என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rainwater"

    • மாணவர்கள் தங்களது பள்ளியை குப்பையில்லா பள்ளியாக மாற்ற முயன்று வருகின்றனர்.
    • மழை நீரை வீணாக்காமல் அதனை சேகரித்து மருத்துவ தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மகரிஷி வித்யா மந்திர் மாணவர்களின் அறிவியல் ஆய்வு செயல்பா டுகள் நடைபெற்றன. மகான் மகரிஷி மகேஷ் யோகி ஆசியுடன் உணர்வு நிலை சார்ந்த கல்வி கற்கும் மாணவர்கள் அதன் வெளிப்பாடாக ஆக்கபூர்வமான அறிவியல் செயல்பாடுகளுள் ஒன்றாக

    தங்களது பள்ளியில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை நன்றாக மக்கச் செய்து பள்ளியில் பராமரிக்கப்படும் மருத்துவத் தோட்டத்திற்கு அவ்வுரத்தினை பயன்படுத்துகின்றனர்.

    மக்காத குப்பைகளான நெகிழி போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்து அதனை பள்ளிக்கு பயன்படும் அழகுப் பொருட்களாக மீள் உருவாக்கம் செய்கின்றனர்.

    நெகிழியை எரிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படையும் என்பதனால் அதனை எரிக்கும் போது ஏற்படும் புகையையும் சேகரித்து அதனையும் எரிபொருளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    இந்த அறிவியல் ஆய்வுத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களது பள்ளியை குப்பையில்லாத பள்ளியாக மாற்ற முயன்று வருகின்றனர்.

    நீரின்றி அமையாது உலகு என்பதனை உணர்ந்த என் பள்ளி மாணவர்கள் வானம் உமிழும் அமிர்தமாம் மழை நீரை வீணாக்காமல் அதனை சேகரித்து மருத்துவத் தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    மழை நீரை பள்ளியின் கழிவறைக்கும் பயன்படுத்தவும் திட்டமிட்டு ள்ளனர்.நீர் மாசு, நிலமாசு, காற்று மாசு என அனைத்து மாசுகளையும் நீக்கும் அறிவியல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக உள்ள அறிவியல் ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர் அனிதாராம் ஊக்க மூட்டியும் உற்சாகமூட்டியும் பாராட்டினார்.

    • கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.
    • மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நோய்த்தொற்று ஏற்படுத்தக்கூடிய டெங்கு கொசு பரவுதலை தடுத்தல், மழைநீர் தேங்காமல் வடிய வைத்தல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு தீவிரப் படுத்தியுள்ளது.

    அந்த வகையில் திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.

    பெருந்தரக்குடி ஊராட்சியில் பெருந்தரக்குடி, குளிக்கரை, மேம்பாலம், சார்வன் ஆகிய இடங்களில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணி நடைபெற்றது.

    இப்பணியினை ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்காணித்து ஆலோசனை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இதுபோல் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பெரும்பாலான வார்டுகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
    • தி.மு.க. பகுதி செயலாளருமான தச்சை சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பெரும்பாலான வார்டுகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    குறிப்பாக நெல்லை 3-வது வார்டுக்கு உட்பட்ட பாலபாக்யா நகர், மணிமூர்த்தீஸ்வரம் பகுதிகளில் நேற்று பெய்த மழையால் வாழவந்த அம்மன் கோவில் தெரு, நாடார் தெருக்களில் நடந்து கூட செல்லமுடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்பட்டனர்.

    இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் 3-வது வார்டு கவுன்சிலரும், தி.மு.க. பகுதி செயலாளருமான தச்சை சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதிக்கு நேரில் சென்ற தச்சை சுப்பிரமணியன் மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டார்.

    பின்னர் மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின் மற்றும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மழைநீரை வடிய வைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டார். கவுன்சிலரின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இதற்கிடையே அப்பகுதி மக்களின் கோரிக்கையான சாலை சீரமைப்பு குறித்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார். அவரும் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

    • விளைநிலங்களில் கடும்வறட்சி ஏற்படும் போது அருகில் உள்ள கடல் நீர்மட்டம் புகுந்து விவசாய நிலங்களை மோசமாக்கி வருகிறது.
    • குழிகள் அமைத்து அதில் மழைநீரை தேக்கி வைத்தால், அதுகடல் நீர்மட்டத்தை நிலத்திற்குள் புகாமல் தடுக்கும்.

