என் மலர்
நீங்கள் தேடியது "jewel robbery"
- மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து ரூ.1.40 லட்சம் மற்றும் 2¾ பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- காவல் துறையினர் 3 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் கதிர்வேல். நேற்று நள்ளிரவு கதிர்வேலும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து ரூ.1.40 லட்சம் மற்றும் 2¾ பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து கதிர்வேலின் தம்பி கண்ணனது வீடும் அருகிலேயே இருந்துள்ளதால் அந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர் .
அங்கு எதுவும் கிடைக்காத காரணத்தினால் அருகில் உள்ள முன்னாள் ராணுவ வீரரும், தற்போது பவர் கிரேடில் பணிபுரிந்து வருபவருமான பீட்டர் என்பவரின் வீட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். பீட்டர் இரவு பணிக்காக சென்றிருந்த நிலையில் அவரது மனைவி கிறிஸ்டி விமலா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது கதவை உடைக்கும் சத்தம் கேட்கவே அவர் எழுந்து கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் விடாது கதவை உடைக்க முயற்சி செய்த மர்ம நபர் அவர் வெளி லைட்டை போட்டு விட்டு அருகில் உள்ளவர்களுக்கு போனில் தகவல் சொல்வதை கேட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் தலைமையிலான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்புராஜ், நாராயணசாமி, தலைமை காவலர் முருகன், முதல்நிலை தலைமை காவலர் சுரேஷ், ஆகியோர் 3 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முயல் வாங்குவதாக கூறி மோசடி
- பெண்ணுக்கு வலைவீச்சு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா கீழ்அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் வியாசியாமேரி (வயது 78). இவருடன் அவரது மகள் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் வீட்டின் மாடியில் முயல் வளர்த்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் வியாசியாமேரி வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது மொபட்டில் அவரது வீட்டிற்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து உள்ளார். அந்த பெண் மூதாட்டியிடம் முயல் வாங்குவது போன்று பேச்சு கொடுத்து உள்ளார்.
இதையடுத்து மூதாட்டி வீட்டின் கதவில் தாழ்பாள் போட்டு அந்த பெண்ணை மாடிக்கு அழைத்து சென்று அவர்கள் வளர்த்து வரும் முயலை காண்பித்தார். பின்னர் அந்த பெண் முயலை வாங்கினார். மூதாட்டியிடம் முயலை எடுத்து செல்ல கோணிப்பையை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு கீழே சென்றார்.
10 பவுன் நகை கொள்ளை
இதை நம்பி மூதாட்டி மாடியிலேயே இருந்தார். பின்னர் அந்த இளம்பெண் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால் மாடியில் இருந்து மூதாட்டி கீழே வந்தார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை யடிக்கப்ப ட்டது தெரியவந்தது.
இது குறித்து திருவண்ணா மலை தாலுகா போலீசா ருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுவர் ஏறி குதித்து தப்பிய 2 வாலிபர்கள் சிக்கினர்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு பகுதியில் அடிக்கடி திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற வருகிறது. இதனால் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கம் விரிவு பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு வீட்டின் சுவற்றில் இருந்து 2 வாலிபர்கள் குதிப்பதை போலீசார் பார்த்தனர்.
போலீசாரை கண்டவுடன் 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.
அப்போது வாலிபர்களிடம் 3 அரை பவுன் நகை இருந்தது தெரிய வந்தது. வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
- கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம்:
கோடை விடுமுறையையொட்டி பெரும்பாலானோர் வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனை நோட்டமிடும் மர்ம கும்பல் வீடு புகுந்து நகை-பணத்தை சுருட்டி செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளை கும்பல் அள்ளி சென்றுவிட்டனர்.
காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே சுதர்ஷன் நகர் பகுதியில் வசித்து வருபவர் டேனியல். இவர் கோடை விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலுக்கு கடந்த சனிக்கிழமை சென்றார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர். மற்றொரு அறையில் இருந்த 30 பவுன் நகை தப்பியது.
சுதர்சன் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் 8 பவுன் நகை, லேப்டாப்பை சுருட்டினர். ஆசிரியர் தமிழரசு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்து இருந்தது.
இதேபோல் மேலும் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை போய் உள்ளது. அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதால் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று உடனடியாக தெரியவில்லை.
நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் நள்ளிரவு 1.30 மணியளில் கையுறை அணிந்தபடி கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அனைத்து வீடு களிலும் ஒரே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
- 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
- சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி இட்டேரி சாலை பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது37). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கவுசல்யா. இவரும் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். பின்னர் ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. போலீசாரின் தீவிர கண்காணிப்பால் குற்ற சம்பவங்கள் குறைந்தன. தற்போது மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டத் தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் உதயகுமாரை தாக்கி கட்டிப்போட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்க ப்பட்டது.
இந்த நிலையில் மற்றொரு டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்குமோ? என சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
- 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50000 கொள்ளையடிக்கப்பட்டது .
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருணகிரியார் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 45). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜமுனா (40). உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருநெ ல்வேலி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு சென்றனர். இவர்களது மகன்களை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு சென்றனர்.
இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள், முருகன், ஜமுனா தம்பதியரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்தனர். உறவினர் வீட்டில் இருந்த முருகன், ஜமுனாவின் 2 மகன்களிடம் இதனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோருக்கு போன் செய்தனர். அவர்களின் வழிகாட்டுதல் படி பீரோவில் இருந்த பொருட்கள் உள்ளனவா என்று பார்த்தனர். இதில் பீரோவின் பாதுகாப்பு அறை உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்ட னர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப்பி டிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீ சார் பூட்டிய வீட்டின் கதவு, பீரோவை உடைத்து தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகி ன்றனர். உளுந்தூர்பே ட்டை நகரின் மையப்பகுதியில் எப்போ தும் ஆள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் கொள்ளை நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்றுவிட்டார்.
- போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரவந்தி. இவர் அந்த மாநில அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று செகந்திராபாத்திலிருந்து திருப்பதி செல்வதற்கு புறப்பட்டு வந்தார்.
செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1-ல் அவர் திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்காக காத்திருந்தார்.
வந்தே பாரத் ரெயில் வந்து நின்றதும் அதில் இருந்து ஏராளமான பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.
ஸ்ரவந்தி கூட்டத்திற்கு நடுவே ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சடைந்த ஸ்ரவந்தி அலறி கூச்சலிட்டார்.
அதற்குள் மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்று விட்டார்.
ஸ்ரவந்தி வைத்திருந்த பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது.
இதுகுறித்த செகந்திராபாத் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
அதில் தனது பையில் வைத்திருந்த வைர நெக்லஸ் உட்பட ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரெயில்களில் ஏறும்போது பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
- ரூ.1.50 லட்சம் கைவரிசை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நேரு நகரை சேர்ந்தவர் தினேஷ் (33). இவரது மனைவி கலைவாணி. தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
தினேஷ் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு தினேஷ், தாய் நிர்மலா மற்றும் மனைவி, குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு மாடியில் படுத்து தூங்கினார்.
பின்னர் இன்று காலை எழுந்து வீட்டின் உள்ளே செல்ல வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறை மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 55 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து தினேஷ் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செய்யாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தினேஷ் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் 3 பேர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
மேலும் கொள்ளையர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என கண்காணிப்பு கேமராக்களுக்கு செல்லும் வயர்களையும் அறுத்து வீசி உள்ளனர். இந்த பதிவுகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாதாம், பிஸ்தாவை திருடி சாப்பிட்டனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் மகன் ராகுல் (வயது 27). இவர் ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா (25).
மேனகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது மாமனார் பரந்தாமன் மற்றும் மாமியார் செல்வராணி ஆகியோரும் வீட்டை பூட்டி விட்டு மருமகளுடன் சென்றனர்.
ஊருக்கு சென்ற பரந்தாமன் மற்றும் செல்வராணி வீட்டுக்கு வந்தனர். வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.
பீரோ உடைத்து அதன் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 4 கிராம் வெள்ளி பொருட்களை மரம் நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் கொள்ளையர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து ஆர அமர சாப்பிட்டுவிட்டு, தோலை வீடு முழுவதும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து போரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
- கைரேகை தடயங்களை சேகரித்தனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட் டம் ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65), சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி மரகதம்.
நேற்று காலை 10.30 மணி அளவில் கணவன்-மனைவி இருவரும் வீட்டின் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயத் திற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றி ருந்தனர். அந்த நேரத்தில் வீடுபுகுந்த கும்பல் 23 பவுன் நகைகளை திருடி சென்று விட்டது.
இது குறித்து சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் துணை போலீஸ் சூப்பி ரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சுப்பிர மணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் அங்குவந்து விசாரணை நடத் தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கைரேகை தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
- போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி (வயது75). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்த குப்பைகளை வெளியே கொட்ட வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பத்மாவதியின் முதுகில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த மூதாட்டி சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். இதில் நிலைதடுமாறிய மூதாட்டி பத்மாவதி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்து. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கண்காணிப்பு கேமராக்களை திருப்பி விட்ட மர்மகும்பல்
- கதவை உடைத்து துணிகரம்
ஜோலார்பேட்டை:
பெங்களூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 44). கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மனைவி கனிமொழி. மகள், மகன் உள்ளனர்.
இவர்களுக்கு சொந்தமான வீடு திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டியில் உள்ளது. இந்த வீட்டை மாமியார் (துளசி 50) என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு துளசி, சந்திரன் வீட்டின் மின் விளக்கை போட்டு விட்டு அவரது வீட்டுக்கு தூங்க சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை துளசி சந்திரன் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பொருத்தி இருந்த கேமராக்களை ஆய்வு செய்தனர்.
வழக்கு பதிவு
அப்போது அந்த கேமராக்கள் திரும்பிய நிலையில் இருந்தது. கொள்ளையர்கள் தங்கள் முகங்கள் பதிவு ஆகிவிட கூடாது என்பதற்காக கேமராக்களை திருப்பி வைத்தது தெரியவந்தது.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.