search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்மருவத்தூர்"

    மேல்மருவத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் நகை  மற்றும்  பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரை அடுத்த கேசவராயன்பேட்டை, லட்சுமி நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். மேல்மருவத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் மகன் கடந்த மாதம் கோவில்பட்டியில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்களை அழைத்து வருவதற்காக பாலமுருகன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை பாலமுருகன் குடும்பத்துடன் திரும்பி வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைத்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    பாலமுருகன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகை- பணத்தை சுருட்டி சென்றுள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து பாலமுருகன் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேல்மருவத்தூர் அருகே விபத்தில் டீக்கடைக்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் அடுத்து சோத்துப்பாக்கத்தில் இருந்து சித்தாமூருக்கு ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் இருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஷேர் ஆட்டோ மீது உரசியது.

    இதில் நிலை தடுமாறி ஓடிய ஆட்டோ எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தறிகெட்டு ஓடிய ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் மணிமாறன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான மதுரை மதுராந்தகத்தை அடுத்து அவுரிமேடு பகுதியை சேர்ந்தவர். டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோவிலுக்கு பக்தர்கள் கார்த்திகை மாதம் தொடங்கி சக்தி மாலை அணிந்து, அம்மனுக்கு இருமுடி எடுத்து செல்லும் விழா தொடங்கியது.
    மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவுக்கு முன்பாக கார்த்திகை மாதம் தொடங்கி சக்தி மாலை அணிந்து, அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான இருமுடி விழா இன்று தொடங்கி ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 21-ந் தேதி வரை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஏற்றும் தைப்பூச ஜோதி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    இருமுடி விழா இன்று அதிகாலை மங்கள இசையுடன் தொடங்கியது. காலை 5.45 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது.



    இதைத் தொடர்ந்து இருமுடி அபிஷேகத்தை லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். முதலில் 9 சிறுமிகளும், 9 தம்பதிகளும் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத் தலைவர் கோ.ப.செந்தில் குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் ஆன்மிக இயக்கத்தின் பல்வேறு குழுவினர் செய்திருந்தனர்.

    ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூரில் ரெயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூரில் ரெயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மதுரை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆடிப்பூர விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தாம்பரம்- நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 1.24 மணிக்கும், எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 3.04 மணிக்கும், எழும்பூர்- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 10.29 மணிக்கும், எழும்பூர்- மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 11.04 மணிக்கும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

    இதேபோல் மதுரை- எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் அதிகாலை 2.59 மணிக்கும், செங்கோட்டை - எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.59 மணிக்கும், மேல்மருவத்தூரில் 10-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை நின்று செல்லும்.

    மதுரை-எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இரவு 12.49 மணிக்கு மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×