search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ்புக்"

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்கள் கடந்த மாதம் திருடப்பட்ட நிலையில், தற்சமயம் மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. #Facebook #databreach



    ‘ஃபேஸ்புக்’ சமூக வலை தளத்தில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.

    அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

    அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டுள்ளன. 

    இவை தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.

    மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், ஃபேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. #Facebook #databreach
    ஃபேஸ்புக் தளத்தின் நியூஸ் ஃபீடில் வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் புதுவிதமாக போஸ்ட் பதிவிட வழி செய்துள்ளது. #Facebook #SocialMedia



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 3டி படங்களை உருவாக்க முடியும்.

    பயனர்கள் பல்வேறு லேயர்களை உருவாக்கி, அவற்றை மாற்றியமைத்து சோதனை செய்யும் வசதியும், நிறம் மற்றும் டெக்ஸ்ச்சர்களை மாற்றியமைத்து சிறப்பான 3டி அனுபவத்தை பெருமளவு உருவாக்கி கொள்ளலாம்.

    நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனைவரும் 3டி படங்களை பார்க்க முடியும். எனினும் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி இன்று முதல் வழங்கப்படுவதாக ஃபேஸ்புக் 360 தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 3டி படங்களுக்கான தொழில்நுட்பம் பொருள், இடத்தின் முன்பகுதி மற்றும் பின்னணி இடைவெளியை கணக்கிடும்.



    புகைப்படத்தை போர்டிரெயிட் மோடில் எடுத்து, அதனை 3டி போட்டோவாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள முடியும். இனி படத்தை ஸ்கிரால், பேன் அல்லது டில்ட் செய்து படத்தை உண்மையான 3டி-யில் பார்க்க முடியும். ஆகுலஸ் கோ பிரவுசர் அல்லது ஃபயர்பாக்ஸ்-இல் ஆகுலஸ் ரிஃப்ட் உள்ளிட்டவற்றில் 3டி புகைப்படங்களை பார்க்கலாம். 

    இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த கருத்துக்களை பயனரிடம் கேட்டறிந்து வருகிறோம், தொடர்ந்து இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கி வருகிறோம் என ஃபேஸ்புக் 360 பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த அம்சம் மே மாதம் நடைபெற்ற எஃப்8 நிகழ்வில் ஃபேஸ்புக் அறிமுகம் செய்தது.
    வாட்ஸ்அப் செயலியில் ஆகஸ்டு மாதம் கண்டறியப்பட்ட பிழை ஒரு வழியாக சரிசெய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் இருந்து வந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பயனர் வீடியோ கால் ஏற்கும் போது ஹேக்கர்கள் செயலியை ஹேக் செய்துவிட முடியும். இந்த பிழையை தொழில்நுட்ப வலைதளங்களான ZDnet மற்றும் தி ரெஜிஸ்டர் உள்ளிட்டவை வெளிப்படுத்தின. 

    வாட்ஸ்அப் ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருந்து வந்த பிழை ஆகஸ்டு மாதத்தில் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாத துவக்கத்தில் சரி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்த விவரங்களை வழங்க ஃபேஸ்புக் மறுத்துவிட்டது. பிழை சரி செய்யப்படும் முன், இவை ஏதேனும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    அழைப்பின் போது ஹேக் செய்வோர் தரப்பில் இருந்து ++ என கிளிக் செய்தாலே வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு விடும் என இந்த பிழையை கண்டறிந்த டிராவிஸ் ஆர்மான்டி தெரிவித்தார். இவர் கூகுளின் பிராஜக்ட் ஜீரோவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பு சாரந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறது. கடந்த வாரம் ஃபேஸ்புக் வரலாற்றில் மிகப்பெரும் பாதுகாப்பு பிழை அரங்கேறியது. இதில் சுமார் ஐந்து கோடி பயனர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டது.
    ஃபேஸ்புக் நிறுவனம் போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் பெயர்களில் புதிய வீடியோ காலிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. #Facebook #Portal



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் இரண்டு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் என அழைக்கப்படும் இரண்டு சாதனங்களும் வீடியோ கால் மேற்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய சாதனங்களில் மிக எளிமையாக வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.  

    போரடல் சாதனத்தில் 10 இன்ச் ஹெச்.டி. 1280x800 பிக்சல் டிஸ்ப்ளே, போர்டல் பிளஸ் சாதனத்தில் 15 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. போர்டல் ஸ்மார்ட் கேமரா மற்றும் ஸ்மார்ட் சவுன்ட் தொழில்நுட்பம் சாதனத்தை தொடாமல் பயன்படுத்த முடியும்.



