search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • இந்தியா நாக்அவுட் சுற்றில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
    • நாக்அவுட் சுற்றுகள் என்று வரும்போது, நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதுதான் முக்கியமான விஷயம்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 13-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது.

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் முதன்மையான அணியாக கருதப்படும் இந்தியா நாக்அவுட் சுற்றில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். நெருக்கடியான நேரத்தில் சரியாக விளையாடவில்லை என்று பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

    இன்றைய போட்டியின் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம். தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் ஆடினோம். இதனால் தான் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் கசிந்தன. அதனை இங்கிலாந்து ஓபனர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.

    நாக்அவுட் சுற்றுகள் என்று வரும்போது, நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதுதான் முக்கியமான விஷயம். அது ஒவ்வொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்தது. அழுத்தம் மற்றும் நெருக்கடியான சூழ்நிலையை கையாள யாருக்கும் கற்றுத்தர முடியாது. இவர்கள் ஐபிஎல் மற்றும் மற்ற போட்டிகள் அனைத்திலும் பிளேஆஃப் சுற்றில் விளையாடும்போது, ​​அவை அதிக நெருக்கடி அளிக்கக்கூடிய விளையாட்டுகள். அவர்களால் அதைக் கையாள முடிகிறது. ஆனால் இன்றைய போட்டியில் எங்களின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம்.
    • தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம்.

    அடிலெய்ட்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள்  பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா மற்றும் போராடியதால் 20 ஓவர்களில் இந்தியா 168 ரன்களை எடுத்தது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியே ஆட்டத்தை முடித்தனர். இந்தியாவின் பவுலிங் சொதப்பியதால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வென்றனர்.

    இந்நிலையில் இந்த படுதோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா மனவேதனையுடன் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம். தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம். இதனால் தான் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் கசிந்தன.

    அதனை இங்கிலாந்து ஓப்பனர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். ஸ்கொயர் திசைகளில் தான் ரன் கசியும் என அறிவோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை. முதல் ஓவரில் ஸ்விங் ஆகும் என நினைத்தேன். ஆனால் நினைத்த பகுதியில் ஸ்விங் ஆகவில்லை. வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் தான் ஆடினோம். அப்போட்டியில் வேறும் மாதிரி இருந்தது.

    திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தான் பிரச்சினை ஏற்படும். ஆனால் நாங்கள் அனைத்து திட்டங்களையும் சரியாக செய்தோம். 9 ஓவர்களில் 85 ரன்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பது எனக்கு தெரியும். எனினும் திட்டங்களை தொடர்ந்து செய்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக அமைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் குறித்து எதிரணிகள் கலக்கம் அடைந்துள்ளன.
    • குரூப் 12 சுற்றில் மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து அணியின் ஒரே கவலை, சூர்யகுமாரை எப்படி அவுட்டாக்குவதுதான். சூர்ய குமார் வித்தியாசமாக ஷாட்டுகளை இவ்வளவு எளிதாக எப்படி விளையாடுகிறார் என்பதுதான், கிரிக்கெட்டில் உலகில் தற்போதைய பேச்சாக இருக்கிறது.

    இங்கிலாந்து எதிராக நாளை அரையிறுதியில் இந்தியா விளையாட இருக்கும் நிலையில், இன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது சூர்யகுமார் யாதவை பெரிய அளவில் இந்தியா நம்புகிறது. இது அவருக்கு நெருக்கடியாக அமையாதா? என்பது போல் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    தன்னுடன் எந்த வகையான பேக்கேஜ்-ஐயும் எடுத்துச் செல்லாத நபரை போன்றவர் சூர்யகுமார் யாதவ். அவருடைய சூட்கேஸை மட்டுமல்லை. நான் சொல்வதின் அர்த்தம், அவர் ஏராளமான சூட்கேஸ்களை வைத்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர் ஷாப்பின் செய்வதை மிகவும் விரும்புவார். ஆனால், கூடுதல் சுமையை (extra pressure) சுமக்கும்போது, அவரிடம் அது இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் விளையாடும்போது அதை நீங்கள் பார்க்க முடியும். கடந்த ஒரு வருடமாக அவர் இப்படித்தான் விளையாடி கொண்டிருக்கிறார்.

    பேட்டியளிக்கும்போது அவரது பேச்சு உங்களுக்கு கேட்குமா என்று எனக்குத் தெரியாது. அதே பாணியில்தான் அவர் பேட்டிங் செய்கிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    • மெல்போர்னில் இருந்து அரையிறுதியில் பங்கேற்க இந்திய அணி விமானத்தில் அடிலெய்டு வந்தனர்.
    • அடிலெய்டில் நவம்பர் 10-ம் தேதி 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி அடிலெய்டில் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனால் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை மெல்போர்னில் விளையாடி விட்டு, அரையிறுதி போட்டியில் பங்கேற்பதற்காக விமானத்தில் அடிலெய்டு வந்தனர்.

