என் மலர்
நீங்கள் தேடியது "IAS officer"
- 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார்.
- இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
மார்ச் 29 தேதியிட்ட உத்தரவில், அமைச்சரவையின் நியமனக் குழு அவரை நிரந்தர அடிப்படையில் பிரதமரின் தனி செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
யார் இவர்?
நிதி திவாரி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மஹ்மூர்கஞ்சை சேர்ந்தவர். இந்தப் பகுதி பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு, வாரணாசியில் கூடுதல் ஆணையராக (வணிக வரி) பணியாற்றினார். ஊடக அறிக்கைகளின்படி, பின் 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார், அன்றிலிருந்து பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நவம்பர் 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார்.

இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார். அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார்.
மோடிக்கு தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு தனி செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நிதி திவாரியும் மோடியின் தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
- ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்
- விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது
கடந்த வருடம் ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலின்போது அங்கு அரசியல் களத்தில் அதிகம் ஒலித்த பெயர் வி.கே. பாண்டியன். தமிழரான இவரை முன்வைத்தே பெரிய பிரச்சாரங்களை பாஜக முன்னெடுத்தது.
24 வருடங்களாக ஒரிசாவை ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள அரசு கடந்த தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைய முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று.
ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார். பின் 2023 இல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்த வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.
"நவீன் பட்நாயக் அவரது அரசியல் வாரிசாக வி.கே. பாண்டியனை அறிவிப்பார், ஒடிசா ஒரு தமிழனின் கையில் சென்றுவிடும்" என்பதே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் ஒடிசா மக்களிடம் பதிய வைத்த பிம்பம். ஆனால் நவீன் பட்நாயக் அதை முற்றிலுமாக மறுத்தார்.

நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்து பாஜக கோட்டையை பிடித்த பின்னர், தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பதாக பாண்டியன் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது வி.கே. பாண்டியனின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர். கார்த்திகேயன், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.
2000 பேட்ச் ஒடிசா கேடர் அதிகாரியான சுஜாதா, தற்போது அம்மாநில நிதித்துறையில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். தகவலின்படி, அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார்.
சர்ச்சை என்ன?
கடந்த வருடம் வரை மிஷன் சக்தி துறையில் ஆணையர் மற்றும் செயலாளராகப் பணியாற்றி வந்த சுஜாதா, மே 2024 இல், பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதன் காரணமாக சுஜாதாவை பொதுமக்கள் சாராத துறைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு, தேர்தலில் பிஜு ஜனதா தளம் தேர்தலில் தோல்வியடைந்ததால் 6 மாத விடுப்பு எடுத்தார் சுஜாதா. கடந்த வருடம் நவம்பர் 26 வரை அவர் விடுப்பில் இருந்தார்.
அதன்பிறகு விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது. இந்நிலையில் சுஜாதா விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளார்.
- புதிதாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றிருந்தார்.
- தங்கி இருந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
நாமக்கல்:
சேலம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு டேன்மேக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்தவர் கதிரவன். சேலம் டேன்மேக் நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சேலம் டேன்மேக் நிறுவனத்தில் மேலாண் இயக்குனர் பதவிலிருந்து வேறொரு துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இன்று காலை தனது புதிதாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றிருந்தார். சென்னையில் தங்கி இருந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கதிரவனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரம் ஆகும்.
இது குறித்து தகவல் அறிந்து அவரது உறவினர்கள் சென்னை சென்றனர்.
முதுகலை வேளாண்மை பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை கலெக்டராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார்.
2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார்.
சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018--ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.
- தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னை:
தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் பிரியா ரவிச்சந்திரன்.
கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தீயணைப்பு துறையில் திறம்பட பணியாற்றி வருகிறார்.
மாநில அரசின் பரிந்துரையின்படி ஆண்டு தோறும் காலியாக இருக்கும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இதன்படி 2022-ம் ஆண்டு காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடத்துக்கு தீயணைப்பு இணை இயக்குனரான பிரியா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
- பதிவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றது.