    ஸ்மார்ட் கேமரா திரையில் உள்ள அனைவரும் தெரியும் படி தானாக சூம் மற்றும் அசைந்து கொள்ளும். ஸ்மார்ட் சவுன்ட் அம்சம் பின்னணி சத்தத்தை குறைத்து, குரல் ஒலி அளவை உயர்த்துகிறது. போர்டல் சேவை கொண்டு ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் கனெக்ஷன்களை மெசன்ஜரில் இருந்து அழைப்பு மேற்கொள்ள முடியும்.

    மேலும் இந்த சாதனம் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதியும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஏழு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். இத்துடன் போர்டல் சாதனத்தில் அமேசான் அலெக்சா சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் விளையாட்டு நிகழ்வுகள், வானிலை நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதோடு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்க முடியும்.

    வாடிக்கையாளர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், போர்டல் சாதனத்தின் கேமராவை முழுமையாக டிசேபிள் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் ஒற்றை கிளிக் மூலம் கேமரா இயக்கத்தை நிறுத்திக் கொள்ள முடியும்.



    போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் சாதனங்களில் கேமரா கவர் வழங்கப்பட்டு இருப்பதால், கேமரா லென்ஸை எப்போது வேண்டுமானாலும் மறைக்க முடியும். கேமரா லென்ஸ் மறைக்கப்பட்ட நிலையிலும் அழைப்புகள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் தொடர்ந்து வரும். போர்டல் பயன்பாட்டை கண்கானிக்கும் வகையில், குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 12 இலக்க கடவுச்சொல் கொண்டு ஸ்கிரீன் லாக் செய்ய முடியும்.

    கடவுச்சொல் மாற்றும் போது ஃபேஸ்புக் கடவுச்சொல் வழங்க வேண்டும். போர்டல் சாதனத்தில் மேற்கொள்ளப்படும் வீடியோ அழைப்புகளை ஃபேஸ்புக் கேட்கவோ, பார்க்கவோ செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்டல் அழைப்புகள் பயனர் மட்டும் சம்மந்தப்பட்டது ஆகும். இத்துடன் போர்டல் வீடியோ கால்கள் அனைத்து முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.



    கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஸ்மார்ட் கேமரா, ஸ்மார்ட் சவுன்ட் போன்றவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் போர்டலில் இயங்குவதால், ஃபேஸ்புக் சர்வர்களுக்கு இதில் தொடர்பு இருக்காது. போர்டல் சாதனம் முக அங்கீகார வசதி கொண்டிருக்கவில்லை. மேலும் போர்டல் கொண்டு இசையை கேட்பது, விரும்பிய நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

    அமெரிக்காவில் போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் சாதனங்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. பயனர்கள் ஃபேஸ்புக்கின் portal.facebook.com மற்றும் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விநியோகம் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.

    போர்டல் ஹோம் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,717) என்றும் போர்டல் பிளஸ் விலை 349 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.25,810) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். தளத்தில் விளம்பரங்கள் தோன்ற இருப்பதாகவும், இதற்கான சோதனை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரியான் ஆக்டன் ஃபேஸ்புக் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் பிரபல செயலியில் விளம்பரங்களை வழங்க ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் திட்டமிட்டு இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

    அந்த வகையில், செயலியை கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், செயலியில் விளம்பரங்களை வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து @WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் விளம்பரங்களை வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விளம்பரங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் தோன்றும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியிலும் ஸ்டோரீஸ் அம்சத்தில் விளம்பரங்கள் தோன்றுகின்றன. எனினும் இந்த விளம்பரங்கள் ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



    வாட்ஸ்அப் செயலி முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருப்பதால், ஃபேஸ்புக்கால் பயனர் விவரங்களை அறிந்து கொள்ள முடியாது. எனினும், வாட்ஸ்அப் நம்பர்களுடன் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் அக்கவுன்ட்களை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பயனர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்க முடியும்.

    இதுவரை இந்த அம்சம் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வரை இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஐபோன் மாடல்களில் இதற்கான அப்டேட் வரும் மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் வெளியான தகவல்களில் விளம்பரம் சார்ந்த வியாபாரத்திற்கு வாட்ஸ்அப் மாற இருப்பதாக கூறப்பட்டது. 

