என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notice"

    • கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி தாலுக்காகவாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

    கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கேள்வி எழுப்பிய போது, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இம்மாதம் 20-ம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

    இந்தக் கூட்டத் தொடரில் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு செய்ய வேண்டுமென, நேற்று சென்னையில் வருவாய்த் துறை அமைச்சரை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சரும் உறுதியளித்தார்.

    இதனால் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாகை தொகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    • அறிவிப்பு பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் வைக்கும் பணி நடந்து வருகிறது
    • 25 ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கீழ் கைத்தளா பகுதியில் விரிவாக்க பணி நடைபெற உள்ளதால், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வருகிற மே மாதம் கோடை விழா நடைபெறுகிறது. இதை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக சமவெளி பகுதிகளுக்கு செல்லும். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் சாலையோரங்களில் வைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை அரவேனு கீழ் கைத்தளா பகுதியில் உள்ள குறுகிய வளைவை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால், அந்த இடத்தை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை கைத்தளாவில் நில அளவை செய்ததில், நெடுஞ்சாலை இடத்தில் வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தில் சாலை மேம்பாடு பணிகள் நடைபெற உள்ளதால், தாங்களாகவே உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்குண்டான செலவு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் அப்பகுதியில் உள்ள 25 ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஜக்கனாரை ஊராட்சி தலைவர், கீழ் கைத்தளா பகுதியில் அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்றாக வேறு பகுதியில் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    • சட்ட விதிமுறைகளை கடைபிடித்துதான் ஆகவேண்டும்.
    • ஆண்டு வரி கணக்குகளை உரிய காலத்துக்குள் முறையாக தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னிந்திய பின்னலாடை உற்பத்தி யாளர் சங்க(சைமா) அரங்கில் நடந்த பின்ன லாடை துறையினர் சந்திப்பு கூட்டத்தில் வணிக வரித்து றை துணை கமிஷனர் முருக குமார் பேசியதாவது:- அதிகாரிகளானாலும் தொழில்முனை வோரா னாலும் சட்ட விதிமுறை களை கடைபிடித்துதான் ஆகவேண்டும். ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்ற ஆடை உற்பத்தியாளர்கள், மாதா ந்திர ஆண்டு வரி கணக்கு களை உரிய காலத்து க்குள் முறையாக தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

    ஆடிட்டர்கள் கவனித்து க்கொண்டாலும்கூட, நிறுவன உரிமையாளர்களும், வரி சார்ந்த அடிப்படை அம்சங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஒரு பொருள் அல்லது சேவையை பெறுபவர் மட்டுமின்றி அதனை வழங்குபவரும் முறையாக கணக்கு தாக்கல் செய்யவேண்டும். ஒரு தரப்பினர் கணக்கு தாக்கல் செய்யவில்லை யெ ன்றாலும், அது தொடர்பில் உள்ள மற்ற வருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, முறையாக ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வோருடன் மட்டும் வர்த்தக தொடர்புவைத்துக் கொள்ளவேண்டும். கணக்கு தாக்கல் செய்யாதது, முரண்பாடு உட்பட பல்வேறு காரண ங்களுக்காக வணிக வரித்து றையிலிருந்து நோட்டீஸ் வந்தால் பயப்பட வேண்டாம்.

    நோட்டீஸ் அனுப்ப ப்பட்டால் உங்கள் நிறு வனம் சார்ந்த ஆடிட்ட ர்களிடம் வழங்கியோ அல்லது வணிக வரித்துறை அலு வலகத்தை அணுகியோ தெரிவித்து விளக்கம் பெ றலாம். நோட்டீ ஸ்களுக்கு உரிய காலத்து க்குள் சரியான பதில் அளிக்கவேண்டும். கால நீட்டிப்பு கேட்டுப் பெற லாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • நகர்ப்புற மைய டாக்டர்களின் நோட்டீஸ்க்கு 3 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் கடந்த 34 மாதங்களில் எத்தனை பிரசவங்கள் நடந்தன? என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 592 பிரசவங்கள் மட்டுமே நடந்தது தெரிய வந்தது. அதே காலகட்டத்தில் சுமார் 14 ஆயிரத்து 291 கர்ப்பிணிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்து ரைக்கப்பட்டு உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையங் களில் குறைவான பிரசவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் விசார ணைக்கு உத்தரவிட்டனர்.