    ஐ.சி.சி.யின் விதிப்படி ஒவ்வொரு அணியிலிருந்து 4 வீரர்களுக்கு மட்டுமே நவீன வசதிதளை உடைய வணிக வகுப்பு இருக்கைகள் (பிசினஸ் கிளாஸ் சீட்) வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் கோலி, ரோகித், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பிசினஸ் வகுப்பு இருக்கைகள் வழங்கப்பட்டது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சரியான ஓய்வு தேவை என்பதால் விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது பிசினஸ் விகுப்பு இருக்கையை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர்.

    மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமான பயண நேரம் 1 மணி 20 நிமிடங்கள் ஆகும். இந்தப் பயண நேரத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தங்களின் கால் மற்றும் முதுகில் வலியை எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்களை கொடுத்துள்ளனர். அதனால் அவர்களுக்கு போட்டிக்கு முன்பு சரியான ஓய்வு கிடைக்கும்.

    இதுதொடர்பாக இந்திய அணியின் துணை ஊழியர் ஒருவர் பேசுகையில், போட்டிக்கு முன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு வேண்டும். அவர்கள் கால்களை நீட்ட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம் என கூறினார்.

    டிராவிட், ரோகித் சர்மா மற்றும் கோலியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

    • இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.

    அடிலெய்ட்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடக்கிறது.

    இதில் ரோகித்சர்மா தலைமையிலான இந்தியா-பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.

    வலை பயிற்சியின்போது அவருக்கு வலது முன்னங் கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவர் வலியால் துடித்தார். உடனே பயிற்சியை விட்டு வெளியேறினார்.

    அவரது கையில் ஐஸ் கட்டி வைக்கப்பட்டது. ஐஸ் கட்டியை தடவி அவருடன் காயம் குறித்து பயிற்சி குழுவை சேர்ந்த பேடி அப்டன் பேசிக் கொண்டு இருந்தார். ரோகித் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து பின்னர் ஆய்வு செய்யப்படும்.

    இந்த காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    போட்டிக்கு இன்னும் 48 மணி நேரம் இருப்பதால் அதற்குள் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.

    ரோகித்சர்மா விளையாடாமல் போனால் மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    • தனது அன்பான கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை அருகே சென்று பார்த்து விட்டதால் அந்த ரசிகர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
    • இந்தியா மோதும் ஆட்டங்களில் அரங்கம் நிரம்பி வழிகிறது.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலக கோப்பையில் 'சூப்பர்12' சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தது.

    முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 25 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), லோகேஷ் ராகுல் 35 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவரில் 115 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப்சிங், அக்‌ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த போட்டியின் போது இளம் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    17-வது ஓவரில் இந்திய வீரர்கள் மைதானத்தில் பீல்டிங்கில் இருந்தனர். அப்போது கருப்பு சட்டை அணிந்த சிறுவன் ஒருவன் தேசிய கொடியுடன் ரோகித் சர்மாவை பார்ப்பதற்காக ஆடுகளத்துக்குள் பாதுகாப்பையும் மீறி நுழைந்தான்.

    போலீசார் அவனை பிடிப்பதற்குள் அவன் பிட்ச் பகுதி அருகே வந்தான். பின்னால் துரத்தி வந்த ஆஸ்திரேலிய போலீசார் அந்த ரசிகரை மடக்கி பிடித்தனர். அப்போது ரோகித் சர்மா அருகே வந்து அந்த ரசிகரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். தனது அன்பான கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை அருகே சென்று பார்த்து விட்டதால் அந்த ரசிகர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    பின்னர் அந்த சிறுவனை போலீசார் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.

    மெல்போர்ன் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரோகித் சர்மா ரசிகருக்கு ரூ.6½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய அணிக்கு அங்குள்ள இந்திய ரசிகர்கள் பெரும் அளவில் திரண்டு வந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்தியா மோதும் ஆட்டங்களில் அரங்கம் நிரம்பி வழிகிறது.

    • அரைஇறுதியில் இங்கிலாந்தை அடிலெய்டில் சந்திக்க உள்ளோம்.
    • இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும்போது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது.

    வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் இது ஒரு முழுமையான ஆல்ரவுண்ட் செயல்பாடு. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் களம் இறங்கி விரும்பிய மாதிரி விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.

    அதை செய்து இருக்கிறோம். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதம். அவர் இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும்போது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது. அத்துடன் எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேனின் அழுத்தத்தையும் அவர் குறைந்து விடுகிறார்.

    அரைஇறுதியில் இங்கிலாந்தை அடிலெய்டில் சந்திக்க உள்ளோம். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப எங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியமாகும்.