    வாட்ஸ்அப் செயலியிலின் ஸ்டேட்டல் பகுதியில் தோன்றும் விளம்பர அமைப்பு முற்றிலுமாக பேஸ்புக் மூலம் இயங்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் போன்று அனைத்து தளங்களிலும் விளம்பரங்களை புகுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அலுவலர் மேட் இடிமா தெரிவித்துள்ளார்.
    ஃபேஸ்புக் போஸ்ட்களில் மியூசிக் சேர்க்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த அம்சம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் புகைப்படங்களில் இசையை சேர்க்கும் வசதி வழங்கப்பட இருப்பதாகவும், முதற்கட்டமாக இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இதே அம்சம் போட்டோ மற்றும் வீடியோ போஸ்ட்களில் பாடல்களை சேர்க்கக்கோரும் புதிய ஆப்ஷன் ஃபேஸ்புக்கில் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் ஸ்டோரி மற்றும் நியூஸ் ஃபீட் போஸ்ட்களில் வழங்கப்பட இருக்கிறது.

    ஃபேஸ்புக்கில் முதற்கட்டமாக போட்டோ அல்லது வீடியோவை அப்லோடு செய்ய வேண்டும், இனி ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்து அங்கு இருக்கும் பட்டியலில் உங்களுக்கு விருப்பமான இசையை தேர்வு செய்ய வேண்டும். இசையை தேர்வு செய்த பின், ஃபேஸ்புக் குறிப்பிட்ட பாடலை லோடு செய்யும்.



    அடுத்து பாடலில் உங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். இந்த போஸ்ட்டில் பாடல் தலைப்பு மற்றும் பாடியவர் விவரம் போஸ்ட்டில் ஸ்டிக்கர் வடிவில் இடம்பெற்று இருக்கும்.

    லிப் சின்க் லைவ் மற்றும் 360 கோணங்களில் உள்ள வீடியோக்களில் இசையை சேர்க்கும் வசதி வழங்குவதற்கு என ஃபேஸ்புக் நிறுவனம் இசைத் துறையில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பயனர்களுக்கு அதிகப்படியான விருப்பங்களை வழங்க முடியும்.

    எனினும் புதிய அம்சம் தற்சமயம் வரை குறுகிய எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் விரைவில் மற்ற பகுதிகளிலும் அதிகளவு பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #socialmedia



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனம் அமேசான் எக்கோ போன்றே வேலை செய்யும். 

    இருவித அளவுகளில் உருவாகி இருக்கும் ஃபேஸ்புக் போர்டல் சேவை முன்னதாக மே மாதத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது, எனினும் நம்பிக்கையில்லா காரணத்தால் தாமதமானதாக கூறப்படுகிறது.

    பயன்படுத்தாத போது கேமரா லென்சை மறைக்க ஷட்டர் ஒன்றும் இந்த சாதனத்தில் வழங்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஃபிரேமில் உள்ளவர்களை கண்டறிந்து பின் அவர்கள் அறையினுள் எங்கு சென்றாலும் பின்தொடரும். ஃபேஸ்புக் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து புதிய ஷட்டர் ஆப்ஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


    கோப்பு படம்

    அமேசான் அலெக்சா வாய்ஸ் இன்டகிரேஷன் வசதியுடன் வரும் போர்டல் சாதனத்தில் பயனர்கள் இசையை அனுபவிப்பதோடு, வீடியோக்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடியும்.

    ஃபேஸ்புக் நிறுவனம் இந்த சாதனத்தை தனது ஊழியர்களை வைத்து சில மாதங்களாக சோதனை செய்து வந்தது. பின் இந்த சாதனம் சில விற்பனையாளர்களிடமும் காண்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    இரண்டு வேரியன்ட்களில் உருவாகி இருக்கும் போர்டல் சாதனத்தின் விலை 400 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.28,894) மற்றொரு மாடல் 300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,670) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apps


    உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்து ஃபோர்ப்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆப்டோப்பியா எனும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி கடந்த மூன்று மாதங்களில் உலக மக்கள் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 8500 கோடி நிமிடங்கள் பயன்படுத்தியுள்ளனர். இதேபோன்று ஃபேஸ்புக் செயலியை சுமார் 3000 கோடி நிமிடங்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். 

    உலகளவில் குறுந்தகவல் அனுப்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஆப்டோப்பியா செய்தி தொடர்பாளர் ஆடம் பிளாக்கர் தெரிவித்தார். தகவல் பரிமாற்ற செயலிகளில் மக்கள் அதிக நேரம் செலவழித்து உள்ளனர் என பிளாக்கர் மேலும் தெரிவித்தார்.



    உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 செயலிகள் பட்டியல் பின்வருமாறு..,

    வாட்ஸ்அப், வீசாட், ஃபேஸ்புக், மெசன்ஜர், பன்டோரா, யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் மேப்ஸ் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த அறிக்கையில் சீனாவின் மூன்றாம் தரப்பு ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால் வீசாட் மற்றும் சீனாவை சேர்ந்த செயலிகள் முன்னணி இடங்களை பிடித்திருக்கும். எனினும் வீசாட் செயலி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    அதிக நேரம் பயன்படுத்தப்பட்ட பத்து செயலிகளில் ஃபேஸ்புக் மெசன்ஜர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை இடம்பிடித்திருக்கின்றன. கூகுளின் யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவையும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முதன்மை இடம் பிடித்துள்ளன.

    கேம்களை பொருத்த வரை கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் 3.83 பில்லியன் மணி நேரம் விளையாடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மை டாக்கிங் டாம், கேன்டி கிரஷ் சாகா, ஃபோர்ட்நைட், லார்ட்ஸ் மொபைல், சப்வே சர்ஃபர்ஸ், ஹெலிக்ஸ் ஜம்ப், ஸ்லிதர்.ஐஒ, பப்ஜி மொபைல் மற்றும் ஃபிஷ்டம் உள்ளிட்டவை அதிகம் விளையாடப்படுகின்றன.
    கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1.75 கோடி நிதி வழங்குவதாக பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #KeralaReliefFund

     
    உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது. நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் (Community Resilience Fund for GOONJ ) எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்குகிறது.

    கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் தனது அம்சங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை உதவும் நோக்கிலும், உதவி செய்வோரை அவர்களுடன் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச சமுதாயத்தின் மூலம் ஃபேஸ்புக்கின் சிறிய பங்களிப்பாக 2,50,000 டாலர்கள் வழங்குகிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஆகஸ்டு 8-ம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத அளவு கனமழையாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என கேரளாவின் பெருமளவு மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. பாதிப்புகளில் சிக்கி இதுவரை சுமார் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் தங்களது வீடுகளை இழந்து நிவாரன முகம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.



    உலகம் முழுக்க ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு உதவ பிரத்யேக க்ரூப்கள், லைவ் வீடியோக்கள் மற்றும் பக்கஙக்ளை துவங்கி நிவாரன உதவிகளில் ஈடுபட்டுள்ளனர். க்ரூப்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரன பொருட்களை வழங்குவது குறித்த தகவல் பரிமாற்றம் செய்ய வழி செய்கிறது.

    ஆகஸ்டு 9-ம் தேதி சேஃப்டி செக் அம்சத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தியது. இதன் மூலம் மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. ஃபேஸ்புக்கின் ஹெல்ப் அன்ட் க்ரைசிஸ் டொனேட் பட்டன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1,300-க்கும் அதிகமான போஸ்ட்களை ஈர்த்திருக்கிறது. மேலும் க்ரைசிஸ் டொனேட் பட்டன் மூலம் இதுவரை 500 பேர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
    ஃபேஸ்புக் மெசன்ஜரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் மூலம் வீடியோ சாட்டில் இருந்த படி ஏ.ஆர். கேம்களை விளையாட முடியும். #AugmentedReality


    ஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மல்டி-பிளேயர் வீடியோ சாட் ஏ.ஆர். கேம்ஸ் என அழைக்கப்படும் புதிய வசதி மெசன்ஜரில் வீடியோ காலிங் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    அதிகபட்சம் ஆறு பேருடன் வீடியோ கால் மேற்கொண்டு கேமிங் அனுபவத்தை அதிக உரையாடல்களுடன், நிஜமானதாக உணர முடியும். மெசன்ஜரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு சவால் விடுத்து, அவர்கள் எத்தனை நேரம் சிரிக்கமால் உள்ளனர் என்பதை பார்க்கவோ அல்லது விண்வெளியில் அதிரடி போர் விளையாட்டு போன்றவற்றை அனுபவிக்க முடியும்.

    இதுவெறும் துவக்கம் தான் என்றும் விரைவில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த புதிய கேம்கள் அடுத்தடுத்து சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பந்தை பின்புறம் பாஸ் செய்யும் விளையாட்டு “பீச் பம்ப்”  (Beach Bump) என்ற பெயரிலும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு “கிட்டன் கிரேஸ்” (Kitten Kraze) என்ற பெயரில் வழங்கப்பட இருக்கிறது. 

    புதிய கேமிங் அனுபவத்தில் திளைக்க அப்டேட் செய்யப்பட்ட மெசன்ஜர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்கள் சாட் விண்டோவில் விளையாட விரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் திரையின் மேல் வலது புறமாக காணப்படும்.

    பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து மெசன்ஜரில் காணப்படும் ஏ.ஆர். கேம்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். புதிய அனுபவங்கள் ஏ.ஆர். ஸ்டூடியோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிகம் அறிமுகமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க ஏதுவாக இருக்கும். #Facebook #AugmentedReality
    ஃபேஸ்புக் F8 டெவலப்பர்கள் நிகழ்வில் தனது டேட்டிங் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்த நிலையில், இந்த சேவைக்கான சோதனை துவங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Facebook


    ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வு இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. 

    இந்நிலையில், அறிவிப்பு வெளியான சில மாதங்களில் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் வாங் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் சேவையின் சோர்ஸ் கோடுகளில் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    டேட்டிங் ப்ரோஃபைல்களில் போலி தகவல்களை பதிவு செய்ய ஃபேஸ்புக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அனைத்து தகவல்களும் பொது வெளியீட்டுக்கு முன் அழிக்கப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய சேவை சோதனை செய்யப்பட்டாலும் துன்புறுத்தலுக்கு எதிரான விதிமுறைகள் இந்த சேவைக்கு பொருந்தும் என எச்சரித்துள்ளது.



    புதிய சேவையின் சைன்-அப் பக்கத்தில் பாலினம், இருப்பிடம் மற்றும் நீங்கள் விரும்பும் பாலினம் சார்ந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். வொங் சைன்-அப் விவரங்களை பதிவு செய்திருந்தாலும், அவரது ப்ரோஃபைல் உருவாக்க முடியவில்லை. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றதும், வெளியிடப்படும் என்றும், பிடிக்காத பட்சத்தில் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.

    ஃபேஸ்புக் டேட்டிங் சேவையில் பயனர்கள் தங்களது ஃபேஸ்புக் ப்ரோஃபைலில் இருந்து வித்தியாசமான டேட்டிங் ப்ரோஃபைலை உருவாக்க முடியும். பயனர் தேர்வு செய்யும் விருப்பத்திற்க்கு ஏற்ப ப்ரோஃபைல்களை வரிசைப்படுத்தும். இவ்வாறு பொதுவாக இருக்கும் விவரங்கள், மியூச்சுவல் நண்பர்களின் ப்ரோஃபைல்கள் இடம்பெறும் நிலையில், க்ரூப் மற்றும் ஈவன்ட்களில் இருந்தும் ப்ரோஃபைல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. #Facebook
    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்களை நீக்கும் பணியினை ஃபேஸ்புக் துவங்கியது. அதன்படி போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அக்கவுன்ட்கள் மற்றும் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. #Facebook


    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 32 போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்கள் (17 ப்ரோஃபைல்கள் மற்றும் 8 பக்கங்கள்) நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இடைக்கால தேர்தலையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீக்கப்பட்ட போலி அக்கவுண்ட் எவ்வித குழுவுக்கும் தொடர்புடையது கிடையாது என்றாலும், இவை 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற ரஷ்ய இன்டர்நெட் ஏஜென்சி மூலம் இயக்கப்பட்ட பிரச்சாரங்களை போன்று இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு சார்ந்த விவகாரம் மற்றும் ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக அதிகம் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஃபேஸ்புக் பயனர் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கான செலவு அதிகரித்த நிலையில் கடந்த வாரம் ஃபேஸ்புக் பங்குகள் அதிகபட்சம் 20% வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.


    கோப்பு படம்

    மக்களோ அல்லது நிறுவனங்களோ அக்கவுன்ட்களை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழிநடத்தும் வழக்கம் ஃபேஸ்புக்கில் அனுமதிக்கப்படுவதில்லை. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    "போலி நடிகர்கள் ஃபேஸ்புக்கில் இயங்குவிடாமல் செய்திருக்கிறோம்," என ஃபேஸ்புக் மூத்த அலுவலர் ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்தார். 

    "இதன் பின் யார் இயங்குகிறார்கள் என்பது குறித்து எங்களது ஆய்வின் இந்த சூழலில், எங்களிடம் போதுமான தொழில்நுட்ப ஆதாரம் இல்லை," ஃபேஸ்புக்கின் சைபர்செக்யூரிட்டி திட்டங்களுக்கான தலைவர் நதேனியல் லெய்ச்சர் தெரிவித்தார்.

    17 ப்ரோஃபைல்கள், எட்டு பக்கங்கள் மற்றும் ஏழு இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்கள் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இவற்றில் முதல் அக்கவுன்ட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டும், சமீபத்திய அக்கவுன்ட் மே மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தேகப்பட்டதில் ஒரு பக்கங்களை சுமார் 2,90,000 அக்கவுன்ட்களை பின்தொடரப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Facebook
    ×