என் மலர்
நீங்கள் தேடியது "insurance"
- இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போடு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில மரணமடைபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க திட்டம் இருக்கிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
- 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம், வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக ரூ.10லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளில் உள்நோயாளி செலவு களுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30ஆயிரம் வரையும், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவா தம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தினால் மருத்துவமனையில் அனும திக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரையும், விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5,000 வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது.
பொது மக்கள் அனை வரும் பரமத்தி வேலூர், பொத்தனூர், பரமத்தி, ஜேடர்பாளையம், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த குழு விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
- பயிர் காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் வருவாய் துறை, காவல் துறை பொதுப்பணித்து–றையினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் சிக்கி தவித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்
அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலர்த்தும் வசதியை தமிழக அரசே ஏற்பாடு செய்து தர வேண்டும் 2021-22ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகளை விவ சாயிகள் சந்தித்துள்ளனர்.
தமிழக அரசு உரிய முறையில் கண்காணித்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு நிலுவை தொகையை கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பயிர் காப்பீடு கட்டிய அனைவருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
- பயிர் காப்பீடு கிடைக்க கலெக்டரிடம் பேசி முயற்சி செய்கிறோம்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில்தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஐ, தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஎம் இணைந்து, பயிர் காப்பீடு கட்டிய அனை வருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தினுடைய சமாதான கூட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் சந்தன கோபாலகிருஷ்ணன் தலைமை நடைபெற்றது.
இந்த சமாதான கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயசீலன் வட்டார புள்ளியல் துறை அலுவலர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன், (சி பி ஐ) தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கலியபெருமாள் (சி பி எம்) இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் சின்ன ராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கலியபெருமாள், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் பயிர் காப்பீடு கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி முயற்சி செய்கிறோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சமாதான கூட்டம் நிறைவுற்றது.
- சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
- விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த புதுப்பள்ளி மழை முத்துமாரியம்மன் ஆலயத்தில் தானம் அறக்கட்டளை கீழையூர் கிழக்கு வட்டார வயலகம் கீழையூர் கிழக்கு வட்டார வயலக பரஸ்பரம் கீழையூர் நெய்தல் ஜீவிதம் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனம் சார்பில் 18 ஆண்டு பொதுக்குழு கூட்டம் முப்பெரும் விழா நடைபெற்றது
கூட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது முன்னதாக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது
இதில் ஜீவித வட்டார பொருளாளர், திருமதி இளவரசி வரவேற்புரை வழங்கினார், வட்டார. ஒருங்கிணைப்பாளர் மோ.அபிரகாம் ஸ்டான்லி அவர்கள், மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன் அவர்களும், எதிர்கால திட்டம், வட்டாரம் ஒரு பார்வை என்னும் தலைப்பில், கொள்கை மாற்றம் குறித்து விளக்கவுரை யாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக, விழுந்தமாவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், கிளை மேலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார், சிறப்பு விருந்தினர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கப்ப ட்டது, சிறந்த குழுவிற்கு கேடயம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை, வட்டார பணியாளர் கார்த்திகேசன், செய்திருந்தார்.
- செயற்கை கால், கை தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
- முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்–பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் துணை நிலையம் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.
இதில் பணிபுரியும் புரோஸ்டிக் மற்றும் ஆர்த்தோடிஸ்ட் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாற்றுத்திறனாளி நோயாளிகளுக்கு பல்வேறு துறை மூலமாக பயனீட்டார்களுக்கு பயனடையச் செய்துள்ளனர்.
இந்த நிலையில் உலக அளவில் செயற்கை உறுப்புப் பொருத்தல் மற்றும் மாற்றுத்திறனர் உதவி கருவி தினம் முதன் முதலில் இன்று கொண்டாடப்பட்டது.
அதன்படி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜி நாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால், கை தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இதுவரை 185 நவீன செயற்கை கை மற்றும் கால்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ–மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்–பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் முடநீக்கியல் துறை தலைவர்கள் குமரவேல், ராஜமோகன், நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், ஆர்த்தோடிஸ்ட் ரமேஷ் மற்றும் சக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- தேசிய காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கால்நடைகளை காப்பீடு செய்யலாம்.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்ட வேளாண் குடிமக்களின் கால்நடை செல்வங்களை பாதுகாக்க 2022-23-ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து பயன்பெறலாம்.
