search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிபா வைரசுக்கு 14 வயது சிறுவன் பலியானான்.
    • கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிபா வைரசுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்கள் பரவியிருக்கும் நிலையில் நிபா வைரசுக்கு 14 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த அந்த சிறுவன், கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயார் செய்தனர்.

    அந்த பட்டியலில் சிறுவனின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் என 330 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் உள்பட 406 பேர் சுகாதார துறையினரின் நேரடி கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களில் 139 சுகாதார பணியாளர்கள் உள்பட 194 பேர் ஆபத்து உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.

    கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிபா வைரசுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிபா வைரஸ் பரவலையடுத்து, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர்.
    • கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் தயா காயத்ரி, கார்த்திகா ரதீஷ், ஸ்ருதி சித்தாரா, ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார், சந்தியா அஜித், சங்கீதா.

    இவர்களுக்கு பரத நாட்டியம் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஒரு தனியார் அறக்கட்டளையின் முயற்சி காரணமாக திருநங்கைகளுக்கு பரதநாட்டிய பயிற்சி கொடுக்கும் அகாடமியில் சேர்ந்தனர்.

    அவர்களுக்கு பரதநாட்டிய கலைஞரான சஞ்சனா சந்திரா பயிற்சி அளித்தார். இவர் மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார். அவரிடம் திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டிய பயிற்சியை முடித்தனர்.

    இதையடுத்து அவர்கள் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்துவதற்கு அவர்கள் பயிற்சி பெற்ற அகாடமி ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் நடை பெற்றது. திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டியம் ஆடினர்.

    திருநங்கைகள் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது, 'திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்வு உள்ளடக்கம் மற்றும் சமூக ஏற்புக்கான ஒரு படியாகும்' என்றார்.

    திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒரு கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தீவிரமாக கண்காணிக்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு.
    • எல்லைகளில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    கோவை:

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் அங்கு 60 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 2 பேருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழம்-கேரளா எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி கோவை-கேரளா எல்லையில் வாளை யார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சி புரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவு ண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பஸ் மற்றும் வாகனங்களில் வருவோருக்கு நிபா காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இதில் அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட வாகனங்கள் கோவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் நிபா வைரஸ் தாக்கம் குறையும்வரை தமிழக மக்கள் கேரளாவுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென கோவை சுகாதார த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சல் என்பது வவ்வால்கள் மூலம் பரவக்கூடியது. அவை உட்கொள்ளும் பழங்கள், சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் ஆகியவை மூலம் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. தீராத காய்ச்சல், இருமல், தலைவலி, வயிற்றுப்போக்கு, மூச்சு திணறல், மனநிலை பிரச்சினை ஆகியவை நிபா வைரசின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறியதாவது:-

    கேரளாவில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழு நியமிக்க ப்பட்டு அங்கு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்கள் கிருமிநாசினி மூலம் தூய்மை செய்யப்படுகிறது.

    நிபா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரின் உமிழ்நீர், சிறுநீர், சளி மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோர் பற்றிய விவரங்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுதவிர கோவை மாவட்டம் முழுவதும் நிபா வைரஸ் தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
    • னியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒருவரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது.

    இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை மத்திய அரசின் வெளியுறவுத் துறை கவனித்து வரும் நிலையில் கேரள அரசு தங்களின் மாநிலத்துக்கான வெளியுறவுத் துறைச் செயலாளரை நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி கே.வாசுகி வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று கடந்த 15-ம் தேதி கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த விவகாரங்களில் வாசுகிக்கு பொது நிர்வாக [அரசியல்] துறை உதவும் என்றும்  மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கேரள அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகியுள்ள நிலையில் கேரள பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது எக்ஸ் பதிவில், 'இந்த செயல் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. கேரள இடதுசாரி கூட்டணி அரசுக்கு வெளியுறவு விவகாரங்களை கவனிக்க எந்த அதிகாரமும் இல்லை. அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த நடவைடிகை ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், 'வெளியுறவுத்துறை மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுகள் தன்னிச்சையாக வெளியுறவு விவகாரங்களில் செயல்பட அதிகாரம் இல்லை.ஆனால் வெளிநாடுகளில் உள்ள தங்கள் மாநிலத்தின் மக்கள் தொடர்பான விவகாரங்களில் மாநில அரசு கவனம் செலுத்துவது இயல்பானதுதான். ஆனால் அதற்காக தனியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒரு தனி நபரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது என்று கூறியுள்ளார். 

    • நியூயார்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவில் வசித்து வருகிறார்.
    • அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாலவட்டம் கைப்பட்டூர் செறிவுகால் பகுதியை சேர்ந்த தம்பதி ஜான் மேத்யூ-ராஜி மேத்யூ. இவர்களது மகள் மீரா தங்கம் மேத்யூ.

    ஜான் மேத்யூவின் குடும்பம் முதலில் கேரளாவில் தான் இருந்தது. அப்போது தான் மீரா தங்கம் மேத்யூ பிறந்தார். பின்பு தனது 3 வயதில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட மீரா தங்கம் மேத்யூ, அங்கே தான் வாழ்ந்து வந்தார்.

