search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். #Kamalhassan

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு 159 மீனவர்களுக்கு மீன் பிடி வலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் உறவினர்கள் தான். குறிப்பாக வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வலுவான உறவினர்கள். எனக்கு மீனவர்களின் மீன்பிடி தொழிலில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தெரியும்.

    கடந்த காலத்தில் நான் நடித்த கடல் மீன்கள் படத்திற்காக வலை விரித்து மீன் பிடிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்தவன். எனவே நான் மீனவர்களின் சீடன். சினிமாவிற்காக மட்டுமல்ல. தங்கியிருந்த அனைத்து நாட்களிலும் நானே வலை விரித்து மீன் பிடித்து அவர்களது கஷ்டங்களை நன்கு அறிந்தவன்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. அரசு கட்டங்கள் சேதமடைந்த நிலையில் பிரிக்கப்பட்ட காக்கா கூடு போல் உள்ளன. மேலும் பல இடங்களில் மரங்களும் அகற்றப்படாமல் உள்ளன.

    புயல் நிவாரண பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இந்த செயல் வேதனை அளிக்கிறது. புயலால் பாதித்த மக்களுக்குஅரசு என்ன செய்தது என்று தெரியவில்லை.

    வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கு கட்சி சார்பில் நாங்கள் கொடுப்பது கொடையோ, தர்மமோ அல்ல. நாங்கள் பட்ட கடன் ஆகும்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுக்கப்படும் பொருட்களும், நிவாரண உதவிகளும், நலத்திட்ட உதவிகளும் நேர்மையான முறையில் சம்பாதித்து வரிசெலுத்தி வெள்ளை பணத்தில் நான் (கறுப்பு பணம் அல்ல) உதவிகள் செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வதாராத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இது தேர்தலுக்காக கூறப்படும் செய்தி அல்ல. மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் நடிகை ஸ்ரீபிரியா, மாவட்ட பொறுப்பாளர் ஆனாஸ், வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், வானவன்மாதேவி மீனர கிராம பஞ்சாயத்தார்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். #Kamalhassan

    தேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். #Kamalhassan

    திருவாரூர்:

    திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அருண்(திருவாரூர் தெற்கு), செய்யது அனாஸ்(நாகை தெற்கு), சதாசிவம்(தஞ்சை தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செயற்குழு உறுப்பினர்கள் நடிகை பிரியா ராஜ்குமார், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் நல்லவர்களை உருவாக்கியுள்ளது. அதுபோல் கெட்டவர்களை உருவாக்கியுள்ளது. வாரிசு அரசியலை உருவாக்கித் தந்ததும் இந்த திருவாருர். எனவே குடும்ப அரசியலை, வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே திருவாரூரில் இந்த கூட்டத்தை நடத்தி உள்ளோம்.

    இன்றைக்கு பலர் மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக கூறுகிறார்கள். அது மெகா கூட்டணி தானா என்பதை இங்கிருக்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இங்கு வந்திருக்கக் கூடிய கூட்டம் பிரியாணி பொட்டலத்திற்கும் குவார்ட்டர் பாட்டிலுக்கும் வந்ததல்ல. அதுபோல காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட மாட்டோம் என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

    கஜா புயலுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க நிதி இல்லை என்றவர்கள் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் இலவசம் என்கிறார்கள். இப்பொழுது எங்கிருந்து பணம் வந்தது. ஆபத்துக்கு உதவாத அந்த பணம் நமக்கு எதற்கு? இன்றைக்கு 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாக சொல்கிறார்கள். இது உண்மை என்று ஒத்துக் கொண்டால், 60 லட்சம் குடும்பங்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வைத்திருப்பது யாருடைய குற்றம்.

