என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "siege"

    • சந்திப்பு பஸ்நிலையத்தின் ஒரு பகுதி முழுமையாக கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது.
    • கீழ்தளத்தில் நிறுத்துவதற்கான வாகன காப்பகமும் தயார் நிலையில் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பஸ் நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு ரூ.78.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் கோரிக்கை

    பஸ் நிலையத்தில் 144 கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஒரு பகுதி பஸ்நிலையம் முழுமையாக கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது. அங்கு 17 பஸ்கள் நிறுத்து வதற்காக நடை மேடையும், கீழ்தளத்தில் 106 கார்கள், 1,629 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான வாகன காப்பகமும் தயார் நிலையில் உள்ளது.

    2 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க அடிமட்ட தூண்கள் கட்டப்பட்டு உள்ளது. மேல்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்ல லிப்ட் வசதிகள், டிஜிட்டல் திரைகள், கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட வேண்டியதுள்ளது.

    நகரின் முக்கிய பகுதியாக திகழும் சந்திப்பு பகுதியில் பஸ் நிலையம் இல்லாததால் வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் பயணிகளும் அவதி யடைந்து வருகிறார்கள்.

    எனவே கட்டுமான பணி கள் முடிந்த பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    முற்றுகை

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் தூய்மை பணி யாளர்கள் உள்ளிட்ட ஆயிரம் பேர் இன்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்களுடன் மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பேசிய வியாபாரிகள், பல்வேறு தரப்பினரும் சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதி காரிகள் தரப்பில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பஸ் நிலையத்தை திறக்க மறுக்கின்றனர். எனவே உடனடியாக பஸ் நிலை யத்தை திறக்க வேண்டும் என்றனர்.

    அப்போது மேயர் சரவணன், மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சந்திப்பு பஸ் நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பா.ம.க. வினர் பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • இது சம்பந்தமாக நிர்வாகிகள் தட்டி கேட்ட தற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    பாமக நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்க ளில் தொடர்ந்து கடலூர் பிள்ளையார் மேடு சேர்ந்த சிவா என்பவர் அவதூறு பரப்பி வந்த நிலையில் பா.ம.க. வினர் பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமை யில் நிர்வாகிகள் திரண்ட னர். பின்னர் கடலூர் முதுநகர் போலீஸ் நிலை யத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பி ரண்டு கரிக்கால் பாரிசங்கர் மற்றும் போலீசார் போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், பிள்ளையார் மேடு செல்வ சிவா என்பவர் பாமக நிர்வாகிகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதோடு பா.ம.க. விற்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

    இது சம்பந்தமாக நிர்வாகிகள் தட்டி கேட்ட தற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். இது குறித்து உரிய நடவடி க்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தர வாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சண்.முத்து கிருஷ்ணன் கொடுத்த புகா ரின் பேரில் பிள்ளையார் மேடு சேர்ந்த சிவா என்ப வரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
    • இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் 4 ரோடு அருகே பெரமனூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டி தரப்படும் என ஆணைகள் வழங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே இருந்த வீடுகளையும் இடித்து பயனாளிகள் தயாராகினர். ஆனால் 6 மாதமாகியும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை.

    குறிப்பாக அந்த அலுவலக நிர்வாக பொறியாளர், அரசியல் ‌பிரமுகர்களுக்கு மட்டும் வீடுகள் கட்டிக் கொடுப்பதாகவும், மற்றவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க மறுப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

    இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த வீட்டை இடித்து விட்டோம். புதிய வீடும் கிடைக்காததால் வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும், உடனே வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் கூறி அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். வீடுகளை கட்டி தராவிட்டால் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறினார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தும், அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • டெண்டரை முறையாக நடத்தக்கோரி அ.தி.மு.க.வினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
    • ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் மூலம் டென்டருக்கு விண்ணப்பம் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றி யத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-–2, 2022–-2023 ஆண்டுக்கான பணிகள் 5 ஊராட்சிகளில் 32 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ. 2 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. இது குறித்து கடந்த 1-ந் தேதி நடைபெறுவதாக இருந்த டெண்டர், 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் டிச.8-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. வை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் மூலம் டென்டருக்கு விண்ணப்பம் செய்தனர். பின்னர் அதற்கான முத்திரையிடப்பட்ட டெண்டர் படிவங்களை பி.டி.ஓ., அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க சென்றுள்ளனர்.

    ஆனால் அதிகாரிகள் டெண்டர் படிவங்களை வாங்க மறுத்துவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து ஒன்றிய அதிமுக., செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ் ஆகியோர் தலைமையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மற்றும் கட்சி நிர்வாகிகள் பி.டி.ஓ., அலுவலகத்தில் திரண்டனர். அப்போது பி.டி.ஓ.,க்கள் இல்லாததால் நிர்வாக மேலாளர் சண்முகம், துணை பி.டி.ஓ., ஆகியோரை முற்றுகையிட்டு, ஏன் டெண்டர் படிவங்களை வாங்க மறுக்கிறீர்கள், வாங்க முடியாது என்றால் எழுதிக்கொடுங்கள் எனக்கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தணை பி.டி.ஓ. சுபாஷ் மாலை 4.00 மணிக்கு (நேற்று) டெண்டர் படிவங்கள் திறக்கப்பட்டு முறைப்படி டெண்டர் நடைபெறும் என்றும் அதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இதை எடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    • கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தாசில்தார் கிருஷ்ணகுமாரி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் குறுவட்டத்துக்கு உட்பட்ட மாசார்பட்டி மேலக்கரந்தை, அயன்ராஜாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2020-21-ம் ஆண்டு பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர் சேதமடைந்தது. இதற்குரிய பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் அய்யாதுரை தலைமையில் விவசாயிகள் எட்டயபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 2020-21-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையில், புதூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராமன், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மகேஷ், நாகராஜ், சுப்புராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சசிகலா புஷ்பா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரு கவுன்சிலரை கைது செய்தனர்.
    • அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் 155 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரான சசிகலா புஷ்பாவுக்கு சொந்தமாக தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8-வது தெருவில் உள்ள வீட்டை 13 பேர் கும்பல் சூறையாடியது.

