search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • மும்பை மோதிய முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் அணியிடம் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஆதரவு ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டனர். அதேபோல இந்த போட்டியிலும் முழக்கமிட்டு வருகின்றனர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.

    இதேபோல் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. இதனால் முதல் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும்.

    இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் களமிறங்க உள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி மற்றும் டோனி மட்டுமே ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 200 போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவர். அந்த பட்டியலில் ரோகித் சர்மாவும் இணையவுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் 2008-ம் ஆண்டு அறிமுகமான ரோகித் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டும் வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்தார். 2009-ம் அந்த அணி கோப்பையை வெல்ல ரோகித் சர்மா முக்கிய பங்காற்றினார். அந்த அணிக்காக 45 போட்டியில் விளையாடி 1170 ரன்கள் குவித்தார். அதன் பிறகு 2011-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து தற்போது வரை விளையாடி வருகிறார்.

    2013-ல் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித், கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார்.
    • மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்த புகைப்படம் வைராலாகி வருகிறது.

    ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுப்பட்ட போது மும்பை அணி வீரர் ரோகித் சர்மாவும் ஐதராபாத் அணி வீரர் மயங்க் அகர்வாலும் சந்தித்து கொண்டனர். அப்போது மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்தார்.

    எதற்காக ரோகித் அப்படி செய்தார் என்றால், ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது ஐதராபாத் அணி வீரர் அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார். அதனை வைத்து ரோகித் மயங்க் அகர்வாலை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    மயங்க் அகர்வாலை கிண்டல் செய்த ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இப்போட்டியில் விராட் கோலி 2 கேட்சுகள் பிடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
    • இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 167 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 6-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.

    அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் விளாசினார். ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி 2 கேட்சுகள் பிடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார். ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 172 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில், 174 கேட்சுகளைப் பிடித்து விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 167 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ரோகித் குடும்பத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடி உள்ளார்.
    • இதே போன்று ஒவ்வொரு ஐபிஎல் அணி வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

    அகமதாபாத்:

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ரோகித் குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி உள்ளார்.

    ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா.

    இதே போன்று ராஜஸ்தான் அணி வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

    இது தொடர்பான வீடியோவை அந்தந்த அணியின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    • மோகித் சர்மா, ரஷித் கான் 16, 17-வது ஓவர்களில் முறையே 4 மற்றும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
    • மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 12 ரன்களே அடிக்க முடிந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டெவால்டு பிரேவிஸ் 37 பந்தில் 46 ரன்களும், திலக் வர்மா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில், அதாவது கடைசி 30 பந்தில் 43 ரன்கள் தேவைப்பட்டது. இது எளிதான இலக்குதான். மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குஜராத் பந்து வீச்சாளரக்ள் துல்லியமாக பந்து வீச இயலாது என கருதப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 16-வது ஓவரில் மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பிரேவிஸ்-ஐ அவுட்டாக்கினார். அடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். அந்த நேரத்தில் 25 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக களம் இறங்கி ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ், பவுண்டரி பறக்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், டிம் டேவிட் களம் இறக்கப்பட்டார். 17-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் அவர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததன் காரணமாகவே மும்பை அணிக்கு நெருக்கடி அதிகமானது.

    அதன்பின் 3 ஓவரில் மும்பைக்கு அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 27 ரன் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரில் ஜான்சன் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    19 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்னில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

    இந்த நிலையில் மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுதான் காரணம் என இர்பான் பதவி விமர்சனம் செய்துள்ளார்.

    டிம் டேவிட்டிற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், ரஷித் கான் பந்தை எதிர்கொள்ள ஹர்திக் பாண்ட்யா விரும்பவில்லை. இதனால் டிம் டேவிட்டை களம் இறக்கினார். இது மும்பை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. இது மோசமான கேப்டன்சி என விமர்சித்துள்ளார்.

    18-வது ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட் (10 பந்தில் 11 ரன்) ஆட்டமிழந்ததும் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.

    • ரோகித் சர்மா பொதுவாக ஸ்லிப், மிட்ஆஃப், மிட்ஆனில் பீல்டிங் செய்வார்.
    • நேற்று லாங்ஆன் திசையில் ரோகித் சர்மா பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா திடீரென நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக ரோகித் சர்மா மனைவி அணி நிர்வாகத்திற்கு எதிராக கருத்துக்கூட தெரிவித்திருந்தார்.

    மூன்று விடிவிலான இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை நீக்கியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பிற்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கான முகாமில்தான் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.

