என் மலர்
நீங்கள் தேடியது "Old woman dies"
- ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
- நாய் துரத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி முத்துசுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சித்திரைகனி.இவரது மனைவி பூசணம் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது மகன் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
செட்டியார்பட்டி ஆசிரியர் காலனி அருகே சென்றபோது திடீரென ஒரு நாய் பின்னால் அமர்ந்திருந்த பூசணத்தை பார்த்து குரைத்தபடி துரத்தி வந்தது. இதனால் பீதியடைந்த அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தார். தலையில் படுகாயமடைந்த பூசணத்தை சேத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூசணம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- உசிலம்பட்டி அருகே இன்று நடந்த கார் மோதி மூதாட்டி-பசு மாடு பலியாயினர்.
- இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நடந்தது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது65). இவர் இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றார்.
நக்கலப்பட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வேமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரஞ்சிதம், பசுமாட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சிதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பசுமாடு சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது.
விபத்து தொடர்பாக தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருமணத்திற்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள மண்மலை பகுதியை சேர்ந்தவர் சென்னம்மா (70). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சென்னம்மா படுகாயம் அடைந்தார்.
சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சாலையை கடக்க முயன்ற பாது பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் விவசாயி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது64).
இவர் இன்று காலை காவேரிப்பாக்கத்தில் இருந்து வாலாஜாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றார்.
அப்போது ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சேர்ந்த தனுஷ் (20) என்பவர் ஓட்டி வந்த பைக் உமா மகேஸ்வரி மீது ேமாதியது. இதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயமடைந்தார்.அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உமா மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டை மனைவி உண்ணாமலை (வயது 85).
கடந்த 17-ந் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் உண்ணாமலை பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வந்தவாசி தெற்கு நிலைய போலீசார் உண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.
- மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த குடக்கரை கே. செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி மாராத்தாள் (82).
சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.
அப்போது திடீரென மாராத்தாளுக்கு மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாராத்தாளை குப்பை குழியில் இருந்து வெளியே மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாராத்தாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார்.
- அவரை, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகம், அம்மா உணவகம் அருகே, கடந்த 19.06.2022 அன்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை முடிந்து வெளியே சென்ற மூதாட்டி, மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த மாதம் 22-ந் தேதி மூதாட்டி இறந்து போனார்.
உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
- இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.
இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இங்கு வந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி டேக்கன் வட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சின்ன பாப்பா (வயது 70). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி அதிகாலை அதிகமான வயிற்று வலி காரணமாக வீட் டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந் துள்ளார்.
இதை பார்த்த அவரது குடும்பத்தினர், சின்ன பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் குணசேகர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
- ராசாத்தி தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார்.
- கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கொட்டகம்பை பகுதியை சேர்ந்தவர் மல்லன். இவருடைய மனைவி ராசாத்தி (வயது 60). இவர் தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராசாத்தி வீட்டின் மேல் தளத்தில் காய போட்டிருந்த துணிகளை எடுத்து வருவதற்காக படிகட்டுகளில் ஏறி சென்றார். அப்போது கால் தவறி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் ராசாத்தி வராததால், குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தனர். அப்போது ராசாத்தி காயமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராசாத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்திய போது விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த புது வசூரை சேர்ந்தவர் பங்கஜவள்ளி (வயது 76). இவர் கடந்த 11-ந் தேதி வீட்டிற்கு முன்பாக இருந்த குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்தினார்.
அப்போது எதிர்பாராத விதமாக பங்கஜ வள்ளியின் சேலையில் தீப்பிடித்து மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனை பார்த்த அவரது உறவினர்கள் பங்கஜவள்ளி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் சிகிச்சைக்காக பங்கஜ வள்ளி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த பங்கஜவள்ளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
- இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மூதாட்டியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்து விட்டார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.