search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sholayar Dam"

    • கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது.
    • அணைக்கு வரும நீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் தடைபட்டு வருகிறது.

    தொடர் மழையால் வால்பாறை பகுதிகளில் கடுமையான குளிரும் நிலவி வருகிறது. நேற்றும் வால்பாறை பகுதிகளில் மழை பெய்தது.

    வால்பாறை, சின்னக்கல்லார், நீரார், சின்கோனா, ஹைபாரஸ்ட், வாகமலை, தலனார், வில்லோணி, புதுத்தோட்டம் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    மழையால் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள நடுமலையாறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வருகின்றன.

    சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 165 அடியை எட்டியது.

    அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. அணைக்கு வினாடிக்கு 9241.37 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு மதகு வழியாக 2, 745 கன அடி நீரும், சேடல் வழியாக 5,639.93 கன அடியும், மின் உற்பத்தி நிலையத்திற்கு 1,410 கன அடி என மொத்தம் 9,816 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • 120 அடி கொண்ட ஆழியார் அணையில் தற்போது 95.80 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.
    • மழையால் ஆழியார் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    கடந்த சில நாட்களாகவே வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது.

    தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்ததால் கருமலை, அக்காமலை, ஊசிமலை, வெள்ளமலை, வால்பாறை, சின்னக்கல்லார், பெரியகல்லார், கூட்டுறவு காலனி, அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.

    வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 23-வது கொண்டை ஊசி வளைவில் பாறை உருண்டு, நடுரோட்டில் விழுந்தது.

    இதேபோல் 18-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    வால்பாறையில் பெய்யும் கனமழைக்கு கூழாங்கல், நடுமலையாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வால்பாறை அரசு போக்குவரத்து பணி மனைப்பகுதியில் ஆற்று நீர் புகுந்தது. இதேபோல் ஸ்டேன்மோர் ஆத்து மட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. மழை குறைந்த பின்னர் அங்கிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    வால்பாறை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார் அணை உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    சோலையார் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் நீடிக்கும் கனமழையால் சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சோலையார் அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி. நேற்று சோலையார் அணையின் நீர்மட்டம் 128 அடியாக இருந்தது.

    இன்று அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 12 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,753.23 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,069.91 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பரம்பிக்குளம் அணையின் மொத்த நீர்மட்டமான 72 அடியில் தற்போது 29.80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,397 கனடி நீர் வருகிறது. அணையில் இருந்து 57 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    120 அடி கொண்ட ஆழியார் அணையில் தற்போது 95.80 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மழையால் ஆழியார் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,356 கன அடி தண்ணீர் வருகிறது. 84 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

    • கடந்த சில தினங்களாக வால்பாறை மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது சோலையார் அணை. இந்த அணை ஆசியாவின் 2-வது ஆழமான அணையாகும்.

    பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் உயிர் நாடியாக உள்ள சோலையார் அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

    இந்த அணையின் நீர்மட்டம் மொத்தம் 160 அடியாகும். அணை முழு கொள்ளளவை எட்டியதும், உபரி நீர் தானாக சேடல் பகுதியில் வழிந்து பரம்பிக்குளம் அணைக்கு சென்று விடும்.

    கடந்த தென்மேற்கு பருவமழையால் அணையின் நீர் மட்டம் ஜூன் மாதம் 11-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணை திறக்கப்பட்டது. அன்று முதல் இந்த மாதம் 6-ந்தேதி வரை 147 நாட்கள் சோலையார் அணையின் நீர்மட்டம் 160 அடியாகவே இருந்தது.

    அதன் பின்னர் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது. கடந்த 7-ந்தேதி அணையின் நீர்மட்டம் 159.9 அடியாகவும், 12-ந்தேதி 158 அடியாகவும் குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வால்பாறை மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    நேற்று 2 அடி உயர்ந்து சோலையார் அணை மீண்டும் 160 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 523 கனஅடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 160.3 அடியாக உள்ளது. 5400 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 160.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 272 கனடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 150.58 கனடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    வால்பாறை சுற்றுவட்டாரத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சோலையார் அணை-28, மேல்நீரார்-5, கீழ்நீரார்-11, வால்பாறை-6.

    ×