    60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளுவது என்றால் அதற்கு 30 ஆண்டு காலம் பிடித்திருக்கும். அப்படி என்றால் இந்த இரண்டு கட்சிகளுமே மக்களை வறுமைக்கோட்டில் கீழே தள்ளுவதில் தான் குறியாக இருந்து இருக்கிறது. இப்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த இரண்டு கட்சிகளையும் கீழே தள்ள வேண்டும் என்பதுதான். அதைத்தான் மக்கள் நீதி மையம் செய்து கொண்டிருக்கிறது.

    நாம் தனித்து போட்டியிடுவது நல்லதல்ல என்று சிலர் திடீர் அக்கறை காட்டுகிறார்கள். நாங்கள் எங்களது கொள்கையில் தெளிவாக இருக்கிறோம்.

    இந்திய நாட்டின் அரசியலில் தமிழரின் பங்கு இருக்க வேண்டும். பிரதமர் யார் என்பதை காட்டும் அடையாளமாக தமிழகம் திகழ வேண்டும். அதற்காகத்தான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க உள்ளோம்.

    அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தான் நாம் களமிறங்கியுள்ளோம். என்னைப் பார்த்து டுவிட்டரில் அரசியல் நடத்துகிறார்கள் என்கிறார்கள். இதோ இந்த மேடையில் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருப்பது டுவிட்டர் அரசியலா? களத்திற்கு வந்து போராடுவதற்குத் தயாராக இருக்கிறோம்.

    நாங்கள் யாரோடும் தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக குதிரை பேரம் பேச மாட்டோம். கூட்டணி என்பது ஏமாற்று வேலை. இதனை தற்போதைய அரசியல் நிலவரங்கள் நமக்கு உணர்த்துகிறது. நேர்மையான அரசியலை உருவாக்குவதே நம்முடைய கடமை.

    காவிரி டெல்டா மாவட்டங்களை பொருத்த வரை இப்பகுதியினை பசுமை வேளாண் பகுதி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழக மக்களின் நலன் பாதுகாக்கப்படுவது தான் மக்கள் நீதி மையத்தின் முக்கிய குறிக்கோளாகும். தமிழகத்தை மேம்பாடு செய்வதற்கு டெல்லி குறுக்கே நிற்குமேயானால் டெல்லியை ஆள்பவர்கள் யார் என்பதை நாம் தீர்மானித்து மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு இன்னும் 45 நாட்கள் தான் உள்ளது. எனவே அதற்கான முடிவுகளை நீங்கள் இன்றைக்கு தீர்மானிக்க வேண்டும். இந்த நாட்டை அனைவரும் பாதுகாப்போம். நாளை நமதே.

    இவ்வாறு அவர் பேசினார். #Kamalhassan

    தேர்தல் நெருங்கிவரும் நேரம் என்பதால் சிலர் பண மூட்டையுடன் உங்களை தேடிவருவார்கள், எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK
    ஈரோடு:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

    அதன்படி டி.டி.வி. தினகரன் ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதிக்கு வந்துபொது மக்களை சந்தித்துபேசினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,-

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்திய நாட்டின் பிரதமரை தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள். எனவே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் நெருங்கிவரும் நேரம் என்பதால் சிலர் பண மூட்டையுடன் உங்களை தேடிவருவார்கள். உஷாராக இருங்கள்.



    தமிழகத்தில் முன்னேற்றம் தேவை. கல்வி, வேலை வாய்ப்பை பெற நீங்கள் (மக்கள்) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran #AMMK
    தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராக, முதல் திருநங்கை வேட்பாளர் களமிறங்கி உள்ளார். #Thailand #Transgender #PrimeMinister
    பாங்காக்:

    தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் (வயது 52) என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வரை பினித் காம்ப்ரிங் என்ற பெயரில் ஆணாக இருந்து 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருந்த இவர், பத்திரிகையாளராகவும், தொழிலதிபராகவும் இருந்தார். கால்பந்து ரசிகர் கூட்டமைப்பை நிறுவி தாய்லாந்து விளையாட்டு துறையிலும் புகழ்பெற்று விளங்கினார். பின்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரையும் பவுலின் என மாற்றிக்கொண்டார்.

    தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராகவும், முதல் திருநங்கை வேட்பாளராகவும் களமிறங்கி இருக்கும் பவுலின் காம்ப்ரிங் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார். தான் வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்த தலைமுறையிலாவது திருநங்கை ஒருவர் நாட்டின் தலைவராக வருவார் என்று அவர் கூறினார். #Thailand #Transgender #PrimeMinister
    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் தமாகா தேர்தலை சந்திக்கும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார். #GKVasan

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது-

    ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கோவை மாவட்டத்தில் முக்கிய தொழிலான தென்னை விவசாயம் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மத்திய அரசு பட்ஜெட்டில் சிறு,குறு விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் தொகையை உயர்த்திவழங்கவேண்டும், சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவேண்டும். பொள்ளாச்சிக்கு கூடுதலாக ரெயில்களை இயக்கவேண்டும்.

    2017-ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டாலும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என புகார் உள்ளது. விடுபட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கவேண்டும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன கிடங்கு அமைக்கவேண்டும். பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் தென்னைநார் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கிவருகின்றன. வறட்சியால் தற்போது மூலப்பொருட்கள் கிடைக்காமல் தென்னைநார் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.

    எனவே தென்னை நார் உற்பத்தியாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டிகளை தள்ளுபடிசெய்யவேண்டும். வால்பாறை தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி கூலியை ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி அமைத்துத்தான் தேர்தலை சந்திக்கும் நிலை உள்ளது. ஆகவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கும்.

    ஆனால், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தொண்டர்கள் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும். அது மக்கள் விரும்பும் கட்சியாக இருக்கும். அ.தி.மு.க. அரசு தனது செயல்பாட்டை இன்னும் உயர்த்தவேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார். #GKVasan

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Kushboo #Congress

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்புவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் குழு உறுப்பினர், பிரசார குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    கூடுதல் பொறுப்புகளை ஏற்றுள்ள குஷ்பு தேர்தல் பிரசார வியூகங்களை எவ்வாறு வகுக்கபோகிறார் என்பது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பிரசார வியூகம் என்ன என்பதை தனிப்பட்ட முறையில் என்னால் எதுவும் சொல்ல முடியாது அதற்காக எங்கள் குழு கூடி ஆலோசித்து முடிவுசெய்யும்.

    காங்கிரசை பொறுத்த வரை இத்தனை ஆண்டு காலம் நாட்டிற்கு என்னென்ன செய்தது என்பதை தண்டோராபோட்டு விளம்பரம் தேடியது கிடையாது. ஏனெனில் அது எங்கள் கடமை. ஆனால் பா.ஜனதா கட்சி பொய், பொய், பொய் எதற்கெடுத்தாலும் பொய். சொல்லி மக்களை ஏமாற்ற தண்டோராபோட்டு விளம்பரப்படுத்துகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்த போது மோடி எதிர்த்தார். ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தான் சாமானிய மக்களை காப்பாற்றியது. இப்போது அந்த திட்டத்திலும் சுமார் 30 முதல் 35 நாட்கள் வரை மட்டுமே வேலை கொடுத்து விட்டு மிகப்பெரிய முறைகேடு செய்து வருகிறார்கள்.

    ஆட்சிக்கு வந்த போது ஊழல் இல்லாத அரசை தருவேன். வறுமையை ஒழிப்பேன் என்று சொன்னாரே செய்தாரா? அடிமட்ட மக்களுக்கு உருப்படியான நல்ல திட்டங்கள் ஏதாவது செய்தாரா? ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்களுக்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் ரூ. 6000 பெரிதாக தெரியாது என்று மோடி காங்கிரஸ் தலைவர்களை விமர்சிக்கிறார்.

    காந்தி முதல் நேரு தொடங்கி ராஜீவ் காந்தி வரை பல தலைவர்கள் தங்கள் சொகுசான வாழ்க்கையையும், உயிரையும் நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள். ஆனால் காந்தியை கொன்ற கோட்சேவை மகாத்மா என்று நீங்கள் தான் கொண்டாடுகிறீர்கள்.