    இந்த நிலையில்தான் நேற்றைய போட்டியின்போது ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை அலைக்கழித்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

    பொதுவாக ரோகித் சர்மா ஸ்லிப், மிட்-ஆன் அல்லது மிட்-ஆஃப் திசையில்தான் பீல்டிங் செய்வார். அவரது உடல்வாகு பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்ய ஒத்துழைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும் ரிவியூ கேட்க வேண்டுமென்றால் வசதியாக இருக்கும் என்பதால் அருகில் நிற்பார்.

    ஆனால் நேற்று பெரும்பாலும் லாங்-ஆன் திசையில் ரோகித் சர்மா பீல்டிங் செய்ததை பார்க்க முடிந்தது. கடைசி ஓவர் கோட்ஸி வீசினார். இந்த ஓவரின்போது திடீரென ஹர்திக் பாண்ட்யா லாங்-ஆன் திசையில் நின்ற பீல்டரை அருகில் அழைத்தார். மிட்-ஆன் அருகில் நின்றிருந்த ரோகித் சர்மாவை லாங்-ஆன் திசைக்கு போகும்படி கேட்டுக்கொண்டார்.

    அப்போது ரோகித் சர்மா தன்னை எங்கே போகச் சொல்வார் என சாதாரணமாக நின்று கொண்டிருந்தார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா ரோகித் சர்மாவை அழைத்து நீங்கள் அங்கே செல்லுங்கள் என்பதுபோல் சைகை காட்டுவார். அதற்கு ரோகித் சர்மா, நானா... எனக் கேட்க, ஹர்திக் பாண்ட்யா நீங்கள்தான்... என வலியுறுத்துவார். உடனே ரோகித் சர்மா சற்று புன்னகையுடன் லாங்ஆன் நோக்கி ஓடுவார்.

    இதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், ரோகித் சர்மாவை அலைக்கழிப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சஜகமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தபோது ரோகித் சர்மா பும்ரா, திலக் வர்மா உள்ளிட்டோருடன் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் அணி இரண்டு குழுவாக உள்ளதா? என ரசிகர்கள் முணுமுணுத்தனர்.

    பிசிசிஐ உடன் மோதல் போக்கை கடைபிடித்த இஷான் கிஷன் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    • மும்பை ரசிகர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட எம்.எஸ். டோனி தனது பதவியை ருதுராஜ் கெய்க்வாட்-இடம் கொடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த எம்.எஸ். டோனிக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இன்ஸ்டா ஸ்டோரியில் மும்பை ஜெர்சியில் ரோகித் சர்மா எம்.எஸ். டோனிக்கு கை கொடுக்கும் புகைப்படம் மற்றும் கை குலுக்கும் எமோஜி இடம்பெற்று இருக்கிறது.

     


    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்கு மும்பை ரசிகர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மும்பை அணியின் சமூக வலைதள கணக்குகளை பின்பற்றுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.

    நாளை 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் துவக்க விழா மற்றும் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

    • மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார்.
    • சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் செயல்பட உள்ளார்.

    ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக முறை கோப்பையை வென்றவர்கள் பட்டியலில் மும்பை (5 முறை)மற்றும் சென்னை அணிகள் உள்ளன. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ளது. முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இன்று சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ருதுராஜ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருந்தது.

    ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்பட்ட டோனி, ரோகித், விராட் ஆகியோர் இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியில் 2021-ம் ஆண்டு விலகினார். அவர் விலகினாலும் ஆர்சிபி எந்த நிகழ்ச்சி வைத்தாலும் அதில் விராட் முக்கிய வீரராக கலந்து கொள்வார். அவருக்கான மரியாதையை ஆர்சிபி நிர்வாகம் விராட்டுக்கு அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டு பாண்ட்யா நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து டோனி கேப்டன் பதவியில் இருந்து நீங்கி ருதுராஜ் கேப்டனாக செயல்பட உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக வலம் வந்த இந்த மூவரும் சாதாரண வீரர்களாக களமிறங்குவது வேதனையாக உள்ளது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சில ஐபிஎல் 2024 கேப்டன்கள் போட்டோஷூட்டில் டோனி இல்லாததை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் அவர் அணியில் இருந்தால் போதும் என கூறி வருகின்றனர்

    கடந்த ஆண்டு ஐபிஎல் கேப்டன்கள் போட்டோஷுட்டில் ரோகித் சர்மா இல்லாமல் நடந்தது. ஆனால் அந்த முறை கேப்டனாக ரோகித் செயல்பட்டார். ஆனால் இந்த முறை அவர் சாதாரண வீரராக மட்டுமே செயல்படுவார் என்பது மும்பை ரசிகர்களுக்கும் சோகமான ஒன்றுதான்.