    அப்போது மதுரை மாநக ராட்சிக்கு உட்பட்ட கரிசல் குளம், தெற்குவாசல், வண்டியூர், விராட்டிபத்து, முனிச்சாலை, அனுப்பா னடி, பைக்காரா, திருப்பரங் குன்றம் ஆகிய 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் குறைவான பிரசவம் நடந்தது தெரிய வந்தது.

    எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதார மையங்களின் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் "நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதற்காக குறைவான பிரசவம் நடந்து உள்ளது? இதற்கான விளக்கங்களை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை மாநக ராட்சி நகர்நல அலுவ லர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
    • வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

    மதுரை:

    மதுரை சோலையழகு புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது உணவில் பாதி உடைந்த ஒரு பிளேடு துண்டு ஒன்று இருந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்த தோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.

    மேலும் விசாரணை நடத்தியதில் பணியாளர்களுக்கு மருத்துவசான்று பெறாமல், தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

    மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • சந்தனக்கூடு திருவிழாவில் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிய வேண்டாம்.
    • குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் தெரிவித்துள்ளார். .

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி கூறியதாவது:-

    பெரியபட்டினத்தில் அடுத்த 10 நாட்களுக்கு சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருவிழா என்பதினால் பல்வேறு புதிய நபர்கள் ஊருக்குள் வரக்கூடும். எனவே நமது குழந்தைகளை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிய வேண்டாம்.

    கூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல வும். தங்கள் குழந்தைகளை தனியாக கேளிக்கை போன்ற விளையாட்டுக்கு தனியாக செல்ல அனுமதிக்க வேண்டாம். பெரியவர்கள் உடன் செல்லவும். எந்த விதமான தேவைகள் இருந்தாலும் பஞ்சாயத்து நிர்வாகத்தை அனுகவும். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10,178 குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது.
    • இதற்கான போட்டி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடத்தப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு துறை களில் காலியாக உள்ள 10,178 குரூப்-4 பணியி டங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது. இதற்கான போட்டி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடத்தப்பட்டது.

    சேலம், நாமக்கல்

    இந்த தேர்வை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ் ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பலர் எழுதினர். குறிப்பாக தமிழ்நாடு முழுவ தும் பல லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இதையடுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

    தற்போது, சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்க ளுக்கு தரவரிசை அடிப்ப டையில் பணி நியமன கவுன்சிலிங் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.

    20-ந்தேதி தொடங்குகிறது

    கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்ட 8,500 பேரின் பதிவெண் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணை யதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. கவுன்சிலிங் வரு கிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
    • இதில் 140-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 140-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தற்போது தூய்மை பணியாளர்கள் வேலை குறைபாடு காரணமாக, அதிருப்தியில் இருந்த பொதுமக்கள் செயல் அலுவலர் திருநாவுக்கரசிடம் புகார் அளித்தனர். பொதுமக்கள் புகாரின் பேரில் வேலூர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வந்து உரிய வேலைகளை செய்ய வேண்டும் என எச்சரித்தார்.

    பேரூராட்சி ஊழியர்களை கண்காணித்த செயல் அலுவலர் திருநாவுக்கரசு, சரியான நேரத்துக்கு பணிக்கு வராததாலும் மேலும் கொடுத்த பணிகளை அலச்சியமாக செய்த காரணத்தினாலும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன், தாமரைச்செல்வி மற்றும் மின் பணியாளர் சீனிவாசன் ஆகியோருக்கு உரிய விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார்.இது வேலூர் பேரூராட்சி ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் வேலூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து ஊழியர்களும் பஞ்சாயத்து நிர்வாகம் கொடுக்கும் பணிகளை உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏமாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

    வேலூர் வேலூர் பேரூராட்சிக்கு செயல்அலுவலர் திருநாவுக்கரசு பொறுப்பேற்று ஒரு மாதமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
    • ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    திருப்பதி:

    இலங்கையை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் (கட்டிட மேஸ்திரி) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி முடிவு செய்தார். இதற்காக சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

    விமான நிலையத்தில் லட்சுமணன், விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்று கொண்டனர்.

