என் மலர்
நீங்கள் தேடியது "restaurant"
- இக்கோழி சீனாவின் பாரம்பரிய இசை கேட்டு வளர்ந்தது என்றும் நீருக்கு பதிலாக பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
- அந்த கோழி சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷாங்காய் உணவகம் ஒன்றில் சமைக்கப்பட்ட பாதி கோழிக்கறியை ரூ.5,500 க்கு விற்பனை செய்து வருகிறது. அதற்கு அந்த உணவகம் அதிவிநோதமான காரணம் ஒன்றை வைத்துள்ளது.
ஷாங்காய் நகரிலுள்ள அந்த உணவகத்தில் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் சமைத்த அரை கோழிக் கறியை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதற்கான ரசீதில் அதன் விலை 480 யுவான் (இந்திய ரூபாய் மதிப்பில் 5,500) என இருந்துள்ளது. ஏன் அவ்வளவு விலை என்றும் அந்தக் கோழி இசை கேட்டு வளர்ந்ததா? தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்து வளர்த்தீர்களா? என்றும் தொழிலதிபர் உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ஆமாம் என்று பதிலளித்த ஊழியர், இக்கோழி சீனாவின் பாரம்பரிய இசை கேட்டு வளர்ந்தது என்றும் நீருக்கு பதிலாக பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த கோழி சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
உணவகத்தின் இந்த பதிலை தொழிலதிபர் தனது சமூக ஊடகத்தில் பதிவிடவே அது வைரலாகி வருகிறது.

உண்மையில் சன்ஃபிளவர் சிக்கன் வகை கோழிகள் அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு பதிலாக சூரியகாந்தி தண்டின் சாறு மற்றும் இதழ்களை உணவாக கொடுத்து வளர்க்கப்டுகின்றன. இந்த வகை கோழிகள் பாரம்பரிய இசைக்கு மத்தியில் வளர்க்கப்படுவதாக பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் நீருக்கு பதில் பால் கொடுத்து வளர்க்கப்படுவது என்பது உண்மை அல்ல. எம்பரர் சிக்கன் என்றும் அழைக்கப்படும் இவ்வகை கோழிகள் அதன் தனித்துவமான சுவை காரணமாக ஓட்டல்கள், உணவகங்களில் பரவலாக சமைக்கப்டுகின்றன. சன்ஃபிளவர் சிக்கன் கோழிகள் ஒரு கிலோ 200 யுவான் (ரூ. 2,300), முழு கோழி 1000 யுவான் (ரூ. 11,500) வரை விற்கப்படுகிறது.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 7 வருடங்களாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
- இந்த உணவகத்தின் மேற்கூறையின் சிறிது அளவு கூரை ஏற்கனவே பெயர்ந்து விழுந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 7 வருடங்களாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மேற்கூறையின் சிறிது அளவு கூரை ஏற்கனவே பெயர்ந்து விழுந்தது. இருந்தாலும் உணவகம் அதே இடத்தில் செயல்பட்டு வந்தது.
தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் காலை, மதியம் சாப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென மேற்கூரை (பால் சீலிங்) கீழே சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் அதிர்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.
- தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்றது.
தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன்முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும், தலைஞாயிறு பேரூராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், ஒன்றிய குழுதலைவர் தமிழரசி, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆருர் மணிவண்ணன், கற்பகம் நீலமேகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் அன்பரசு, ஜெய்சங்கர், பாரிபாலன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா, இளைஞர் அணி விக்னேஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.
- அழகு நிலையம், உணவகம் அமைத்தல் போன்ற பயிற்சிகளை தர தயாராக உள்ளோம்.
- அடுத்த 3 மாதம் இலவச பயிற்சி நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வானவில் அறக்கட்டளை அஸ்வினி சீதா பவுண்டேஷன் பெண்கள் திறன் வளர்ப்பு தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் அடிப்படை தேவையான உபகரணங்களும் வழங்கும் விழா கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் பாண்டியன் முன்னிலை வகித்து கருணாநிதி பிறந்தநாளில் ஏழை மகளிர் இரண்டு நபர்களுக்கு இலவச தையல் இயந்திரம் தருவதாக உறுதி அளித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் தேவையான பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரண ங்களை வழங்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு கட்டிமேடு ஊராட்சி மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.
ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் காளான் வளர்ப்பு, மெழுகுவர்த்தி, பினாயில் தயாரித்தல், ஒயர் கூடை, சாக்குப்பை மேட், அழகு நிலையம், உணவக அமைத்தல் போன்ற பயிற்சிகளை தர தயாராக உள்ளோம் என்றார்.