- பயனர்களின் கவனத்தை ஈர்த்த பதிவு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மிராஜ் குப்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுபம் குப்தா தனது உபயோகத்திற்காக உருவாக்கி உள்ள தனித்துவமான விசிட்டிங் கார்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த விசிட்டிங் கார்டில் சாமந்தி செடிகளின் விதைகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த விசிட்டிங் கார்டுகளின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சுபம் குப்தாவின் பதிவில், இனிமேல் எனது அலுவலகத்துக்கு வருபவர்கள் இந்த அட்டையை பெறுவார்கள். அதனை நடும் போது அழகான சாமந்தி செடியாக வளரும் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றது. மேலும் பயனர்களின் கவனத்தை ஈர்த்த இந்த பதிவு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.
சுற்றுச்சூழலை காப்பதற்கான நல்ல முயற்சி. நம் நாட்டில் இப்படிப்பட்ட ஒரு பொறுப்பான அதிகாரி இருப்பதற்காக பெருமைப்படுகிறேன் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், உங்களது புதுமையான யோசனை பாராட்டுக்குரியது. மறுசுழற்சி செய்யக்கூடிய அட்டைகளை எங்கு அச்சிடுவது என்பதை தயவு செய்து பகிரவும் என பதிவிட்டுள்ளார்.
- போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
- ஐ.ஏ.எஸ். அதிகாரி, ‘ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்’ என்று பதற்றத்துடன் கூறினார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி பணிகள் முடிந்ததைத்தொடர்ந்து, அந்த சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, ரவிசங்கர் பிரசாத் எம்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, 'மாநிலத்தின் நலனுக்காக சாலைப்பணிகளை விரைந்து முடியுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் கால்களில்கூட விழுகிறேன்' என்று கூறியபடி அங்கிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நோக்கி நெருங்கினார் நிதிஷ்குமார்.
இதனால் மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுதாரித்துக்கொண்ட அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, பல சில அடிகள் பின்வாங்கி, 'ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்' என்று பதற்றத்துடன் கூறினார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகியது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பலம் குறைந்த முதல்-மந்திரியால் இதைத்தான் செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இதுபோன்ற வசதிகள் கொடுக்கப்படுவதில்லை.
- பூஜா கேட்கரின் அடாவடித்தனம் எல்லை மீறி போகவே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
புனே:
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் பூஜா கேட்கர். பயிற்சியின்போது இவர் தனக்கு தனி அலுவலக அறை, காருக்கு வி.ஐ.பி. எண், தனி தங்குமிடம், உதவியாளர் வேண்டும் என கேட்டு அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.
பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இதுபோன்ற வசதிகள் கொடுக்கப்படுவதில்லை. இருந்தாலும் அவர் இந்த வசதிகளை கேட்டு உயர் அதிகாரிகளை நச்சரித்து வந்துள்ளார்.
இதற்கிடையே புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறையை ஆக்கிரமித்து கொண்ட பூஜா கேட்கர், அறைக்கு வெளியே இருந்த பெயர் பலகையை தூக்கிவிட்டு தனது பெயர் பலகையை மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஒப்பந்ததாரர் ஒருவர் கொடுத்த விலையுயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.
பூஜா கேட்கரின் அடாவடித்தனம் எல்லை மீறி போகவே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வாசிம் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடிக்க அவருக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
- பூஜா இந்த பணிக்கு தேர்வானதிலும், சர்ச்சைகள் எழுந்துள்ளது.
- பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். யு.பி.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.
இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார். மேலும் கூடுதல் கலெக்டர் அஜய்மோர் இல்லாத போது அவரது அறையின் முன் அறையை பூஜா ஆக்கிரமித்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. இவர் மீதான புகார்களை தொடர்ந்து மாநில தலைமை செயலாளருக்கு புனே மாவட்ட கலெக்டர் சுகாஸ் திவாசே கடிதம் அனுப்பினார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே பூஜா இந்த பணிக்கு தேர்வானதிலும், சர்ச்சைகள் எழுந்துள்ளது. தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தாராம். ஆனால் அந்த குறைபாடுகளை உறதி படுத்த கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவ சோதனைக்கான சம்மன்களை 5 முறை பெற்றுக்கொள்ள மறுத்த அவர், 6-வது சம்மனை ஏற்று பாதி சோதனையில் மட்டும் கலந்து கொண்டதாகவும், பார்வை இழப்பை மதிப்பிடுவதற்கான சோதனையில் அவர் பங்கேற்கவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளது.