    இதனை தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய் பாபா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே, விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    மேலும், வெளிநாட்டு இளம்பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    தற்போது எல்லை தாண்டிய காதல் அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர்.

    • சென்னையில் வருகிற 25-ந்தேதி காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டம் நடைபெறுகிறது.
    • கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    திருப்பூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியா்கள் சென்னையில் வருகிற 25-ந்தேதி காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத்தலைவா் பழ.கௌதமன் கூறியதாவது: -அரசுப்பள்ளிகளில் 2012-ம் ஆண்டு முதல் மிக குறைந்த ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.கடந்த சட்டப்பேரவை தோ்தலின்போது தி.மு.க., தனது தோ்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வோம் என கூறியிருந்தது.

    ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ஊதியம் வாங்கினோமோ அதையேதான் இப்போதும் வாங்கி கொண்டிருக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளாக எங்களுக்கு மே மாத சம்பளமும் வழங்கப்படுவதில்லை. கடந்த மே மாதம் நாங்கள் நடத்திய போராட்டத்தின்போது அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 2 ஆண்டுகளுக்கான மே மாத ஊதியம் தருகிறோம் என்றும், பணிநிரந்தரம் செய்ய தாமதமாகும் பட்சத்தில் ஊதியத்தை உயா்த்தி அனைத்து வேலை நாட்களும் முழுநேர வேலை தருவதாகவும் உத்தரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் போராட்டத்தை ஒத்திவைத்தோம். ஆனால் அந்த வாக்குறுதிகள் கூட தற்போது வரை நிறைவேற்ற ப்படவில்லை.

    எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் வருகிற 25-ந் தேதி முதல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளோம் என்றாா். 

    • உரங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும், போலி உரங்கள் விற்பனையை தடுக்கவும் மாவட்டத்தில் 14 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • இந்த சோதனையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் 195 தொடக்க வேளாண்ைம கூட்டுறவு கடன் சங்கங்கள், 327 தனியார் உரக்கடைகள் என ெமாத்தம் 522 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பருத்தி, மக்காச்சோளம், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் மலர் செடிகளின் தேவைக்காக 3294 டன் யூரியா, 2130 டன் டி.ஏ.பி., 1398 டன் பொட்டாஸ், 9048 டன் கலப்பு உரங்கள், 889 டன் சூப்பர் பாஸ்பேட் என 16760 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த உரங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும், போலி உரங்கள் விற்பனையை தடுக்கவும் மாவட்டத்தில் 14 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கடைகளில் வைக்கப்பட்டுள்ள எடை கருவி, கடைகளின் உரிமம், விற்பனை விவரம், இருப்பு விவரம் உள்ளிட்ட 27 வகையான கள அறிக்கை விவரங்களை தனித்தனியாக இந்த குழுவினர் சேகரித்து வருகின்றனர். இந்த சோதனையில் 15 உரக்கடைகள் தரப்பில் உரிமம் புதுப்பிப்பதற்கும், 10 கடைகள் ஓ படிவம் கேட்டும், வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாட்டு அலுவ லகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர்.

    இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் தெரிவிக்கையில், வேளாண்ைம உதவி இயக்குனர், வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோரை கொண்ட 14 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    உர விற்பனையாளர்கள் லாப நோக்கில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன
    • தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும்

    காங்கயம்,அக்.2-

    காங்கயம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கனிராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் பேருந்து நிலையம், சென்னிமலை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. நேரடி ஆய்வின்போது, கடைகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி நீட்டித்து வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள் தங்களது கடைகளுக்கு முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாவே அகற்றி கொள்ள வேண்டும்.

    தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் அபராத தொகையும் வசூலிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    ×