வானவில் அறக்கட்டளை இயக்குனர் பிரேமாவதி பயிற்சியின் நோக்கம், பயன்கள், சுயதொழில்களால் பொருளாதார முன்னேற்றம் பற்றியும், தொடர்ந்து அடுத்த மூன்று மாத கால இலவச பயிற்சி நடத்த அனுமதியும் வழங்கியுள்ளார்.
முன்னதாக வருகை தந்த அனைவரையும் வானவில் மேலாளர் சோலைராஜ் வரவேற்புரை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.
கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் ரவிச்சந்திரன்,வானவில் அறக்கட்டளை புனிதா, தையல் ஆசிரியை பத்மா, கண்ணம்மா, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
- சென்னையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஸ்பைடர்மேன் தோசை பற்றிய தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
- ஸ்பைடர்மேன் தோசை தயாரிக்கும் அழகே தனி அழகாக உள்ளது.
சென்னை:
தோசை தெரியும். அது என்ன "ஸ்பைடர்மேன் தோசை"
சென்னையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஸ்பைடர்மேன் தோசை பற்றிய தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள கோரா புட் ஸ்ட்ரீட் என்ற உணவகத்தில் இந்த ஸ்பைடர்மேன் தோசை தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதை ஒரு பெண்மணி தயாரித்து வழங்குகிறார். அவர் ஸ்பைடர்மேன் தோசை தயாரிக்கும் அழகே தனி அழகாக உள்ளது.
தோசை மாவு ஊற்றிய பிறகு அதில் முட்டை, காய்கறிகள் சேர்த்து அவர் ஸ்பைடர்மேன் தோசை தயாரிக்கிறார். நூல் நூலாக இருக்கும் அந்த தோசை கவர்ச்சியாக இருக்கிறது. பிறகு அதில் தக்காளி சாறு ஸ்மைலி வரைந்து கொடுக்கிறார். பார்ப்பதற்கு ஸ்பைடர்மேன் தோசை அழகாக இருப்பதால் சாப்பாட்டு பிரியர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஸ்பைடர்மேன் தோசை தயாரிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் இதுவரை சுமார் 2 கோடி பேரை கவர்ந்துள்ளது. சுமார் 1000 பேர் லைக் போட்டுள்ளனர்.
- உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, மிசோரி மாகாணம், கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பப்படுகிறது.
- சம்பவத்தில் தொடர்புடைய உணவகம் தனது வழக்கமான வியாபாரத்தை இழந்து தவிக்கிறது.
உணவகம் சென்றது குற்றமா என்று புலம்பும் நிலைக்கு ஜப்பானை சேர்ந்த இளைஞர் தள்ளப்பட்டார். ஆர்வ மிகுதியில் சோயா சாஸ் பாட்டிலை வாயில் வைத்து சுவைத்ததற்கு இந்த இளைஞர் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய உணவகம் தனது வழக்கமான வியாபாரத்தை இழந்து தவிக்கிறது.
அகின்டோ சுஷிரோ என்ற உணவகத்தை ஃபுட் அன்ட் லைஃப் நிறுவன குழுமம் நடத்தி வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த ஜனவரி 3-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் ஆகும். இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மீது வைக்கப்பட்டு, மோட்டார் மூலம் இயக்கப்பட்டு அவர்களின் மேஜைக்கு அனுப்பப்படுகிறது.

சம்பவ நாளில் உணவகத்திற்கு வந்த இளைஞர் அங்கு வைக்கப்பட்ட சோயா சாஸ் பாட்டில், தேநீர் கோப்பை, கன்வேயர் பெல்டில் வந்து கொண்டிருந்த சுஷியை நக்கினார். மேலும் இவை அனைத்தையும் அவர் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ சுஷி டெரரிசம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதன் காரணமாக அகின்டோ சுஷிரோ உணவகத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. வியாபாரம் மந்தமானதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர், தங்களுக்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அகின்டோ சுஷிரோ வலியுறுத்தி வழக்கு பதிவு செய்து இருக்கிறது. சம்பவம் தொடர்பாக பொது வெளியில் மன்னிப்பு கோரிய இளைஞர், வீடியோ வைரல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், தான் இவ்வாறு செய்யவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்வேயர் பெல்ட் மூலம் உணவு வழங்கி வரும் மற்ற உணவகங்கள், இது போன்ற நடவடிக்கைகளை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தது. அதன்படி குரா சுஷி எனும் உணவகம் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் கேமரா மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க செய்வதாக அறிவித்தது.
மற்றொரு உணவகம் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பப்படும் உணவு வகைகளை மூடி வைக்க திட்டமிடுவதாக அறிவித்து இருக்கிறது. ஹமசுஷி உணவகத்தில் கன்வேயர் பெல்ட் முறையே முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துவிட்டது.
- முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
- வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.
மதுரை:
மதுரை சோலையழகு புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது உணவில் பாதி உடைந்த ஒரு பிளேடு துண்டு ஒன்று இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்த தோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.
