search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malayalam Film Industry"

    • சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
    • தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை யடுத்து, மலையாள திரையுலகில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல நடிகைகள் கூறி வருகின்றனர்.

    அவர்கள் பல பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அந்த குழு நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் பல போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேலும் சிலர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    35-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சார்மிளா, தாயாரிப்பாளர் மோகனன், இயக்குனர் ஹரிகரன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கருத்து தெரிவித்துள்ளார்.

    1997-ம் ஆண்டு அர்ஜூனன் பிள்ளையும் அஞ்சு மக்களும் என்ற படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் எம்.பி.மோகனன், தயாரிப்பு மேலாளர் சண்முகன் மற்றும் அவர்களது நண்பர்கள் என்னை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால் ஓட்டல் அறையை விட்டு வெளியே வந்து நான் தப்பி விட்டேன்.

    அவர்கள், ஓட்டலில் இருந்த ஆண் உதவியாளர் ஒருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். இதனால் நான் பயந்துபோன நிலையில், குடும்ப உறுப்பினர்களின் சரியான நேர தலையீடு காரணமாக பயம் தவிர்க்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்

    இதேபோல பிரபல டைரக்டர் ஹரிகரனை நானும் என் நண்பரும் நடிகருமான விஷ்ணுவுடன் சந்தித்த போது, அட்ஜஸ்ட் பண்ண தயாரா? என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னதால் தனது பரிணயம் படத்தில் இருந்து எங்களை துண்டித்து விட்டார்.

    அட்ஜஸ்ட் செய்ய தயாராக இல்லாததால் நான் பல படங்களை இழந்துள்ளேன். 4 மொழிப் படங்களில் நான் நடித்திருந்தாலும், இது போன்ற பிரச்சனைகள் முக்கியமாக மலையாளத்துறையில் உள்ளன. இதுபற்றி புகார் கொடுக்க விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


    பிரபல பின்னணி குரல் கலைஞர் பாக்கியலட்சுமியும் தன்னிடம் சிலர் தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மலையாள சினிமாவில் நடிகர்களின் மாபியா என்பது மிகவும் வலுவானது.

    அவர்களின் கட்டுப்பாட்டில் தான் மலையாள திரை உலகம் உள்ளது. அவர்களால் நான் சில காலம் புறக்கணிக்கப்பட்டேன். என்னிடம் தவறாக நடக்க முயன்ற இயக்குநரை நான் கன்னத்தில் அறைந்தேன் என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன்.
    • நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    புதுடெல்லி:

    மலையாள திரையுலகில் எழுந்துள்ள நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் கூறி வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா மற்றும் தயாரிப்பாளர் ரஞ்சித், பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் நடிகர் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயசூர்யா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குகிறார்.

    தமிழ் சினிமாவில் என் மன வானில், மனதோடு மழைக்காலம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சக்கரவியூகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இவர் மீது நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 2013-ம் ஆண்டு தொடுபுழாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது தன்னிடம் நடிகர் ஜெயசூர்யா அத்துமீறயதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை அளித்த புகார் மீது ஜெயசூர்யா மீது 2-வது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தன் மீதான பாலியல் புகார்களை நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெயசூர்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பொய் எப்போதும் உண்மையைவிட வேகமாக பயணிக்கும். ஆனால் உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்.

    என் மீதான புகார்களை சட்ட ரீதியாக தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பான மீதமுள்ள நடவடிக்கைகளை எனது வக்கீல்கள் குழு கவனித்து கொள்ளும்.

    மனசாட்சி இல்லாத எவரும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது. துன்புறுத்தலை போல, துன்புறுத்தப்படுதலும் வேதனையானது.

    நமது நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பிறந்தநாளை மிகவும் வேதனையான பிறந்தநாளாக மாற்ற பங்களித்தவர்களுக்கு நன்றி.

    இவ்வாறு ஜெயசூர்யா தனது பதிவில் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரை உலகில் பாலியல் பலாத்கார அத்து மீறல்கள் அதிகளவு நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை நடத்த கேரள அரசு உத்தர விட்டது. அதன்படி நீதிபதி ஹேமா மலையாள திரையுலகில் நடக்கும் அத்துமீறல்களை ஆய்வு செய்து கண்டுபிடித்து பெரிய அறிக்கையாக தயாரித்தார். கடந்த 2019-ம் ஆண்டு அந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.

    கடந்த சில ஆண்டுகளாக அந்த அறிக்கை வெளி யிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டும் வெளி யானது. அதில் வெளியான தகவல்கள் மலையாள பட உலகை சுனாமியாக சுருட்டி வீசும் வகையில் புயலை கிளப்பி உள்ளது.

    நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் மினு குரியன், ஸ்ரீலேகா மித்ரா உள்பட பல நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறினார்கள். நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடைவேள பாபு, சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்பட பலர் மீது பாலியல் பலாத்கார புகார்கள் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மட்டும் 376, 354, 509 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன.

    நடிகர் முகேஷ் மீது பதிவாகி இருக்கும் 376-வது பிரிவு கற்பழிப்புக்கான தண்டனை பெற்று தரும் சட்டப்பிரிவாகும். இந்த பிரிவில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளியில் வர இயலாது. இதை அறிந்த நடிகர் முகேஷ் அவசரம் அவசரமாக எர்ணாகுளம் செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதன் பேரில் செப்டம்பர் 3-ந்தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று எர்ணாகுளம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் நடிகர் முகேஷ் சற்று நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறார்.

    என்றாலும் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரளாவில் எதிர்ப்பு வலுக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மகளிர் அமைப்புகள் முகேசை கைது செய்யக்கோரி தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் நடிகர் முகேசை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

    நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ், பா.ஜ.க. போர்க்கொடி தூக்கி உள்ளது.

    இதற்கிடையே கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடிகர் முகேசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனிராஜா கூறுகையில், "நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க தார்மீக தகுதியை இழந்துவிட்டார். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் மாநில அரசின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

    தோழமை கட்சிகள் முகேசை எதிர்ப்பதால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. என்றாலும் நடிகர் முகேசை ராஜினாமா செய்ய வைத்தால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறார்கள்.

    எனவே கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பதிலடி நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளனர்.

    கேரள கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி அமைப்பாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்தியில், "காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளது. அவர்கள் இதுவரை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தால் முகேசிடமும் அந்த கோரிக்கையை வைக்கலாம்" என்று கூறியுள்ளார்.

    இந்தநிலையில் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் அனைவரும் நடிகர் முகேசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நடிகர் முகேஷ் விலக மாட்டார் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மலையாள நடிகைகள் பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அவர்கள் நடிகைகளை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதைத்தொடர்ந்து ஆதாரங்களை திரட்டத் தொடங்கி உள்ளனர்.

    நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் திருவனந்தபுரத்தில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை சந்தித்து விளக்கங்களை கொடுத்தனர். நடிகர் சித்திக்குக்கு எதிராக நடிகை தெரிவித்த பாலியல் பலாத்கார புகார் வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதன் காரணமாக பாலியல் பலாத்கார விவகாரத்தில் நடிகர்கள் மீது கைது நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    நடிகர் முகேஷ் போல நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் ஆகியோர் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளன. நடிகர் ஜெயசூர்யா மீது 376, 509 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நடிகர் ஜெயசூர்யா மீது இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதனால் நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கேரளாவில் புகழ் பெற்ற எழுத்தாளர் பத்மநாபன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீதிபதி ஹேமா ஆணையம் கொடுத்த அறிக்கையின் அனைத்து பகுதிகளும் வெளியிடப்படவில்லை. இதனால் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

    கேரளாவில் நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்த சின்ன மீன்கள் தான் சிக்கி உள்ளன. பெரிய திமிங்கலங்கள் தப்பி உள்ளன. அறிக்கையின் முழு விவரம் வெளியானால் பல கசப்பான கதைகள் வெளிச்சத்துக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ.
    • சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் நடிகைக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடிகை பீனா ஆன்டனி சித்திக்கை கட்டித்தழுவும் வீடியோ ஒன்று வெளியாகி வைராகி வருகிறது.

    இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை பீனா ஆன்டனி , `இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் சித்திக்கின் மகன் ஷாபி மரணம் அடைந்த போது என்னால் செல்ல முடியவில்லை. அதன்பின் இதனால் ஒரு நிகழ்வின் போது அவரை சந்திக்க நேர்ந்தது.

    அப்போது அவரை ஆறுதல் படுத்துவதற்காக கட்டித்தழுவியதாகவும் சித்திக்கின் மகன் ஷாபி என்மீது அன்பாக இருந்ததால் அவனது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

    ஆனால் இப்போது அந்த வீடியோவை தவறான கருத்துக்களுடன் நெட்டிசன்கள் பகிர்ந்து தன்னையும், தன்னுடைய குடும்பத்தினரையும் வேதனைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றும் கூறி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை.
    • மலையாள திரையுலகத்தை பற்றி பேச எனக்கு விருப்ப மில்லை.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர்.

    பாலியல் தொல்லைக்கு உள்ளான நடிகைகள்-பெண் கலைஞர்களுக்கு மலையாள மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரபல தமிழ் நடிகையான சாந்தி வில்லியம்சும் கருத்து தெரிவித்துள்ளார்.

    இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடத்துள்ளார். இதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். கேரளாவில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மலையாள திரையுலகத்தை பற்றி பேச எனக்கு விருப்ப மில்லை. காரணம் இங்கு அரசியல் அதிகம். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை. இங்குள்ளவர்கள் 60, 70 மற்றம் 90 வயதுடைய பெண்களின் அறைகளுக்கு கூட இரவில் வந்து கதவை தட்டுகிறார்கள்.

    இது எனக்கு பிடிக்காத விஷயம். நான் சில காலமாக படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் திரையுலகத்தில் அப்படி இல்லை. அவர்கள் ஒருபோதும் எங்களின் கதவுகளை தட்டவில்லை. எங்களிடம் தவறாகவும் நடந்து கொண்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.
    • பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து ஏராளமான நடிகைகள் மற்றும் சினிமா பெண் கலைஞர்கள் மலையாள திரையுலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். அவர்கள் பிரபல நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

    ஹேமா கமிஷனின் அறிக்கை மற்றும் நடிகைகளின் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூறிவரும் நடிகை களுக்கு ஏராளமான நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர்.

    நடிகைகள் தொடர்ச்சியாக பலர் மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

    இதற்கு "தங்கலான்" பட நடிகை பார்வதி திருவோத்து கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது கோழைத்தனமான செயல் என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மலையாள திரைப்பட சங்கத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா என்ற செய்தியை கேட்டவுடன் நான் முதலில் இது எவ்வளவு கோழைத்தனம் என்று தான் நினைத்தேன்.

    குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருந்து அவர்கள் எவ்வளவு கோழைத்தனமாக விலக்கிச் செல்கிறார்கள்.

    அவர்களின் இந்த செயலால் மீண்டும் நம் மீது பொறுப்பு விழுகிறது. பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.

    பெண்கள் புகார் அளித்தால் அதன்பேரில் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியே கொண்டு வர வேண்டும்.

    ஆனால் இந்த விவகாரத்தில் அரசு கவனக்குறைவாக இருந்தது. பெண்களால் ஏற்படாத பிரச்சனைகளுக்கான பொறுப்பு எப்போதும் பெண்களின் மீதே சுமத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி ஹேமா அறிக்கை பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்தியது.
    • அதனைத் தொடர்ந்து நடிகைகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

    இப்படி பல நடிகைகள், சினமாத்துறையைச் சேர்ந்தவர்கள் புகார் கூற ஆரம்பித்ததால் மலையாள சினிமா துறை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பொது வெளியில் புகார் கூறியபோதிலும், காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை.

    இதனால் MeToo-வை எதிர்கொள்ள கேரள மாநில அரசால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது சோனியா மலிஹார் என்ற நடிகை 2013-ம் ஆண்டு சினிமா செட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எனது புகார் தொடர்பாக மீடியாக்கள் நடிகர் ஜெயசூர்யாவை தொடர்பு படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    பாலியல் துன்புறுத்தல் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது. இந்த 17 புகார் தொடர்பாக பலர் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாத்துறையை சேர்ந்தவர்களிம் போலீசார் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

    முன்னதாக நடிகை மினு முனீர் நடிகர்கள் எம். முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ, எடவேலா பாபு ஆகியோர் மீது துன்புறுத்தல் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் வந்த மிரட்டல் மெசேஜ்-யை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார்.

     நடிகை மினு முனீர் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா மற்றும் மணியன்பிள்ளை ராஜூ, பாபு ஆகியோர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    நான் படப்பிடிப்பு தளத்தில் கழிவறைக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து வெளியேறியபோது, எனக்கு பின்னால் இருந்து ஜெயசூர்யா என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து சென்று விட்டேன்.

    நடிகர் சங்க முன்னாள் செயலாளர் செயலாளர் பாபு, அம்மா உறுப்பினர் அட்டை பெறுவதற்கு உதவி செய்வதாகக் கூறி அவர் வசிக்கும் வீட்டிற்கு அழைத்தார். அப்போது உடல் தொடர்பான துன்புறுத்தலுக்கு ஆளானேன்.

    நடிகரும், சிபிஎம் (CPM) எம்.எல்.ஏ.-வுமான நடிகர் முகேஷ், அவருடைய ஆசைக்கு இணைங்க மறுத்ததால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வழங்க மறுத்துவிட்டார்" எனக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை தவறாக வழி நடத்துகிறீர்கள்.
    • நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

    2017-ம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் கேரள மாநில அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சமர்பித்த அறிக்கை மலையாளம் சினிமா துறையில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்தியது.

    அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நடிகைகள் தாங்களும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக அடுத்தடுத்து புகார் தெரிவித்து வரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாலையான சீனிமாவின் மூத்த நடிகரும், மத்திய தலைவருமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

    நான் புரிந்து கொண்டது வகையில் இது எல்லாம் உங்களுக்கான தீனி மாதிரி. இதை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன.

    நீங்கள் (ஊடகங்கள்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழி நடத்துகிறீர்கள்.

    புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

    இவ்வாறு சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் தனுஸ்ரீ தத்தா நடித்துள்ளார்.
    • இந்தி நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்திருந்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று தகவல் வெளியானது.

    இதனை தொடர்ந்து கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது.

    இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

    கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது. அதே சமயத்தில் மொத்த மலையாள திரையுலகமும் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும், பல நடிகைகள் ஓட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், ஹேமா கமிட்டியின் அறிக்கையால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "2017-ல் நடந்த ஒரு விஷயத்தை பற்றி அறிக்கை தயாரிக்க அவர்களுக்கு 7 வருடங்கள் தேவைப்பட்டனவா? இந்தப் புதிய அறிக்கையினால் என்ன பயன்? அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின்முன் தண்டிப்பதுதான்.

    விசாகா கமிட்டியை பற்றி கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கிறது. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்காக பக்கம் பக்கமாக பல வழிகாட்டுதல்களை முன்வைத்தது. அதன் பிறகு என்ன நடந்தது? கமிட்டிகள் பெயர் மட்டும் தான் மாறிக்கொண்டே இருக்கிறது.

    இந்தக் கமிட்டிகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்த அறிக்கைகள் மற்றும் கமிட்டிகள் நமது நேரத்தை தான் வீணடிக்கிறது. பாதுகாப்பான பணியிடம் என்பது ஒரு பெண்ணுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமையாகும்.

    பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மக்கள் நடிகைகளை மனிதர்களாகப் பார்க்கவில்லை. எங்களை ராணிகளைப் போல நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமையும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையும் எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

    தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். "2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
    • 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று வெளியான தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே பல பிரச்சனைகளை நடிகைகள் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. அதாவது மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்து ஆய்வு செய்ய இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

    இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் 4½ ஆண்டுகளுக்கு பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

    கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது. அதே சமயத்தில் மொத்த மலையாள திரையுலகமும் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும், பல நடிகைகள் ஓட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக மேற்கொண்டு கேரள அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    ×