search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • கள்ளச்சாராயம், போதை பொருள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு.
    • பொதுமக்களிடம் மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கொள்ளிடம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலந்து கொண்டு பொதுமக்களிடையே மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதை பொருள் பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

    குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் அதைவிட பெரிய போதை ஏதும் இல்லை என அறிவுரை வழங்கினார்.

    மேலும் கள்ளச்சார விற்பனை நடைபெற்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் லாமேக், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் காவல்துறை, மதுவிலக்கு அமலாக்க துறை அதிகாரிகள் திரளான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    • மான் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும்.
    • அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது.

    விழுப்புரம்:

    செஞ்சிக் கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் இருக்கின்றன. அவைகளில் ஒரு மான் நீண்ட நாட்களாக செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றித் வந்தது. சில நாட்களில் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும். அவ்வாறு நேற்று இரவு வனப்பகுதிக்கு சென்ற மான் இன்று அதிகா லையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது.

    அலுவலக கேட் பூட்டப்பட்டிருந்ததால், அலுவலகம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது. இதனை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் குவிந்தனர். தகவல் அறிந்த செஞ்சி வனத்துறை வனச்சரகர் வெங்கடேசன் தலைமை யிலான வனவர்கள் மானை பக்குவமாக பிடித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விட்டனர். குடியிருப்பு பகுதியில் வந்த மானை காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சின்னையா கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • குடியிருப்பு வாசிகள் டார்ச் லைட்டை வீடுகளில் அடித்து உஷாராகினர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சிகுட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதியில் உள்ளது சின்னையா கார்டன் இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர்.

    காலியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்து எதுவும் கிடைக்காமல், அடுத்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதி வாசி ஒருவர் அவர்களை பார்த்து விட்டார். இதையடுத்து குடியிருப்பு வாசிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனால் உஷாரான குடியிருப்பு வாசிகள் வீடுகளில் விளக்கை எரியவிட்டும், டார்ச் லைட்டை வீடுகளில் அடித்தும் உஷாராகினர். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு இருப்பதை கண்டு திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பொதுமக்களிடம் மாட்டினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்த திருடர்கள் அங்குள்ள வீட்டில் காய போட்டு இருந்த துணிகளை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு, இருட்டுப் பகுதியில் குதித்து தப்பி ஓடினர். அதன் அருகே உள்ள டி.எம்.எஸ். கார்டன் பகுதியில் திருடலாம் என்று சென்றபோது, திருடர்கள் குறித்த தகவல் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணிக்கு வந்து விட்டனர். போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருடர்கள் வீட்டினுள் புகுவது, துணிகளை முகத்தில் கட்டி கொள்வது போன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • உயர் கோபுர மின்விளக்கு அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் இருந்து கட்டங்குடி, பொய்யாங் குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சா லையை கடந்து செல்கின்றனர்.

    இந்த சாலையை கடந்து தான் வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு ஐ.டி.ஐ, ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு செல்ல வேண்டும். தினமும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் விபத்தை தடுப்பதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

    போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லை. இதனால் சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலையம்பட்டியில் இருந்து கட்டங்குடி, பொய்யாங் குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    இந்த சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

    பொதுமக்களின் பாது காப்பு கருதி நான்கு வழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் பொருத்தி விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    • விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 17 பேர் பலியானார்கள்.
    • மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    திருப்பூர் :

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 17 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய தடுப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். சேவூர், ராயர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது.

    திருப்–பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர மதுவிலக்கு போலீசார் விஷசாராயம், வெளிமாநில மதுபானங்கள், கள், கஞ்சா உள்ளிட்டவை தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். மாநகர பகுதியில் வெளிமாநில மதுவிற்பனை தொடர்பாக ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இதுதொடர்பான புகார்களை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை 94437 81474 என்ற எண்ணிலும், திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை 94981 75139 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்களிடம் இருந்து 621 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
    • சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் தாலுகாவில் கடந்த 9-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கோட்டைக் குமார் தலைமை தாங்கினார்.

