என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல்"
249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சியில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வந்தனர்.
தேர்தல் முடிவுகள் நவம்பர் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று கவர்னர் அலுவலகத்தில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கந்தஹார் மாகாணத்துக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #AfghanistanPolling #Taliban
பாபநாசம்:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உயர் கல்வித் துறையில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ஊழல் நடந்துள்ளது. எனவே தமிழக கவர்னரை மாற்றவேண்டும் எனவும் கூறி வருகிறார். இது ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கருத்தாக உள்ளது.
இந்த நிகழ்வு தமிழக கல்வித் துறைக்கு மிகப் பெரிய அவமானம். இது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மு.க.ஸ்டாலின விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கூறி வருகிறார். இது தமிழக அரசியலுக்கு மிகபெரிய அவப்பெயராகும்.
தமிழகத்தில் கல்வி, ஒழுக்கம், அரசியல் நாகரிகம், நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, என்று தமிழகத்தில் நிறைந்திருந்த காலம் போய் தற்போது தமிழகம் ஊழலில் திளைத்து வருகிறது. மு.க.ஸ்டாலின் கூறியது போல் தமிழக அரசு கலெக்சன், கமிஷன், கரப்சன் ஆட்சி என கூறி வருவது உண்மை என தமிழக அரசியல் நடுநிலையாளர்கள் எண்ணுகின்றனர்.
காங்கிரசுடன் மக்கள் நீதி மையம் கூட்டணி வைக்கும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். இது அவரின் சொந்த கருத்தாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.வுடன் தோழமையுடன் இருந்து வருகிறது.
தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் இந்திய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தி.மு.க.கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
‘உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கிறோமா? என்ற தலைப்பில் பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
அடையாறில் நடந்த இந்த கருத்தரங்கத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். ஏ.கே. மூர்த்தி வரவேற்றார். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மக்களின் மேம்பாட்டுக்காக ஊராட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதற்கு ஏராளமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பல சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை முறையாக பின்பற்றவில்லை. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் உரிய காலத்தில் நடத்தாததால் அனைத்து பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. முறையாக தேர்தலை நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். அதன்மூலம் தான் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கத்திற்கு மாநில துணை பொது செயலாளர்கள் வேளச்சேரி சகாதேவன், ராதா கிருஷ்ணன்,வி.ஜே பாண்டியன், முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் பழனிதுரை, முன்னாள் பஞ்சாயத்து இணை இயக்குனர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர்கள் அடையாறு வடிவேல், சிவகுமார், மன்னை சத்யா, வெங்கடேச பெரியார், நிர்வாகிகள் கன்னியப்பன், பி.எஸ்.மூர்த்தி, லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண் டனர். சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார். #Ramadoss #PMK #TNLocalBodyElection
புதுடெல்லி:
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட முயற்சி நடந்து வருகிறது.
இதில், நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும் இடம்பெற செய்ய முயற்சிக்கிறார்கள்.
இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தலிலும் மாயாவதி கட்சியை காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்தது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களிலும் மாயாவதி கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.
எனவே, இந்த மாநிலங்களில் அவருடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. ஆனால், மாயாவதி அதிக தொகுதி கேட்டதால் காங்கிரஸ் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதன் காரணமாக தனித்து போட்டியிடப் போவதாக மாயாவதி அறிவித்து விட்டார். இதனால் பாராளுமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராமின் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மாயாவதி கூட்டணி தொடர்பாக கருத்துக்களையும் வெளியிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவு இருக்கிறது. தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், சிறுபான்மையினர், உயர் ஜாதியினர் என பலரும் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கிறார்கள்.
எங்களுக்கு உள்ள செல்வாக்கின் அடிப்படையில் தொகுதிகளை தர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எங்களுக்கும் தன்மானம் உண்டு. கூடுதல் தொகுதி வேண்டும் என்பதற்காக யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டோம். அதற்கு பதிலாக தனித்து போட்டியிடுவோம்.இதற்கான துணிச்சல் எங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
காங்கிரஸ்- பாரதிய ஜனதா இரு கட்சிகள் ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டோர், சிறு பான்மையினருக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீக்கவே நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரை அவர்கள் உயர் ஜாதியினருக்கு மட்டும் தான் ஆட்சி நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #Mayawati #Parliamentelection #BJP
புதுடெல்லி:
மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28, ராஜஸ்தானில் டிசம்பர் 7-ந்தேதி, சத்தீஷ்கரில் நவம்பர் 12, 20-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது.
அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு, இந்த மாநில சட்டசபை தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்தது.
அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இடது சாரிகளை ஓரணியில் கொண்டு வர காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டனர். இதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் இரு மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளில் போட்டியிட மாயாவதி விரும்பினார். ஆனால் அவருக்கு அதிக இடங்களை கொடுக்க காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. இதனால் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று மாயாவதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தங்களுடன் காங்கிரசார் கூட்டணி பற்றி பேசுவார்கள் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதையடுத்து காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
இதனால் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளது.
சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும் போது மாயாவதி, அகிலேஷ் இருவரையும் சமரசம் செய்து கொள்ள ராகுல் தீர்மானித்துள்ளார். 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதன் மூலம் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளிடம் அதிக பேரம் பேசி கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
அத்தகைய சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் மெகா கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே இடது சாரிகளுடன் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வைக்க இயலும் என்று கூறப்பட்டது.
ஆனால் இடது சாரிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில் மற்ற மாநில கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட போவதாக இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
ராஜஸ்தானில் சமாஜ்வாடியுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தெலுங்கானாவில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் மார்க்சிஸ்டு கூட்டணி அமைத்துள்ளது.
இது பற்றி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “பா.ஜ.க.வை தோற்கடிப்பதே லட்சியம். இதற்காகவே நாங்கள் கூட்டணியை மாற்றி உள்ளோம்“ என்றார்.
இடது சாரிகளும் தனி அணியாக செயல்பட தொடங்கி இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. #ParliamentElection #ElectionCommission #BJP
இந்தூர்:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சிவராஜ்சிங் சவுகான் முதல் மந்திரியாக இருக்கிறார்.
இந்த முறையாவது மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. அதே நேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா இருக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பா. ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கிறார்கள்.
மொரினாவில் நடைபெறும் பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி பேசுகிறார். பின்னர் ஜபல்பூர் சென்று நர்மதா நதி கரையில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்கிறார். அவர் சாலையில் ஊர்வலமாக சென்று கட்சி தொண்டர்களையும், மக்களையும் சந்திக்கிறார்.
கடந்த 20 நாட்களில் ராகுல் காந்தி 3-வது முறையாக மத்திய பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இதே போல பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும், மத்திய பிரதேசத்தில் இன்று ஒரு நாள் பிரசாரம் செய்கிறார். இந்தூரில் உள்ள மால்வாட் நிமாட் பகுதியில் அவர் பேசுகிறார். கிருஷ்ணாபுர பகுதியில் பேரணியை தொடங்கி வைத்து சிறிது தூரம் நடந்து செல்கிறார். அமித்ஷாவுடன் மாநில முதல் மந்திரி சவுகானும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதேபோல பிரதமர் நரேந்திரமோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். #Congress #BJP #RahulGandhi #AmitShah #MadhyaPradeshelection
சென்னை:
செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன்.
இவரது வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் வெங்கடேசன் என்பவர் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி வரலட்சுமி மதுசூதனன் மனுதாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, இந்த வழக்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாமல் தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தார். #Highcourt #DMK #Election
இந்தியா முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 4 ஆயிரத்து 896 பேர் உள்ளனர்.
இவர்களில் 1765 பேர் கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்கள் ஆவார்கள். அதாவது மொத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 36 சதவீதம் பேர் கிரிமினல் குற்ற வழக்குகளை எதிர் கொண்டுள்ளனர்.
அவர்கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகள் நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வருகின்றன. இந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது மொத்தம் 3,045 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்று இருந்தால் இந்த 1,765 பேரின் பதவி ஆட்டம் கண்டு இருக்கும். பதவி தப்பியதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் இருக்கும் எம்.எல். ஏ.க்களில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அங்கு மொத்தம் உள்ள 539 எம்.எல்.ஏ.க்களில் 248 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் இருக்கிறார்கள்.
கிரிமினல் அரசியல்வாதிகளில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள 234 எம்.எல். ஏ.க்களில் 178 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பீகாரில் 147 எம்.எல்.ஏ.க்களும், மேங்கு வங்கத்தில் 139 எம்.எல்.ஏ.க்களும், ஆந்திராவில் 132 எம்.எல்.ஏ.க்களும், கேரளா 84 எம்.எல்.ஏ.க்களும், கர்நாடகாவில் 82 எம்.எல். ஏ.க்களும் கிரிமினல் குற்ற வழக்குகளுடன் இருக்கிறார்கள்.
எம்.பி.க்களில் 543 பேரில் 228 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு உள்ளனர். #SupremeCourt #Lawmakers
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை தனித்து நின்று போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பதால் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாடி, முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி உள்ளிட்ட சில கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் அஜீத்ஜோகியுடன் மாயாவதி புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார். மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். மாயாவதியின் இந்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இனியும் தாமதம் செய்தால் மாநிலங்களில் உள்ள செல்வாக்கு பெற்ற சிறு கட்சிகள் மெகா கூட்டணிக்குள் வராமல் போய் விடக்கூடும் என்ற பயம் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சை எந்தெந்த கட்சிகளுடன் எப்போது தொடங்குவது என்ற ஆலோசனையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் மாநிலம் வாரியாக டெல்லிக்கு அழைக்கப்பட்டு இந்த ஆய்வு நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், மராட்டியம், கர்நாடகா ஆகிய 7 மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.