    உடன்குடி:

    உடன்குடிவட்டார பகுதிக்குஉட்பட்ட ஏராளமான விவசாய விளைநிலங்களில் கடும்வறட்சிஏற்படும் போது அருகில் உள்ள கடல் நீர்மட்டம் புகுந்து விவசாய நிலங்களை மோசமாக்கி வருகிறது. விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. கிணற்று நீரும் உப்பாகி பம்பு செட் விவசாயிகளும் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதை தடுக்க விவசாய விளை நிலங்களை சுற்றி வேலியின்கரையில் சுமார் ஒரு அடி ஆழத்திற்கு இரண்டுக்கு இரண்டு அடி அகல நீளவாக்கில் சிறு குழிகள் அமைத்து அதில்மழைநீரை தேக்கி வைத்தால், அதுகடல் நீர்மட்டத்தை விவசாய விளை நிலத்திற்குள் புகுந்து விடாமல் தடுக்கும் என்றும், இதனால்கிணறுமூலம் பம்புசெட்அமைத்து விவசாயம் செய்யும் கிணற்றில் உள்ள நீர் உப்பு நீராக மாறாது என்றும், விவசாய நிலங்களில் உள்ளநீரும் நல்ல நீராக இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்களது தோட்டங்கள் மற்றும் விவசாயநிலங்களை சுற்றி குழி தோண்டி வருகின்றனர்.

    • மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் ஆய்வு.
    • தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அப்போது தண்ணீர் வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தஞ்சை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.

    தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பருவமழையில் விவசாயிகள் பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தைக்கால் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள வீடுகள் பெரும்பாலும் குடிசை வீடுகளாக உள்ளது.இந்த நிலையில் திட்டச்சேரி கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் மழை நீர் வடிகால் சரியில்லாத காரணத்தால் மழை நீர் வடிந்து முதலியார் தெருவழியாக தைக்கால் தெரு குடிசை பகுதியில் வந்து சேர்கிறது.

    அதேபோல் புறாக்கிராமம் பகுதியில் இருந்து வடியும் மழை நீர் கிளி வாய்க்கால் வழியாக தைக்கால் தெருவை வந்தடைகிறது.

    இதனால் மொத்த மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.இதனால் குடிசை வீடுகளின் சுவர்கள் சாய்ந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்துதைக்கால் தெரு சுமதி தெரிவித்த தாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிவ வழியில்லாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.இதனால் கொசு மற்றும் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.

    இதுகுறித்து தைக்கால் தெருவை சேர்ந்த ஜீவா கூறியதாவது:-

    கடந்தாண்டு பெய்த கனமழையில் இதேபோல் குடிசை பகுதிகள் சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது.அதனை அகற்றி தர கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அமராவதி கூறும்போது:-

    தற்போது வடிகால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் வடியாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வடியவும், வடிகால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
    • பம்புசெட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வருவதால் மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கேசவன்பாளையம், களுவன்திட்டு, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 13 -வது வார்டு, ஸ்டேட் வங்கி அருகில் தேர் வடக்கு வீதி, 8-வது வார்டு தடாளம் மேற்கு , வசந்த் நகர், 2- வது வார்டு இரணியன் நகர் ஆகிய இடங்களுக்கு கலெக்டர் லலிதா கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கேசவன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் மழை நீரை பம்பு செட் வைத்து வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிட்டார். அங்குள்ள பொது மக்களிடம் மழை அதிகமாக இருக்கும் என்று வானிலை அறிக்கை கூறியுள்ளதால் பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட களுவன்திட்டு பகுதியில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.

