search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opposition parties meeting"

    • எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (இந்திய வளர்ச்சி கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது.
    • மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமே பா.ஜ.க.வின் வேலை.

    கொல்கத்தா :

    2024 பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன. நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' (இந்திய வளர்ச்சி கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து பேசினார்.

    அப்போது அவர், "கலவரம், வன்முறை, மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமே பா.ஜ.க.வின் வேலை. அவர்கள் தீர்க்கமான பதிலைப் பெறுவார்கள். தேர்தலில் அவர்களுக்கு (பாஜக) எதிராக வாக்களித்து மக்கள் பழிவாங்குவார்கள். இந்திய வளர்ச்சி கூட்டணி போரை எதிர்கொள்ளும்" என்றார்.

    தொடர்ந்து, மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு சில மாதங்களுக்குள் கவிழும் என பா.ஜ.க. எம்.பி. சாந்தனு தாக்கூர் பேசியது குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, "அவர்களிடம் (பாஜக) ஒரு டம்ளரை கவிழ்க்கச் சொல்லுங்கள். பின்னர் எங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கலாம். விரைவில் மத்தியில் ஆட்சி கவிழும் என்பதை அவர்கள் உணர வேண்டும். நேற்றிலிருந்து (எதிர்க்கட்சிகள் கூட்டணியை அறிவித்தது முதல்) பா.ஜ.க. பயத்தில் நடுங்குகிறது" என கூறினார்.

    • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்.
    • ஒற்றுமையே நமது பலம், ஒன்றாக இணைந்து #இந்தியா வெற்றி பெறும்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    பின்னர் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பெங்களுருவில் மதச்சார்பற்ற, ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு நடந்தது.

    பிரிவினைவாத அரசியலின் பிடியில் இருந்து நமது தேசத்தின் பன்மைத்துவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் #இந்தியா - இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியை (#INDIA - Indian National Developmental Inclusive Alliance)உருவாக்கியுள்ளோம்.

    தேசியவாதத்தின் முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எதேச்சாதிகாரிகள் இறுதியில் வீழ்வார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது!

    ஒற்றுமையே நமது பலம், ஒன்றாக இணைந்து #இந்தியா வெற்றி பெறும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 2024ம் ஆண்டு புதிய இந்தியா உருவாகும்.
    • இந்தியாவில் ஜனநாயகம், மாநில சுயாட்சி, அரசியலமைப்பு சட்டம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

    அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றன. இன்றைய கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன.

    இந்தியாவில் ஜனநாயகம், மாநில சுயாட்சி, அரசியலமைப்பு சட்டம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

    வருகிற 2024 தேர்தலை மையமாக வைத்து பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டைப் போல் இந்திய அளவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    2024ம் ஆண்டு புதிய இந்தியா உருவாகும். யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் மீதுள்ள வழக்குகளை அமலாக்கத்துறை கண்டுகொள்வதில்லை.

    அமலாக்கத்துறை சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான்.

    பிரதமர் யாரையெல்லாம் ஊழல்வாதிகள் என்று கூறினாரோ அவர்களெல்லாம் இன்று அவருக்கு அருகில் அமர்ந்துள்ளனர்.

    இன்னும் பல கொடுமைகள் நடக்கும், அதையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

    நாட்டின் நன்மைக்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும். கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க 11 பேர் கொண்ட துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்டத்திற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, எனனுடைய 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இவ்வளவு யாரும் செய்து பார்த்ததில்லை என்றார்.

    • ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

    பெங்களூரு:

    பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் நேற்று இரண்டாவது கூட்டம் தொடங்கியது. இன்றும் கூட்டம் நடைபெறுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. கூட்டணியின் பெயர், கூட்டணிக்கான தலைமை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தற்போதைய கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார். இதேபோல் மற்ற தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    • எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா நேற்றிரவு விருந்து கொடுத்தார்.
    • இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

    பெங்களூரு:

    பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளை கடந்து பா.ஜ.க.வை தோற்டிக்க வேண்டும் என்பதே நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் எதிர்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட பிரதான பெரிய கட்சிகள் தவிர முதல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாத பல சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    குறிப்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) உள்ளிட்ட கட்சிகளுக்கு புதிதாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், சிறிய கட்சிகள், பாஜ.க. பக்கம் தாவி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து எதிர்கட்சிகள் தங்களது கூட்டணியை விரிவுபடுத்தியது.

    இந்த நிலையில் பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்டன்ட் நட்சத்திர ஓட்டலில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகமூபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், கேரளா மாநில காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஜி.பிரைன் உள்பட 26 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா நேற்றிரவு விருந்து கொடுத்தார். இதில் சைவ, அசைவ உணவுகள் மற்றும் கர்நாடக மாநில பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிரும், புதிருமாக உள்ள கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை ஒதுக்கிவிட்டு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

    இன்று 2-வது நாளாக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? என்பது குறித்தும் பேசப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார். அவர் மேலும் பேசியதாவது:-

    மாநில அளவில் நம்மிடையே உள்ள கட்சிகளுக்குள் சில வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தவை அல்ல. ஆனால் அவை மக்கள் நலனுக்காக ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. நாம் 26 கட்சிகள் இருக்கிறோம். 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பாஜக தனித்து 303 இடங்களைப் பெறவில்லை, கூட்டணி கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்று பின்னர் அவற்றை நிராகரித்தது. இப்போது பாஜக தலைவர் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்கள் பழைய கூட்டாளிகளுடன் ஒட்டிக்கொள்வதற்காக மாநிலம் விட்டு மாநிலம் வருகின்றனர்.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் காரணமாக பெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
    • இன்றைய கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்கவில்லை.

    பெங்களூரு:

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஏற்பாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

    காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பாராளுமன்ற தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் நடைபெறும் இக்கூட்டத்தில், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, திருமாவளவன், கேசி வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளையும் தொடர்ந்து நடைபெறும். இன்றைய கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்கவில்லை. நாளைய கூட்டத்தில் சரத் பவார் மற்றும் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
    • பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கிறது.

    பெங்களூரு:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர். அதில் பாராளுமன்ற தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.

    காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் ஓட்டலுக்கு முன்புறத்தில் தலைவர்களை வரவேற்கும் வகையில் அவர்களின் உருவ படங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது, குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை உருவாக்குவது, ஒருவேளை எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை தற்போது நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

    • முதல் கூட்டத்தின் முடிவில் 2வது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என கூறப்பட்டது.
    • கூட்டம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

    பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

    கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் நிதிஷ் குமார்," வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம்" என கூறினார்.

    இந்நிலையில், 2வது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

    ×