search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "milk anointing"

    • மேளத்தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்
    • வழுக்கு மரம் ஏறுதல், உரியடி திருவிழா நடந்தது

    ஆரணி:

    ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி தலைமையில் நடைபெற்றது.

    மேலும் காலையில் மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தன. பெருமாள் கோவிலிருந்து 108 பெண்கள் பால்குடம் ஏந்தி மேளத்தாளத்துடன் ஊர்வலமாக கிருஷ்ணர் கோவில் அடைந்தனர்.

    பின்னர் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனையடுத்து வழுக்கு மரம் ஏறுதல் உரியடி திருவிழாவை தொடர்ந்து கிருஷ்ண லீலைகள் என்ற பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவில் நிர்வாக தலைவர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி, நிர்வாகிகள் தர்மன், விஜயகுமார் உட்பட பலர் செய்து வருகின்றனர்.

    • இந்த ஆண்டு 34-ம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • விழா நாட்களில் சமயபுரத்து மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆண்டியப்பர் தெரு, பாரதியார் தெரு பகுதியில் சமயபுரத்து மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 34-ம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி சமயபுரத்து மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

    மேலும் விழா நாட்களில் சமயபுரத்து மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    முக்கிய நிகழ்ச்சியான நேற்று அரசலாற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, அலகுகாவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து சமயபுரத்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இரவு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கா ரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.

    இரவு சக்தி கரகம், பதினெட்டாம்படி வேல், மதுரைவீரன் வேல், காத்தவராயன் வேல், முனீஸ்வரன் வேல், அக்னி கொப்பரையுடன் வீதியுலா நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • தினசரி காலை 9 மணிக்கு ஸ்ரீ 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்ச நேயர் சுவாமி, சாந்த சொரூ பியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் திரளான பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு ஸ்ரீ 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.

    தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதனையடுத்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்க வசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கும், கட்டளைதாரர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், சுவாமிக்கு தேர்த்திருவிழா நடைபெறும்.

    பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமைய முன்னிட்டு, காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சா மிர்தம் போன்ற பொருட்க ளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கனகாபி சேகத்துடன் அபிசேகங்கள் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, திரையிடப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடை பெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை நடை பெற்றது. பின்னர் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் உதவி கமிஷ னர் இளையராஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை செய்திருந்தார். நாமக்கல் கோட்டை பகுதியில் பக்தர்கள் நெரிசல் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

    ×