    ஏற்கனவே அங்கு நாங்கள் விளையாடி இருக்கிறோம். ஆனாலும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது அவசியமாகும். இங்கிலாந்து நல்ல அணி. இது சிறந்த போட்டியாக இருக்கும்' என்றார்.

    • இங்கிலாந்து அணி நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
    • நாங்கள் விளையாடும் போட்டிகளில் எல்லாம் மைதானம் நிரம்பி விடுகிறது.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றான 'சூப்பர் 12' சுற்றில் ஆடின.

    முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து ஆகிய 8 அணிகள் முதல் சுற்றில் விளையாடின.

    கடந்த 2-ந்தேதி முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்தன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 'சூப்பர்12' சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக வெளியேறியது. இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகியவை 'சூப்பர்12' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    'சூப்பர்12' சுற்று ஆட்டங் கள் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடிய 12 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. நேற்றுடன் 'சூப்பர்12' சுற்று முடிவடைந்தன.

    இதன் முடிவில் 'குரூப்1' பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து (தலா 7 புள்ளிகள்), முதல் 2 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ் தான் ஆகியவை 3 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    'குரூப்2' பிரிவில் இந்தியா 4 வெற்றி, 1 தோல்வியுடன 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், பாகிஸ்தான் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் 3 முதல் 6-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் குரூப்1 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நியூசிலாந்து-குரூப்2 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சிட்னியில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    அடிலெய்டு மைதானத்தில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் குரூப்-2 பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா-குரூப்1 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி 13-ந்தேதி மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடக்கிறது.

    அரை இறுதி மற்றும் இறுதி போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் தினமான மறுநாளில் போட்டி நடைபெறும்.

    இந்த நிலையில் இங்கிலாந்துடனான அரை இறுதி ஆட்டம் சவாலானது என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார். ஜிம்பாப்வே அணியுடனான வெற்றிக்கு பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டி எங்களுக்கு நல்ல சவாலாக இருக்கும். அவர்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இரு அணிகளும் மோதுவது கடும் போட்டியாக இருக்கும்.

    அரை இறுதியில் ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆட்டம் அதிகபட்சமாக நெருக்கடியாக இருக்கும். சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும்.

    சூர்யகுமார் யாதவின் பேட்டிங் வியக்கத்தக்க வகையில் அபாரமாக இருக் கிறது. அவரது அதிரடியான ஆட்டம் எதிர் முனையில் உள்ள பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை குறைத்து விடும். அவர் தனது பலத்தில் இருந்து மேலும் பலம் பெற்று வருகிறார்.

    ரசிகர்கள் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் விளையாடும் போட்டிகளில் எல்லாம் மைதானம் நிரம்பி விடுகிறது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார். 

    • ரோகித் சர்மாவுக்கு 35 வயதும், விராட் கோலிக்கு 33 வயதும் ஆகிறது
    • கேப்டன் பதவிக்கு பாண்ட்யா, ராகுல், பண்ட் ஆகியோரில் ஒருவரை நியமிக்க திட்டம்

    ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்கும். இந்திய அணியில் இருந்து விராட் கோலி திடீரென விலகியதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிறது. அவர் இன்னும் அதிகமான காலம் விளையாட வாய்ப்பில்லை. அதற்குள் அடுத்தக்கட்ட கேப்டனை தயார் படுத்த பிசிசிஐ விரும்புகிறது. மேலும், போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஓய்வு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக உள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி ஓய்வு அளிக்க இயலாது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், அடிக்கடி ஓய்வு அளிக்கப்படுகிறது. அதேபோல் ரோகித் சர்மாவுக்கும் அடிக்கடி ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புகிறது.

    ஆகவே, ரோகித் சர்மா அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப்பின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை. விராட் கோலிக்கு மிகப்பெரிய தொடரை தவிர்த்து மற்ற டி20 போட்டிகளிலும் ஓய்வு அளிக்கப்படும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வலியுறுத்தப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளதாக செய்தி நிறுவனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

    அந்த செய்தியில் வெளியான தகவல் பின்வருமாறு:-

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடம் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் விரிவாக கலந்துரையாடுவார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட மாட்டார்கள்.

    ஆனால், அவர்கள் இருவரும் 35 வயதை தொடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதோடு இருவரும் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்கள். தொடர்ந்து பெரிய தொடர்கள், ஐசிசி தொடர்கள் வருவதால் அவர்களுக்கு சுழற்சி முறை மற்றும் ஓய்வுகள் தேவை. ஆனால், ஒரு கேப்டனை அடிக்கடி சுழற்சி முறையில் மாற்ற முடியாது.

    டி20-யில் கவனம் செலுத்த முடியாது என்பதால் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் கேப்டன் பதவிக்கு தயாராகும்போது, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக வெளியேற்ற வேண்டும்.

    அதேபோல் விராட் கோலியிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படும்.

    பிசிசிஐ-யின் திட்டம்

    1. ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பையில் இருந்து ரோகித் சர்மா மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக தொடரமாட்டார்.

