search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Savitri Thakur"

    • முக்கிய குற்றவாளியான நிர்சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் தொகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து மரக்கட்டையால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில் தாக்கப்படும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல் பலரும் வீடியோ எடுப்பது பதிவாகியுள்ளது.

    வீடியோ வைரலானத்தை அடுத்து, முக்கிய குற்றவாளியான நிர்சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றவர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூரின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது. 

    • 'Beti Bachao, Beti Padhao' மத்திய அரசு திட்டத்தின் பெயரை இந்தியில் எழுத்து பிழையுடன் எழுதிய அமைச்சர் சாவித்ரி தாக்கூர்.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் தார் தொகுதியில் வென்ற சாவித்ரி தாக்கூர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

    இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், தனது தொந்த தொகுதியில் அரசு சார்பில் நடந்த பள்ளி விழாவில் கலந்துகொண்டார். அப்போது பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ('Beti Bachao, Beti Padhao') என்ற மத்திய அரசின் திட்டத்தை இணையமைச்சர் இந்தியில் எழுதும் பொழுது எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளார்.

    மத்திய இணையமைச்சர் இந்தியில் எழுத்துப் பிழையுடன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வைரல் வீடியோவிற்கு காங்கிரஸ் தலைவர் கேகே மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினை ஆற்றியுள்ளார். அதில், "தங்களது தாய்மொழியை கூட எழுத தெரியாதவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் துரதிஷ்டம். இப்படிப்பட்டவர்களால் எப்படி ஒரு துறையை நிர்வகிக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினராவதற்கு கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    சாவித்ரி தாகூர் தனது வேட்புமனுவில் 12 ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×