என் மலர்
நீங்கள் தேடியது "Inspector"
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
- பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் தினேஷ் (வயது 32).
இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இவரை அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.
பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.
தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் உடனே விடுவிக்க வேண்டும் எனக் கூறி அவரது தங்கைகள் மேனகா (31), கீர்த்திகா (29) போலீசாரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர்களை போலீசார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மேனகா , கீர்த்திகா ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் துணை போலீஸ் பிரண்டு சோமசுந்தரம் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தொடர்ந்து இன்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- காயம் அடைந்த நபரை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
- உரிய நேரத்தில் உதவி செய்த இன்ஸ்பெக்டர் சிவஆனந்தை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.
சென்னை:
சென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே கோயம்பேடு நோக்கி செல்லும் சாலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்ட நிலையில் குப்புற படுத்தபடி அவர் மயங்கினார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். யாரும் அருகில் கூட செல்லவில்லை. ஆனால் மயங்கி கிடந்தவரை சுற்றி கூட்டம் கூடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நேரத்தில் அந்த வழியாக சென்னை மதுரவாயல் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் தனது வாகனத்தில் வந்தார்.
சாலையில் ஒருவர் மயங்கி கிடப்பதையும் சுற்றி நின்று ஆட்கள் வேடிக்கை பார்ப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கீழே இறங்கி சென்று பார்த்தார். கூட்டத்தை கலைய செய்துவிட்டு தலை குப்புற மயங்கி கிடந்த நபரை நேராக புரட்டினார்.
அப்போது அவருக்கு மூச்சு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் சிவஆனந்த், காயத்துடன் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றும் முயற்சியில் வேகமாக இறங்கினார்.
அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி தனது வாகனத்தில் இருந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து விரித்தார்.
இதையடுத்து அங்கிருந்த சிலரது உதவியுடன் காயம் அடைந்த நபரை சரக்கு ஆட்டோவில் தூக்கிபடுக்க வைத்து தனது போலீஸ் வாகனத்தை சைரன் ஒலி எழுப்பியவாரே முன்னால் போகச் சொன்னார். டிரைவர் தீபன் சக்கரவர்த்தி போலீஸ் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றார்.
இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சரக்கு வாகனத்தில் உயிருக்கு போராடிய நபருடன் அமர்ந்து பயணித்தார்.
பின்னர் அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காயம் அடைந்த நபரை சேர்த்து சிகிச்சை அளித்தனர். இவர் வந்த மோட்டார் சைக்கிளில் பை ஒன்று இருந்தது. அதனையும் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் பத்திரமாக எடுத்துச் சென்றார்.
காயம் அடைந்த நபர் மயக்க நிலையிலேயே இருந்ததால் அவரை பற்றிய தகவல்கள் ஏதும் உள்ளதா? என்று பையை எடுத்து பார்த்தார்.
அப்போது அவர் கண்ட காட்சி தூக்கிவாரிப் போட்டது. பையில் ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பில்லுடன் இருந்தன. செல்போன் ஒன்றும் இருந்தது.
காயம் அடைந்த நபர் அப்போதும் மயக்கம் தெளியாமலேயே இருந்தார். இதனால் அவர் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்று பார்த்து போன் செய்து விசாரித்தார். அப்போதுதான் 1½ கோடி மதிப்புள்ள 340 பவுன் நகையுடன் மயங்கி கிடந்தவரின் பெயர் அரிகரன் என்பது தெரியவந்தது. 54 வயதாகும் இவர் மேற்கு மாம்பலத்தில் வசித்து வருகிறார். தங்க நகைகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
அங்கிருந்து பிரபல நகை கடை ஒன்றிற்கு நகைகளை கொண்டு சென்றதும், அப்போதுதான் விபத்தில் சிக்கி மயங்கி கிடந்ததும் தெரியவந்தது. சரியான நேரத்தில் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் சம்பவ இடத்துக்கு சென்று அரிகரனின் உயிரை காப்பாற்றியதுடன் ரூ.1½ கோடி நகையையும் மீட்டுள்ளார்.
இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் நகை குறித்து விசாரணை நடத்தி உரியவர்களிடம் நகையை ஒப்படைத்தார்.
இதன்படி நகை கடையில் இருந்து கதிரவன் என்பவர் வந்து நகையை பெற்றுக் கொண்டார்.
உரிய நேரத்தில் உதவி செய்து நகைகளையும் பத்திரமாக ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் மற்றும் டிரைவர் தீபன் சக்கரவர்த்தியை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார். இருவருக்கும் வெகுமதி வழங்கப்பட உள்ளது.
- போதை பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா கைது செய்தார்.
- திருச்சியில் நடைபெற்ற விழாவில் விஜய அனிதாவுக்கு விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடல் பிராந்திய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், குற்றவாளிகளை கைது செய்து கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
திருச்சி சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சர்வதேச சுங்க தின விழாவில் தூத்துக்குடி மாவட்ட குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு திருச்சி சுங்க ஆணையர் அணில் விருது வழங்கி கவுரவித்து பாராட்டினார்.
- நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
- நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள ராமநா யக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). மின்வாரிய ஊழி யரான இவர், நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர், புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், விஸ்வ நாதனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதற்கி டையே அங்கு வந்த விஸ்வநாதன் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். போலீ சார் நடத்திய விசா ரணையில், விஸ்வநாதன் மின்சார வாரிய ஆய்வாள ராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மின்வாரிய ஊழியர் விடுமுறையில் சென்ற நிலையில், இவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி பணி செய்தபோது, எதிர்பா ராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
- மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவும் கவுன்சிலருமான கண்ணப்பன் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட44 வது வார்டு பகுதியில் குருநாதர்வீதி , அர்த்தனாரிவீதி , செளண்டம்மன் கோவில் வீதி , கோவிந்தர்வீதி , எம்.என்.ஆர். லைன் , சின்னத்தோட்டம் ,செல்லப்பபுரம் , குப்புசாமிபுரம் , எல்.ஐ.சி.ரோடு ,காமாட்சி அம்மன் கோவில்வீதி பகுதிகளில் இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
ஆகவே , மேற்கண்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்துவதோடு தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ள வேண்டும். 44-வது வார்டு பகுதி மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.மேலும் காணாமல் போன இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
- இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 43). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி ஆனந்தவள்ளி விசாரிக்க தொடங்கினார். அப்போது சாட்சி கூண்டில் நின்று கொண்டிருந்த வழக்கின் அப்போதைய விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனை எதிர் கூண்டில் நின்ற கணேசன் அவதூறாக பேசி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையின் போது நீதிபதி முன்பு வைத்தே இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசிய கணேசனிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலீசாரும், கணேசனிடம் இனி இந்த தவறு நடக்காது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
- ஆலங்குளம் போலீஸ் உட்கோட்டத்தில் 7 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது
- நிரந்தரமாக இன்ஸ்பெக்டர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் உட்கோட்டத்தில் ஆலங்குளம், வி.கே.புதூர், ஊத்துமலை, சுரண்டை, பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உட்கோட்டத்தின் தலைமையிடமான ஆலங் குளம் போலீஸ் நிலையத்தில் அண்டை கிராமங்களை சேர்ந்த புகார்கள் விசாரி க்கப்பட்டு வருகிறது.
வளர்ந்து வரக்கூடிய நகரமான ஆலங்குளத்தில் தினமும் வரும் புகார்களை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் இல்லை எனவும், நிரந்தரமாக நிய மிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அம்பை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்ப ட்டார். அதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் பொறுப்பு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பு என்பதால் ஆலங்குளத்திற்கு அடிக்கடி வருவதில்லை.
இதனால் புகார்கள், கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களும் தன்னிச்சையாக செயல் படுவது போல் தோன்று கிறது. எனவே உட னடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்றனர்.
- டி.ஜி.பி. அதிரடி நடவடிக்கை
- குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில் இவர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சிவக்குமார்.
இவர் மீது போஸ்கோ வழக்கை தவறாக கையாண்டது, போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து கையெழுத்து இட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது என பல புகார்கள் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில் இவர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிவக்குமார் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையை டி.ஜி.பி. மனோஜ் குமார் லால் அதிரடியாக எடுத்துள்ளார்.
- செல்வம் பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார்.
- ரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்வம், துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார். அதனைத் தொடர்ந்து, சென்னை உளவுத்துறையில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வீரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார். இவர் நேற்று குறிஞ்சிப் பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் வீரசேகருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்
- வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.
- முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது.
சூலூர்:
கோவை அருகே உள்ள சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.
ெதன்னம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் டிரைவர் சிவக்குமார் ஆகியோர் அந்த வாலிபர்களை ரோந்து வாகனத்தில் விரட்டி சென்றனர். 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.
இதனையடுத்து டிரைவர் சிவக்குமார் வாலிபர்களை பிடிப்பதற்காக அவர்களின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று பின் பக்கத்தில் இடித்தார். அப்போது ரோந்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலது பக்கத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது.
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர்கள் இருட்டில் ஓடி தப்பித்தனர். ரோந்து வாகனம் விபத்தில் சிக்கியதில் இன்ஸ்பெக்டர் மாதையனின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை நீலாம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
போலீசார் வாலிபர்கள் விட்டுச் சென்ற கைப்பையை சோதனை செய்தனர். அதில் பட்டாகத்தி, வீடுகளை உடைக்க பயன்படுத்தும் இரும்பி கம்பி 2, ஸ்குரு டிரைவர், கையுறை, 2 டார்ச் லைட், சிறிய கத்தி ஆகியவை இருந்தது. வாலிபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கணியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் (72) என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தவர்கள் யார், எதற்காக செய்தனர் என்று இதுவரை கண்டுபி டிக்கப்படவில்லை. போலீசார் கொலையாளிகளை தேடி வரும் நிலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு கொலை வழக்கில் எதுவும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
- நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
சேலம்:
சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக இருந்த கற்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காலியாக இருந்த நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.
- போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜ்குமார் பணிபுரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக கதிரேசன் உள்ளார்.
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.
இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த விளக்கம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு திருப்தி ஏற்படவில்லை.
இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த போலீசார் 2 பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் 2 பேரும் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்து அவர்களை கண்டித்துள்ளார். அதன் பிறகு 2 பேரும் பணிக்கு திரும்பினர்.
பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய போலீசாரே போலீஸ் நிலையத்தில் மல்லுக் கட்டிய சம்பவம் நெட்டப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.