என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national flag"

    • கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
    • உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் வருகை தருகின்றனர்.

    தற்போது போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர்.

    இந்நிலையில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் 2நாள் பயணமாக இன்று வாடிகன் கிளம்பியுள்ளனர். நாளை போப் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துவார்கள்.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குரு போப் பிரான்ஸ் மறைவையொட்டி நாளை அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.

    இந்நிலையில், நாளைய தினம் (ஏப். 26) போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கையொட்டி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும், அரசு நிகழ்ச்சிகள் கூடாது என உள்துறை அமைச்சக அறிவிப்பை சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • முத்தையாபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் - பவதாரினி என்ற தம்பதியின் மகள் தியாஷிகா
    • 100 நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக பதக்கம் பெற்றார்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார், இவரது மனைவி பவதாரினி இவர்களது மகள் தியாஷிகா (வயது 2 ½). 21 நிமிடங்களில் 100 நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.

    பதக்கம் மற்றும் சான்றிதழுடன் அவரது பெற்றோர் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குழந்தை தியாஷிகாவை பாராட்டி மென்மேலும் சாதனைகள் புரிய எஸ்.பி. பாலாஜி சரவணன் வாழ்த்தினார்.

    • இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

    ஆனேக்கல் :

    பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் உள்ள தனியார் அகாடமி சார்பில் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை உருவாக்கும் முயற்சி நடந்தது. இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகள் காகிதத்தில் தேசிய கொடியை வரைந்து அதனை படகு போல வடிவமைத்து பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். சுமார் ஒரு மணி நேரத்தில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை மாணவ-மாணவிகள் உருவாக்கினர்.

    மாணவ-மாணவிகளின் இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த சாதனையை பாராட்டி எலைட் வேர்ட் ரெக்கார்ட், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி உள்ளன. மேலும் மாணவ-மாணவிகளின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    • தேசியக் கொடிகள் இறக்கப்படாமல் அலட்சியத்துடன் விடப்பட்டுள்ளன.
    • தேசியக் கொடிகளை முறையாக இறக்கி வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    திருப்பூர் : 

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடு, கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் உள்ளிட்டவற்றில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.

    இதையடுத்து, குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்திலும் தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

    மத்திய அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி கடைகள், வீடுகளுக்கு நேரடியாக சென்ற உள்ளாட்சி அமைப்பினர், தேசிய கொடிகளை வினியோகித்தனர். அவ்வாறு ஏற்றப்பட்ட தேசிய கொடிகளை முறையாக இறக்கி பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்எனவும் அறிவுறுத்தப்பட் டது. ஆனால் பெரும்பாலான குடியிருப்புகள், கடைகளில் நீண்ட நாட்கள் ஆகியும் தேசிய கொடி இறக்கப்படாமல் விடப்பட்டன.

    சிலர் தேசப்பற்றை வெளிப்படுத்துவதாக கூறி, பொது இடங்கள், மின் கம்பங்கள், செல்போன் டவர்கள், தொலைபேசி கம்பங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்றி வைத்தனர். சுதந்திர தினம் முடிந்ததும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை.தேசிய கொடியை சேதமடைய செய்வது மற்றும் அவமதிக்கும்படியான செயல்களை செய்தால் அது தேச விரோத குற்ற செயலாக கருதப்படுகிறது. குடியிருப்புகள், கடைகளில் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு 100 நாட்கள் நிறைவடைய உள்ளது. இருந்தும் பெரும்பாலான இடங்களில் தேசியக் கொடிகள் இறக்கப்படாமல் அலட்சியத்துடன் விடப்பட்டுள்ளன.

    இதனால் தேசிய கொடிகள் காற்றில் கீழே விழுந்து அழுக்கடைவதும், சேதமடைவதுமாக அவமதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே ஏற்றி வைக்கப்பட்டுள்ள தேசியக் கொடிகளை முறையாக இறக்கி வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்குமாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பொதுமக்கள் பொதுவாக வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவது பரவலாக தென்படவில்லை.
    • ஒரு அரசு பள்ளியில் தேசியக்கொடி இரவு நேரத்தில் பறந்திருப்பது சட்டப்படி இல்லாவிட்டாலும் மரபுப்படி தவறே.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால் விளையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர் அணி வகுப்பில் தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது மாணவர்களும் ஆசிரியர்களும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் மாலை 6 மணிக்கு இறக்க வேண்டிய தேசியக்கொடி இறக்கப்படாமல் இரவு முழுவதும் பறந்து கொண்டிருந்ததாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்த்த பின்னர் கொடி இறக்கப்பட்டது.

