search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், அது முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். #Kumaraswamy #KarnatakaFarmLoan
    புதுடெல்லி:

    கர்நாடக முதல்வர்  குமாரசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வேன் என நான் தெளிவாக கூறியிருக்கிறேன். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்திற்குள் அதனைச் செய்வேன் என தேர்தலின்போது வாக்குறுதியும் அளித்திருந்தேன். அது உண்மை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் எனக்கு சற்று அவகாசம் வேண்டும். இன்று எனக்கு சில வரையறைகள் உள்ளன.

    நான் கூறியபடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால், நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவேன் என்று கூறியிருக்கிறேன். அதேபோல் முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வேன். ஏன் இன்னும் சில காலம் காத்திருக்க முடியாதா? விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்வான வழிகாட்டி விதிமுறைகள் தயாராக உள்ளன. அதனை பெங்களூரில் புதன்கிழமை மக்களிடையே தெரியப்படுத்த உள்ளேன்.



    விவசாயக் கடன் தொடர்பாக எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளை கேள்விப்பட்டேன். நான் அமைதியாக இருக்கவில்லை. அமைதியாக இருக்க நான் ஒன்றும் எடியூரப்பா இல்லை. நான் முதல்வராக இருக்கும் வரை மக்களுக்காக சேவை செய்வேன். விவசாயக் கடன் விவகாரம் மட்டுமல்லாமல் மக்கள் தொடர்பான பிற விஷயங்களிலும் சிறந்த முறையில் பணியாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #KarnatakaFarmLoan
    கர்நாடக மாநிலத்தின் முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்ற குமாரசாமி இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். #KumarasamymeetsModi
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஜே.டி.எஸ். இடையே மந்திரிசபை இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்ட நிலையில் கர்நாடக மாநில காங்கிரசார் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசி வருகிறார்கள்.

    இதற்கிடையே, முதல்- மந்திரி குமாரசாமியும் டெல்லி சென்றுள்ளார். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார். 

    மோடிக்கு மாலை அணிவித்து, மலர்செண்டு அளித்த குமாரசாமி, பிரதமர் பதவியில் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்தமைக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். #KumarasamymeetsModi 
    பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இருக்கிறதா? என்று குமாரசாமிக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மடாதிபதிகளை பற்றி முதல்-மந்திரி குமாரசாமி தவறாக பேசுகிறார். முடிந்தால் அரசியலுக்கு வந்து பாருங்கள் என்று அவர்களுக்கு சவால் விடுக்கிறார். இதன் மூலம் மடாதிபதிகளையும், அவர்களை பின்பற்றும் பக்தர்களையும் குமாரசாமி புண்படுத்திவிட்டார். நான், குமாரசாமியை பார்த்து கேட்கிறேன், நீங்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்?.



    உங்கள் கட்சி 149 தொகுதிகளில் டெபாசிட் இழந்துவிட்டது. இதுபற்றி உங்களுக்கு தெரியுமா?. மக்கள் உங்களை நிராகரித்துவிட்டனர். சித்தராமையா தயவால் நீங்கள் முதல்-மந்திரி ஆகி இருக்கிறீர்கள். ஆனால் பதவி ஏற்பு விழாவில் சித்தராமையாவை, நீங்கள்(குமாரசாமி) அவமானப்படுத்தி விட்டீர்கள். இது அவர் சார்ந்துள்ள குருப சமூக மக்களை அவமானப்படுத்தியது போல் ஆகும். இது உங்களுக்கு நல்லதல்ல.

    மோடியின் வெற்றியை தடுத்துவிட்டதாக, நீங்கள் சொல்கிறீர்கள். வெறும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள உங்களுக்கு(குமாரசாமி), பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இருக்கிறதா?. உங்களுக்கு அதிகார திமிர். அந்த அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டது. அதனால் தான் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் பற்றி பேசுகிறீர்கள்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Kumaraswamy #Yeddyurappa

    முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள குமாரசாமி, கர்நாடக சட்டசபையில் நாளை (வெள்ளிக்கிழமை) மெஜாரிட்டியை நிரூபிக்கிறார். முன்னதாக சட்டசபை சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட உள்ளார். #kumarasamy
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. அதாவது ராஜராஜேஸ்வரி நகர், ஜெயநகர் 2 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 222 தொகுதிகளுக்கு வாக்கெடுப்பு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 15-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதாவது அதிகபட்சமாக பா.ஜனதா கட்சி 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேப் போல் காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி 38 இடங்களையும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றனர். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதேப் போல் காங்கிரஸ் ஆதரவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்தது. இந்த கூட்டணிக்கு 2 சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இக்கூட்டணியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.

