search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104723"

    வாணியம்பாடி அருகே இளம்பெண்ணிடம் பேசியதை தட்டி கேட்டு மாணவனின் தந்தையை தாக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள தகரகுப்பம் கூட்டுபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரத்குமார் (19). திருப்பத்தூரில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    இவரது உறவினர் விஜயகாந்த் (19). இவரது சகோதரியிடம் சரத்குமார் அடிக்கடி பேசியதாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா (19), ஆசைத்தம்பி (23), சந்தோஷ் என்கிற பெருமாள் சாமி (26) ஆகியோர் சரத்குமாரை தாக்கினர்.

    இதனை தடுக்க முயன்ற கோவிந்தசாமியை கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுதொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.

    தந்தை தாக்கப்பட்டதால் அவமானம் தாங்காமல் சரத்குமார் மனமுடைந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் இன்று காலை இறந்தார்.

    திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சபரிமலை சென்று சாமி தரிசம் செய்த கனகதுர்கா, அவரது மாமியார் தாக்கியதில் படுகாயடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Sabarimalatemple #Kanakadurga
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 2-ந்தேதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வந்த ஆச்சாரத்தை மீறி சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்த முதல் இளம்பெண்கள் என்ற சிறப்பை இவர்கள் பெற்றனர்.

    ஆனாலும் இவர்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தது ஐயப்ப பக்தர்களிடையே ஆத்திரத்தை எற்படுத்தியது. அவர்களுக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த இளம்பெண்களுக்கு மிரட்டல்களும் வந்தன. இதனால் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

    சபரிமலை சென்று திரும்பிய பிறகு கனகதுர்கா தனது உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில் நிலைமை சற்று சகஜம் ஆனதை தொடர்ந்து கனகதுர்கா நேற்று அதிகாலையில் மலப்புரம் அங்காடிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டில் அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி, 2 குழந்தைகள் மாமியார் சுமதி ஆகியோர் இருந்தனர். கனகதுர்காவை பார்த்ததும் ஆவேசம் அடைந்த மாமியார் சுமதி, அவரை வீட்டிற்குள் வர வேண்டாம் என்று கூறி தடுத்தார். ஆச்சாரத்தை மீறி சபரிமலைக்கு சென்றது ஏன்? என்று கூறி அவரை கண்டித்தார்.

    அதற்கு தான் ஆச்சாரத்தை மீறவில்லை என்று கனகதுர்கா கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் ஆவேசம் அடங்காத சுமதி, வீட்டில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக கனகதுர்காவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கனகதுர்கா மயங்கி விழுந்தார்.

    மேலும் கனகதுர்கா அங்கு வந்த தகவல் அறிந்த ஐயப்ப பக்தர்களும் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கனக துர்காவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தன்னை மாமியார் தாக்கியது பற்றி கனகதுர்கா, போலீசில் புகார் செய்தார். போலீசார் 324-வது பிரிவின்படி மாமியார் சுமதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சுமதியும், தன்னை கனகதுர்கா தாக்கியதாக புகார் செய்துள்ளார். அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Sabarimalatemple #Kanakadurga



    சாத்தூரில் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவர் மற்றும் உறவினர்கள் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    சாத்தூர் நடுச்சூரங்குடியை சேர்ந்த ஜெயச்சந்திரகுமார் (வயது 27) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ஜெயலலிதா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

    அதன்பிறகு ஜெயச்சந்திரகுமார் வேலைக்காக செங்கல்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மதுரை ஐகோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில் திருமணத்தின் போது 18 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், வேலைக்காக செங்கல்பட்டு சென்ற கணவருக்கு அங்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தன்னிடம் பேச மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் உறவினர்கள் மூலம் பேசி, கூடுதலாக நகை, பணம் கொடுத்த பிறகும் ஜெயச்சந்திரகுமார் என்னை புறந்தள்ளுகிறார். இது பற்றி மாமனார் குருசாமி, மாமியார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜெயச்சந்திரகுமார் அவரது தந்தை குருசாமி, தாயார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தூர் நள்ளியை சேர்ந்த கற்பகவள்ளி (25) என்பவர், சாத்தூர் மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் க.ரெட்டியபட்டியை சேர்ந்த சங்கரகுமார் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நகை- பணம் வழங்கப்பட்டது.

    திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு எதுவும் கணவர் செல்லவில்லை. இந்த நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். சங்கரகுமார், அவரது தந்தை கணேசன், தாயார் முருகேஸ்வரி, உறவினர் மலர் விழி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    களக்காடு மற்றும் ஆறுமுகநேரியில் இளம்பெண் உள்பட 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள காடுவெட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். விவசாயி. இவரது மகள் ராதா (வயது 19). இவர் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் அடிக்கடி மடிக்கணினியை பார்த்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதா தனது மடிக்கணினியை பார்த்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் வீட்டு வேலை செய்யாமல் மடிக்கணினியை பார்த்துக் கொண்டு இருக்கிறீயே? என சத்தம்போட்டுள்ளனர்.

    இதில் மனமுடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷத்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை ராதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    பணகுடி அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்தவர் குணா (வயது 45). இவரது மனைவி செல்வம். குணாவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி செல்வம் பிரிந்து சென்றுவிட்டார்.

    இந்நிலையில் கடந்த 2-ந் தேதி களக்காடு பழைய பேருந்து நிலையம் அருகே குணா வி‌ஷத்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவங்கள் குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏரல் அருகே உள்ள இடையர்காட்டை சேர்ந்தவர் நயினார். இவரது மகன் நயினார் செல்வம் (வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணகாகவில்லை. இவர் கடந்த சில மாதங்களாக சரியாக வேலை செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர் கடந்த 27-ந் தேதி முக்காணி நேதாஜி தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து அவர் வி‌ஷத்தை குடித்துவிட்டார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கும்பகோணத்திற்கு வங்கி பணி பயிற்சிக்காக வந்த வடமாநில பெண்ணை ஆட்டோவில் கடத்தி 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் பயிற்சி பணிக்காக வடமாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு கும்பகோணம் வந்தார்.

    ஏற்கனவே டெல்லியில் இந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த அந்த பெண் உயர்பதவி பயிற்சிக்காக கும்பகோணத்தில் உள்ள வங்கிக்கு பயிற்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரெயிலில் வந்த அந்த இளம் பெண் நேற்று முன்தினம் நள்ளிரவு கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இறங்கினார். பின்னர் தான் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்ல ஒரு ஆட்டோவில் ஏறி அந்த ஓட்டலுக்கு செல்லுமாறு அந்த ஆட்டோ டிரைவரிடம் கூறியுள்ளார்.

    அந்த இளம்பெண் அரை குறை ஆடை அணிந்த நிலையில் தனியாக வந்துள்ளதால் அந்த ஆட்டோ டிரைவரின் மனதில் சபலபுத்தி ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணை எப்படியாவது கடத்தி கொண்டு போய் அடைய வேண்டும் என்று முடிவு செய்தார்.

    பின்னர் அந்த பெண்ணை தனது ஆட்டோவில் ஏற்றி கொண்டு கும்பகோணம் நகரத்தை சுமார் 1 மணி நேரமாக சுத்தி சுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த பெண் கூறிய ஓட்டலுக்கு போகவில்லை. மேலும் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து தனியாக ஒரு வடமாநில பெண் சிக்கியுள்ளார் என்ற தகவலையும் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவரின் நண்பர்கள் 3 பேர், 2 மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழ் தெரியாத அந்த இளம்பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் தன்னை ஏமாற்றி அழைத்து செல்வதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

    ஆனால் அந்த டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றுள்ளளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆட்டோவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள் அந்த பெண்ணை மீண்டும் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஒரு மறைவான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு சென்ற 4 பேரும் அந்த இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து தங்களது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து எங்கு செல்வது என்று தெரியாமல் மீண்டும் ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசில் கூறியுள்ளார்.

    இதை கேட்ட ரெயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பெண் காயமடைந்ததை அறிந்து அவரை கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். உடனே இது குறித்து சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் வடமாநில இளம்பெண்ணை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் யார்? எந்த இடத்திற்கு அழைத்து சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா மூலமாக அந்த பெண் எந்த ஆட்டோவில் சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கி பயிற்சி பணிக்காக வந்த வடமாநில பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வி‌ஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    அரக்கோணம் இஞ்சிபுத்தூர் அன்னை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 33). வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவர் போலீசாரிடம், எனது கணவர் என்னை தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சசிகலா திடீரெனத் தான் கையில் மறைத்து வந்திருந்த வி‌ஷத்தை எடுத்துக் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த போலீசாரும், சசிகலாவின் சகோதரரும் ஓடி வந்து வி‌ஷ பாட்டிலை தட்டி விட்டனர்.

