search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senbagavalli Amman Temple"

    • கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவண நாதசாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேற்று 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படி தாரர்கள் சார்பில் காலையிலும் தினமும் மாலையிலும் அம்பாள் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நேற்று 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ குரு, இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சண்முக ராஜ், திருப்பதி ராஜா, நிருத்திய லட்சுமி, ரவீந்தி ரன் மற்றும் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன்பொருளாளர் தங்க மாரியப்பன், முன்னாள் சங்கத் தலைவர்கள் பூவலிங்கம், முன்னாள் செயலாளர்கள் பழனிக்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பரமசிவம், முன்னாள் பொருளாளர் கருப்பசாமி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

    இன்று 10-ம் திருநாளை முன்னிட்டு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் காலையிலும், அம்பாள் திரு வீதியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 11-ம் திருநாளான நாளை பகல் 1மணிக்கு மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் மண்டகப்படி தரார்கள் சார்பில் தபசு சப்பரத்தில் அம்மன் த பசுக்கு எழுந்தருளல், இரவு 6 மணிக்கு ராமலிங்கம், குடும்பத்தினர் சார்பில் சுவாமி ரிஷப வாகனத்தில் புவன நாதராக அம்மனுக்கு காட்சி கொடுத்த நிகழ்ச்சி நடைபெறு கிறது.

    9-ந் தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறு கிறது. அதனை முன்னிட்டு காலையில் அம்மன் பல் ல க் கி ல் அம்மன் திருவீதி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் ஆவுடையப்பன் செட்டியார் குடும்பத்தினர் சார்பில் நடைபெற உள்ளது. அதனை அடுத்து சுவாமி அம்பாள் பட்டினப்பிரவேசம் நடைபெறும்.

    திருக்கல்யாணம் முடிந்த வுடன் செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள காயத்ரி மண்ட பத்தில் பிராமண மகாசபை சார்பாக அன்னதானம் நடைபெற உள்ளது.

    • கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.
    • தொடர்ந்து சுவாமி , அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் 9-வது நாளான கடந்த 13-ந் தேதி காலை சுவாமி-அம்பாள் தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. 14-ந் தேதி தீர்த்தவாரியும், மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    அதைத் தொடர்ந்து நேற்று இரவு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழாநடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. திருவனந்தல், பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜையும், தொடர்ந்து சுவாமி அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சுவாமி அம்பாள் அலங்காரமாகி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தெப்பத்தை 11 முறை வலம் வந்தனர். தொடர்ந்து சுவாமி ,அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வந்து சேர்ந்தனர்.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டி ருந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின் முறை சங்க தலைவர் பழனிச்செல்வம், துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன்கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் செல்வம் வர வேற்றார். தெப்பத்திருவிழா வினை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்க டேஷ் தொடங்கி வைத்தார். விழாவை முன்னிட்டு காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் காமராஜர் சிலை அருகே எஸ்.ஆர். சந்திரனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ×