என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money robbery"

    • பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் ரகுவரன். இவரது மனைவி ரேவதி (வயது 39).
    • ரகுவரன்-ரேவதி இருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சத்திரமனையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் ரகுவரன். இவரது மனைவி ரேவதி (வயது 39). இவர் பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    ரகுவரன்-ரேவதி இருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சத்திரமனையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் ரகுவரன்-ரேவதி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ், வீடு திறந்திருந்ததை பார்த்து ரேவதிக்கு செல்போனில் தகவல் அளித்தார். அதனைத்தொடர்ந்து ரேவதி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புடவைக்கு அடியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து ரேவதி பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையின் அருகில் உள்ள மற்றொரு எலக்ட்ரானிக்கல் கடையிலும் ஷட்டரை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை.
    • 2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி நகர் பாரதிபுரம் நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் எதிரே பிரபல டி.வி. ஷோரூம் உள்ளது. கடந்த மாதம் தான் புதிதாக திறக்கப்பட்டது. இங்கு சுமார் 35 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு ஷோரூமை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை 9.45 மணியளவில் கடையை கணக்காளர் திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் ஷட்டரை கடப்பாறை மூலம் நெம்பி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.63 ஆயிரத்து 700 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இந்த கடையின் அருகில் உள்ள மற்றொரு எலக்ட்ரானிக்கல் கடையிலும் ஷட்டரை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை.

    2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டனர். கடையில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள் 2 இடங்களிலும் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் உபகரணங்களை திருடிச்சென்று விட்டனர். எனவே அதில் பதிவான காட்சிகளை காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நகரின் முக்கியமான இடத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • போஸ்ட் மாஸ்டராக சுனந்தா(51) என்பவர் பணியாற்றி வருகிறார்.
    • மறுநாள் காலை வந்து பார்த்தபொழுது போஸ்ட் ஆபீஸின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    திருச்சி,

    திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியில் தபால் அலுவலகம் உள்ளது உள்ளது. இங்கு போஸ்ட் மாஸ்டராக சுனந்தா(51) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார். மறுநாள் காலை வந்து பார்த்தபொழுது போஸ்ட் ஆபீஸின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து பாலக்கரை காவல் நிலையத்தில் அவர் அளித்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில் போஸ்ட் ஆபீஸில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் செல்போன் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுவர் ஏறி குதித்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் வி.ஏ.கே நகரில் பழமை வாய்ந்த சக்தி விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்று இரவு அங்கு பைக்கில் வந்த 3 பேர் கோவிலின் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை வழக்கும் போல் கேட்டை திறந்து உள்ளே சென்ற அர்ச்சகர் உண்டியல் உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார்.

    நிர்வாகிகள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது இது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவில் அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் பைக்கில் வந்து சுவர் ஏறி குறித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கொள்ளையில் அதே நபர்கள் மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    • திருவள்ளூர், லங்ககாரத் தெருவைச் சேர்ந்தவர் கஜபதி. திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார்.
    • வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் 775 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தர்ரெட்டி. இவர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில் பூ, பழச்செடிகள் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜலந்தர்ரெட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இது குறித்து ஜலந்தர் ரெட்டி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருவள்ளூர், லங்ககாரத் தெருவைச் சேர்ந்தவர் கஜபதி. திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வந்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் 775 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி விசாரணை நடத்தி வருகிறார்.

    • சங்கரலிங்கம் பயணித்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • சங்கரலிங்கம் அருகில் கைக்குழந்தையுடன் இளம்பெண் அமர்ந்திருந்தார்.

    விருதுநகர்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 42).

    இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்துக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவர், கொண்டு வந்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தார்.

    சங்கரலிங்கம் பயணித்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் அருகில் கைக்குழந்தையுடன் இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் அருப்புக்கோட்டை அருகே சென்றபோது அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் சில்லரையை கீழே தவறி விட்டார். அருகில் அமர்ந்திருந்த சங்கரலிங்கம் அதனை எடுக்க முற்பட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இளம்பெண் சங்கரலிங்கம் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்தை நைசாக எடுத்து கொண்டு அடுத்த பஸ் நிறுத்தத்தில் அவசர அவசரமாக குழந்தையுடன் இளம்பெண் இறங்கி தப்பினார்.

    பணம் திருட்டுபோனதை கூட அறியாத சங்கரலிங்கம் ஊருக்கு வந்தார். வீட்டுக்கு சென்று பையை பார்த்தபோது அதிலிருந்து பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் தன் அருகில் அமர்ந்து பயணித்த இளம்பெண் திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சங்கரலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.

    • டீக்கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி கோவிந்தராஜ் அடைந்தார்.
    • கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் அய்யாவு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது வீட்டின் கீழே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று அதிகாலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷாஜிதா பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்
    • வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    கவுண்டம்பாளையம்

    கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் நவீன். இவரது மனைவி ஷாஜிதா (வயது 35). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது ஷாஜிதா வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் வீட்டிற்கு திரும்பிய ஷாஜிதா பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆசிரியை வீட்டில் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • கோவில் உள் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கோவிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவிலில் நாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசேஷம் மற்றும் திருவிழா நாட்களில் அந்தப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கூடுவது உண்டு. மார்கழி மாதத்தை முன்னிட்டு இந்த கோவிலில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலை திறந்து பூஜை ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கோவில் உள் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் ஊழியர்கள் உடனே நயினார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    கோவிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இன்று அதிகாலை 2.10 மணிக்கு கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதும், அதனை தொடர்ந்து கோவில் ஊரணி கரை வழியாக தப்பிச்செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் மர்மநபரையும், அவருடைய கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.