மேலும் சிவில் சர்விஸ் தேர்வு முகமையில் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் இருப்பதாக சமர்ப்பித்து, கிரீமிலேயரில் இல்லையென்பதற்கான சான்றிதழை பெற்று ஓ.பி.சி. பிரிவில் சலுகை பெறுவதற்கான சாதி சான்றிதழை சமர்ப்பித்ததாக புகார் கூறப்படுகிறது.
இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும் திலீப் கணக்கு காட்டி இருந்தார். ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறாக பூஜாகேத்கர் மீது அடுக்கடுக்கான புகார்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில் அவரது பணியிட மாற்றம் தொடர்பாக புனே கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் பூஜாகேத்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா தலைமை செயலாளருக்கு சிவசேனா எம்.பி. மிலிந்த் தியோரா கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தகுதி மற்றும் நெறிமுறைகள் இல்லாதவர்கள் முக்கியமான பொதுப்பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது.
- பூஜா கேத்கர் மீது புகார் தெரிவித்ததை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
- விசாரணை கமிட்டி முன் கருத்துகளை எடுத்து வைப்பேன் என பூஜா கேத்கர் தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேத்கர் தனது சொந்த ஆடி காரில் சைரன் மற்றும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கர் ஒட்டிச் சென்றுள்ளார்.
பயிற்சி அதிகாரிகளுக்கு இல்லாத வசதியை அவர் அலுவலகத்தில் கேட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளருக்கு புனே ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் தெரிவித்ததை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக தெரிவித்து மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் (பி.டபிள்யூ.பி.டி) இவர் வேலைக்கு சேர்ந்தார் என குற்றம்சாட்டப்பட்டது. அவரது தந்தையின் சொத்து மதிப்பு, அவரது தாய் துப்பாக்கியால் மிரட்டினது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்ததால், இதுகுறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அவர் செய்தது தவறு என கண்டறியப்பட்டால் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவர் பயன்படுத்தி வந்த கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, விசாரணை கமிட்டி முன் கருத்துகளை எடுத்து வைப்பேன் என பூஜா கேத்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்த மகாராஷ்டிர அரசு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார்.
- தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் நகராட்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார். கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதால் கலெக்டர் பொறுப்பில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பலர் ஆணையாளராக நியமிக்கப்பட்டனர். அதன்படி கடந்த ஆணையராக காந்திராஜ் இருந்தார்.
நேற்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி கடலூர் மாநகராட்சி ஆணையாளராக ஐ.ஏ.எஸ்.பொறுப்பில் உள்ள அனு என்பவரை தமிழக அரசு நியமித்தது.
கடலூர் மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐ.ஏ.எஸ். பொறுப்பில் உள்ள அனு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில்குமார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று உள்ள நிலையில் அவரது மனைவி அனு கடலூர் மாநகராட்சியில் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
- பாலியன் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது.
------------
நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அளித்து வந்துள்ளார்.
அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழு விரைகிறது.
அதன்படி, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது. இந்த குழு நாளை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறது.
2 நாட்கள் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்த உள்ளனர்.
15 நாளில் பரிந்துரை அறிக்கை அளிக்க முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வேதா டவுன் மார்வாடே பகுதியில் வசித்துவந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் பக்வத்(வயது 57). இவரது மனைவி சேனாலி. இவரது வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன்பேரில் போலீசார் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது விஜய்குமார் பக்வத் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். அவரது மனைவி சேனாலி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார்.
போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விஜய்குமார் பக்வத் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. சேனாலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் விஜய்குமார் பக்வத் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. வீட்டில் அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.