    போலீசார், சசிகலா வைத்திருந்த மனுவை வாங்கி கொண்டனர். அவரை, அருகில் உள்ள பென்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எனது கணவர் பெயர் குமார். கஸ்பாவில் வசிக்கிறார். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். அவருக்கு, குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மதுபானம் குடித்து விட்டு வந்து, என்னிடம் தகராறு செய்வார். நான் பல நாட்கள் பொறுமையாக இருந்தேன். எனினும் அவர் எல்லை மீறி பல தொந்தரவுகளை செய்தார். நான் எனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டேன். கணவரை பிரிந்து 6 மாதங்கள் ஆகின்றன. தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை மிரட்டுகிறார்.

    எனது பெற்றோரையும் அவர் தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் அவரது நண்பர்களிடம் எனது செல்போன் எண்ணை கொடுத்து, ஆபாசமாக பேசுமாறு தூண்டி விடுகிறார். அவர்களும் ஆபாசமாக பேசுகிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தால், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலாவின் கணவர் குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சேலம் பழைய சூரமங்கலத்தில் சமையல் செய்த போது எதிர்பாரத விதமாக இளம்பெண் மீது தீப்பிடித்து உடல் கருகிய நிலையில் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேலம்:

    சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நேரு. இவரது மனைவி கீதா (வயது 38).

    இவர் நேற்று மண் எண்ணை ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. மள மள வென பிடித்த தீ அவரது உடல் முழுவதும் பரவியது.

    இதனால் உடல் கருகிய அவர் வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    90 சதவீதம் உடல் கருகிய நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் உடல் கருகிய கீதாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். #tamilnews
    நெல்லித்தோப்பில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு கண்ணார வீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் திருமணம் உள்ளிட்ட விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்து தரும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது மனைவி லட்சுமி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த லட்சுமி ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவரது கணவர் சுரேஷ் தடுத்து நிறுத்தினார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பிய லட்சுமி பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு ஸ்டவ் அடுப்புக்கு பயன்படுத்தும் டீசலை உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் லட்சுமி அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து தீயை அணைத்து உடல் கருகிய நிலையில் லட்சுமியை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சியில் கழிவு நீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி வரகனேரி காமராஜர் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 38).
    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டின் வாசல் வழியாக மனோரஞ்சிதத்தின் வீட்டின் கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கழிவு நீர் கால்வாய் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில் இது தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் சரண்யா, வீரராஜ், சுகன்ராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் மனோ ரஞ்சிதத்தை  சராமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பன், சுகன்ராஜ் ஆகிய 2பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளசரண்யா, வீரராஜை தேடி வருகிறார்கள். #tamilnews 
    தேனி அருகே செல்போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் மாயமானார்.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை மகள் அமுதா(வயது14). இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு விரக்தி அடைந்தார்.

    வீட்டில் இருந்த அமுதா திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சின்னத்துரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    பாளை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி அருகே உள்ள சவுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கடல் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது வேனில் பாளை அருகே உள்ள குமந்தானூரை சேர்ந்த 17 வயது இளம்பெண். அந்த நிறுவனத்துக்கு தினசரி வேலைக்கு சென்று வந்தார். அப்போது கருப்பசாமிக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

    அப்போது கருப்பசாமி எப்படியும் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி அந்த இளம்பெண்ணை கற்பழித்தார். தற்போது கருப்பசாமி அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து பேசுவதை நிறுத்தி விட்டாராம்.

    இதனால் அந்த இளம்பெண் பாளை தாலுகா மகளிர் போலீசில் புகார் செய்தார். பெண் போலீசார் விசாரணை நடத்தி கருப்பசாமி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். #tamilnews
    வாலாஜா அருகே திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    ஆற்காடு தாஜ்புரா பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆற்காடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (26). 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    இதையடுத்து அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    சில நாட்களுக்கு பிறகு இளம்பெண் ராஜசேகரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயபடுத்தி வந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் பேசுவதையும், பார்ப்பதையும் முற்றிலும் தவிர்த்து வந்தார்.இளம்பெண் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது தான் தெரியவந்தது. ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி 1 மகன் 2 மகள்கள் உள்ளனர் என்று அதிர்ச்சியடைந்த இளம்பெண்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×