    இதுதொடர்பாக சசிகலா புஷ்பா அளித்த புகாரின்பேரில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரு கவுன்சிலரை கைது செய்தனர். இதற்கிடையே சசிகலா புஷ்பா வீட்டை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று கூறி அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் 155 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்ட தலைவர் சித்ராங்கதன், பொதுச்செயலாளர் உமரிசத்தியசீலன், துணைத்தலைவர்கள் வக்கீல் வாரியார், சுவைதர் உள்பட 155 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களில் சரி செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    மாமல்லபுரம்:

    ஜி.20 மாநாட்டிற்கு சென்னை வரும் பிரதிநிதிகள் சிலர் ஜன.30-31 தேதிகளில் சென்னையில் இருந்து கல்பாக்கம் வழியாக புதுச்சேரி ஆரோவில் செல்கிறார்கள். இவர்கள் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலையை மேம்படுத்த 3கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மாமல்லபுரம்-கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் மழையால் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கல்பாக்கம் புதுப்பட்டினம் வரும் சேதமடைந்த சாலையையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் சாலை பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்த கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசினர். 2 நாட்களில் சரி செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சாலை அமைக்கும் பணி ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

    • உதவி யாளர் பதவிகளை நிரப்ப கோரிக்கை வைத்து வருகின்றனர்.
    • இதனால் உதவியாளர் தேர்வு அறிவிக்கப்பட வில்லை.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கக்கூடாது என அமைச்சக ஊழி யர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சீனியாரிட்டி அடிப்படையில் உதவி யாளர் பதவிகளை நிரப்ப கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இதனால் உதவியாளர் தேர்வு அறிவிக்கப்பட வில்லை. இந்த நிலையில் தற்போது துறை ரீதியிலான போட்டித்தேர்வு நடத்தி உதவியாளர் தேர்வு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

     இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் தலைமை செய லகத்தை முற்றுகையிட்டனர்.

    போராட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைமை செயலக நுழைவுவாயில் தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் தலைமை செயலரின் காரை வழிமறித்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஆரோ புட் நிறுவன வாசலில் அமர்ந்து நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே ஆரோ புட் நிறுவனத்தை முற்றுகையிட்டு தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே புளிச்சப்பள்ளம் பகுதியில் ஆரோ புட் நிறுவனம் உள்ளது.

    இந்த நிறுவனத்தில் 150 நிரந்தர ஊழியர்கள், 450 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் பல்வேறு கட்சியினுடைய தொழிற்சங்கங்கள் இயங்கி வருகிறது.

    தே.மு.தி.க. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகளை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக பி.எஃப். பணத்தை பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    தே.மு.தி.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த 12 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கடலூர் தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் நிறுவனம் அதனை ஏற்காமல் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் ஆரோ புட் நிறுவனம் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகி ஜெய்சங்கரை வேறு துறைக்கு மாற்றிய நிலையில் இதனை கண்டித்தும், தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ஆதரவாக நிர்வாகி வக்கீல் ராதா கிருஷ்ணன் தலைமையில், பூத்துறை அருள் உள்ளிட்ட பலர் ஆரோ புட் நிறுவன வாசலில் அமர்ந்து நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வானூர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆரோபுட் நிறுவன வாசலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது.
    • அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அண்டப்பட்டு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், பி.டி.ஒ. அலுவலகங்களில் பல முறை புகார் தெரிவித்தனர். சேதம் அடைந்த பாலத்தை சரி செய்யவில்லை என கூறப்படுகிறது.மேலும், இந்த பாலம் வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் விழுந்து காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசனிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இதையடுத்து கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈச்சேரி சேகர், கவுன்சிலர் எழிலரசன் ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்.அதன்படி ரூ.12 லட்சம் செலவில் பாலத்தை கட்டும் பணியை கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் தொடங்கினர். இதையறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் அப்பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டு அதிகாரி களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியரை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பள்ளியில் பயிலும் சில மாணவிகளிடம், அந்த ஆசிரியர் வகுப்பறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களிடம், அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் நேற்று பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் சார்பில் தொலைபேசி வாயிலாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலகுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் அந்த பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியர், மாணவிகளிடம் தவறான தொடுதல், தவறான பார்வை மற்றும் குறிப்பிட்ட மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலர் கோபிநாத், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.
    • அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் அய்யனார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் காயமடைந்த அய்யனார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் அய்யனார் மற்றும் ஓட்டல் ஊழியர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் தஷ்ணா தலைமையில் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் தனியார் ஓட்டலை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அய்யனாரை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். மேலும் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×