என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100153"
கர்நாடகத்தில் தனித்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதனால் குமாரசாமியின் ஜே.டி.எஸ். கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. என்றாலும் ஆட்சியின் தலைமை பொறுப்பு ஜே.டி.எஸ். கட்சியிடம் உள்ளது.
முதல்-மந்திரி பதவி இழந்த சித்தராமையா தற்போது கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.பரமேஸ்வரா துணை முதல்-மந்திரி பதவி வகிக்கிறார். ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற அதிகாரம் இல்லாத பதவியில் இருப்பதால் சித்தராமையா அதிருப்தியில் உள்ளார்.
இந்த நிலையில் சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஜே.டி.எஸ். கட்சி மேலிடம் நிராகரித்து விட்டது. இதனால் சித்தராமையா மேலும் அதிருப்தியில் உள்ளார்.
இதற்கிடையே சித்தராமையாவுக்கு மந்திரி பதவிக்கு இணையான அந்தஸ்து வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறினார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி அந்தஸ்து வழங்க மாநில அரசு தயக்கம் காட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.
கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சித்தராமையாவுக்கு விதான்சவுதா தலைமைச் செயலகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது சோனியாகாந்தி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். அவருக்கு மந்திரி அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே சித்தராமையாவுக்கு மந்திரி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரா கூறினார்.
பட்ஜெட் தாக்கல் செய்யும் விவகாரத்தில் சித்தராமையாவின் கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்து விட்டது. மேலும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவும் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக குமாரசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக சித்தராமையா கருதுகிறார்.
இதனால் கூட்டணியில் சித்தராமையாவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க அவருக்கு மந்திரி அந்தஸ்து வழங்கலாம் என்ற முடிவுக்கு குமாரசாமி வந்து இருக்கிறார். இன்னும் ஒருசில நாட்களில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
தற்போது விதான் சவுதா அலுவலகத்துக்கு சித்தராமையா வருவது கிடையாது. மந்திரி அந்தஸ்து அறிவிப்பு வெளியானதும் அவர் அலுவலகம் செல்வார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். #Siddaramaiah
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையை தீர்ப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு ‘‘காவிரி நதிநீர் ஆணையம்’’ உருவாக்கியுள்ளது.
காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வரும் கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி, அந்த ஆணையத்துக்கும் உறுப்பினர்களை நியமிப்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால் அவருக்காக காத்திராத மத்திய அரசு காவிரி ஆணையத்தை செயல்பட வைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இது குமாரசாமிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் குமாரசாமி நேற்று தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவை சந்தித்துப் பேசினார்.
அமைச்சர்களின் செயல்பாடு, இடைக்கால பட்ஜெட், விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தேவேகவுடாவிடம் குமாரசாமி ஆலோசனை பெற்றார். அப்போது குமாரசாமிக்கு தேவேகவுடா சில அறிவுரைகளை வழங்கினார்.
‘‘காவிரி நீர் ஆணையம் தொடர்பாக மத்திய அரசுடனோ அல்லது தமிழக அரசுடனோ மோதல் போக்கை கடை பிடிக்காதே. அது தோல்வியில் முடிந்து விடும். எனவே தமிழக அரசுடன் சற்றுவிட்டுக் கொடுத்து நடந்து கொள்’’ என்று கூறியதாக தெரிய வந்துள்ளது.
காவிரி ஆணையம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லாதே. அதற்கு பதில் மத்திய அரசுடன் சமரசமாக செல்வதே நல்லது என்றும் குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை கூறியுள்ளாராம்.
இதைத் தொடர்ந்தே முதல்-மந்திரி குமாரசாமி நீர்ப்பாசன நிபுணர் வெங்கட்ராமை அழைத்து விரிவான அறிக்கை தயாரித்து தரும்படி உத்தரவிட்டாராம். அதன் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு குமாரசாமி மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுத முடிவு செய்துள்ளார். #DeveGowda #CMKumaraswamy #Cauveryissue
கரூர்:
கரூரில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக கவர்னருக்கு தனது அதிகாரம், ஆளுமை என்ன என்பது தெரியும். அந்த வகையில் தான் அவரது செயல்பாடு இருக்கிறது. ஒருவேளை அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் அது மாநில அரசு தான் செய்ய வேண்டும். மாநில அரசின் அதிகாரத்தில் தலையீடு இருக்கிறதா? என முதல்-அமைச்சர் உள்ளிடோர் தான் கூற வேண்டும். இதைவிடுத்து ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. இதில் காழ்ப்புணர்ச்சி தான் இருக்கிறது.
