search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என்று பின்தங்கி அதன் பிறகு அந்த தொடரை வெல்வது இது 7-வது முறையாகும்.
    • முதல் இன்னிங்சில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா 2-வது பேட்டிங்கில் வெற்றி காண்பது இது 13-வது நிகழ்வாகும்.

    இந்திய மண்ணில் 200 ரன்னுக்கு குறைவாக இலக்கை நோக்கி ஆடிய டெஸ்டுகளில் இந்தியா ஒரு போதும் தோற்றதில்லை என்ற வரலாறு தொடருகிறது. இத்தகைய இலக்கை எதிர்கொண்ட 33 டெஸ்டுகளில் 30-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. மீதமுள்ள 3 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

    உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 17-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். வேறு எந்த அணியும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 தொடருக்கு மேல் (ஆஸ்திரேலியா 10 முறை) வென்றதில்லை. 2012-ம் ஆண்டில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்த இந்தியா அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது. இந்த 12 ஆண்டுகாலக் கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தடவை தொடரை வசப்படுத்தியதும் அடங்கும்.

    முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என்று பின்தங்கி அதன் பிறகு அந்த தொடரை வெல்வது இது 7-வது முறையாகும்.

    முதல் இன்னிங்சில் எதிரணி முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா 2-வது பேட்டிங்கில் வெற்றி காண்பது இது 13-வது நிகழ்வாகும்.

    இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலின் வயது 23 ஆண்டு 33 நாட்கள். டெஸ்டில் ஆட்டநாயகன் விருதை பெற்ற 5-வது இளம் வீரர், இந்திய அளவில் 2-வது இளம் வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

    இந்த தொடரில் இரண்டு இரட்டை சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 971 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் 8 டெஸ்டுகளில் ஆடிய வீரர்களில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இந்த வகையில் கவாஸ்கர் 938 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் சாதனையை ரோகித்சர்மா முறியடித்தார்.

    ராஞ்சி:

    இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    192 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி 5 விக்கெட்டை இழந்தது. இதனால் இந்த டெஸ்டில் பரபரப்பு ஏற்பட் டது. 6-வது விக்கெட்டுக்கு சுப்மன்கில் (52 ரன்)-ஜூரல் (39 ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றியை தேடி தந்தது.

    இந்த வெற்றி மூலம் ரோகித் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7-ந்தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

    ரோகித் தலைமையில் இந்திய அணிக்கு டெஸ்டில் கிடைத்த 9-வது வெற்றியாகும். 4 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 டெஸ்ட் 'டிரா' ஆனது. வெற்றி சதவீதம் 60.00 ஆகும்.

    இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டை ரோகித்சர்மா முந்தினார். டிராவிட் தலைமையில் 25 டெஸ்டில் 8-ல் வெற்றி கிடைத்தது. 6 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 11 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    மேலும் பட்டோடி, கவாஸ்கர் ஆகியோரை ரோகித்சர்மா சமன் செய்தார். இருவரது தலைமையிலும் 9 டெஸ்டில் வெற்றி கிடைத்து இருந்தது.

    விராட்கோலி 40 வெற்றியுடன் (68 டெஸ்ட்) முதல் இடத்திலும், டோனி 27 வெற்றியுடன் (60 டெஸ்ட்) 2-வது இடத்திலும், கங்குலி 21 வெற்றியுடன் (49 டெஸ்ட்) 3-வது இடத்திலும், அசாருதீன் 14 வெற்றியுடன் (47 டெஸ்ட்) 4-வது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ரோகித் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ரோகித் பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் அவர் டோனி, அசாருதீன், அஜீத் வடேகர் ஆகியோரை சமன் செய்தார். விராட் கோலி 10 வெற்றியுடன் (18 டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    • முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி.
    • இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம்.

    ராஞ்சி

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

    இதில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த தொடர் உண்மையிலேயே ஒரு கடினமான தொடராக அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் நான்கு போட்டிகளின் முடிவில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றி இருப்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. எங்களது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருமே திறமையான வீரர்கள். இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம்.

    இருப்பினும் தற்போது கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது. முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய சவால்களுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர்.

    எனக்கும் டிராவிட் பாய்க்கும் இளம் வீரர்களுக்கு சரியான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எண்ணமாக இருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் இளம்வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். துருவ் ஜுரேல் முதல் இன்னிங்சில் விளையாடிய விதம் அவரது முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிக்காட்டியிருந்தது.

