search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நளினி"

    ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் `அய்யா உள்ளேன் அய்யா' படத்தின் முன்னோட்டம்.
    சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை, வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் தற்போது "அய்யா உள்ளேன் அய்யா" என்ற படத்தை இயக்குகிறார்.

    இந்த படத்தில் அவரது பேரன் கபிலேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு எதிர்மறை நாயகனாக அவரது தம்பி மகன் பால சபரீஸ்வரன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சந்துரு, இசை - மகேந்திரன், தயாரிப்பு - வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஈரோடு செளந்தர்.


    படம் பற்றி இயக்குநர் கூறியதாவது,

    10-ஆம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருப்பான் என்பதால் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.

    மாணவர்களின் எதிர்காலம் என்பது 10-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு கால கட்டம் தான். அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக இது உருவாகிறது என்றார். படப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்கிறது.
    சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.

    பழனி:

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.

    இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தபால் அட்டையில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி பழனி தலைமை தபால் அலுவலகம் முன்புள்ள பெட்டியில் போட்டனர்.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழக கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது என்றார்.

    இதேபோல தேனியிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கவர்னருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார். #RajivGandhiAssassinationcase #BanwarilalPurohit
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-

    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசு 3 முறை அறிவித்த பிறகும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.



    28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அறிவு (பேரறிவாளன்) பற்றிய உண்மைகள் வெளிவந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திருத்தி எழுதிவிட்டேன். அதை அப்படியே எழுதியிருந்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பார் என பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    அரசு இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது. உன் மகனை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் என முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விடுதலை செய்ய வேண்டும். கவர்னர் உடனடியாக கையெழுத்திட்டு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முறையாவது நல்லது நடக்க வேண்டும் என கண் கலங்கினார். அற்புதம்மாள் #RajivGandhiAssassinationcase #BanwarilalPurohit


    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். #RajivMurderCase
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் கைதிகளாக சிறைகளில் உள்ளனர். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தீர்மானம் இயற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்ககோரி தமிழக கவர்னருக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்படாமல் அப்படியே உள்ளது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். அதில், ‘எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து ஆவணங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியாக மனு கொடுத்தோம். அந்த மனுவை விரைவாக பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் இன்று விசாரித்தனர்.

    மனுதாரர் சார்பில் வக்கீல் புகழேந்தி ஆஜராகி வாதிட்டார். மனு மீதான விசாரணையை வருகிற 27ந்தேதி (சனிக்கிழமைக்கு) தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.  #RajivMurderCase
    மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NaliniParole #RajivAssassination
    சென்னை:

    ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக் கோரிய மனுவுக்கு ஜூன்11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து, அவசரமாக பரோல் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #NaliniParole #RajivAssassination
    இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜீவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார். #RajivCase #Nalini #EdappadiPalaniswami
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், நளினி ஆகியோர்  உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.



    இந்நிலையில், இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜிவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள நளினி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

    இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார். #RajivCase #Nalini #EdappadiPalaniswami
    முருகன், நளினி உண்ணாவிரதத்தை நேற்று கைவிட்ட நிலையில் இன்று அவர்களது சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலைக்காக போராடி வருகின்றனர். இதுவரை விடுதலை கிடைக்காததால் முருகன் கடந்த 7-ந் தேதி முதல் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கணவருக்கு ஆதரவாக நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

    சிறை விதிகளை அவர்கள் மீறியதால், பார்வையாளர்களை சந்திப்பது உள்பட சிறை சலுகைகள் அவர்களுக்கு ரத்து செய்யப்பட்டது. தொடர் உண்ணாவிரதம் அவர்களை சோர்வடையச் செய்தது. டாக்டர்கள், ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்தனர். அவ்வப்போது ஜெயில் அதிகாரிகளும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நளினியை சந்திக்க அவரது தாயார் பத்மா வேலூர் சிறைக்கு வந்தார். நளினி, முருகனுக்கு சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் நளினியை அவர் சந்திக்க முடியவில்லை. அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

    இதையடுத்து நேற்று மாலை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, முருகன் மற்றும் நளினியிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். சிறைக்குள் உள்ள கோவில் பூட்டை சோதனை என்ற பெயரில் காவலர்கள் உடைக்கக்கூடாது என்ற முருகனின் கோரிக்கையையும், பரோல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நளினியின் கோரிக்கையையும் ஏற்கப்பட்டதாக தெரிகிறது.

    அதன்பின் முருகன் உண்ணாவிரதத்தை இளநீர் அருந்தி கைவிட்டார். அதைத்தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினி-முருகன் சந்தித்து வருகின்றனர். உண்ணாவிரதத்தை நேற்று கைவிட்ட நிலையில் இன்று நளினி, முருகன் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இது தற்காலிக நிறுத்தம் மீண்டும் அவர்கள் சந்திப்பு நடைபெறும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நள்னியை சந்திக்க தாய் பத்மாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
    வேலூர்:

    சிறை விதிகளை மீறி முருகன்-நளினியும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் நளினியின் தாய் பத்மா (80). இன்று நளினியை சந்திக்க வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு வந்தார். அப்போது ஜெயில் அதிகாரிகள் நளினியை சந்திக்க தடை இருப்பதால் அவரை பார்க்க முடியாது என்று கூறினர்.