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் மோடி அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது 16 கோடி மக்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்து மீட்டோம். ஆனால் இப்போது வெறும் 56 இன்ஞ் நெஞ்சு இருப்பதாக மார்தட்டினால் போதாது. நாங்கள் உண்மையைத்தான் பேசுவோம். மக்களிடம் உண்மையைத்தான் சொல்வோம்.

    இன்று முத்ரா வங்கி திட்டம் என்று மூலைக்கு மூலை பேசுகிறீர்களே. இந்திரா காந்தி காலத்திலேயே வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டது. நீங்கள் சொல்லும் டிஜிட்டல் இந்தியா என்பதும், ராஜீவ் கண்ட கனவும் அத்தனையும் காங்கிரஸ் விதை போட்டு வளர்த்தது. நீங்கள் இப்போது வெறுமனே ரிப்பன் வெட்டி கைதட்டு பெறுகிறீர்கள்.

    அன்னிய நேரடி ஒதுக்கீடு பற்றி காங்கிரஸ் ஆட்சியின் போது பேசப்பட்டதாகவும், குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம். என் பிணத்தின் மீது தான் அது முடியும் என்றும் கூறினார். ஆனால் இப்போது செய்வது என்ன? 100 சதவீதம் அன்னிய முதலீட்டை தானே அனுமதிக்கிறார்.

    தான் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் மாற்றத்தை தருவேன் என்றார். 5 வருடமாகியும் எந்த மாற்றமும் தெரியவில்லையே. ஏதோ சுதந்திரம் கிடைத்தது போல் பண மதிப்பு நடவடிக்கையையும், ஜி.எஸ்.டி வரித் திட்டத்தையும் நள்ளிரவில் அறிவித்தார். அதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றீர்கள். எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது என்ற புள்ளி விவரத்தை ஏன் வெளியிட மறுக்கிறீர்கள். உங்கள் ஏமாற்று திட்டங்களை எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

    எங்களுடைய பிரசாரம் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி மட்டுமல்ல கூட்டணி கட்சிகளின் தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். என்னை பொறுத்தவரை வெளிப்படையாக பேசுவேன். சரி என்றால் சரி என்பேன். தவறு என்றால் தட்டிக்கேட்கவும் தயங்கமாட்டேன்.

    திருநாவுக்கரசருக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. கட்சியில் சில செயல்பாடுகள் சரியாக படவில்லை. அதைத்தான் நான் கூறினேன். இப்போதும் ஒரே குழுவில்தான் நாங்கள் பணியாற்றப்போகிறோம். தேர்தலில் நான் போட்டி போடுவேனா என்பது தெரியாது. யார் போட்டியிட வேண்டும். யார் சரியான வேட்பாளர் என்பதை எல்லாம் ராகுல்காந்திதான் முடிவு செய்வார்.

    நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பது பற்றி எல்லாம் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்க வில்லை. அந்த பணிகளெல்லாம் முடிந்த பிறகுதான் எந்த தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பது பற்றி ராகுல்காந்தி முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்குரிமை பெற்றவர்கள் தேர்தலில் ஓட்டு போடாவிட்டால் பின்னர் வருந்த நேரிடும் என வானொலியில் பிரதமர் மோடி கூறினார். #PMModi #Vote #MannKiBaat
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன் கீ பாத்’ எனப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

    அந்தவகையில் நேற்று ஒலிபரப்பான மன் கீ பாத் உரையில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் தேர்தல் கமிஷனின் அயராத பணிகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கடந்த 25-ந் தேதி வாக்காளர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், முதல் முறை வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கி இருந்தார்.