கவர்னர் நடவடிக்கையால் தமிழகத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. மாறாக ரூ.1½ கோடியாக இருந்த கவர்னர் மாளிகையின் செலவை அவர் ரூ.30 லட்சமாக குறைத்திருக்கிறார். மக்களின் வரிப்பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது என நினைப்பதிலேயே அவரது சேவை மனப்பாங்கு தெரிகிறது.
சேலம்-சென்னை பசுமைவழி சாலை திட்டத்திற்கு விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை கொடுக்கின்றனர். எனவே இழப்பீட்டை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். எந்த விதத்திலும் விவசாயிகளும், பெண்களும் கைது செய்யப்படக்கூடாது என்பதை தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.
மு.க.ஸ்டாலின் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலுக்கு வந்ததையும், கோவிலுக்குள் சென்று தரிசிக்காததையும் கேட்கிறீர்கள். இது அவரவர் கொள்கை. எனவே விமர்சிக்க விரும்பவில்லை. யாராக இருந்தாலும் இன்று கடவுளை நம்பி தான் ஆக வேண்டும். கோவிலுக்கு வந்து தான் ஆக வேண்டும். குமாரசாமி ரெங்கநாதரை தரிசனம் செய்ததால் கர்நாடக முதல்-அமைச்சர் ஆகிவிட்டார். அதனால் நாம் மக்களை நம்பினோம் முடியவில்லை. எம்.எல்.ஏ.க்களை நம்பினோம் முடியவில்லை.
ரெங்கநாதரை நம்பினால் குமாரசாமிக்கு கொடுத்த அதே அருளை நமக்கும் கொடுப்பாரோ? என்று ஸ்டாலின் நினைத்திருக்கலாம். இந்துமத கடவுள் மீது அவருக்கு நம்பிக்கை வந்திருப்பதை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #MKStalin
மன்னார்குடி:
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் உரிமையை ரத்து செய்து, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்றுக் கொள்ள தமிழக கூட்டுறவுத் துறை உத்திரவிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
உடன் அனைவருக்கும் நிபந்தனையின்றி தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்துகிறோம். விவசாயிகளுக்க 4 சதவீத வட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட மாற்று வணிக வங்கிகள் நகை கடன் வழங்கும்போது, கூட்டுறவு வங்கிகள் மட்டும் 9.50 சதவீத வட்டி நிர்ணயம் செய்வது நியாயமல்ல. மேலும் உடன் இதனை அரசு கைவிட வேண்டும்.
கர்நாடக விவசாயிகளின் பாசனத்திற்குதான் தண்ணீர் திறக்க உத்திரவிடுவதை யாராலும் தடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி சாவல் விடுவதும், காவிரி ஆணைய உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்க மறுப்பதும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். இதனை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. உடன் தமிழக அரசு குமாரசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். உடனடியாக ஆணைய கூட்டத்தை கூட்டி கர்நாடக அணைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
அணைகளுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கிடவும், பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு கர்நாடக, தமிழக அணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய நீர்வளத்துறை முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #Kumaraswamy
பெங்களூர்:
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி சமீபத்தில் மதுரையில் கூறுகையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளோம் என்றார். ஆனால் இரண்டு நாட்களில் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது.
மழையால் கபினி அணை நிரம்பியதால் வேறுவழியின்றி உபரி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டது. மழை நின்றதால் தண்ணீரை நிறுத்தி விட்டது. இதில் கர்நாடகத்தின் பங்கு எதுவும் இல்லை என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை நியமிக்காமல் மீண்டும் கர்நாடகம் முட்டுக்கட்டை போடுகிறது. இதுதொடர்பாக குமாரசாமி அளித்த பேட்டி வருமாறு:-
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த செயல் திட்டத்தில் (ஸ்கீம்) கர்நாடகத்துக்கு பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினர்களை தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னதாக செயல் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவரை உறுப்பினர்களை அறிவிக்க மாட்டோம்.