    • ரோகித் தலைமையில் மும்பை அணி 2 முறை ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்றுள்ளது.
    • டோனி கேப்டன்ஷிப்பில் நீங்கள் தவறுகளை பார்த்து இருக்க முடியும்.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மாவை மாற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அந்த அணி நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி தொடரில் டோனியை விட ரோகித் சர்மா தான் கேப்டன்ஷிப்பில் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டி தொடரில் டோனியை விட ரோகித் சர்மா தான் கேப்டன்ஷிப்பில் சிறந்தவர். ரோகித் தலைமையில் மும்பை அணி 2 முறை ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்றுள்ளது. கேப்டனாக அவர் களத்தில் நெருக்கடியான தருணத்தில் பொறுமையுடன் செயல்படாவிட்டால் அந்த மாதிரி வெற்றியை பெறுவது சாத்தியமில்லை. இதுபோன்ற பதற்றமான போட்டியில் சில சமயங்களில் தவறான முடிவுகள் எடுக்க நேரிடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பில் தவறு இழைத்து நான் பார்த்ததில்லை.

    மாறாக டோனி கேப்டன்ஷிப்பில் நீங்கள் தவறுகளை பார்த்து இருக்க முடியும். முக்கியமான தருணங்களில் பவன் நெகி போன்ற அனுபவம் இல்லாத வீரர்களுக்கு பவுலிங் வாய்ப்பு அளித்து டோனி தவறான முடிவுகளை எடுத்துள்ளார். டோனி எப்போதும் செயல்முறைகளை எளிதாக வைத்திருக்க ஆலோசனை வழங்குவார். ஆனால் அதை களத்தில் நடைமுறைபடுத்துவதில் ரோகித் சர்மா கைதேர்ந்தவர்.

    இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறினார்.

    • பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
    • பாண்ட்யா, ரோகித்தை நோக்கி சென்று கட்டியணைத்து சிரித்த முகத்துடன் பேசி சென்றார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த முறை மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார். இவர் கேப்டனாக செயல்படுவது ரோகித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாண்ட்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    அந்த வகையில் நேற்றும் ஹர்திக் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியானது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ரோகித் மற்றும் பாண்ட்யா ஒன்றாக இருப்பது போல காட்சிகள் இடம் பெறவில்லை. மற்ற ஜூனியர் வீரர்களுடன் ரோகித், பாண்ட்யா தனித்தனியாக இடம் பெற்றிருந்தனர். அந்த வீடியோவின் முடிவில் மும்பை வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க ரோகித் மற்றும் பாண்ட்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதுவும் இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. இதுவும் ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

    மேலும் மும்பை இந்தியன்ஸ் செய்தியாளர் சந்திப்பின் போது ரோகித் கேப்டன்சி குறித்த கேள்விக்கு பாண்ட்யா, பவுச்சர் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர். இந்த இரு சம்பவங்களுக்கும் சேர்த்து பாண்ட்யாவை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

    இந்நிலையில் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று ஒரு வீடியோவை மும்பை வெளியிட்டள்ளது. அதில் பயிற்சி குறித்து மும்பை வீரர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்போது பாண்ட்யா, ரோகித்தை நோக்கி சென்று கட்டியணைத்து சிரித்த முகத்துடன் பேசி சென்றார். இருவரும் சிரித்த முகத்துடன் பேசி சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரோகித், கேஎல் ராகுல், சுனில் ஷெட்டி ஆகியோர் ட்ரீம் 11 இன் விளம்பரங்களில் நடித்து உள்ளனர்.
    • அந்த விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ஐபிஎல் தொடர் 2024 இன்னும் 2 தினங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் வந்து விட்டால் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் இந்த முறை ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அவரது மாமனார் சுனில் ஷெட்டி ஆகியோர் ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களில் ஒருவரான ட்ரீம் 11 இன் விளம்பரங்களில் நடித்து உள்ளனர். அந்த விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அந்த விளம்பரத்தில் ரோகித் மற்றும் சுனில் ஒரு மேஜையில் சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். அப்போது அங்கு வந்த கேஎல் ராகுல் மீதமுள்ள ஒரு நாற்காலியில் உட்கார முயல்வார். உடனே ரோகித், இது குடும்ப உணவு சாப்பிடுகிறோம் என கூறுவார். உடனே ராகுல் சோகத்துடன் சுனில் ஷெட்டியை பார்த்து அப்பா என்று கூற உடனே சுனில் ஷெட்டி நோ அப்பா. ஐபிஎல் தொடர் ஆரம்பமாகிவிட்டது. சர்மா தான் என் மகன். சர்மா ஆப்பிள் சாப்பிடு என அன்போடு ஊட்டிவிடுவார் ஷெட்டி. இதை பார்த்த ராகுல் கவலையுடன் அந்த இடத்தில் இருந்து நகர்வார்.

    இந்த விளம்பர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்னும் நிறைய விளம்பரம் இது போன்று நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.

    ×