    இந்த நிலையில் தேசியக்கொடி இரவில் பறப்பது அனுமதிக்கப்பட்டதா என்பது குறித்து உயர்நீதிமன்ற வக்கீல் அப்துல் கலாம்ஆசாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேசியக்கொடி திறந்த வெளியில் இருந்தால், பொதுமக்களால் ஏற்றப்பட்டால் அது இரவு முழுவதும் பறக்கலாம். ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் தேசியக்கொடியை இரவில் கூட பறக்க அனுமதிக்கும் வகையில் 2002-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் திருத்தியது. முன்னதாக, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இடையே மட்டுமே கொடியை ஏற்ற முடியும் என்ற சட்டம் இருந்தது.

    விமான நிலையம் ரெயில் நிலையம் போன்ற இடங்களில் பகலை போன்று இரவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் இருக்கும் பகுதியில் தேசியக்கொடி இரவிலும் பறக்கலாம் என்று அரசு அனுமதி அளித்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்தபோது இரவு நேரத்தில் கொடியை இறக்க வேண்டும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் அதில் இடம் பெறவில்லை. எனினும் பொதுமக்கள் பொதுவாக வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவது பரவலாக தென்படவில்லை.

    ஆனால் ஒரு அரசு பள்ளியில் தேசியக்கொடி இரவு நேரத்தில் பறந்திருப்பது சட்டப்படி இல்லாவிட்டாலும் மரபுப்படி தவறே.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்
    • அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

    அரியலூர்ஞ

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குடியரசுதின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமண–சரஸ் வதி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உலக சமா–தானத்தை விரும்பும் பொருட்டு வெண் புறாக் களை பறக்க–விடப்பட்டன.

    அரியலூர்:

    பின்னர் கலெக்டர் பெ.–ரமண–சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகி–யோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி–வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப் புத்துறை, வருவாய்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பனியாற்றிய 162 பேருக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலை–வாணி, மாவட்ட திட்ட அலுவலர் ஈஸ்வரன், ஊராட்சி உதவி இயக்குனர் விஜய்சங்கர், பிற்பட்டோர் அலுவலர் குமார், ஆதி திராவிட நலஅலுவலர் விஜயபாஸ்கர், வேளாண் மைத்துறை இணை இயக்குனர் பழனி–சாமி, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்து–கிருஷ்ணன், கூட்டுறவு சங்க இணை–பதிவாளர் தீபாசங்கரி, இணைஇயக்குனர் ஜெயரா–மன், ஊரக வாழ்வா–தார திட்ட இயக்குனர் முரு–கண்ணன்,

    செய்திமக்கள் தொடர்பு அதிகாரி சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பொதுப்பணித்துறை அதிகாரி தேவேந்திரன், மணிவண்ணன், கலெக்ட–ரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, அரசு மருத்து–வக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், ஆர்.டி.ஓ.க்கள் அரியலூர் ராமகிருஷ்ணன், உடை–யார்பாளையம் பரிமளம், தாசில்தார் அரியலூர் கண்ணன், செந்துறை பாக்கி–யம் விக்டோரியா, ஜெயங் கொண்டம் துரை, ஆண்டிமடம் அலிபுரகு–மான்,

    அரசு கேபிள் டி.வி. தாசில்தார் தேன்மொழி, நகராட்சி கமிஷனர் தம–யந்தி, யூனியன் கமிஷ–னர் அரியலூர் ஸ்ரீதேவி, செந்துறை விஸ்வநாதன், தமிழரசன், திருமானூர் ஜெயராஜ், ராஜா, ஜெயங் கொண்டம் முருகா–னந்தம், அமிர்த–லிங்கம், ஆண்டி–மடம் ஜாகிர்உசேன், குரு–நாதன், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் காம–ராஜ், ரவிசேகரன், டி.எஸ்.பி. ஆயுதப்படை மணவா–ளன், அரியலூர் சங்கர்கணேஷ், ஜெயங் கொண்டம் ராஜா சோமசுந்தரம், மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடு பிரிவு சுேரஷ் குமார், சமூகநீதி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், கார்த்திகேயன் உட்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து–கொண்டனர்.