1100 அலகுகள் குறியீடாக பெறப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் விருப்பம் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்து வரை அணுகி தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம்.
அரசு மானியமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு காப்பீடு சந்தாத்தொகையில் 70 சதவீதம் மானியமும் பொதுப் பிரிவினர்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்த ப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் காதுவில்லைக்குரிய இறந்த கால்நடையை பரிசோதனை செய்து அதற்கான பிரேத பரிசோதனை சான்றிதழுடன் காப்பீடு நிறுவனத்தில் இருந்து காப்பீடு தொகை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டம் தொடர்பான தகவல்களை சிவகங்கை, காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்களின் கைப்பேசி எண்கள்: 94450 32581, 94450 32556 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.
- ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் லலிதா தலைமை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கனமழையால் பாதித்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், வேலை இன்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத் தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.
ஆனால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையாக ரூ.16 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.
எனவே காப்பீட்டு வழங்கும் முறையை மாற்றி பாதிக் கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொங்கல் பரிசுக்கு தேவையான கரும்புகளை விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.
எனவே இடைத்தரகர் கள் இன்றி நேரடியாக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் லலிதா கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் முருகதாஸ், பொதுப்பணித்துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மஞ்சுளா, செம்பனார்கோயில் வேளாண்மை துணை இயக்குனர் தாமஸ், மயிலாடுதுறை அட்மா திட்ட தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன், உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது.
- ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார்.
வேலூர் :
வேலூர் மாவட்டம் கெங்காரெட்டி பள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் 5 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். அதற்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது பெய்த மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க ஒரு மாதமாக அலைந்துள்ளார். ஆனால் வேளாண்மைத் துறையும், காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு வழங்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேளாண்மைத்துறையின் கவனத்தை ஈர்க்க 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் சேதமடைந்த நெற் பயிர்களை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.
- 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஓய்வூதி யம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 19 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி 6 பயனாளிகளுக்கு ரூ.74,297 மதிப்பிலான திருப்பப்பட்ட காசோலைகளை வழங்கினர். மேலும் 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. பின்னர் 5 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் திரு.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அபர்ணா தேவி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
- சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் இலை கருகல் நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.
- 23 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பூதலூர்:
பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் நடப்பு ஆண்டு சம்பா மற்றும் தாளடி நடவு பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் . வானம் குளிரான பருவத்தில் இருந்தபோதிலும் வயலில் களை எடுக்கும் பணிகளும், உரமிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களாக பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் வானம் மப்பும் மந்தாரமும் ஆக பனி சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்களில் இலை கருகல் நோய் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இன்னும் சில விவசாயிகள் முன்கூட்டியே பூச்சிக்கொல்லி மருந்துகளை கை ஸ் பிரேயர் மூலம் தெளித்தும் வருகின்றனர்.
பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடப்பு ஆண்டு 25 ஆயிரத்து 205 ஏக்கர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் 8353 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாகவும் வேளாண்மை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- பிரதமர் காப்பீடு திட்டத்தில் பணம் பெற்று மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பால கிருஷ்ணன், பழனிவேல், முத்துக்குமார் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் "ஆயுஷ் மான்" மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அடையாள அட்டையை பெறுவதற்கு ஒருசில ஏஜென்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
ஆனால் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் மதுரை விளாச்சேரி ஊராட்சி மன்ற வாசலில் 5 பேர் கொண்ட கும்பல் "ஆயுஷ்மான்" மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அடையாள அட்டை வாங்கித்தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர்.
அந்த கும்பலை அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து திருநகர் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரித்து கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 5 பேர் கொண்ட கும்பல் பணம் வசூலித்தது உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த நடேஷ்குமார், வெங்கடசுப்பு நரசிம்மன், ராஜா, லோகசுந்தர் ஆகிய 5 பேர் மீது திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.