search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிவறை திறக்கப்பட்டது.
    • பொதுமக்களின் இலவச பயன்பாட்டிற்காக காரைக்குடி நகர்மன்றதலைவர் முத்துத்துரை தலைமையேற்று திறந்து வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பழைய கட்டண கழிவறையை ரூ.3.75 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. அதை பொதுமக்களின் இலவச பயன்பாட்டிற்காக காரைக்குடி நகர்மன்றதலைவர் முத்துத்துரை தலைமையேற்று திறந்து வைத்தார்.நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், நகராட்சிஆணையாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

    நகராட்சி உதவி பொறியாளர் சீமா, கவுன்சிலர்கள் சோனா கண்ணன், முகமதுசித்திக், பிலோமினா, அஞ்சலிதேவி, பூமிநாதன், முன்னாள் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், வட்ட செயலாளர்கள் பாண்டி, பாலாஜி கண்ணன், சுகாதார ஆய்வாளர் சுந்தர், ஒப்பந்ததாரர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஒரு மாதமாக ரோடு வேலையை நிறுத்தி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    • தூசி மற்றும் புகை காரணமாக முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமலும் இரவு நேரங்களில் தடுமாற்றத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    தென்திருப்பேரை:

    நெல்லை- திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலை 56 கிலோ மீட்டர் நீளமுடையது. நெல்லைக்கும், திருச்செந்தூ ருக்கும் இடையே அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது.

    இச்சாலையில் வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென் திருப்பேரை, குரும்பூர், சோனகன்விளை, குமாரபுரம் போன்ற ஊர்களை சேர்ந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள்.

    மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் பக்தர்கள் அதிக அளவில் சென்று திரும்பி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் காலையிலும், மாலையிலும் அதிக அளவில் வேலைக்கு செல்வோர் சென்று திரும்பி வருகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் பஸ்சில் நிற்ககூட இடமில்லாமல் படியில் ஆண்களும், பெண்களும், வயதானவர்களும் தொங்கிய நிலையில் சென்று வருகிறார்கள்.

    ஒரு சில குறிப்பிட்ட பஸ்கள் தொலைதூரம் செல்லும் ராஜபாளையம் உட்பட பஸ்கள் தென்திருப்பேரை போன்ற பஸ் நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை. இதனால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருந்து அதற்கு அடுத்த பஸ்களில் நின்று கொண்டும் படிகளில் தொங்கியபடியும் பயணித்து வருகிறார்கள். எனவே காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க அதிக அளவில் பஸ்கள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த ரோடு குறுகலாகவும், அதிக அளவில் வளைவுகளுமாக இருந்தது. இந்த ரோட்டில் நவதிருப்பதி தலங்கள், திருச்செந்தூர் முருகன்கோவில், குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவில் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் சென்று வருகிறார்கள்.

    இந்த ரோட்டை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகலப்படுத்தும் பணிக்கான டெண்டர் விடப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. பாலங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் துண்டு துண்டாக ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ரோடு வேலையை நிறுத்தி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதனால் சாலையில் போடப்பட்டுள்ள கற்கள் பெயர்ந்தும் குண்டும் குழியுமாகவும் உள்ளதால் வாகனத்தில் செல்பவர்கள் தூசி மற்றும் புகை காரணமாக முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமலும் இரவு நேரங்களில் தடுமாற்றத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • தெருக்களில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்தி வரும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து குப்பைகளை போடுவதற்காக சிவப்பு மற்றும் பச்சை நிற சிறிய குப்பைத் தொட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

    காய்கறி கழிவுகள், தேங்காய் நாறு, சிரட்டை ஓடுகள் இவையெல்லாம் மக்கும் குப்பைகள் எனவும், இதனை ஒரு குப்பைத்தொட்டியிலும், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், கேரிபேக்ஸ் போன்றவைகளை மக்காத குப்பைகள் எனவும் அந்த குப்பைகளை மற்றொரு குப்பைத் தொட்டியில் போட வேண்டும் எனவும், தெருக்களில் அந்த குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கூத்தம்பூண்டி ஊராட்சி தலைவர் பாவாயம்மாள் ராமசாமி, ஊராட்சி செயலாளர் சந்திரன் மற்றும் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளைக்கால்பட்டி கிராமத்தில் குப்பை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளைக்கல்பட்டி கிராமம் சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது.

    இந்த கிராமத்தின் எல்லையில் அரபி கல்லூரி, தனியார் பள்ளி கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, துணை மின் நிலையம் ஆகியவை உள்ளது.

    மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.இந்த நிலையில், பள்ளி, கல்லூரி, தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிவற்றிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் துர்நாற்றம் வீசும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளைக்கல்பட்டி ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தனர். குப்பைகளை இங்கே கொட்டக்கூடாது,

    குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கிராம ஊராட்சி சார்பாக குப்பை கொட்டாத நிலையில், வேறு யார் குப்பை கொட்டுகிறார்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை–களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி குப்பையை பள்ளியின் முன்பாக உள்ள ஒரு மறைவிடத்தில் கொட்டிவிட்டு சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை உடனடியாக சிறை பிடித்தனர். குப்பை கொட்டிய இடத்தில் சென்று பார்க்கும்போது, உணவு விடுதி கழிவுகள், கண்ணாடி கழிவுகள், மருத்துவ கழிவுகள், என அனைத்து வகை கழிவுகளும் கொட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கருப்பூர் போலீசாருக்கும் சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்–பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.

