என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job placement camp"

    • முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜி, சென்னை ராம்கோ சிமெ ண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி சிவகுமார், நிறுவனத்தில் வேலை செய்வதற்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜி, சென்னை ராம்கோ சிமெ ண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செய லாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி சிவகுமார், நிறுவனத்தில் வேலை செய்வதற்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை கூறினார்.

    ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுகளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதுவை பல்கலைக்கழகம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மற்றும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜி கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார், கல்லூரி மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன், பேராசிரியர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
    • வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பல்லடம்,பொங்கலூர் வட்டார அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 242 இளைஞர்கள் கலந்து கொண்டனர் .அதில் 74 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். திறன் பயிற்சிக்கு 31 நபர்கள் தேர்வாகினர். 15 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் 23 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.6 கோடி தர மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் முத்து, ஜோசப் ரத்னராஜ், விஜயகுமார், மாவட்ட வள பயிற்றுநர் முனிராஜ், பல்லடம் வட்டார தொழில் மைய அலுவலர் ஹரிகரன், மற்றும் பல்லடம், பொங்கலூர், வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3-ந்தேதி நடக்கிறது
    • காலை 10 மணிக்கு தொடங்குகிறது

    வேலூர்:

    விஐடியில் வேலைவாய்ப்பு துறையும் இயந்திரவியல் துறையும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வி.ஐ.டி. அண்ணா அரங்கத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வளாக நேர்முக தேர்வு நடத்துகிறது.

    இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் டிப்ளமோ, பட்டய படிப்பை முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த வளாக நேர்முகத் தேர்வுக்கு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான ஃபாஸ்ட் சோலார் ,டி.வி.எஸ் வேலியோ, பிரேக்ஸ் இந்தியா , இன்டோ கூல், டெக்னிப் எனர்ஜிஸ், மெக்டர் மார்ட் மேலும் பத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    இதற்கான நுழைவு சீட்டினை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளவும்.டிப்ளமோ படித்து முடித்தவர்கள் விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-வது மாடி, அறை எண் 717 ல் பிப்ரவரி மாதம் 1-ம் தேதிக்குள் அனைத்து வேலை நாட்களில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நேர்முகத் தேர்விற்கு வருவோர்கள் பயோடேட்டா கல்வி சான்றிதழ்கள், ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவேண்டும்.

    இதில் வேலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை, டிப்ளமோ படித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு விஐடி வேந்தர் டாக்டர் .கோ விசுவநாதன் கூறினார்.

    • 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
    • கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி சார்பில் வரும் 11ம் தேதி, திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியிட ங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இதில் கலந்து கொண்டு தங்கள் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்காக வெளியிடப்பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    பள்ளி மற்றும் கல்லுாரி களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், வேலை தேடுவோர் மற்றும் தங்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தேடுவோர் பதிவு செய்து, பங்கேற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் குறித்து பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலை தளங்களில் இந்த முகாம் குறித்து மேயர், கலெக்டர், கமிஷனர் ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பதிவுகள் வைரலாகி வருகிறது.

    முகாமுக்கான அரங்குகள் அமைக்கும் பணியை மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார். சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.
    • இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

    இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த முகாம் முற்றிலும் இலவசமானது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. தகுதியும் விருப்பமும் உள்ளோர் அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 18-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் வளர்மதி ஆய்வு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் வருகின்ற 18-ந்தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வாலாஜாப்பேட்டை நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன், தாசில்தார் நடராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • 3,185 பேருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பணி ஆணை வழங்கினார்
    • குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தி ஜி.கே.உலக பள்ளி ஆகியோர் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று அக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    முகாமிற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் வரவேற்றார்.ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை நேற்று மாலை 4.00 மணிவரை நடைபெற்ற முகாமில் 131 தொழிற் நிறுவனங்கள் கலந்துகொண்டது.இதில் வேலை நாடுனர்கள் ஆண்கள் 8,347,பெண்கள் 14,342 என மொத்தம் 22,689 நபர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இதில் 122 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்களில் 28 மாற்றுத்திறனாளிகளும் 3157 நபர்களும் என மொத்தமாக 3,185 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000/-முதல் அதிகபட்சமாக ரூ.25,000/- வரை நிறுவனங்கள் தேர்வானவர்களுக்கு வழங்கவுள்ளது.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, துணை இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அருணகிரி, உதவி இயக்குநர்கள் பரமேஸ்வரி, செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், தி ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குநர்சந்தோஷ் காந்தி, நகரமன்றத் தலைவர்கள் ஹரிணிதில்லை, சுஜாதா வினோத், முகமது அமீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணக்குமார், கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு ஊரக/நர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மேலூர் அருகே வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறை பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மேலூர், கொட்டாம்பட்டி வட்டாரங்கள் இணைந்து நடத்திய வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன் முகாமை தொடங்கி வைத்து தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சின்னத்துரை வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். மேலூர் வட்டார இயக்க மேலாளர் ராமு நன்றி கூறினார். மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் சமுதாய பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • வருகிற 2-ந் தேதி நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    அதன்அடிப்படையில் வருகிற 2-ந் தேதி அன்று ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணி ப்பேட்டையில் ஆற்காடு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் செயல்படும் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுப வர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது எனவும் கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • பங்கேற்க கலெக்டர் அழைப்பு
    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிமுதல் 3 மணிவரை வேலூர், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

    முகாமில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

    இதில் 150 -க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் முகாமில் பங்கு பெற உள்ளனர்.

    10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ.டிகிரி, நர்சிங், பார்மசி ஆகிய கல்வி தகுதி தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.

    தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டது.

    தனியார்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896, 8610977602, 8778078130, 8148727787,9095559590 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவர் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று‌ சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

    இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

    அவர்களில் சிலருக்கு சில நிறுவனத்தினர் நேர்முக தேர்வை உடனடியாக நடத்தினர்.

    இந்த முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியும் உள்ளவர்கள் பங்கேற்றனர்

    மேலும் அடுத்த கட்டமாக 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை எடப்பாடி மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    இன்றைய முகாமில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினார்.

    ×