    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பு கிராமசபை கூட்டம் நடை–பெற்றது.




    • நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.
    • காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளி களுக்கு ரூ.90,89,347/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வளர்ச்சி முகமை, சிறப்பாக சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊரக துறைகளில் நற்சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் செல்வராஜ் எம்பிஅதிகாரிகள் பிரிதிவிராஜ் பானோத் ம்ருகேந்தர்லால்மாவட்ட வருவாய் அலுவலர் சஷிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    திருவாரூர்:

    இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.

    அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் ஏழு பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 47 பேருக்கும், சமூக நலத்துறையின் சார்பில் 616 பேருக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஐந்து பேருக்கும் என பல்வேறு துறைகளில் சார்பில் 705 பேருக்கு ரூ 2,06,09,915 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

    மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக்கொடியை ஏற்றினார்.
    • கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் (ராஜன் தோட்டம்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா இன்று (26.01.2023) காலை 08.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    74-வது குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னால் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் வருடாந்திர பராமரிப்பு தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.18,000 மதிப்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், வருவாய்த்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகையும், 40,பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் விதவை உதவித்தொகையும்,10 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பில் ஆண்களுக்கு திருமண உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும்,27 பயனாளிகளுக்கு தலா ரூ,2500 மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் 173 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 இலட்சம் மதிப்பில்;-

    காப்பீடு உதவித்தொகையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பில் மானியத்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 4480 மதிப்பில் விசை தெளிப்பானும், 1 பயனாளிக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்பில் பண்ணை வேளாண் கருவிகளும், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் எனமொத்தம் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர்ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சணா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, இணை இயக்குநர்(வேளாண்மை) சேகர், மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொது) பாலாஜி, மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், முதன்மை கல்வி அலுவலர்ரேணுகா ,உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன் அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல்;-

    கண்காணிப்பாளர்த ங்க வேல், மயிலாடுதுறை ஒன்றிய குழுத்தலைவர்காமாட்சி மூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் அவர்கள், மயிலாடுதுறை வட்டாட்சியர்.மகேந்திரன், மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார்.
    • ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    தஞ்சாவூர்:

    நாட்டின் குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் மூவர்ண கலரில் பலூன்களை பறக்க விட்டார்.

    தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 69 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவம னையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த பயனாளிகள் 17 பேர், தாட்கோ மூலம் பயன்பெறும் பயனாளிகள் 17 பேர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 11 பேர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என 672 பயனாளிகளுக்கு 5008965 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கரகாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்த லைவர் முத்துச்செல்வன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், தாசில்தார சக்திவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஆகாஷ் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை வழங்கினார்.
    • ரூ.2.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், பயனாளிகளுக்கு வழங்கினார்.

    தென்காசி:

    நாட்டின் 74- வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு , காவலர்களுக்கான முதல்-அமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

    தொடர்ந்து, மாவட்டத்தின் சிறப்பாக செயல்பட்ட 29 துறையை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 10 பேர் உள்பட 257 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும், 21 பயனாளிகளுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட கலெக்டர், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பள்ளி மாணவ- மாணவிகள் நிகழ்த்தி வரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாராட்டினார்.

    இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தியாகி சொக்கலிங்கம் பிள்ளை அவர்களின் மனைவி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி லட்சுமிகாந்தன்பாரதி உள்பட பல்வேறு துறையை சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • குடியரசு தின விழாவையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • விழாவில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை:

    குடியரசு தின விழாவையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    விழாவில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர பொறியாளர் லெட்சுமணன் வரவேற்று பேசினார். வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மேயர் சரவணன் மாலை செலுத்தினார். பின்னர் விழாவில் தலைமை தாங்கி பேசினார்.

    விழாவில் விருந்தினர்களை வரவேற்கும் விதமாக குழந்தை இயேசு பள்ளி மாணவிகளின் இசை வாத்தியம் இசைத்தனர். தூய யோவான் கல்லுரி 5-வது தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையினை மேயர் ஏற்றுக்கொண்டார்.

    டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    மேலும் மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலான்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகை யில் பேட்டரி மூலம் இயங்கும் 10 வாகனங்கள் வழங்கப்பட்டது.

    மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பாராட்டி மேயர் சரவணன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    இதில் மண்டல தலைவர்கள் ரேவதிபிரபு, கதிஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×