    2. ஆனால், 2024 வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக அளவில் கவனம் செலுத்துவார்.

    3. டி20-யில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுல், பண்ட் ஆகியோர் 2024 வரை கேப்டன் பதவியை பகிர்ந்து கொள்வார்கள்.

    4. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின், கேப்டன் பதவி குறித்து ரோகித் சர்மா உடன் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

    5. காயம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா 2024 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை.

    6. அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் வளர்க்கபட்டு வருகிறார்கள். ஹர்திக் பாண்ட்யா தேர்வாளர்களால் கவர்ந்துள்ளார்.

    7. ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் ஐ.பி.எல். தொடரில் சிறந்த கேப்டன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். கே.எல். ராகுலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள்.

    8. ஆனால், அனைத்து மாற்றங்கள் குறித்தும் 2023 உலகக் கோப்பைக்குபின் பேசப்படும்.

    விராட் கோலி

    1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்குப்பின் விராட் கோலி தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட முடியாது.

    2. தேர்வாளர்கள் அவரை முக்கியமான மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக மட்டும் தேர்வு செய்வார்கள்.

    3. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் அதிக அளவில் கவனம் செலுத்த வலியுறுத்தப்படுவார்.

    2023-ல் டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால், தேர்வுக்குழு அதற்கான பணிகளை தொடங்கிவிட்டது. ஒருநாள் போட்டியில் வீரர்கள் அந்தந்த இடங்களுக்கு பொருத்தமாக இருக்கிறார்களா? என்று சோதிக்கலாம். அதன்பின் 2024-ல் டி20 உலகக் கோப்பை வருவதால் மீண்டும் டி20 முக்கியத்துவம் பெறும்.

    இவ்வாறு அந்த செய்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    • கடைசி ஓவர்களை ஒரு இளம் வீரர் வீசுவது அத்தனை சுலபம் கிடையாது.
    • பும்ரா இல்லாத நிலையில் அர்ஷ்தீப் சிங் இதனை சிறப்பாக செய்து வருகிறார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்களாதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    முன்னதாக கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வீசப் போவது அனுபவம் மிக்க ஷமியா அல்லது அர்ஷ்தீப் சிங்கா என ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் வழங்கினார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அர்ஷ்தீப், யார்க்கர் பந்து வீச்சை பயன்படுத்தினார்.

    இதனால் அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியாவின் வெற்றி குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயங்களில் டெத் ஓவர்களை வீச தயாராக இருக்கும்படி அர்ஷ்தீப் சிங்யிடம் ஏற்கனவே கூறியிருந்தாக தெரிவித்தார்.

    ஒரு இளம் வீரர் இதை செய்வது அத்தனை சுலபம் கிடையாது, அதற்கான நாங்கள் அவரை தயார்படுத்தினோம், கடந்த 9 மாதங்களாக அர்ஷ்தீப் சிறப்பாக அதை கையாளுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இனியும் தொடர்ந்து அவர் சரியாக செய்வார் என்றும் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும் நேற்றைய போட்டியில் தங்களது பீல்டிங் அற்புதமாக இருந்ததாகவும், சில கேட்சுகள் சிறப்பாக அமைந்தன. அழுத்தமான சூழலில் கேட்சுகளை பிடிப்பது எங்களது வீரர்களின் திறனை வெளிப்படுத்துகிறது, எங்களது பீல்டிங்கில் எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை என்றும் ரோகித் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒட்டு மொத்தமாக அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார்.
    • யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் அடித்திருந்தார்.

    சிட்னி:

    2022 டி20 உலகக்கோப்பையில் இன்று இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன்பு யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் அடித்திருந்தார். தற்போது ரோகித் சர்மா 34 சிக்சரை அடித்திருக்கிறார்.

    ஒட்டு மொத்தமாக முதலிடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார். அவர் 63 சிக்சர் அடித்திருக்கிறார். இந்த தொடரில் ரோகித் அதிரடியை காட்டி சிறப்பாக விளையாடினால் 50 சிக்சர்களை அடிக்க வாய்ப்புள்ளது.

    • ஐ.சி.சி. போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
    • ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயார்

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடனான ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை செய்ய தயங்கவில்லை. தற்போதைய ஆட்ட நிலை மற்றும் செயல்படும் தன்மையை பொறுத்து தேர்வு நடைபெறுகிறது.

    ஐ.சி.சி. போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அழுத்தம் நிலையானது. பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது சவாலானது. 9 ஆண்டுகளாக ஐ.சி.சி. போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை. இது ஏமாற்றமே.

    ஆசிய கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது பற்றி பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) தான் முடிவு செய்யும். பாகிஸ்தான் செல்வது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை.

    நாளைய போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்வது பற்றி மட்டுமே தற்போது யோசித்து கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    ×