மாநில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசி ஒழுங்குப்படுத்த முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் 4 பேர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் குலாம்நபி ஆசாத், அகமது படேல், அசோக் கெலாட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் எந்தெந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும், எவ்வளவு தொகுதிகளில் உடன்பாடு செய்து போட்டியிடும் என்பதை முடிவு செய்வார்கள். இவர்கள் மாநில கட்சிகளிடம் இருந்து கூடுதல் எம்.பி. இடங்களை கேட்டு பெற முடிவு செய்துள்ளனர்.
பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒடிசாவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட்டில் ஆர்.ஜே.டி., ஜே.எம்.எம். ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. வுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்யாமல் காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் குற்றப்பின்னணி உள்ளவர்களே அதிகம் தேர்தலில் நிறுத்தப்படுவதாகவும், அவர்களையே மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் நிலை இருப்பதாக, குற்றப்பின்னணி இருக்கும் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்யாமல், அரசியல் கட்சிகள் அடிப்படை நாகரீகத்தை பேண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அரசியலில் முறைகேடும், ஊழலும் அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்றும், அந்த இடத்தில் உச்சநீதிமன்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், நாடாளுமன்றம் மட்டுமே சட்டதிருத்தம் மூலம் இதற்கான தீர்வை கொண்டு வர முடியும் எனவும் வழிவகையினை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. #SupremeCourt
டெல்லியில் ‘இந்திய தேர்தல் ஜனநாயகத்துக்கு உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனநாயகம், யதார்த்தத்தில் இயங்காது. ஜனநாயகத்துக்கு என்று ஒரு துணிச்சல், தன்மை, நேர்மை, அறிவு தேவைப்படுகிறது. அவைகளெல்லாம் இப்போது மங்கிப்போய் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதானால், அவையெல்லாம் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
தூய்மையான தேர்தல்கள், தலைமைக்கு சட்டப்பூர்வமான வசந்தம் போல் இருக்கும்.
தேர்தல்கள் மாசுபட்டால், நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் மீதும் குறை கூறுவார்கள். எனவே இது கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும்.
போலிச்செய்திகள் வெளியாவதும், மக்களை நம்ப வைப்பது பெருகி வருவதும், தகவல்கள் திருட்டு நடைபெறுவதும், லாபம் பார்ப்பதும், தகவல் தொடர்பை குறிவைத்து செயல்படுதலும் நடக்கின்றன.
நமது நாட்டைப் பொறுத்தமட்டில் சைபர் பாதுகாப்பு (இணைய பாதுகாப்பு), தகவல் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதை தேர்தல் கமிஷன் உணர்ந்து இருக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா போன்று சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நமது நாட்டில் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம். (கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்பது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் உபயோகிப்பாளர்களின் தகவல்களை திருடி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனம் ஆகும்.)
தேர்தல்களில் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி பேசப்படுகிறது. தேர்தலில் பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை உறுதி செய்வதற்கு தற்போதைய சட்டங்கள் போதாது. எனவேதான் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது இப்போது சாத்தியம் இல்லை.
இந்தியாவில் இப்போது தேர்தல்களில் பணம் ஆதிக்கம் செலுத்துவது என்பது கவலை அளிக்கிற பிரச்சினையாக உள்ளது. பிரசாரத்துக்கு பணம் செலவு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று நிறைய பேசப்படுகிறது. வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
ஆனால் இவை தொடர்பாக இப்போதுள்ள சட்டங்கள், இந்த விவகாரங்களை கவனிப்பதற்கு போதுமானவை அல்ல.
எனவேதான் இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி வந்து உள்ளது.
செய்தி ஊடகங்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துதல், போலி செய்திகள் நடமாட்டத்தை குறைத்தல், பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுதல் ஆகியவை குறித்தும் கவனிக்க வேண்டியது இருக்கிறது. இது தொடர்பாகவும் தேர்தல் கமிஷன் ஆராய்ந்து வருகிறது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களை நிர்வகிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ChiefElectionCommissioner #OPRawat
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் போதுமான மழை பெய்தும் கடும் வறட்சி நிலவுகிறது. அரசின் நீர் மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.
தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக வறட்சி ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை 2 முறை நிரம்பியும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு விவசாயப்பணிகள் செய்ய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே நீர் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த வேண்டும். குட்கா விவகாரத்தில் உண்மை நிலையை அரசு தெரியப்படுத்த வேண்டும். வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.
இவ்வாறு ஜி,கே. வாசன் கூறினார். #gkvasan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்