மேலும் விசாரணை நடத்தியதில் பணியாளர்களுக்கு மருத்துவசான்று பெறாமல், தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.
மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- சாலையோர பயணவழி உணவகங்களில் அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
- உணவகத்தின் பெயருடன் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.
சென்னை:
பயணவழி உணவகங்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும் என பயணிகளை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது:-
திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட சாலையோர பயணவழி உணவகங்களில் அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் உணவின் தரம், கழிப்பறை வசதி, பராமரிப்பு போன்றவை குறித்து அவ்வப்போது பயணிகளிடம் இருந்து வரும் புகார்களின் அடிப்படையில் போக்குவரத் துக்கழக அலுவலர்கள் உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய உணவக உரிமையாளர்களை அறிவுறுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை மேம்படுத்தும் வகையில் உணவகங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க முன்பதிவு செய்யும் பயணிகளின் கைப்பேசிக்கு லிங்க் ஒன்று பயணத்தின் முன்பாக அனுப்பப்படும். இந்த இணைப்பில் பயணிகள் உணவகங்களில் உள்ள குறை, நிறைகளைப் பதிவிட்டு அனுப்ப வழிவகை செய்யப் பட்டுள்ளது.
கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியில் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வரப்பெறுகின்றன. ஆனால் தெளிவாக இல்லை. வரும் காலங்களில் உணவகங்கள் எந்த முறையில் விதிமீறவில் ஈடுபடுகின்றன என்பதை தெளிவாக உணவகத்தின் பெயருடன் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
- பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரெயில் நிலையங்களில் உள்ள பொது இருக்கை பெட்டிகளுக்கு அருகில் உள்ள நடைமேடைகளில் குறைந்த விலை சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், ராயகடா, கோராபுட் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் முதல்கட்டமாக பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் ரெயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, விரைவில் பொது வகுப்புப் பெட்டிகளில் குறைந்த விலை உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளன.
"பொது பெட்டிகள் ரெயிலின் இரு முனைகளிலும் அமைந்திருப்பதால், பயணிகள் தங்கள் தேவைகளுக்கு விரைந்து செல்ல வேண்டும்.
எனவே பயணிகளின் சிக்கனமான உணவு, தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் சேவையை எளிதாக்கும் வகையில் இந்த பெட்டிகளின் இருப்பிடங்களுக்கு அருகில் ஸ்டால்கள் அமைக்க சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது.
ரெயில் நிலையங்களில் இதுபோன்ற ஸ்டால்களை அமைப்பதில் போதுமான கவனம் செலுத்துமாறு அனைத்து துறைகளுக்கும் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- மாநகராட்சியின் மேற்பார்வையில் தேசிய நகர்ப்புற இயக்கத்தில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களால் நடத்தப்படுகிறது.
- துணை ஆணையாளர் சுல்தானா, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் ஆலங்காட்டில் மலிவு விலையில் உயர்தர உணவு வழங்கும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மேற்பார்வையில் தேசிய நகர்ப்புற இயக்கத்தில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களால் நடத்தப்படுகிறது. புதிதாக அமைந்துள்ள இந்த உணவகத்தை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், துணை ஆணையாளர் சுல்தானா, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த உணவகத்தில் காலை உணவாக ஒரு வடை ரூ.5, மூன்று இட்லி ரூ.15, பொங்கல், கிச்சடி தலா ரூ.20-க்கும், மதிய உணவாக முழு சாப்பாடு ரூ.30, குஸ்கா, தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம், பீட்ரூட் சாதம், மல்லி சாதம் ஆகியவை தலா ரூ.15-க்கும், தயிர் சாதம், வெஜ்பிரியாணி ஆகியவை தலா ரூ.20-க்கும், இரவு உணவாக 3 இட்லி ரூ.15-க்கும், இரண்டு சப்பாத்தி ரூ.15-க்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் உணவின் தரம் குறித்து தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மும்பையில் விராட் கோலி ஒன் 8 என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
- மதுரையை சேர்ந்த ராப் பாடகர் ராம் என்பர், ராவண ராம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமானவர்.
இந்திய கிரிக்கெட்டின் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவருக்கு சொந்தமான உணவகத்தில் வேட்டி கட்டி சென்ற தமிழருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்த ராப் பாடகர் ராம் என்பர், ராவண ராம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமானவர். இவர் விராட் கோலிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ஒன் 8 என்ற உணவகத்துக்கு சாப்பிடுவதற்காக வேட்டி சட்டையில் சென்றுள்ளார்.
அந்த உணவகத்தில் வேட்டி சட்டை போட்டு செல்ல அனுமதி இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் அந்த உணவகம் முன் நின்று தனக்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் மற்றும் அதிருப்தியை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.