என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prayer"

    • அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
    • அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

    இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.

    • நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
    • கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும்.

    கடலூர்:

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு, கடலூரில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புத் திருப்பலி நடத்தினர். இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர். இது அனைத்து ஆன்மாக்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறைத் திருநாள் அன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்ல றையில் அவர்களின் ஆன்மா இளைப்பாற ஜெபம் செய்வது வழக்கம்.

    மேலும், கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். அதன்படி, கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை கல்லறைத்தோட்டம், ஏ.எல்.சி. கல்லறைத் தோட்டம், புனித எபிநேசர் கல்லறைத் தோட்டம், ஆர்.சி. கத்தோலிக்க கல்லறைத் தோட்டம், கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் கல்லறைத் தோட்டம், அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை நடத்தினர். மேலும் தங்கள் உறவினர் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி மாலை அணிவித்து முன்னோ ர்களை நினைவு கூர்ந்தனர். 

    • மதுரையில் நடந்த கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
    • குடும்பத்துடன் வந்து மலர்தூவி வழிபாடு செய்தனர்.

    மதுரை

    மதுரையில் கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் சென்று கல்லறை தோட்டங்களில் மலர் தூவி, படையல் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி உயிர் நீத்த முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து மனம் உருகி கண்ணீரோடு வழிபாடு நடத்துவது வழக்கம்.இன்று (2-ந்தேதி) மதுரையில் கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது. மதுரையில் மகபூப் பாளையம், தத்தனேரி, பாக்கியநாதபுரம், புதூர், அழகரடி, கூடல் நகர், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இன்று காலை குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர்.

    கல்லறைகளை சுத்தம் செய்து மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி பிரார்த்தனை செய்தனர். இதை தொடர்ந்து முன்னோர்களுக்கு பிடித்த பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை படையல்களாக படைத்து மனம் உருகி கண்ணீருடன் இறைவழிபாடு செய்தனர். இறந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறும் வகையில் இறை வேண்டுதல்களும் செய்யப்பட்டன.பல்வேறு கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு காலஞ்சென்ற முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் சில ஆண்டுகளாக கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்படவில்லை. தற்போது அங்கு கல்லறைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் அமைதியான முறையில் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்த இடத்தில் அவர்களுக்கு மலர் அணிவித்தனர்.
    • பிரார்த்தனை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தி அஞ்சலி.

    தஞ்சாவூர்:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி ஆலய பங்குதந்தை மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை பூக்கார தெருவில் உள்ள சூசையப்பர் கல்லறை தோட்டத்தில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் ஜெபித்து மலர் தூவினர். குடும்பம் குடும்பமாக வந்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து ஜெபம் செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆயர்கள், பாதிரியார்களும் கல்லறைகளுக்கு சென்று ஜெபித்தனர்.

    இதே போல் தஞ்சை நகரில் உள்ள பல்வேறு கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    • புனித கொடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.
    • முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உலக புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹா அமைந்துள்ளது.

    தர்ஹாவின் 721-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக, மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியி லிருந்து புனித கொடியை பிராத்தனையுடன் தர்ஹா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.

    பின்னர், புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.

    இதில் பெரிய பல்லாக்குடன் பூக்களால் ஆன சிறிய பல்லாக்குகள், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் யானை, ஒட்டகங்கள், ஆட்டகுதிரைகள் என ஊர்வலமாக வந்தது.

    ஊர்வலம் தர்ஹாவிலி ருந்து புறப்பட்டு ஜாம்புவா னோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் சென்றது.

    அங்கு ஆசாத்நகர் மீன் மார்க்கெட் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் சென்றது. அங்கு ஆட்டோ சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று தர்ஹாவை வந்தடைந்தது.

    பின்னர், தர்ஹா அருகில் உள்ள அம்மா தர்ஹா, ஆற்றாங்கரை பாவா தர்ஹா சென்று மீண்டும் தர்ஹாவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது.

    பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து, அகமது முகைதீன் லெப்பை துஆ ஓதினார். பின்னர், சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு புனித கொடியேற்றப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, 8-ந் தேதி இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

    • மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

    மதுரை

    மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

    இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

    நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.

    இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • திருச்சி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்
    • தேவாலயங்கள் வண்ண வண்ண ஸ்டார்கள், அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன

    திருச்சி :

    இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை–யொட்டி நேற்று இரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் குடில்களில் இயேசு கிறிஸ்துவின் சொரூபம் வைக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது. அதே–போன்று இன்று அதிகாலை 5 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடை–பெற்றன. இதற்காக தேவாலயங்கள், வண்ண வண்ண ஸ்டார்கள், அலங்கார மின்விளக்குகள், குடில்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தன. திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியசாமி, திருச்சி-தஞ்சை திருமண்டல பேரா–யர் தன்ராஜ் சந்திரசேகரன், லுத்ரன் திருச்சபை பேராயர் ஆகி–யோர் தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்த–னை–களில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி அளித்தனர். திருச்சி மேலப்புதூர் மரியன்னை ஆலயம், பாலக்கரை பசிலிக்கா, புத்தூர் பாத்திமா, மெயின் கார்டு கேட் தூய வளனார் ஆல–யம், பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம், பெரிய மிளகுபாறை சந்தியாகப்பர் ஆலயம், கருமண்டபம் ஆரோக்கிய மாதா ஆலயம், மார்க் ஆலயம், காட்டூர் பிலோமினாள் ஆலயம், வெனிஸ் நகர் செபஸ்தியார் ஆலயம், கே.கே.நகர் ஜெகன் மாதா ஆலயம், திருச்சி பொன்ன–கர் ஏ.ஜி. சபை, தலைமை தபால் நிலையம் லூத்ரன் திருச்சபை உள்ளிட்ட ஏரா–ளமான தேவா–லயங்க–ளில் சிறப்பு பிரார்த்த–னைகள் நடைபெற்றன. கிறிஸ்தவ தேவலாயங்க–ளில் வழங்கப்பட்ட நற் செய்திகளில் இயேசு கிறிஸ்து உலகில் மனிதர் களை பாவங்களில் இருந்து ரட்சிக்கவும், ஏழை–களுக்கு இரங்கவும், மாட்டுத்தொ–ழுவத்தில் கன்னி மரியா–ளுக்கு மகனாக பிறந்தார். இயேசுவின் பிறப்பு எளி–மையானது. ஏழை–களிடம் இரக்கம் காட்டுங்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் நாம் இயேசுவின் பிள்ளைகளாக மாறுகிறோம். ஏழைகளுக்கு உதவி செய்கிற ஒவ்வொரு நேரத்திலும் இயேசு உங்க–ளுக்குள் பிரவே–சிப்பார். அந்த ஒவ்வொரு நாளும் நன்னாள்தான் என செய்தி அளித்தனர். தேவாலயங்களுக்கு வந்த கிறிஸ்தவர்கள் ஒருவ–ருக்கொருவர் ஆரத்தழுவி–யும், கை குலுக்கியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.


    • கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது.



    மதுரை

    கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் ஞானஒளிபுரம், மாடக்குளம், நரிமேடு, கே.புதூர், கீழவாசல், தெற்குவாசல், மேலவாசல், காளவாசல், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. அங்கு கிறிஸ்து மஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. தேவாலயத்தின் உட்புற பகுதியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது.

    மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்துக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு பங்குத் தந்தையின் மறையுறை, கூட்டு திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடத்தப்பட்டன.

    தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையில் முத்தாய்ப்பாக, திருப்பலி யின் நிறைவில், தேவதை கள் வேடமிட்டு இருந்த குழந்தைகள், பங்கு தந்தையிடம் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கொடுத்தனர். இதனை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

    இதனை தொடர்ந்து பங்குத்தந்தைகள் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகை யில், அந்த சொரூபத்தை கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தார்கள். இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்பட்டு உள்ளன.நண்பர்கள், உறவினர் களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் ரோந்து வந்து கண்காணித்தனர். மேலும் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    • பேராயர் ஆர்தர் செல்லராஜா தலைமையில் பிரார்த்தனை.
    • ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி மோட்டாண்டிதோப்பில் உள்ள சீயோன் பிரார்த்தனை மையத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் சபை போதகர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். நாகை சீயோன் பேராலய தலைமை பேராயர் ஆர்தர் செல்லராஜா தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. விழாவில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கினர்.

    முடிவில் சின்னசாமி நன்றி கூறினார். விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • சென்னை சாந்தோம் பேராலயத்தில் மயிலை மன்ற மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி சிறப்பு செய்தி வழங்கினார்.
    • சிறப்பு ஆராதனையில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனை இரவு முதல் தொடங்கியது.

    கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, பெந்தேகோஸ்தே, இ.சி.ஐ., மெத்தடிஸ்ட், ஆற்காடு லூத்ரன் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்து ஆலய மணியை ஒலித்தனர். மின் விளக்குகளை அணைத்து புத்தாண்டை வரவேற்றனர்.

    ஆராதனை முடிந்ததும் அருகில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கத்தோலிக்க திருச்சபைகளில் தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. சிறப்பு ஆராதனையில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை சாந்தோம் பேராலயத்தில் மயிலை மன்ற மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி சிறப்பு செய்தி வழங்கினார்.

    இங்கு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பிறகு காலை 6 மணி முதல் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பரங்கிமலை ஆலயம், சின்னமலை அந்தோணியார் ஆலயம், மாதவரம் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம் ஆகிய ஆலயங்களிலும் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    சென்னை கதீட்ரல் பேராலயத்தில் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் சிறப்பு செய்தி வழங்கினார். இங்கு அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு பிரார்த்தனை நடந்தது.

    மேலும் சூளையில் உள்ள தூய பவுல் ஆலயம், அந்த்ரேயா ஆலயம், ஆருத்ரா ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம் ஆகிய இடங்களில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    புத்தாண்டு பிறந்ததும் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை காரணமாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திட சிறப்பு பிரார்த்தனை.
    • மத நல்லிணக்கத்தோடு புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது.

    புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில், மயிலாடுதுறை மறைவட்டஅதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ் அடிகளார், குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார், மணவா ளநல்லூர் பங்குத்தந்தை ஜான் அமலதாஸ் அடிகளார், பில்லாவடந்தை பங்குத்தந்தை சாலமோன் அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

    எங்கேயும் பார்க்க முடியாத தன் மதிப்பை சிலுவை எனும் முகக்கண்ணாடிக்கு முன்பு தான் ஒரு மனிதனால் பார்க்க முடியும் என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி நாகை மறைவட்ட அதிபர் பன்னீர்செல்வம் அடிகளார் திருவிழா மறையுரை யாற்றினார்.

    இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திடவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

    கிறிஸ்தவர்கள் மட்டு மின்றி பிற சமயத்தவரும் இணைந்து நல்லிணக்கத்தோடு கொண்டாடும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா திருத்தேர்ப வனி நடைபெற்றது.

    வான வேடிக்கை, இன்னிசை முழங்க புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் பவனியாக ஆலய வளாகத்தில் தொடங்கி, கொண்டாரெட்டித்தெரு, அழகப்ப செட்டித்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளையடுத்து, திருவிழா நிறைவுத் திருப்பலி நடைபெற்றது.

    புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் சிறப்பு மறையுரையாற்றினார். திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்காக பிரார்த்தனை நடந்தது.
    • இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புகழ்பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.இங்கு மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் சுந்தர நடப்பு பகுதியில் செயல்படும் தனியார் மவுன்ட் போர்டு பள்ளி மாணவர்கள் வருகிற பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுக்காக தயார்படுத்தி வரும் நிலையில், மாணவர்கள் இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற வேண்டிக் கொண்டனர். மாணவர்கள் கொண்டு வந்த நுழைவு தேர்வு சீட்டினை இடைக்காட்டூர் திருஇருதய திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல் தாசனிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றனர். இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

    ×