என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "processions"
- நன்னிலத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- நன்னிலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
நன்னிலத்தில் பொது சுகாதார துறை மற்றும் பள்ளி கல்வி துறை இணைந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தை நன்னிலம் பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொது சுகாதார துறை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர், முதல் நிலை சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் அன்பழகன்,
சுகாதார ஆய்வாளர்கள் ஹட்சன், மிதுன், கீர்த்திவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
- கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
- கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டு உள்ளனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த 31 ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 1300 இடங் களில் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து இன்று 3- ம் நாள் என்பதால் வீடுகள் மற்றும் வெளியில் சிலைகள் வைத்து வழிபட்டவர்கள் கடல் மற்றும் ஆறுகள் பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கும் ஐதீகத்தை முன்னிட்டு ஊர்வலமாக வருவார்கள் என்பதால் மாவட்டம் முழுவதும் 2200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வ–லத்தின் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி , குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி சேத்தியா தோப்பு காட்டு மன்னார்கோவில், நடுவீரப் பட்டு, திட்டக்குடி, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 70 டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத் தப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று 2- ந்தேதி 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் மாவட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப் பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வருகிற 4- ந் தேதி மாவட்டம் முழுவதும் இதேபோல் ஒரு சில டாஸ்மாக் கடையில் மூடப்படும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்