    கோவில் உண்டியலில் ரூ. 3 லட்சம் வரை காணிக்கை இருந்திருக்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடந்த துணிகர சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பூட்டை உதை்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பெரியஊனை கிராமத்தை சேர்ந்த வர் ராமசாமி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 29). ராணுவ வீரர். இவர் தனது மனைவி பிரசவத்திற்காக விடுமு றையில் வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு அணைக்கட்டு அருகே மலைச்சந்து கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    மீண்டும் மாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத் திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் அவரது மனைவியின் பள்ளிச் சான்றுகள் உள்ளிட்டவைகளை மர்ம கும்பல் திருடிச்சென் றது தெரிய வந்தது.

    இது குறித்து வெங்கடேசன் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
    • ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக இடம் வாங்குவதற்காக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை அணுகியுள்ளார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையூரை சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும், ராமச்சந்திரன் என்ற மகனும், தனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடந்த 25-ந்தேதி இவர் தொழில் விசயமாக வெளியூர் சென்றுவிட்டார்.

    அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் கத்தி முனையில் குழந்தைகளை மிரட்டி பீரோக்களை உடைத்து அதிலிருந்த 41 பவுன் நகை, ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் டி.எஸ்.பி துர்க்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த நபர் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக இடம் வாங்குவதற்காக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை அணுகியுள்ளார். இவர் சர்வதேச மனிதஉரிமைகள் கழக மதுரை மண்டல பொதுச்செயலாளராக உள்ளார். மேலும் தீனதயாளனை தனது வீட்டிற்கு வரவழைத்து இடத்திற்காக ரூ.5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இடம் பேசி முடிப்பதற்கு முன்பாகவே ரூ.5 லட்சம் கொடுத்ததால் சீனிவாசன் வீட்டில் பணம், நகை அதிகளவு இருக்கும் என்று உறுதி செய்தார்.

    இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த ஜோதி என்பவரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். இவர் மனித உரிமைகள் அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு பெங்களூரு, ஓசூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் எப்போதாவது சில முறை மட்டுமே ஒன்று சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுவதும், அதன்பிறகு பங்கை பிரித்துக்கொண்டு தனித்தனியாக சென்றுவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    அதன்படி சீனிவாசன் வீட்டில் கொள்ளையடிக்க தீனதயாளன், ஜோதி ஆகியோர் 16 பேரை தேர்வு செய்தனர். இதில் சென்னையில் போலீசாக வேலைபார்த்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்ட செல்வக்குமார், சிராஜூதீன், சதீஸ், சுரேஷ், ரகு, பாஸ்கர் உள்பட 18 பேர் கொள்ளையடிக்க முடிவு செய்தனர். இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று அஞ்சலி ரவுண்டானா பகுதியில் ஒன்றுகூடினர். பின்னர் அங்கிருந்து தீனதயாளன் கார் மூலம் சீனிவாசன் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்குள் 5 பேர் மட்டும் சென்றுவிட மற்ற 11 பேரும் வீட்டைச்சுற்றி கண்காணித்து வந்தனர். கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு அதேகாரில் தருமத்துப்பட்டிக்கு சென்றனர். அங்கு பணத்தை பங்குபோட்டுவிட்டு சென்றுவிட்டனர். கொள்ளைநடந்த நாளில் தீனதயாளனின் கார் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

    அதனைவைத்து அந்த காரை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போதுதான் இவரது கார் சோதனைச்சாவடி அருகே வந்தபோது சிக்கி கொண்டது. போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.3 கோடிக்கு மேல் பணம்-நகை இருப்பது தெரிய வந்துள்ளதால் அதனை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருந்தனர். ஆனால் போலீசார் அதற்குள் அவர்களை சுற்றிவளைத்துவிடவே அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டு வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 8 பேர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச்சம்பவத்தில் கைவரிசை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    • மற்றொரு காரில் வந்த 5 பேர் காருடன் தலைமறைவாகிவிட்டனர்.
    • தலைமறைவாக இருக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவர் கடந்த 21-ந் தேதி காரில் கோவை நோக்கி சென்ற போது, பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில், மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல் காரை வழிமறித்து அவரை தாக்கி காரை கடத்தி சென்றது.

    அடுத்த சில மணி நேரத்தில் சித்தோடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் மீட்கப்பட்டது. காரில் ரூ.2 கோடி பணம் இருந்ததாகவும், மர்ம கும்பல் அதனை கொள்ளையடித்து சென்றதாகவும் விகாஸ் சித்தோடு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சித்தோடு போலீசார் இதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி., பவானி டி.எஸ்.பி. தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சித்தோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் 6 வாலிபர்கள் இருந்தனர்.

    காரில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும் சோதனை நடத்தியதில் வீச்சரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளன.

    மேலும் ரொக்கப்பணம் ரூ.20,000 இருந்தது. இதனால் சந்தேமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயன், சந்தோஷ், டைடாஸ், விபூல் என்கிற சந்தோஷ், முஜிப் ரஹ்மான், முஜூபூர் ரஹ்மான் ஆகியோர் என்பதும். இவர்கள் கடந்த 21-ந் தேதி பவானி லட்சுமி நகர் அருகே விகாஸ் காரை வழிமறித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.

    இதேபோலவே மற்றொரு கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு சென்றபோது போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர். 6 பேரையும் கைது செய்ததுடன் அவர்கள் வந்த வாகனத்தையும், ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாரின் சோதனையை கண்டதும் இந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 5 பேர் காருடன் தலைமறைவாகிவிட்டனர். இந்த 5 பேர் கும்பலுக்கும் ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தக் கொள்ளை கும்பல் இதே போல் பலரிடம் கைவரிசை காட்டி இருக்ககூடும் என கருதப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ×