search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Overhead Reservoir"

    • மழைகாலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    • குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை கட்ட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாச்சிகுளம் கிளை செயலளார் அலாவுதீன் தலைமையிலான நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்கு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி கிடைத்து அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் விரைவாக எடுக்க வேண்டும்.

    வரும் மழைகாலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    ஊராட்சியில் உள்ள அனைத்து இணைப்பு சாலைகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை கட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
    • 25 ஆயிரம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை வைத்திக்குப்பம் பகுதி வளர்ச்சியை கருதி 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    ஹட்கோ, அம்ருத் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் உந்து குழாய்கள், விநியோக குழாய்கள், மோட்டார் பம்புசெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியின் மூலம் வைத்திக்குப்பம், குருசுகுப்பம் சார்ந்த பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    ரூ.12 கோடியே 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். விழாவிற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.

    பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் சுப்பாராவ், இளநிலை பொறியாளர் லோகநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தோடு இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

    ×