என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Serious injury"

    • நெத்திமேடு பழைய இரும்புக் கடை அருகில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
    • வண்டி தானாக நிலை தடுமாறியதை தொடர்ந்து சாலையில் சறுக்கி விழுந்தார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, சாய்ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( வயது 62). இவர் துணிகளுக்கான எம்ப்ராய்டரி தொழில் செய்து வருகிறார். இவர் நெத்திமேடு பழைய இரும்புக் கடை அருகில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வண்டி தானாக நிலை தடுமாறியதை தொடர்ந்து சாலையில் சறுக்கி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநாவலூர் அருகே ஆடு மேய்த்தவர் வேன் மோதி பலியானார்.
    • குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிழக்கு மருதூர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 50) அதே ஊரைசேர்ந்த குணபூசணி (வயது 52) இருவரும் கிழக்கு மருதூர் மேம்பாலம் அருகில் ரோட்டோரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து சேந்தநாடு சென்ற வேன் இவர்கள் மீது மோதி பலத்த காயம் அடைந்தனர். ராணி சம்பவ இடத்திலே இறந்தார். குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    மேலும்இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேன் ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கட்டிட தொழிலாளி முத்து பிரகாஷ் மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் முக்காணிக்கு சென்றுள்ளனர்.
    • ஆறுமுகநேரி சாலையில் எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி காணியாளன்புதுரை சேர்ந்தவர் முத்து பிரகாஷ் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவருக்கு அனுசியா (22) என்ற மனைவியும் வினோதினி என்கிற 8 மாத குழந்தையும் உள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் முக்காணிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஆத்தூர்- ஆறுமுகநேரி சாலையில் எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முத்து பிரகாஷ், அவரது மனைவி ஆகிய இருவருக்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. குழந்தை வினோதினிக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 3 பேரும் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் மீது ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியம்மாவை காப்பாற்ற முயன்றவரையும் மின்சாரம் தாக்கியது.
    • படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் ஊராட்சி பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சந்திரா (வயது 45).

    திருமணமாகாத இவர் தனது தங்கை மகன் 11-ம் வகுப்பு படிக்கும் மணிகண்டனுடன் வாழை கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆட்டை ஓட்டச் சென்றார்.

    அப்போது காற்றின் காரணமாக அறுந்து விழுந்து கிடந்த மோட்டாருக்கு செல்லும் மின்சார கம்பியை எதிர்பாராத விதமாக சந்திரா மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    தனது பெரியம்மாவை காப்பாற்ற முயற்சித்த மணிகண்டனையும் மின்சாரம் தாக்கியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
    • இடுப்பாடுக்குள் சிக்கிய அரசு பஸ் டிரைவரை பொதுமக்கள் போராடி மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கி ஒரு தனியார் பஸ் இன்று புறப்பட்டது. அந்த பஸ்ஸில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பஸ் இன்று மதியம் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளச்சி மண்டபம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது தஞ்சையில் இருந்து திருவையாறு மார்க்கமாக ஒரு அரசு பஸ் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என கூக்குரலிட்டனர்.

    இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. டிரைவர் உள்பட 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதில் அரசு பஸ் டிரைவர் இடுப்பாடுக்குள் சிக்கினார். அவரை பொதுமக்கள் போராடி பத்திரமாக வெளியே மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து சிலர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌ இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.‌

    • அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை
    • வாகனம் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்

    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மயக்கமுற்ற நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • வாகனம் மோதி பெண் சத்துணவு அமைப்பாளர் படுகாயம் அடைந்தார்
    • உப்பாத்துவாரி அருகே வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள மருதம்பட்டிபுத்துரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சுகந்தி (வயது 44)/ இவர் ஆணைக்கல்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொட்டியம் சென்று விட்டு மேக்க நாயக்கன்பட்டியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் எம்.களத்தூர்- மருதம்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார் அப்போது உப்பாத்துவாரி அருகே வரும் பொழுது அவர் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுகந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுகந்தி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருதம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளரும் சுகந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.


    • தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர்.
    • மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 64) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் நேற்று தனது மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பொங்கல் விடுமுறை முடிந்து தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் சென்ற போது எதிரில் வந்த கார் மோதியது. இதில் நீலமேகம், இவரது மனைவி சுதாலட்சுமி (48), விக்னேஷ் (35), இவரது மனைவி உமாமகேஸ்வரி (33), விக்னேஷ் மகள் சஹானா (6), எதிரே வந்த காரில் இருந்த விஸ்வா, இவரது நண்பர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (20) சின்னகள்ளி ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மகன் கிருஷ்ணராஜ்(20), அரும்பட்டு சமத்துவபுரம் பழனி மகன் முபின்ராஜ் (21), குமாரசாமி மகன் ஆகாஷ் (20), விழுப்புரம் ஆஸ்பத்திரி சாலை ரவிசங்கர் மகன் பிரசாந்த் (22) மற்றும் சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டி ருந்த ஏமப்பேர் காலனியைச் சேர்ந்த முனியன் மகன் கோவிந்தன் ஆகிய 12 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பிரசாந்த் என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். விபத்தில் பலியான பிரசாந்த் விழுப்புரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நீலமேகம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வி.கைகாட்டியில் கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் காவனூர் காலனி தெருவை சேர்ந்தவர் வெள்ளையத்தேவன் (வயது 34). இவர் தனது உறவினரான சக்தி தேவனுடன் (20) மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வி.கைகாட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் வெள்ளையத்தேவன், சக்தி தேவன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரைக்குறிச்சி பட்ட தெருவை சேர்ந்த கார் டிரைவர் கண்ணாயிரத்தை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூரில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு திட்டக்குடிக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை திட்டக்குடியைச் சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (வயது 47) ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டைக்கு வராமல் எலவனாசூர்கோட்டை ஆசனூர் வழியாக சென்றது. அப்போது ஆசனூர் சிப்காட் அருகே ஒரு வழிப்பாதையில் சென்றது. அப்போது எதிரில் வந்த லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சின் கண்டக்டர் தேவேந்திரன் (54), திட்டக்குடியைச் சேர்ந்த பயணிகள் இந்திராகாந்தி (58), நீலாவதி (50), மோகன் (55), பெரம்பலூர் ராஜேந்திரன் (55), பெங்களூரு சந்துரு (25), லாரி கிளினர் அஜித் (25) ஆகியோர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடக்கல் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் ஒரு வழிப்பாதையில் அரசு பஸ் சென்றதால் இந்த விபத்து நடந்தது. இது குறித்து எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது.
    • நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வரக்கால்ப ட்டு பகுதியில் சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது. அப்போது முன்பக்க சக்கரம் அச்சு முறிந்து லாரியில் இருந்த டிரைவர் லேசான காயமடைந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் செஞ்சி பகுதியில் இருந்து மாடு எலும்புகளை ஏற்றிக்கொண்ட கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்ற போது எதிர்பாராமல் சிமெண்ட் தடுப்பு கட்டை மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்ற மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • படுகாயம் அடைந்து முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அரசக்குளத்தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. இவருடைய மகன் அப்துல் ரஹ்மான் (வயது 28).

    இவர் தான் வாங்கிய புதிய மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்வதற்காக தனது நண்பரான, குண்டாங்குளத் தெருவை சேர்ந்த சேக்தாவுது மகன் செய்யது இப்ராகிம்(27) என்பவருடன் திருத்துறைப்பூண்டி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

    ஆலங்காடு பைபாஸ் அருகே சென்றபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற மினிலாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்ற அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிர் இழந்தார்.

    செய்யது இப்ராகிம் படுகாயம் அடைந்து முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மினிலாரி டிரைவர் சம்பவஇடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×