இதனால் என் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால், கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை அளப்பது, 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்விடுவது, எந்தப் பயிர்கள் நடவு செய்வது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எந்தப் பயிரை நடவு செய்ய வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் தான் முடிவு செய்யும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல் திட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து நிறைவேற்றப்பட வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற வழக்கில் கர்நாடகம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் இதுகுறித்து விவாதம் செய்வதில் தவறியுள்ளனர். என்றாலும் காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைப் பின்பற்றி அண்டை மாநிலங்களுடன் தண்ணீரைப் பங்கிட்டு கொள்வோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #CauveryManagmentCommission
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறியிருந்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என விவசாய சங்கத்தினரும், பா.ஜனதாவினரும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும், அருண் டோலின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்-மந்திரிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தார்வார்-உப்பள்ளி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜூ, அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருண் டோலின் இதற்கு முன்பும் இதுபோல் குமாரசாமி அரசை விமர்சித்து முகநூலில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kumaraswamy #Constable #Suspended
கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சாப்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் குமாரசாமி இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநில விவகாரம் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தனிஷ் அலி, காங்கிரஸ் கட்சியின் வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை குமாரசாமி சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #KarnatakaCM #KumaraswamyMetRahul
சென்னை:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி ஆணையம் அமைக்க ஒப்புக் கொண்டது. ஆனால் குழு அமைக்க கர்நாடக அரசு இன்னும் பிரதிநிதியை நியமிக்காமல் காலம் தாழ்த்துகிறது.
இந்த நிலையில், மதுரை வந்த கர்நாடக முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடகா பிரதிநிதிகள் நியமிக்காதது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், ‘‘காவிரி ஆணைய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்காதது இரண்டாம் பட்சம் தான். ஆனால் போதுமான அளவு மழை பெய்யாவிட்டால் காவிரி ஆணையத்தில் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.
இதுவே மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை காட்ட பலமான காரணமாகிவிடும். தற்போது நன்றாக மழை பெய்கிறது. எனவே கடந்த 14-ந் தேதி முதல் கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடுகிறது.
போதுமான அளவு மழை பெய்தால், தண்ணீர் திறந்து விடுவதில் அரசு நிர்வாகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #karnatakacmkumarasamy #cauveryissue
காவிரி நதிநீர் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்று கமல் கூறி வருகிறார்.
காவிரி நீரை தமிழகம், கர்நாடகா, புதுவை ஆகிய 3 மாநிலங்களும் பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாகி உள்ளன. இந்த விஷயத்தில் கர்நாடக அரசு போதிய ஒத்துழைப்பை வழங்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்துக்கு சென்று அம்மாநில முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். அப்போது காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக இருவரும் பேச்சு நடத்தினர். பின்னர் கூட்டாக பேட்டியும் அளித்தனர்.
இந்த பேச்சின் மூலமாக குமாரசாமி என் மனதை நிரப்பிவிட்டார் என்று கமல் கூறினார். குமாரசாமி கூறும்போது, தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கமலின் இந்த நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தின. காவிரி விவகாரத்தில், விவசாயிகளை வைத்து கமல் படம் காட்டுவதாக, விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அவர் மேலும் கூறும்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவித்தார். இயற்கையின் கருணையால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்ததற்காக குமாரசாமிக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலை தளங்களில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தானாக வந்த தண்ணீருக்கு குமாரசாமியை பாராட்டுவதில் என்ன நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். #Tamilnews
“என் உடல்நலத்தில் அக்கறை செலுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி. அனைவருக்கும் உடற்தகுதி முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக ஆதரவும் தெரிவிக்கிறேன். நானும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். எனது அன்றாட உடற்பயிற்சியில் யோகா, டிரெட்மில் இடம்பெறும்.
ஆனால், உன் உடல் பிட்னசைவிட கர்நாடக மாநில வளர்ச்சியின் பிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை” என குமாரசாமி சூடாக பதிலளித்துள்ளார். #FitnessChallenge #HumFitTohIndiaFit #PMModi #ViratKohli #Kumaraswamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்