    அவரிடம் தெளிவான நல்ல ஷாட்டுகள் இருக்கின்றன. முதல் இன்னிங்சில் அவர் அடித்த 90 ரன்களே எங்களை இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகில் அழைத்துச் சென்றது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் அவர் சுப்மன் கில்லுடன் அமைத்த பாட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.
    • இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி. பின்னர் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 22 வயதே ஆகும் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 214 ரன்கள் குவித்தார்.

    மற்றொரு இந்திய பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் இந்த போட்டியில்தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் முதல் இன்னிங்சில் 62 ரன்களும், 2-வது இன்னிங்சில் 68 ரன்களும் எடுத்து இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். குறிப்பாக சர்பராஸும் - ஜெய்ஸ்வாலும் இணைந்து 2-வது இன்னிங்சில் 5-வது விக்கெட்டுக்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

    இதேபோன்று இந்த டெஸ்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியில் சீனியர் ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களே சிறப்பான ஆட்டத்தை விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். இவர் 2-வது இன்னிங்சில் சிறப்பான ஒரு ரன் அவுட் செய்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டோரியாக வைத்து இந்த நாட்களில் குழந்தைகள் என பதிவிட்டிருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.

    • 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர் ஜெய்ஸ்வால் ஆவார்.

    3-வது டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த ஜெய்ஸ்வால் விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும் இரட்டை சதம் (209 ரன்) அடித்திருந்தார். அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர், இந்திய அளவில் 3-வது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஏற்கனவே வினோத் காம்ப்ளி (1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 224 ரன் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்), விராட் கோலி (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 213 ரன், டெல்லியில் 243 ரன்) ) ஆகிய இந்தியர்கள் தொடர்ச்சியாக இரு டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    ஜெய்ஸ்வாலின் வயது 22 ஆண்டு 49 நாட்கள். டெஸ்டில் இரண்டு இரட்டை சதம் அடித்த 3-வது இளம் வீரராகவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியாவின் வினோத் காம்ப்ளி தனது வயது 21 ஆண்டு 54 நாளிலும், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் வயது 21 ஆண்டு 318 நாளிலும் இச்சாதனையை செய்துள்ளனர்.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 10-வது முறையாகும். இதில் உள்நாட்டில் மட்டும் 9 முறை இவ்விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக தடவை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியரான கும்பிளேவின் (இவரும் 9 முறை) சாதனையை சமன் செய்தார்.

    இந்த டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த மும்பையைச் சேர்ந்த சர்ப்ராஸ் கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் (62 மற்றும் 68 ரன்) அடித்தார். திலவார் ஹூசைன் (1934-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக), சுனில் கவாஸ்கர் (1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), ஸ்ரேயாஸ் அய்யர் (2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு பிறகு அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது இந்தியராக சர்ப்ராஸ்கான் அறியப்படுகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 134 டெஸ்டில் ஆடியுள்ள இந்தியா அதில் பெற்ற 33-வது வெற்றி இதுவாகும். இவற்றில் 24 வெற்றி சொந்த மண்ணில் கிடைத்தவையாகும். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச வெற்றி இது தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 டெஸ்டில் வெற்றி பெற்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 131 ரன் எடுத்தார். இது அவரது 11-வது சதமாகும். அவர் சதம் அடித்த எல்லா டெஸ்டுகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்டில் 10-க்கு மேல் சதம் அடித்து எல்லாமே வெற்றியில் முடிந்திருப்பது ரோகித் சர்மாவுக்கு மட்டுமே.

    • 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை.

    ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

    இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார். 

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    5 நாள் வரை போட்டி நடைபெறும் என்றுதான் நினைத்தேன். 150 ஓவர்கள் இருந்தால் இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிவிடலாம் என்பதுதான் எனது கணக்காக இருந்தது.

    இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.
    • தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்து வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமானார்.இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.

    அறிமுக போட்டியில் களமிறங்கும் வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள். ஆனால் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கியது முதலே இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.

    அப்போது மைதானத்தில் இருந்த அவருடைய தந்தை மற்றும் மனைவி ஆகியோர் மிகுந்த பெருமிதத்துடன் கைதட்டி பாராட்டினார்கள். அதே போல கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அடங்கிய இந்திய அணியினரும் எழுந்து நின்று அந்த இளம் வீரருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    மேலும் இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

    இதற்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமான ஹர்திக் பாண்டியா 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அந்த சாதனையை படைத்திருந்தார். அந்த வகையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சர்பராஸ் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டானார்.

    தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

    இதனைப் பார்த்து பெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, கோபத்தில் அணிந்திருந்த தொப்பியை தூக்கி வீசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    "சர்பராஸுக்காக நீங்கள் எவ்வளவு தியாகங்கள் மற்றும் கடின உழைப்பு செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்று சர்பராஸின் தந்தையிடம் கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்தார்.

    இந்திய அணியில் 311-வது வீரராக அறிமுகமான சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

    • ரோகித் சர்மா, ஜடேஜாவின் அபார சதத்தால் இந்தியா முதல் நாளில் 326 ரன்கள் எடுத்தது.
    • 4வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் குவித்தது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் இந்திய அணி திணறியது. 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடி சதமத்த ரோகித் சர்மா 131 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார்.ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் அவுட்டானார்.

    மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா 198 பந்தில் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • இந்திய அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
    • 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் சர்பராஸ் கான்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 33 ரன்கள் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால் (10), கில் (0), படிதார் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன் என்ற நிலையில் ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 196 பந்துகளில் 131 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

    அதன் பின்னர் களமிறங்கிய சர்பராஸ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அப்போது அவரின் தந்தையும், மனைவியும் கைதட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பின்னர் 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் சர்பராஸ் கான்.

    ஹர்திக் பாண்டியா தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது சர்பராஸ் கான் 48 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    இந்திய அணியில் 311-வது வீரராக அறிமுகமான சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

    உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்த அணியில் அவர் இடம்பிடிக்க போராடி வந்தார்.

    இந்த நிலையில்தான் தற்போது ராஜ்கோட் டெஸ்டில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல் ராகுல் ஆகியோர் விலகிய நிலையில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 26 வயதாகும் சர்பராஸ் கான் 45 முதல்தர போட்டிகளில் 14 சதம், 11 அரைசதங்கள் அடித்துள்ளார். 301 நாட்அவுட் அதிகபட்ச ஸ்கோராகும்.

    • 79 சிக்ஸ் உடன் டோனியை 3-வது இடத்திற்கு தள்ளியுள்ளார்.
    • இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் கண்ட தொடக்க வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன் என்ற நிலையில் ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஜடேஜா 68 ரன்களுடனும், ரோகித் சர்மா 97 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ரேஹன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலும், 3-வது பந்திலும் தலா இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அவர் 157 பந்தில் சதத்தை எட்டினார். சொந்த மண்ணில் அவரது 9-வது சதம் இதுவாகும்.

    மேலும், இந்த ஆட்டத்தில் இதுவரை இரண்டு சிக்சர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

     சேவாக் 90 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளார். டோனி 78 சிக்ஸ் உடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா 79 சிக்ஸ் உடன் டோனியை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மேலும், இங்கிலாந்துக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கி 3 சதங்கள் அடித்துள்ளார். முரளி விஜய், கேஎல் ராகுல், விஜய் மெர்சன்ட் ஆகியோரும் 3 சதங்கள் அடித்துள்ளனர். கவாஸ்கர் 4 சதங்கள் அடித்துள்ளார்.

    • சுப்மன் கில் 9 பந்தில் ரன்ஏதும் சேர்க்காமல் டக்அவுட்.
    • ஜெய்வால் 10 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சர்பராஸ் கான், த்ருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகம் ஆகினர். முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டார்.

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். கடந்த போட்டியில் அறிமுகம் ஆன ரஜத் படிதார் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    இதனால் இந்தியா 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. வலது கை பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜாவை களம் இறக்கினார் ரோகித் சர்மா.

    டக்அவுட் ஆகி சோகமாக வெளியேறும் சுப்மன் கில்

    ரோகித் சர்மாவின் திட்டம் கைக்கொடுத்தது. ரோகித் சர்மா ஒரு பக்கம் நிலையாக நின்று அரைசதம் அடித்தார். மறுபக்கம் ஜடேஜா ஆதரவாக விளையாடி வந்தார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் வீசியுள்ளது. மார்க் வுட் 2 விக்கெட்டும், ஹார்ட்லி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    ரோகித் சர்மா 52 ரன்களுடனும், ஜடேஜா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    ×