    இது தொடர்பாக மோடி கூறியதாவது:-

    21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர். தேசத்தின் கடமைகளில் தோள்கொடுக்கும் வாய்ப்பை எதிர்கொள்ள இருக்கின்றனர். தேச கட்டுமானத்தின் பங்குதாரர்களாக பயணத்தை தொடங்க உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட கனவை தேசத்தின் கனவுடன் இணைப்பதற்கான நேரம் வந்திருக்கிறது.

    வாக்களிக்க தகுதி வாய்ந்த இளம் சமூகத்தினர் அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் ஆவதன் மூலம் வாக்குரிமையை பெறுகிறோம். இது, நமது வாழ்க்கை பயணத்தின் முக்கியமான சடங்குகளில் ஒன்று என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

    அதேநேரம் வாக்களிப்பது புனிதமான கடமை என்ற உணர்வும் நம்மிடம் தானாகவே வளர வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் ஒருவர் வாக்களிக்க முடியவில்லை என்றால், அது ஒருவரை காயப்படுத்தும். வாக்குரிமை பெற்றவர்கள் ஓட்டு போடாவிட்டால் பின்னர் வருந்த நேரிடும்.

    எனவே வாக்களிக்கும் கடமையின் முக்கியத்துவத்தை மக்கள் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்போல வாக்காளர் பதிவு மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் முக்கிய பிரபலங்களும் இணைந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் தேர்தல் நடத்தப்படுவது உலக நாடுகளுக்கு பிரமிப்பாக இருக்கிறது. தேர்தல் கமிஷன் மற்றும் அதன் திறன்வாய்ந்த செயல்பாடுகளால் ஒவ்வொரு குடிமகனும் பெருமை அடைகின்றனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் தனது வாக்குரிமையை தேர்தல் கமிஷன் உறுதி செய்கிறது. இதுதான் நமது ஜனநாயகத்தின் அழகு.

    நேர்மை மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடப்பதுக்கு உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் கமிஷன்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.  #PMModi #Vote #MannKiBaat
    தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணப் பட்டுவாடாவை தடுக்க அதிரடி சோதனை வருகிறது என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்ய தொடங்கி உள்ளது.

    தேர்தல் ஆணையத்துக்கு தற்போதுள்ள பெரும் சவால்களில் பணப்பட்டு வாடாவை தடுப்பதுதான் முதன்மையான சவாலாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் என்பதால் அதை எப்படி தடுப்பது என்பதில்தான் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் பணப்பட்டுவாடாவுக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.100 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த பணம் ரூ.300 கோடியாக உயர்ந்தது.

    அந்த தேர்தலின்போது ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணப்பட்டு வாடா ரூ.500 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பரிசு பொருட்களும் கைமாறும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதையடுத்து பணப் பட்டுவாடாவை தடுக்க தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. எந்தெந்த துறைகள் மூலம் எப்படி பணப் பட்டுவாடாவை தடுக்கலாம் என்று திட்டமிடப்பட்டு வருகிறது.

    இதில் முடிவு எடுப்பதற்காக அடுத்த மாதம் ஆலோசனை கூட்டம் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினர், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ. அதிகாரிகள், வருமான வரித்துறையினர், மத்திய நேரடி வரி விதிப்பு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    அவர்களிடம் கருத்து கேட்டு பணப்பட்டு வாடாவை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் பணப்பட்டு வாடாவை தடுக்க உள்ளூர் போலீசாரை எப்படி பயன்படுத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதமே வாகன சோதனைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் 11 தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளார். #TTVDhinakaran

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மல்லுகட்டுவதை விட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற டி.டி.வி. தினகரன் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் சர்வே நடத்தப்பட்டுள்ளது. அந்த சர்வேயில் 11 தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகவும், 5 தொகுதிகள் 2-ம் இடத்தை பெறும் தொகுதிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    பெரும்பாலும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் தேர்வு செய்து வைத்துள்ள 11 தொகுதிகள் விவரம் வருமாறு:-

    வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஆரணி, சேலம், திருப்பூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி ஆகிய 11 தொகுதிகள்.

    வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தை அ.ம.மு.க. பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

    எனவே அந்த 11 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர். #TTVDhinakaran

    பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #BalakrishnaReddy

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்ததால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களது பதவியை பறித்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

    இதனால் பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஒட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம் ஆகிய 18 தொகுதிகள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

    இதன் காரணமாக தமிழக சட்டசபையில் 20 இடங்கள் காலியாக உள்ளன. இந்த 20 இடங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி சமீபத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அவரது மந்திரி பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு நகல் சட்டசபை செயலாளருக்கு சமீபத்தில் கிடைத்தது.


    இதைத் தொடர்ந்து பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு கடிதம் மூலம் இதை சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் தற்போது செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    ஓசூர் தொகுதியும் காலி இடம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தமிழகத்தில் காலியான சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    21 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் இது மினி சட்டசபை தேர்தல் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் இந்த 21 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பது தெரிய வந்துவிடும்.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார்.

    இது தொடர்பான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. #BalakrishnaReddy

    ஆட்சிமன்ற குழு தீர்மானித்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். #Sarathkumar

    பெரம்பூர்:

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இருந்து 2 மாடுகள் கட்டிய மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார். அவரை சிலம்பாட்டம், தப்பாட்டம் அடித்து வரவேற்றனர்.

    கொடநாடு விவகாரத்தில் முதல்வர் தன் மீது குற்றமல்ல என தெரிவித்து உள்ளார். கொடநாடு விவகார வழக்கை விசாரிக்க தனிப்பட்ட கமி‌ஷன்அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பா.ஜ.க.விற்கு எதிரான கூட்டணியாக தான் அமையும்.

    கிராம சபையை ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது பண்ணியிருந்தால் வர வேற்று இருப்போம். தேர்தலை மனதில் கொண்டு வாக்கு தேவைக்காக கிராம சபைக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு இருக்கும் ஒரே நண்பர் விஜயகாந்த் தான். ரஜினியும், கமலும் சக பணியாளர்கள் தானே தவிர நண்பர்கள் அல்ல.

    நான் சட்டமன்றத்தை நோக்கி தான் பயணித்து வருகிறேன். ஆட்சி மன்ற குழு தீர்மானித்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் துணை பொதுச் செயலாளர் எம்.ஏ.சேவியர், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மாவட்ட செயலாளர் முருகேச பாண்டியன், ரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Sarathkumar

    திருவாரூர் தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையம் திருவாரூரில் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது மேற் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழலில் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது எல்லோரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2016 பொதுத் தேர்தலின்போதும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நேரத்திலும் ஆளும் கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    ஆனால் தேர்தல் ஆணையம் அதில் உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை. அது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற புகார்கள் எழுந்தன. பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வருமான வரித்துறை அளித்த தகவலும் கூட மாநில அரசால் உதாசீனப் படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும், அது போலவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர் பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

    5 மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடந்தபோதே இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பருவ நிலையைக் காரணம் காட்டி இங்கு இடைத்தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை என்று தலைமைச் செயலாளர் கூறியிருப்பதாகவும், எனவே தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மழை பெய்யாத நேரத்தில் பருவநிலையைக் காரணம் காட்டித் தேர்தலை ஒத்தி வைத்த ஆணையம் தற்போது கஜா புயல் பாதிப்பில் இருந்து திருவாரூர் வாக்காளர்கள் விடுபடாத நிலையில், அங்கு புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதற்குக் காரணம் என்ன? மற்ற 19 தொகுதிகளில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை? என்பதைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 'தேர்தல் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது’ என்ற குற்றச்சாட்டு அதனால்தான் எழுந்தது.

    இந்தச் சூழலில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் ஆணையமே முன்வந்து திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருப்பதை வர வேற்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களிடையே கேள்விக்குள்ளாகி இருக்கும் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இந்த இருபது தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தும் என்றும் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ThiruvarurByElection

    ×