    நேற்று நடந்த ஜமாபந்தியில் பன்னிகுண்டு, கொக்குளம், திருமங்கலம் டவுன் உள்ளிட்ட 3 பிர்காக்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

    இந்த ஜமாபந்தியில் மொத்தம் 621 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைபட்டா, இலவச வீட்டு பட்டா, முழு புலம், சப் டிவிஷன் என 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை ஆய்வு குழு அலுவலர் கோட்டைக்குமார் வழங்கினார்.

    இதில் திருமங்கலம் தாசில்தார் சிவராமன், சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திரவுபதி அம்மன் கோயிலை அறநிலத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஒரு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்
    • இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடந்த 8-ந்தேதி இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி தர்மாபுரி வீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில். இது சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் 21 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கோயிலுக்கென தனி வருவாய் ஏதும் இல்லை. இந்நிலையில் இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கு திருவிழா நடத்தும் பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது, அதிகாரிகள் கூறுகையில், இந்த கோயிலை அறநிலத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஒரு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதன் காரணமாகத்தான் நாங்கள் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினர். இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடந்த 8-ந்தேதி இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வழக்கம் போல் இந்த ஆண்டு திருவிழா நடத்த கடந்த 2 நாட்களுக்கு முன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைப் அறிந்த விழுப்புரம் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கோவிலுக்கு விரைந்தனர்.   இக்கோவிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கான அறிவிப்பு நோட்டீசை ஓட்டினர். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கோவில் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாத்தான்குளம்-முதலூர் செல்லும் சாலையில் தச்சமொழி பகுதியில் அங்குள்ள வளைவில் இருந்து ஆலமர பஸ் நிறுத்தம் இடையே சாலையோரத்தில் மணல் குவிக்கப்பட்டு கரைசேவை செய்யப்பட்டது.
    • ஆனால் மணல் சரியாக போடாததால் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. வேதக்கோவில் பகுதியில் இருந்து முதலூர் செல்லும் சாலை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாத்தான்குளம்-முதலூர் செல்லும் சாலையில் தச்சமொழி பகுதியில் அங்குள்ள வளைவில் இருந்து ஆலமர பஸ் நிறுத்தம் இடையே சாலையோரத்தில் மணல் குவிக்கப்பட்டு கரைசேவை செய்யப்பட்டது.

    ஆனால் மணல் சரியாக போடாததால் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.

    சாலையோரத்தில் தண்ணீர் தேங்கியபோது அதில் வாகனங்கள் செல்லும் போது பாதசாரிகள் மீது சகதி நீர் பாய்வதால் மிகுந்த சிரமத்தில் சென்று வர வேண்டிய உள்ளது. இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நெடுச்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் இதுவரை எந்தவித மாற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

    மேலும் இருசக்கர வாகனங்கள், இதர வாகனங்கள் இந்த பள்ளங்களால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படாமல் இருக்க இந்த சாலையோர பள்ளங்களை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • குடிநீர் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது.
    • தலைவர் கு.பாப்புகண்ணன் முன்னெச்சரிக்கையாக நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

     தாராபுரம்:

    கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி ஆறு வறண்டு போனது. அதனால் குடிநீர் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே தினசரி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி 30 வார்டுகளுக்கு தங்கு தடையின்றி தினசரி வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில தினங்களாக 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த 15 வார்டுகளுக்கு மறுநாளும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    வரும் நாட்களில் குடிநீர் தேவையை போக்கும் வகையில் அமராவதி ஆற்றில் உள்ள கிணற்றை தூர்வார லாமா?அல்லது புதிய கிணற்றை அமைக்கலாமா? என்ற நோக்கில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் முன்னெச்சரிக்கையாக நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து அவர் கூறுகையில் "தென்–மேற்கு பருவ மழை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது. இவைதொடங்கினால் மட்டுமே அமராவதி அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. அப்போது தான் நகராட்சி நிர்வாகம் தங்கு தடையின்றி வழக்கம் போல தண்ணீர் வினியோகம் செய்ய முடியும். அதுவரை நகராட்சி நிர்வாகம் வினியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

    • நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.
    • வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளான கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பள்ளக்காடு, பெரிய சோளிபாளையம், சின்ன சோளி பாளையம், பாகம் பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளை யம், அண்ணா நகர், பொன்மலர் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளை யம், குன்னத்தூர், பாண்ட மங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது. வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    கபிலர்மலை துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. தினமும், மின்தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டால், மின் கம்பி செல்லும் வழியில் தென்னை மரங்கள் இருப்பதால், அடிக்கடி தென்னை மட்டை கம்பி களில் விழுந்து மின்தடை ஏற்படுகிறது. உயர் அழுத்த மின்சாரம் திடீரென வரும்போது பல பகுதிகளில் கம்பி அறுந்து விழுந்து விடுகிறது என்றார்.

    கடந்த சில ஆண்டுகளாக தினசரி மின்தடை என்பது வாடிக்கையாகி விட்டது. தென்னை மரம் வழியாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி, அதற்கு பதிலாக தரமான கம்பிகள் அமைத்து மின் தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

    தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க மின் வாரிய அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மின்தடையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • இங்கு ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல் பணிகள் மேற்கொள்வதாலும் சாலைகள் அகலப்படுத்தாமல் இருப்பதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு .வருகின்றனர்.
    • பொதுமக்கள் இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

    கடலூர்:

    கடலூர் கோண்டூரில்இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லிக்குப்பத்தில் விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமல் சாலையின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினார்கள்.  இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, கடந்த 2019 -ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அதற்கான குறியீடுகள் வரைந்தனர் . ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு சிலருக்கு ஆதரவாக தற்போது சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல் பணிகள் மேற்கொள்வதால் சாலைகள் அகலப்படுத்தாமல் வழக்கமாக இருப்பது போல் சாலைகள் இருந்தால் வாகனங்கள் எப்படி செல்வது? இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீண்டும் 4 சர்வேயர்கள் அனுப்பி புதிதாக அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி இன்று காலை 4 சர்வேயர்கள் நெல்லிக்குப்பத்திற்கு வந்தனர். அப்போது நெல்லிக்குப்பம் நகர சர்வேயர் கொண்டு மீண்டும் அளவீடு செய்யப் போவதாக தெரிவித்தனர் . அப்போது முன்னாள் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் , நகர அ.தி.மு.க. செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருமாறன் த.வா.காநகர செயலாளர் கார்த்திக், சமூக ஆர்வலர் குமரவேல், பாரதீய ஜனதா வேலாயுதம், தி.க. இளங்கோ , கவுன்சிலர் புனிதவதி மற்றும் பொதுமக்கள் இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் கோரிக்கை தொடர்பாக உங்கள் உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த 4 சர்வேயர்கள் தற்போது அளவீடு செய்கிறோம். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்து அளவீடு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மரங்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது.
    • புதிய மரக்கன்றுகளை நட்டு பசுமை வளத்தை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களுடன் வனத்துறை அலுவ லகத்திற்கு சென்றார்.

    அங்கு இணை இயக்குநர் குமாரவேலுவை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    உருளையன்பேட்டை தொகுதி மறைமலையடிகள் சாலையில் கிரீன்பார்க் ஹோட்டல் முதல் தென்னஞ்சாலை ரோடு இடையில் பட்டுப்போன மரங்கள் உள்ளன. அந்த மரங்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது.

    மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும் முன் பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும். அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு பசுமை வளத்தை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    மனுவைப் பெற்ற இணை இயக்குநர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது, தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், கிளைச் செயலாளர்கள் அந்தோணி, விஜயகுமார், முருகன், பிரகாஷ், இளைஞர் அணி அமைப்பாளர் தாமரை க்கண்ணன், கிரி, சாலமன், மூர்த்தி, காங்கிரஸ் சோமு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    வனதுறை அதிகாரியிடம் திமுக பொதுகுழு உறுப்பினர் கோபால் மனு அளித்தார்.

    ×