்படம் $2.07 பில்லியன் வசூல் புரிந்து சாதனை புரிந்தது.

    இப்பட பட்ஜெட், ஆதிபுருஷ் படத்திற்கு ஆன செலவை விட 6 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்
    • அவர்களுக்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு

    தடையின்றி மக்களை மகிழ்வித்து வரும் ஹாலிவுட் திரையுலகம் ஒரு நீண்ட வேலை நிறுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

    குறைந்து வரும் ஊதியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தினால் வரும் ஆபத்து ஆகிய காரணங்களுக்காக ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் இவர்களுடன் கைகோர்க்கும் விதமாக திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களும் இணையப்போகின்றனர்.

    டாம் க்ரூஸ், ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் உள்ளிட்ட முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட 1,60,000 கலைஞர்களை கொண்ட ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

    வால்ட் டிஸ்னி மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற மிகப்பிரபலமான நிறுவனங்களை உள்ளடக்கிய அலையன்ஸ் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்புடன் ஒரு புதிய தொழிலாளர் ஒப்பந்தத்தை எட்டும் முயற்சி தோல்வியடைந்ததால் இந்த அழைப்பு விடப்பட்டிருக்கிறது.

    இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களுடனான தொழிலாளர் ஒப்பந்தங்களின் கீழ் வராத தனியார் திரைப்பட தயாரிப்புகளை தவிர, அமெரிக்காவில் எழுதி உருவாக்கப்படும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அனைத்து தயாரிப்புகளையும் கட்டுப்படுத்தும்.

    இதனால் "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்" (Stranger Things) மற்றும் "தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்" (The Handmaid's Tale) போன்ற பிரபலமான தொடர்களின் தயாரிப்பு இப்போது நீண்ட தாமதத்தை எதிர்கொள்கிறது. வேலைநிறுத்தம் தொடர்ந்தால், சில முக்கிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போகலாம்.

    அமெரிக்காவில் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் திரையரங்குகளில் தற்போது வெளியிடப்பட உள்ள திரைப்படங்கள் உடனடியாக பாதிக்கப்பட போவதில்லை.

    ஆனால் மார்வெல் நிறுவன தயாரிப்பான பிளேட் (Blade) மற்றும் தண்டர்போல்ட்ஸ் (Thunderbolts) போன்ற எதிர்கால வெளியீடுகள் தாமதமாகும். தொழிலாளர் மோதல்கள் தீர்க்கப்படும் வரை அவை நிறுத்தி வைக்கப்படலாம். வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

    அமேசான் நிறுவனத்தின் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் எனப்படும் இணையவழி பொழுதுபோக்குகளில் கொரியாவிலும் இந்தியாவிலும் தயாரிக்கப்படும் உள்ளூர் மொழி நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்க முடியும். ஆனால் ஹாலிவுட் தயாரிப்புகள் இடைநிறுத்தப்படும்.

    இது போன்றதொரு வேலைநிறுத்தம் கடைசியாக 1960-ல் ரொனால்டு ரீகன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியானார்.

    பே வாட்ச், எ கிட் லைக் ஜாக், இஸ்னாட் போன்ற படங்களை தொடர்ந்து, மீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருக்கிறார். #PriyankaChopra
    தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் பிரபல அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக லண்டன் பத்திரிகையில் செய்தி வெளியானது.

    இது வதந்தி என்று பிரியங்கா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது ‘த ஸ்கை இஸ் பிங்க்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே பே வாட்ச், எ கிட் லைக் ஜாக், இஸ்னாட் ஆகிய ஹாலிவுட் படங்களில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். தற்போது இன்னொரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன். நல்ல கதைகளை சொல்வதில் விருப்பம் கொண்ட இரண்டு பெண்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது. விரைவில் சினிமாவில் சந்திக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

    இந்த படம் இந்திய திருமணங்கள் பற்றிய நகைச்சுவை படமாக தயாராகிறது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தை மிண்டி காலிங் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
    ×