search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் என இன்றைய வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. #KarnatakaElection #ExitPolls #congressparty
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபைக்கு உட்பட்ட 222 தொகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தியாவின் பிரபல ஊடகங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன.

    அதன்படி, ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஓரிரு ஊடகங்களின் கருத்து கணிப்பின்படி அங்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையலாம் என குறிப்பிடுகின்றன.

    இதேபோல், சில ஊடகங்கள் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையலாம் என யூகித்துள்ளன.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 30 முதல் 40 இடங்களில் வெற்றி பெறலாம் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை இழக்கும் வேளையில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க இந்த கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சிக்கும் முயற்சிக்கலாம் என கருதப்படுகிறது. #KarnatakaElection #ExitPolls #congressparty
    கர்நாடக சட்டசபைக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 6 மணி நிலவரப்படி சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவானது. #KarnatakaElection2018 #70pcvoterturnout
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடியும், குறைபாடும் காணப்பட்டதாக அரசியில் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    ஹெப்பல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரண்டாம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு பின்னர் கிடைக்கும் ஒப்புகை சீட்டில் வாக்களித்த வேட்பாளருக்கு பதில் வேறு பெயர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    இதேபோல், மாநிலம் முழுவதிலும் 164 வாக்கு இயந்திரங்களிலும், 157 மத்திய கட்டுப்பாட்டு கணினிகளிலும் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

    மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கர்நாடக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.4 சதவீதம் வாக்குகள் பதிவானது நினைவிருக்கலாம்.

    இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaElection2018 #70pcvoterturnout 
    கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று பிற்பகல் ஒருமணி நிலவரப்படி 37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. #KarnatakaElections2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைவதால் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 58.008 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சுமார் 2600 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் இந்த தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.

    முதல்-மந்திரி சித்தராமையா தனது சொந்த ஊரான சித்தரமனாகுண்டி கிராமத்தில் வாக்களித்தார். பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். மத்திய மந்திரியும் பா.ஜ.க. முக்கிய தலைவருமான சதானந்த கவுடா புத்தூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஹசன் மாவட்டம் ஹோலிநரசிபுரா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா மனைவி சென்னம்மாவுடன் வந்து ஓட்டு போட்டார்.



    110 வயதை கடந்த சித்தகங்கா மடத்தலைவர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மடத்தை ஒட்டியுள்ள வளாகத்தில் வாக்களித்தார்.

    காலை 11 நிலவரப்படி தக்சின கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் அதிகபட்சமாக 31 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பெங்களூரு புறநகர் பகுதியில் குறைந்தபட்சமாக 17 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மற்றபடி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது. #KarnatakaElections2018
    பாரதிய ஜனதா கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும் கர்நாடக மாநிலத்தில் தனது தலைமையில் ஆட்சி அமையும் எனவும் எடியூரப்பா கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa
    பெங்களூரு:

    மத்திய மந்திரியும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சதானந்த கவுடா மங்களூரு அருகே புத்தூரில் உள்ள காரடி அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    பாரதிய ஜனதா முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா சிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா ஓட்டுசாவடியில் ஓட்டு போட்டார். முன்னதாக அவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து பூஜை நடத்தினார்.

    அதன் பிறகு மகன் விஜயேந்திராவுடன் சென்று வீட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டார். அதன் பிறகு ஓட்டுசாவடிக்கு சென்று காலை 7.05 மணிக்கு தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாரதிய ஜனதா கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் கர்நாடக மாநிலத்தில் எனது தலைமையில் ஆட்சி அமையும் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறிறனார்.#KarnatakaElections2018 #Yeddyurappa
    கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #KarnatakaElections2018 #ModiCallVoters
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடகத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில், நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ‘கர்நாடகாவில் வாழும் என் சகோதர சகோதரிகள் இன்று அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள்  தவறாமல் வாக்களித்து தங்கள் பங்களிப்புடன் இந்த ஜனநாயக திருவிழாவை சிறப்படைய செய்ய வேண்டும்’ என மோடி டுவிட்டரில் கூறியுள்ளார். #KarnatakaElections2018 #ModiCallVoters
    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா வாக்களித்தார்#KarnatakaElections2018
    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    ஷிமோகா அருகே ஷிகார்பூரில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிஎஸ் எடியூரப்பா வாக்களித்தார். மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்தார்.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.



    தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #KarnatakaElections2018
    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. #KarnatakaElections2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடகத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன.

    இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 



    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #KarnatakaElections2018
    கர்நாடக மாநில சட்டசபையில் நடக்கும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரசும், இழந்த ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும் நாளைய தேர்தலில் பலப்பரீட்சையில் குதிக்கின்றன. #KarnatakaElections2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடக சட்டசபைக்கு நாளை (12-ந் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன.

    இதில் ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 223 தொகுதிகளுக்கும் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 55 ஆயிரம் 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி ஆண் வாக்காளர்கள், 2.44 பெண் வாக்காளர்கள், 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96  கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று காலை முதல் வாக்குசாவடிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை வேன், லாரி, பஸ்கள் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது. இதே போல பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாரும் தேர்தல் அதிகாரிகளும் அந்தந்த வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    வாக்குசாவடி அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்கவும், பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பகிரங்க பிரசாரம் முடிவுக்கு வந்தாலும், அவர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க தடை இல்லை. ஆனால் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

    என்றாலும் கர்நாடக தேர்தலில் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடிக்கும் மேல் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியது. இந்த தேர்தலில் வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி சோதனை நடத்தி கருப்பு பணத்தை கைப்பற்றினர். காங்கிரஸ் மற்றும் மதசார் பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் வீடுகளிலும், முதல் மந்திரி சித்தராமையா தங்கிய ஓட்டலிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினார்கள்.

    223 தொகுதிகளில் மொத்தம் 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்றும், மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.



    பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து 21 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக கர்நாடக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார்.

    சோனியா காந்தி,  முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.

    கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சாமூண்டீ ஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை சாமூண்டீஸ்வரி தொகுதியில் மேற்கொண்டார்.

    மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. மதசார்பற்ற ஜனதா தள தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, முதல் மந்திரி வேட்பாளர் குமாரசாமி உள்ளிட்ட பலர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதா கட்சி 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்து தென் மாநிலத்தில் காலூன்ற  நினைக்கிறது. மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நினைப்பில் அந்த கட்சி உள்ளது.

    தற்போது 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் கர்நாடகாவில் வெற்றி பெற்று ஆட்சி தக்க வைக்கவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் கர்நாடகத்தை நம்புகிறது.  ஓட்டு எண்ணிக்கை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது. #KarnatakaElections2018
    ×