    இருப்பினும் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய்வாலா அழைப்புவிடுத்தார். அதன்படி அக்கட்சியின் மாநில தலைவரான எடியூரப்பா கடந்த 17-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் வழங்கினார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 19-ந்தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 111 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால் அக்கட்சி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டின.

    ஆனால் வாக்கெடுப்பின் போது, பா.ஜனதாவுக்கு உறுப்பினர்கள் பலம் 104 ஆக மட்டுமே இருந்ததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 3 நாளில் பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி சார்பில் குமாரசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதைதொடர்ந்து அவர் நேற்று மாலை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் குமாரசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் வழங்கினார்.



    இருப்பினும் குமாரசாமி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா மீண்டும் குதிரை பேரம் நடத்தி இழுக்கும் என கருதி, நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து காட்டுவேன் என்று அறிவித்தார்.

    இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) கர்நாடக சட்டசபையில் குமாரசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க உள்ளார். இதையொட்டி சட்டசபையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது, சபாநாயகர் தான். இதனால் நாளை காலை சட்டசபை கூடியதும் முதல் பணியாக சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    இந்த கூட்டணி அரசு சார்பில் சபாநாயகர் பதவி காங்கிரசுக்கும், துணை சபாநாயகர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ரமேஷ்குமார் நிறுத்தப்படுவதாக அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இதனால் சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    அதேப் போல் துணை சபாநாயகராக ஜனதாதளம் (எஸ்) சார்பில், ஏ.டி.ராமசாமிக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு முடிவடைந்ததும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே கட்சி தாவுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏ.க்கள் கடந்த 16-ந்தேதி முதல் ஓட்டல்களில் தங்கவைத்து பாதுகாத்து வரப்படுகிறார்கள்.

    ஆனால் அந்த எம்.எல்.ஏ.க்கள், தங்களது குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் காங்கிரஸ் தலைவர்கள் மீது எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஓட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு அவர் களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. #kumarasamy
    நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கூட்டணி ஆட்சியின் தலைமை பொறுப்பை நான் ஏற்கிறேன். கூட்டணி ஆட்சியில் செயல்பட ஒரு வரைமுறை இருக்கிறது என்பதை நான் அறிவேன். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, கூட்டணி கட்சியுடன் ஆலோசித்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனால் எங்கள் 2 கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களையும் செயல்படுத்த வேண்டும்.

    கர்நாடகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்திய பிறகு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த விஷயத்தில் நான் எனது நிலையை மாற்றிக்கொள்ளும் பேச்சுக்கே இடம் இல்லை. கர்நாடக நிதி நிலையில் சில பிரச்சினைகள் உள்ளன. மாநிலத்தின் பொருளாதார நிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வோம்.



    பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மாட்டோம் என்று நான் கூறியதாக தகவல் வெளியானது. இது தவறானது. நாங்கள் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம். அதனால் விவசாயிகள் அவசரப்பட்டு தவறான முடிவு எடுக்கக்கூடாது. விவசாயிகளுக்கு உதவ அரசு தயாராக உள்ளது.

    விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். விவசாயியின் மகனான நான் அவர்களுக்கு சேவையாற்றுவேன். விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதே இந்த கூட்டணி ஆட்சியின் கடமை. என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்று யாரும் கருதக்கூடாது. 6½ கோடி கன்னட மக்களுக்கு சொந்தமானவன். நான் பொதுமக்களுக்கு சேவையாற்றுபவன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். 
    பெங்களூரு வந்த தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள குமாரசாமிக்கு சந்திரசேகரராவ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
    கர்நாடக புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று(புதன்கிழமை) பதவி ஏற்கிறார். இந்த விழாவில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அவருக்கு முக்கியமான அரசு அலுவல் பணி இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று பெங்களூரு வந்து தேவேகவுடாவைவும், குமாரசாமியையும் நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள குமாரசாமிக்கு சந்திரசேகரராவ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைவதற்கும் சந்திரசேகரராவ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சிறிது நேர உரையாடலுக்கு பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். 
    பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் கோலாகல விழாவில், கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்கிறார். துணை முதல்-மந்திரியாக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பதவி ஏற்கிறார். #Kumaraswamy #KarnatakaChiefMinister
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது. இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் கவர்னர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்தார்.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கடந்த 19-ந் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து, மந்திரி பதவி பங்கீடு தொடர்பாக காங்கிரசுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதன்படி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவி உள்பட 12 மந்திரி பதவியும் மற்றும் துணை சபாநாயகர் பதவியும், காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி உள்பட 22 மந்திரி பதவியும் மற்றும் சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராக பதவி ஏற்பார்.

    இந்த தகவலை கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

    கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4 மணிக்கு கோலாகலமாக நடக்கிறது. இதற்காக சுமார் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விதான சவுதா மற்றும் கர்நாடக ஐகோர்ட்டு கட்டிடத்திற்கு மத்தியில் உள்ள சாலையில் சுமார் 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் அமர்ந்து பதவி ஏற்பு விழாவை காண வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதான சவுதாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவுக்கு இன்று முக்கியமான அரசு அலுவல் பணி இருப்பதால் நேற்றே அவர் பெங்களூரு வந்து தேவேகவுடாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

    நாடு தழுவிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் நோக்கத்தில், குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வதன் மூலம் பா.ஜனதாவுக்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையில் ஒரு பலமான அணி அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதனால் குமாரசாமி பதவி ஏற்பு விழா, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 
    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் முக ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கருதி கலந்து கொள்கிறார் என வைகோ கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Kumaraswamy #MKStalin #Vaiko
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இனி நாடாளுமன்ற தேர்தலில் எந்த வெற்றியும் பெற முடியாது.

    அரசியல் நாகரீகம் கருதி முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மு.க. ஸ்டாலினை அழைத்து இருக்கிறார். அவர் பங்கேற்பார் என்று நினைக்கிறேன்.



    கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழ கத்துக்கான காவிரி நீர் பிரச்சினையில் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

    ஒரு திருமண நிகழ்ச்சி, பதவி ஏற்பு நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொள்வதையும் காவிரி நீர் பிரச்சினையையும் சம்பந்தப்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElections2018 #Kumaraswamy #MKStalin #vaiko
    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள இருக்கிறார். #Kumaraswamy #KarnatakaCM #MKStalin #PinarayiVijayan

    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    அதன் அடிப்படையில் நாளை (23-ந்தேதி) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 



    அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று பினராயி விஜயனும், ஸ்டாலினும் நாளை பெங்களூரு சென்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். 

    இதுதவிர காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. #Kumaraswamy #KarnatakaCM #MKStalin #PinarayiVijayan
    கர்நாடக மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுப்பேன் என முதலமைச்சராக பதவியேற்க உள்ள குமாரசாமி தெரிவித்தார். #KarnatakaCM #Kumaraswamy
    ஹசன்:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி நாளை மறுநாள் முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி இந்த  கூட்டணிக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    ஆட்சியமைக்கும் பணியில் தீவிரமாக உள்ள குமாரசாமி இன்று ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடக மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சி கொடுப்போம் என்றார்.

    ‘முதலமைச்சர் பதவி என்பது இந்த நேரத்தில் மிகவும் சவாலான பதவி. மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நான் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியைக் கொடுப்பதை உறுதி செய்யும் வகையில், எங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்’ என குமாரசாமி தெரிவித்தார்.