    ஒப்பந்த வாகனங்களில் கொண்டு வந்து குப்பை கொட்டுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், மாநகராட்சி அதிகாரிகள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கபட்டு வந்தது.
    • பல முறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரணயம்அடுத்த பிராந்தியங்கரை ஊராட்சி யில் பெரியகோவில்பத்து கண்எறிந்தான்கட்டளை பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கபட்டு வந்தது. ஆனால் இப்பகுதிக்கு கடந்த 15 நாட்களாக முற்றிலும் வரவில்லை

    இதனால் பொதுமக்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர் .பல முறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிதண்ணீர் வழங்க வில்லை இதை கண்டித்தும் குடிதண்ணீர் கேட்டும்பெண்கள் காலிகு டங்களுடன் சாலைமறியல் ஈடுபட்டனர்.

    சாலைமறியலில் பள்ளி மாணவர்கள் உள்பட ஏரளமான பொதுமக்கள் கலந்துகொண்டு குடிநீர் கேட்டு முழக்கமிட்டனர்.கடந்த ஒரு மணி நேரமாக குடிநீர் அதிகாரிகள் வராத தால் போலீசார் சமாதானம் செய்தும் ஏற்காமல்சாலை யில் அமர்ந்து தொட ர்ந்து மறியலில்ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலை யைமறியலால் வேதார ண்யத்தில் இருந்து பிராந்தியங்கரை வழியாக திருத்துரைப்பூண்டு செல்லும் ஒரே ஒரு பேரு ந்தை மறியல் செய்து சாலையில் அமர்ந்து தொடர்ந்து மறியலில் ஈடு பட்டு வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டையில் செயல்படாத புறக்காவல் நிலையம் உள்ளது.
    • மாவட்ட காவல் நிர்வாகம் உடனடியாக புறக்காவல் நிலையங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அருப்புக்கோட்டை

    ஆங்காங்கே நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் நகர் எல்லை பகுதிகளில் புறக்காவல் நிலையங்களை அமைத்து இரவு பகலாக போலீசார் சோதனையிடவும், சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரிக்கவும் புறக்காவல் நிலையங்கள் அமைக்க காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அதனை செயல்படுத்த காவல்துறை முன்வரவில்லை. நகர் காவல் நிலையம் சார்பில் நகர் எல்லையான காந்திநகர், ராமசாமிபுரம், கோபாலபுரம் விலக்கு மற்றும் பாவடி தோப்பு ஆகிய 4 பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

    இந்த புறக்காவல் நிலையத்திற்கு காவலர்கள் சரிவர வருவதில்லை. இரவு நேரங்களில் ரோந்து பணிகளுக்கு காவலர்கள் வருவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மாவட்ட காவல் நிர்வாகம் உடனடியாக புறக்காவல் நிலையங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.
    • இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை, நாடி சந்தானம் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்திலுள்ள புத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு யாகசாலை அமைத்து யாகவேள்விகள் பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்கை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை லட்சுமி குபேர பூஜை, தனதான்ய பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், முதலாம் காலபூஜைகள் இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை, நாடி சந்தானம் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றது.

    நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜைமகா பூர்ணாஹுதி மகாதீபாராதனைமுதலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின் காலை 10 மணிக்கு புத்துமாரியம்மன், செல்வகணபதி, பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவில் மற்றும் பரிவார கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.

    • டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட காரணத்தால் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய் தென்படுகிறது.

    பொது மக்கள் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு வீடுகளைச் சுற்றியும் மொட்டை மாடிகளிலும் தேவையற்ற பொருட்களை சேமித்து வைப்பதால் இவற்றில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டின் உள்ளேயும் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைத்திடுமாறும், மேலும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்திடுமாறும், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வண்ணம் தங்களது நிறுவனங்களை சுத்தமாக பேணிகாத்திட கேட்டுக்கொள்ளப்ப டுகின்றனர்.

    வாகனங்களை பழுது நீக்கும் இடங்களில் உள்ள டயர்களில் மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ளுமாறும், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சாமான் வாங்கி விற்கும் கடைகளில் உள்ள பொருட்களை மழை நீர் தேங்காமல் பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களில் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும்.

    இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை முடித்து திறக்கப்படுவதால் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தினை சுத்தமாக பராமரிக்குமாறும், பள்ளி வளாகத்தினுள் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் தகவல் தெரிவித்து பள்ளி குழந்தைகளை காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

    பள்ளி மாணவர்கள் காய்ச்சல் தொடர்பான விடுப்பிலிருந்தால் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்ல ஆலோசனை தருமாறும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    பொது மக்கள் காய்ச்சல் கண்ட உடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். பொது மக்கள் அரசு அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற செல்ல வேண்டாம். போலி மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அரசின் நிலையான சிகிச்சை முறைகளை செயல்படுத்தாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு பணியாளர்கள் வீடு தேடி வரும்போது அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டத்தினை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மறைந்த நகைச்சுவை நடிகரின் பிறந்தநாள் கொண்டாடினர்.
    • பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.

    சிவகங்கை

    தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவ். வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, சின்னத்தம்பி, காலம் மாறி போச்சு உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இவருக்கு 3 மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்கள் இறந்த நிலையில் ராஜேந்திர ராவ் என்ற மகன் மட்டும் சிவகங்கை இந்திரா நகரில் வசித்து வருகிறார். தந்தையின் நினைவாக இவர் ஆண்டுதோறும் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள சமுதாய கூடத்தில் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவின் வாழ்க்கை குறித்த புகைப்படங்களை பொது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி இருந்தார்.

    அந்த படத்திற்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மலர் தூவி கண்காட்சியை திறந்துவைத்தார். பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.

    • மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
    • '108' அவசரகால ஊர்தி சேவை திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

    காங்கயம் :

    பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசுமக்களைத் தேடி மருத்துவம் என்னும் திட்டத்தை துவக்கியது.இத்திட்டத்தின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, முடக்குவாதம், பெண்களுக்கு கருப்பை,வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் மற்றும் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினர் கிராம பகுதிகளில் உள்ள படுத்த படுக்கையாக மருத்துவமனைக்கு வர முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கி சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் அவர்களுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பட்டியல் சேகரித்து, அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் தினசரி காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு பகுதியாகச் சென்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

    முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 2008 ம் ஆண்டு பொதுமக்களின் இன்னுயிரை காக்கும் '108' அவசரகால ஊர்தி சேவை திட்டம் பொதுமக்களிடையே வரவேற்ப்பை பெற்றது போல மக்களைத் தேடி மருத்துவம் திட்டமும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

    • தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொபாதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • 20 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. வட க்குத்தெரு 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான பிரதான சாலையாக இருக்கும் சி.எஸ்.ஐ. சர்ச் முதல் பாபு அப்துல்லா ஆட்டோ நிறுத்தம் வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    15 நாட்களுக்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. தோண்டப்பட்ட தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்தப்பகுதியில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதனால் அந்தப்பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் பழுது ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் சிரமத்தி ற்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் தார்ச்சாலை அமைப்பதற்காக வடக்கு தெரு கருணை பள்ளி செல்லும் வழியில் 20 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. தார்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் நடுரோட்டில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களால் இரவு நேரங்களில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்லக் கூடிய சிறுவர்கள் கீழே விழுந்து உயிர்பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த ப்பகுதியில் கொட்டப்பட்ட ஜல்லிகற்களை அகற்றி விரைவில் தார்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுரண்டை பகுதி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் உரிய அதிகாரிகள் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர்.
    • பல பணியிடங்களுக்கு இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வணிக நகரமான சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சமூக ஆர்வலர்களும்

    வலியுறுத்தியதின் அதனடிப்படையில் சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நகர் மன்றத் தேர்தலும் நடத்தப்பட்டு நகராட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

    ஆனால் சுரண்டை நகராட்சியில் முன்பிருந்த பேரூராட்சி நிர்வாக அதிகாரி பணியிடம் ஆணையாளர் என்ற பெயரில் நிரப்பப்பட்டது தவிர வேறு எந்த அதிகாரிகளும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

    குறிப்பாக நகராட்சியின் மேலாளர் மற்றும் நகராட்சி பொறியாளர், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், நகர அமைப்பு அலுவலர் (டவுன் பிளானிங் ஆபிசர்), பணி மேற்பார்வையாளர், வருவாய் ஆய்வாளர், கேரியர் வரி வசூலிப்பவர்கள், பதிவரை எழுத்தர் கூடுதல் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

    இதில் குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு பிற நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் சுரண்டை நகராட்சிக்கு வருகை தர முடியவில்லை.

    இதனால் நகராட்சியின் அன்றாட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதிலும், பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் அளிப்பது, கட்டிட வரைபட அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவில்லை.

    சுமார் ஆயிரம் கட்டிட வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரீசீலனையே கூட செய்யப்படவில்லை. எனவே கட்டிடங்களைக் கட்டுவதில் பொது மக்கள் சிரமங்களை அடைகின்றனர்.

    இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏறுபட்டுள்ளது‌. மேலும் நகராட்சியின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஏற்கனவே கட்டிட வரைபட அனுமதி வழங்குவதற்கு காலதாமதம் ஆவதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

    எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுரண்டையில் நகராட்சிக்குரிய அனைத்து அதிகாரிகளையும் நியமித்து மக்கள் பணியில் கூடுதலாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×