    குறிப்பாக பொது மக்கள் தங்கியிருக்கும் வீடுகளின் அருகில் மழை நீர் தேங்கியிருக்கும் பட்சத்தில் பம்பு செட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

    மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் பம்பு செட்வைத்து மழை நீரை வெளியேற்ற சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இவ்வாய்வின் போது , சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, சீர்காழி நகர் மன்றத்த லைவர்துர்கா பரமே ஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சித்தலைவர் சுகுணாசங்கரி, சீர்காழி நகராட்சி ஆணையர்வா சுதேவன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர்கமலக்கண்ணன், வட்டாட்சியர்கள் செந்தில்குமார்,புனிதா,வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரதுறை , வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்ற முன்னேற்பாடுகள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கடந்த ஆண்டு கனமழையின் போது நாகப்பட்டினம் நகரின் பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த ஓராண்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    மேலும், கடந்த ஆண்டு அதிக அளவு தண்னீர் தேங்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு இம்முறை அங்கு மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடர்பு கொண்டு, மழை வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    1077, 04365 251992, 8438669800 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடுகளில் மழைநீர் தேங்கியதால் கூலி தொழிலாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • வீட்டுக்குள் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். அரசு சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது அந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பழுதான வீடுகளில் மழை நீர் ஒழுகுவதால் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க. மாவட்ட செயலாளர் வெற்றிமாலை கூறுகையில், வீடுகள் சேதம் அடைந்து இருப்பதை பலமுறை கலெக்டரிடம் புகார் அளித்தும் வீடுகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்தப்பகுதியில் பெய்த மழையால் வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. வீட்டுக்குள் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவர்களுக்கான குடியிருப்பு இடம் வழங்க வேண்டும் என்றார்.

    • வாடிப்பட்டி அருகே ஜவுளி பூங்காவில் இருந்து வெளியேறிய மழைநீர் வயல்களுக்குள் புகுந்தது.
    • வடிகால் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட பனியன் மற்றும் ஆயத்த ஆடை தயாரிக்கும் தனியார் கம்பெனிகள் உள்ளது. இந்த ஜவுளி பூங்காவை சுற்றிலும் தடுப்பு சுவர்கள் 4 புறமும் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பூங்காவின் தென்மேற்கு புறம் உள்ள கம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அதனால் அந்தபகுதியில் பெய்த மழைத்தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய் வெளியேறி வயல்கள், புளியந்தோப்புகள், தென்னந்தோப்பு பகுதிகளில் புகுந்துவிடுகின்றன. இதனால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    பல ஆண்டுகளுக்கு முன் தாதம்பட்டி கண்மாய் நிரம்பியபின் மாறுகால் செல்லும் ஓடை தேசியநான்குவழிச்சாலை அமைத்ததால் தூர்ந்து போய்விட்டது. இதனால் வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லவழியில்லாமல் வயலுக்குள் தேங்கி விடு கிறது. எனவே தூர்ந்து போன ஓடைக்கு மாற்றாக புதியதாக மழைவெள்ளம் செல்லும்படியாக வடிகால் அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக விவசாயி கருப்பையா என்பவர் கூறியதாவது:-

    தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளிபூங்கா சுமார் 127ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிகஅளவில் மழைபெய்யும்போது மழை வெள்ளம் காம்பவுண்டுசுவர் இடிந்துவிழுந்ததால் எங்கள் வயல்களில் புகுந்துவிட்டது. இதனால் தற்போது நான் பயிரிட்டுள்ள 4 ஏக்கரில் 300 தென்னைமரங்களிலும், 10 மாமரங்களிலும், 50 செண்டில் உள்ள தீவண புல்லிலும் தண்ணீர்தேங்கி வடிகால் இல்லாததால் அவை அழுகும் நிலையில் உள்ளது.

    மேலும் அடுத்தடுத்துள்ள தென்னந்தோப்புகளிலும் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜவுளிபூங்கா தண்ணீர் வெளியில் செல்ல வடிகால் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜீவா நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
    • வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் தனி தீவாக மாறி உள்ளது. உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகர் ,ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதியான இந்த குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

    சரியான வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் குப்பைக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் வர முடியாத நிலை உள்ளதோடு பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் நான்கு நாட்களாக வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    எனவே தேங்கியுள்ள நீரை அகற்றவும் உரிய மழை நீர் வடிகால் வசதிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.
    • பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது.

    8 நாட்கள் கடந்தும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.

    சீர்காழி, தொடுவாய், வைத்தீஸ்வரன் கோவில், திருநகரி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், தோட்டங்களில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த கொடிய விஷம் கொண்ட நாகம், கோதுமை நாகம், கருநாகம் உள்ளிட்ட 8 பாம்புகளை பாம்பு பிடிக்கும் வீரரான சீர்காழி பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.விஷம் கொண்ட பாம்புகள் பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    ×