    முதலமைச்சர் பதவியை ஜேடிஎஸ் கட்சியும் காங்கிரசும் பகிர்ந்து கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு கட்சிக்கும் 30 மாதங்கள் முதலமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும் தகவல்கள் வெளியான நிலையில் குமாரசாமியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #KarnatakaCMRace #KarnatakaCM #Kumaraswamy
    கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழா, பாரதிய ஜனதாவுக்கு எதிரான தேசிய மற்றும் மாநில அளவில் 11 முக்கிய கட்சிகளை ஒன்றிணைக்கும் இடமாக அமைந்துள்ளது. #Karnataka #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகா முதல்-மந்திரியாக நாளை மறுநாள் பதவியேற்க உள்ள குமாரசாமி, அந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை அழைத்து வருகிறார். அவரது அழைப்பை ஏற்று பல்வேறு கட்சித் தலைவர்கள் 23-ந்தேதி பெங்களூரில் ஒன்று கூட உள்ளனர்.

    குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகிய 4 முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். உத்தரபிரதேசத்தில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள உள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் போனில் பேசிய குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைத்தார். அதை ஏற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின் 23-ந்தேதி பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    தேசிய மற்றும் மாநில அளவில் 11 முக்கிய கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ளன. அந்த 11 கட்சிகளையும் நாளை மறுநாள் ஒரே இடத்தில் திரள செய்யும் முயற்சிகளை குமாரசாமி எடுத்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றன. பதவியேற்பு விழா முடிந்ததும் 4 மாநில முதல்-மந்திரிகள், 11 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு குமாரசாமி விருந்து அளிக்க உள்ளார்.

    இதன் காரணமாக குமாரசாமி முதல்வராக பதவியேற்கும் விழா பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாகவும் மாறியுள்ளது. 23-ந்தேதி பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து பேச திட்டமிடப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதால் 23-ந்தேதி நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மாநில கட்சிகளை தனது அணியில் இடம்பெற செய்ய காங்கிரஸ் முயன்று வருகிறது. ஆனால் சில மாநில கட்சிகள் தொடர்ந்து காங்கிரசை எதிர்த்தப்படி உள்ளன.


    பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க அந்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. குறிப்பாக மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் இருவரும் மூன்றாவது அணி திட்டத்தை முன்னெடுத்து சென்றபடி உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு, சரத் பவார் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் 3-வது அணிக்குள் இழுக்க அவர்கள் பேசியபடி உள்ளனர். இந்த நிலையில் பெங்களுரில் ஒன்று சேரும் 11 எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஓரணியில் திரட்ட சிலர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கு எதிரான இந்த முயற்சியில் வெற்றி கிடைத்தால் அது தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடுவதாக இருக்கும். #Karnataka #Kumarasamy
    காவிரிப் பிரச்சினையில் குமாரசாமி யோசனை மிகவும் ஆபத்தானது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #CauveryManagementBoard #Ramadoss #Kumaraswamy

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசும், கர்நாடக அரசும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தான் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று கர்நாடகத்தின் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார். குமாரசாமியின் இந்த யோசனை மிகவும் ஆபத்தானது. காவிரியில் தமிழகத்திற்கு உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.

    காவிரிப் பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.


    இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தினால் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டு விடும். எனவே, காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று குமாரசாமி நினைத்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தும் என்று அறிவிக்க வேண்டும்.

    ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்றால் தமிழகமும், கர்நாடகமும் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறுவது உச்சநீதி மன்றம் போன்ற சட்ட அமைப்புகளையும், தமிழக மக்களையும் முட்டாள் களாக்கும் செயலாகும்.

    காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வி‌ஷயத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழகத்திற்கு முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்றாலும் கூட இன்றைய நிலையை எட்ட தமிழகம் பட்ட பாடுகளும், நடத்திய சட்டப் போராட்டங்களும் ஏராளமானவை.

    காவிரி சிக்கல் எந்த இடத்தில் தொடங்கியதோ அந்த இடத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி சிக்கலை பேசித்தீர்க்க வேண்டும் என்று கர்நாடகத்தின் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப்பிரச்சனையின் ஆழம் புரியாமல் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறிவருகின்றனர். இந்த யோசனைகள் காவிரிப் பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலாக்கி விடும்.

    எனவே, காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக் கூடாது. மாறாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #CauveryManagementBoard  #Ramadoss #Kumaraswamy

    ×