    ஜெயில் அதிகாரிகள் நளினியை பார்க்க அனுமதிக்காததால் பத்மா ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதேபோல் முருகனை பார்க்கவும் ஜெயிலுக்கு சென்ற அவர் அங்கும் அனுமதியில்லாததால் திரும்பி சென்றார்.

    வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனை காப்பாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி தாயார் பத்மாவதி மனு தாக்கல் செய்துள்ளார். #nalinimurugan #rajivgandhi #vellorejail
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.

    7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

    சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மாவதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    நளினி தாயார் பத்மாவதி தாக்கல் செய்த மனு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற கோரி தமிழக அரசு, டிஜிபி, சிறைத்துறையிடம் நளினி தயார் பத்மா ஏற்கனவே மனு அளித்துள்ளார்.  #nalinimurugan #rajivgandhi #vellorejail 
    வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Nalini #Murugan
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    விடுதலை செய்யக்கோரி முருகன் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நளினி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து விட்டனர்.

    ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் நளினியின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சிறை விதிகளின்படி கைதி உணவு உண்ணாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு உண்ணாமல் இருந்தால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்படும். அதன்படி முருகன், நளினி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இனி தனது வக்கீலை தவிர பிற பார்வையாளர்கள் உறவினர்களை சந்திக்க முடியாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    15 நாட்களுக்கு ஒருமுறை நளினி- முருகன் சந்தித்து பேசுவதையும் ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஜெயிலில் உள்ள அங்கன்வாடியில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை 2 பேரும் வாங்க மறுத்து விட்டனர்.   #Nalini #Murugan

    வேலூர் ஜெயிலில் பணியாற்றி வந்த பெண் காவலாளி செல்போன் விவகாரத்தில் சிக்கியிருப்பதை தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கும் உதவினாரா? என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    சென்னை புழல் ஜெயிலில் கைதிகள் கு‌ஷன் படுக்கை வசதியுடன் டி.வி., ரேடியோ, செல்போன்கள் என சுக போகமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    புழல் ஜெயிலை தொடர்ந்து வேலூர் மத்திய ஜெயிலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. வழக்கமாக ஆண்கள் ஜெயிலில் தான் கைதிகளிடம் செல்போன், கஞ்சா சிகரெட் பாக்கெட்டுகள் சிக்கும். சமீப காலமாக பெண்கள் ஜெயிலில் செல்போன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியுள்ளன.

    இங்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி உள்பட முக்கிய தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலுக்குள் காவலர்கள் உள்பட அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    2ம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் திலகவதி (55). இவர், கடந்த சில மாதங்களாக கேன்டீன் பொறுப்பை கவனித்து வந்தார்.

    கடந்த 15-ந் தேதி காலை பணிக்கு வந்த திலகா, காய்கறிகளை வாங்கி கொண்டு கேன்டீனுக்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் இருந்து மின்சாதன பொருளின் வைபரட் சத்தம் கேட்டது.

    2-வது நுழைவு கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயில் ஊழியர் விஜயா, திலகாவை சோதனையிட்டார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் செல்போன் ஒன்று இருந்தது. செல்போன் வைபரட் மோடில் வைத்துள்ளார். அழைப்பு வந்ததால் திலகா சிக்கி கொண்டார்.

    இதுபற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் திலகா மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து திலகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு போன் கொடுத்து உதவியது அம்பலமாகியுள்ளது.

    கடந்த 2010ம் ஆண்டு ஜெயிலில் செல்போன் வைத்திருந்ததாக ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது சிக்கிய பெண் காவலர், எந்தெந்த கைதிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வந்தார்.

    அவர்கள் வெளியில் யார் யாரிடம்... என்னென்ன பேசினார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் களமிறங்கியுள்ளனர். மேலும் நளினிக்கும் செல்போன் கொடுத்து திலகா உதவினாரா? எனவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திலகவதியின் போனில் இருந்த சிம்கார்டில் உள்ள எண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, சிறைத்துறை விதியை மீறி செல்போன் எடுத்து சென்ற குற்றத்திற்காக காவலர் திலகாவை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் புழல் ஜெயிலை போல் வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலிலும் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என அதிரடியாக ஆய்வு நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
    கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். #RajivGandhiCase #Nalini
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை குற்றவாளிகளை தமிழக அரசே விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ராஜிவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை அவசர கூட்டம் நாளை நடக்கிறது. இதில் 7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கிறார்கள்.

    வேலூர் ஜெயிலில் உள்ள நளினி அவரது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நேற்று வாபஸ் பெற்றார்.

    இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் நளினி அவரது கணவர் முருகன் சந்திப்பு இன்று காலை நடந்தது. இருவரும் விடுதலை தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் அவர்கள் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது.

    காலை 8.5 மணி முதல் 9.5 மணி வரை சந்திப்பு நடந்தது. காட்பாடி டி.எஸ்.பி. அலெக்ஸ் தலைமையிலான போலீசார் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். சந்திப்புக்கு பின் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு நளினி மற்றும் முருகன் உள்ளிட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், முதல்வர் பழனிசாமி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் நளினி மற்றும் முருகன் நன்றி தெரிவித்தனர்.

    கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக உள்துறை செயலருக்கும், சாந்தன் தமிழக முருல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.#RajivGandhiCase #Nalini
    ×