    அவர் நியூயார்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவில் வசித்து வருகிறார். வாலிப வயதை எட்டியதும் மீராவுக்கு மாடலிங் துறையில் விரும்பம் வந்தது. அதன் காரணமாக பல்வேறு அழகி போட்டிகளில் அவர் பங்கேற்றார். 'மிஸ் ஸ்டேட்டன் ஐலேண்ட்' என்ற பட்டத்தையும் அவர் வென்றார்.

    கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற மீரா, அமெரிக்காவின் பிரதிநிதியை அனுப்பும் 'மிஸ் வோல்டு அமெரிக்கா' போட்டியில் பங்கேற்க உள்ளார். நியூயார்க்கை பிரதிநிதித் துவப்படுத்தும் பட்டங்களின் ஒன்றான மிஸ் லிபர்ட்டியாக மீரா வருகிறார்.

    கேரள பெண்ணான மீரா தங்கம் மேத்யூ அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கேரளா மாநிலத்தில் வருகிற 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் மாயமாகி உள்ளார்.

    மழை பாதிப்பு காரணமாக 224 பேர் மீட்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 97 வீடுகள் சேதமுற்றும், ஒரு வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    தொடர் கனமழை காரணமாக ஆலப்புழா, இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கண்ணூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

    • லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை.
    • எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, ​​நான் என் உதடுகளை நக்கினேன்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 13-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக ரவீந்திரன் நாயர் (59) என்பவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள லிப்ட் நடுவழியில் நின்றதால் ரவீந்திரன் லிப்ட்டிற்குள் சிக்கியுள்ளார்.

    ரவீந்திரன் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் 2 நாட்களாக செயல்படாமல் இருந்த லிப்ட் நேற்று சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது. அப்போது தான் ரவீந்திரன் லிப்ட்டுக்குள்ளேயே 2 நாட்களாக சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டார்.

    2 நாட்களாக லிபிட்டிற்குள் சிக்கியிருந்த மோசமான அனுபவங்களை உயிர் பிழைத்த ரவீந்திரன் பகிர்ந்துள்ளார்.

    "எனது அலைபேசியைப் பயன்படுத்தி லிப்ட்டுக்குள் இருந்த அவசர உதவி எண்களை அழைத்தேன்.ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. பின்னர் அலைபேசி கீழே விழுந்து வேலை செய்வதை நிறுத்தியது. லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதன் பிறகு, இரண்டாவது சனிக்கிழமை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை விடுமுறை நாள் என கருதி உதவிக்காக காத்திருந்தேன்.

    ஒரு மூலையில் சிறுநீர் கழித்தேன். சில சமயம் சத்தமாக அழுதேன். என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, நான் என் உதடுகளை நக்கினேன். தொடர்ந்து எச்சரிக்கை மணியை அழுத்திக்கொண்டே இருந்தேன். லிப்ட் அறையில் மின்விசிறி அல்லது வெளிச்சம் இல்லை என்றாலும், காற்று நுழைய இடம் இருந்ததால் என்னால் மூச்சு விட முடிந்தது" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனையின் 2 லிப்ட் ஆபரேட்டர்கள் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில சுகாதாரத் துறை நேற்று உத்தரவிட்டது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தர விட்டுள்ளார்.

    • கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும்.
    • சுல்தானியா பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியதால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். டெல்லி என்சிஆர் பகுதிகளில் லேசான மழை தொடரும்.

    வரும் நாட்களில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும்.

    ராய்காட் பகுதிக்கு ரெட் அலர்ட்டும், மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, சதார் மற்றும் மகாராஷ்டிராவின் கொல்காபூர் ஆகிய இடங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.

    மகாராஷ்டிராவில், தானேயில் உள்ள பிவாண்டி பகுதியில் உள்ள கம்வாரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுல்தானியா பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியதால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

    கர்நாடகாவின் தெற்கு உள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நேற்று பெய்த கனமழைக்கு மத்தியில் அரகா, செண்டியா, இடூர் மற்றும் தொடுரு கிராமங்களில் பல பகுதிகள் முற்றிலும் நீரில் மூழ்கின. குடகு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன.

    டெல்லி என்சிஆர் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குஜராத், பீகார், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மதுவுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளன.
    • கேரளாவில் மட்டும் குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது 23 ஆக உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் ஜூலை 7-ம் தேதி அதிகாலையில் அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்தார். குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் மிஹிர் ஷா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மிஹிர் ஷா (24) தனது வயது 27 என்று போலி அடையாள அட்டையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் சட்டப்பூர்வ குடிப்பழக்கமான 25 வயதுக்கு மேல். மும்பையின் ஜூஹூவில் உள்ள ஒரு பப்பில் நுழைவதற்கு போலி அடையாள அட்டையை அவர் பயன்படுத்தி உள்ளார்.

    இந்த தகவல், குறைந்த வயதுடையவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பான விதிகளை மீண்டும் ஒருமுறை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

    இந்தியாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான வயதை ஆராய்வோம்.

    குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது நாடு முழுவதும் மாறுபடும். இந்தியாவில் குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது மாநில சட்டங்களை பொறுத்து 18 முதல் 25 ஆண்டுகள் வரை பரவலாக மாறுபடுகிறது.

    குஜராத், பீகார், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மதுவுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளன.

    அரியானா, கோவா, மகாராஷ்டிரா, சண்டிகர், மேகாலயா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் சட்டப்பூர்வ குடிப்பழக்க வயதை 25 ஆக நிர்ணயித்துள்ளன.

    அதேசமயம், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் 21 வயது வரை மது அருந்துவதை கட்டுப்படுத்துகின்றன. 

    கேரளாவில் மட்டும் குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது 23 ஆக உள்ளது. இந்தியாவில் சட்டப்பூர்வ குடிப்பழக்க வயது 23 ஆக இருக்கும் ஒரே மாநிலமாக கேரளா. சமீபத்தில் கேரளா குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை 21லிருந்து உயர்த்தியுள்ளது.

    கோவா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, சிக்கிம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள் 18 வயதில் பீர் உட்கொள்ள அனுமதிக்கின்றன. இருப்பினும் அந்த மாநிலங்களில் மதுபானங்கள் அருந்துவதற்காக வயது வரம்பு அதிகமாகவே உள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலை என்பது அருட்கொடையான பகுதியாகும்.
    • பல்வேறு வகை அரிய விலங்குகள், பாம்புகள் வசிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை என்பது அருட்கொடையான பகுதியாகும். கேரளாவில் தொடங்கி மஹாராஷ்டிரா வரை நீண்டுள்ள இந்த மலைப்பகுதி அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கொண்டிருப்பதுடன் மழை வளத்துக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

    இங்கு பல்வேறு வகை அரிய விலங்குகள், பாம்புகள் வசிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ஷோலோ காடுகளின் மீதான ஆர்வலர்கள் இப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் 'டெயில்-ஸ்பாட் ஷீல்டு டெயில்' எனப்படும் அரிய வகை பாம்பை கண்டறிந்துள்ளனர்.

    இது குறித்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் தெரிவிக்கையில், பாம்புகள் பெரும்பாலும் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை பூமிக்கடியில் கழிப்பதகவும், மழைக்காலத்தின் போது இனப்பெருக்கம் செய்வதற்காக வெளியில் வருவதாகவும் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் மலைப்பகுதியிலும், மேகமலை-மூணாறு மலைப்பகுதியிலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட பாம்புகள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதன் மீது 3 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் டி.என்.ஏ. தரவுகளுடன் பல அருங்காட்சியக மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்ததில் இங்கு இருப்பது அரிய வகை பாம்பு என கண்டறியப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைகளில் மறைக்கப்பட்ட பன்முகத் தன்மையை இந்த பாம்பு வகை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் ஊர்வன விலங்குகள் மாறுபட்ட தன்மை கொண்டதாகும். 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளூர் இனங்களும், அகாசியா, லந்தானா, வாட்டில் போன்ற அன்னிய ஊர்வன விலங்குகளும், மலை சார்ந்த பகுதிகளில் உள்ளன. இவை பெரும்பாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.

    பாம்புகளில் விஷத்தன்மை கொண்டது, விஷத்தன்மை இல்லாதது என இருந்தபோதும், இவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து மட்டும் 15 வகை புதிய பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சர்வதேச மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றனர்.

    • காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
    • டெங்கு காய்ச்சலுக்கு 225 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னதாகவே டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவத்தொடங்கின.

    தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் காய்ச்சல் பாதித்த 13 ஆயிரத்து 756 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்று கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் 225 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கேரளாவில் வழக்கமான காய்ச்சல்கள் மட்டுமின்றி மேற்கு நைல் உள்ளிட்ட அரியவகை காய்ச்சல்களும் பரவியுள்ளது. மேலும் மூளையை திண்ணும் அமீபா தொற்று நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பும் அங்கு இருந்து வருகிறது.

    தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று மூக்கு மற்றும் காதுமடல் வழியாக பாதிக்கிறது.

    அமீபிக் மூளைக்காய்ச்ச லுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன், மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி என 3 சிறுவர்கள் பலியாகி விட்டதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

    மாநிலத்தில் 3 பேருக்கு மட்டுமே அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டான்.

    அவன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்ற வரும் நிலையில், மேலும் ஒரு சிறுவனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சூர் மாவட்டம் படூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது.

    கடந்த மாதம் காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையததில் சிகச்சை பெற்ற வந்த அந்த சிறுவன், தற்போது திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    புதுச்சேரியில் உள்ள ஆய்வு மையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு அந்த சிறுவனுக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறு வனையும் சேர்த்து கேரளா மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பாதிப்பு 5 ஆக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • 2 டிரோன்களை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார்.

     கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்கும் விதமாக வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    "வயநாடு முன்முயற்சி" என்ற திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 2 டிரோன்களை வனத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார். அப்போது அவர் புதிய டிரோன்களை பறக்கவிட்டார்.

    ×