search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104872"

    ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் நின்றபடி பணத்தை தூக்கி வீசிய வாங் சிங் கிட் என்ற வாலிபரை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி போலீசார் கைது செய்தனர்.
    ஹாங்காங் :

    ஹாங்காங்கை சேர்ந்த வாலிபர் வாங் சிங் கிட் (வயது 24). இளம் தொழில் அதிபரான இவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரர். இணைய பணமான ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்து பல கோடிகளை சம்பாதித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இவர் ஹாங்காங்கின் ‌ஷாம் ‌ஷு போ என்கிற மாவட்டத்துக்கு தன்னுடைய ஆடம்பர காரில் சென்றார். பின்னர் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற வாங் சிங் கிட், அங்கு நின்றபடி பணத்தை தூக்கி வீசி எறிந்துள்ளார்.

    இதனால் அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை சேகரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதற்கிடையே வாங் சிங் கிட் பணத்தை வீசி எறிந்தது மற்றும் மக்கள் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை எடுத்துச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி வாங் சிங் கிட்டை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சில மோசடி புகார்கள் இருப்பதாக தெரிகிறது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.
    காங்கேயம்:

    காங்கயம் பழையகோட்டை சாலையில் உள்ள நாட்டார்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 40) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையத்திற்கு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.

    நேற்றுகாலை 8 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டு முன்பு இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்களில் இருந்த துணி, பொருட்களை வெளியே எடுத்து வீசப்பட்டிருந்தது. மேலும் நகை பணம் ஏதும் கிடைக்காததால், கட்டிலில் இருந்த மெத்தையை அகற்றி இதன் அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். 
    தஞ்சையில் பஸ் பயணிகளிடம் பணத்தை திருடிய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பணம், நகை, மணிபர்சை பறிமுதல் செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சேர்மானநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 40). இவர் நேற்று மதியம் அம்மாபேட்டையில் இருந்து தஞ்சைக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். பஸ் வண்டிக்காரத்தெரு பாலத்தில் வந்தபோது அந்த பஸ்சில் பயணம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த சித்ரா (32). என்பவர் கோமதி வைத்திருந்த மணிபர்சை நைசாக திருடிக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்க முயன்றார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோமதி கூச்சல் போடவே டிரைவர் விஜய் பஸ்சை நிறுத்தி விட்டார். மற்ற பயணிகள் சித்ராவை பிடிக்க முயன்றபோது அவர் பயணிகளை தள்ளிவிட்டு கீழே இறங்கி ஓடிச்சென்று அந்த வழியாக சென்ற மற்றொரு பஸ்சை நிறுத்தி அதில் ஏறி சென்றார். அதனை பார்த்த டிரைவர் விஜய் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்று நிறுத்தினார். பின்னர் அந்த பஸ்சில் இருந்த சித்ராவை பிடித்தனர்.

    இதையடுத்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசாரிடம் சித்ராவை ஒப்படைத்தனர். போலீசார் சித்ராவிடம் விசாரணை செய்தபோது அவர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை, பணம் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கோமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சித்ராவை கைது அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் மணிபர்சை பறிமுதல் செய்தனர்.

    ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...
    எந்த விஷயத்திலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். பொருளாதாரத்திலும் அப்படித்தான். சேமிப்பு, முதலீடுதான் நம் பொருளாதார அஸ்திவாரத்தை வலுவாக்கும்.

    சேமிப்பு என்கிறபோது, உலகப் பெரும் பணக்காரர் வாரன் பபெட் கூறிய மந்திர வார்த்தைகளைப் பின்பற்றினால் மாயாஜாலம் நிகழும். அதாவது, ‘செலவு செய்தபின் மிஞ்சிய பணத்தைச் சேமிக்காமல், சேமித்தபிறகு மிஞ்சும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்’ என்கிறார், பபெட்.

    அதேபோல, ‘தூங்கும்போதும் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய வழியை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால், சாகும்வரை நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்றும் பபெட் சொல்கிறார்.

    உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா?

    பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் உங்களிடம் உள்ள பணத்தை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் அவற்றில் ‘ரிஸ்க்’ உண்டு. எனவே, அவை போன்று ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...

    உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஆண்டுக்கு 8 சதவீதம் லாபம் அளிக்கக்கூடிய ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடத்துக்கு முதலீடு செய்யுங்கள்.

    இப்படிச் செய்யும்போது நீங்கள் முதலீடு செய்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

    இதுவே இரண்டாம் வருடம் முடியும்போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் 8 சதவீதக் கூட்டு வட்டி கிடைக்கும். இப்படியே தொடர்ந்து 10 வருடம் செய்திருக்கும்போது உங்கள் பணம் இரட்டிப்பாகி 2 லட்சத்து 15 ஆயிரத்து 892 ரூபாயாக இருக்கும்.

    ஆனால் தற்போது பெரும்பாலான வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 6.8 சதவீத வட்டி விகித லாபத்தை மட்டுமே அளிக்கின்றன. எனவே 8 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் அளிக்கும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது எளிமையாக 10 வருடத்தில் இரட்டிப்பாக்க முடியும்.

    வீடு, கார் அல்லது அது போன்றவற்றை நீங்கள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும்போது பணத்தை இப்படிச் சேமிக்கும் போது எளிதாக ரிஸ்க், பயம் ஏதுமில்லாமல் முதலீட்டைப் பெருக்கலாம்.

    மொத்தமாக பெரும் தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது? அவர்கள், ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாத தவணையாக முதலீடு செய்து தமது பணத்தின் மீது லாபம் பெற முடியும். 
    பெரியார் பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன்னுவேல். பெரியார் பல்கலைக்கழக ஊழியர். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் 2-வது குழந்தையான ஹெம்ரிஸ்சின் (வயது 2) இடுப்பு பகுதியில் ஒரு கட்டி உள்ளதால் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி வந்து சென்றனர்.

    வழக்கம் போல கடந்த 7-ந் தேதி பென்னுவேல்-சுதா தம்பதியினர் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு சேலத்தில் உள்ள அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனர். கடந்த 3 நாட்களாக தங்கியிருந்து குழந்தைக்கு சிகிச்சை பெற்ற அவர்கள் நேற்றிரவு மீண்டும் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அங்கிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது. கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கிருந்த பணம்-நகையை கொள்ளையடித்து சென்றதை அறிந்த பொன்னுவேல் மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூரையை பிரித்து வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தை ஹேம்ரிஸ்சுக்கு சிகிச்சைக்காக சீட்டு எடுத்து வீட்டில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பொன்னுவேல் தவித்து வருகிறார். எனவே கொள்ளையர்களை பிடித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புட்லூரில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பலுக்கு நகை-பணம் சிக்காததால் ஆத்திரத்தில் வீட்டை தீ வைத்து எரித்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாசம் நகரைச் சேர்ந்தவர் பிரபாகர். சென்னை ரெயில்வேயில் சட்டப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மாலையில் பிரபாகர் திரும்பி வந்தபோது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் கிழித்து வீசப்பட்டு கிடந்தன.



    மேலும் பொருட்களை குவித்து வைத்து வீட்டுக்கு தீ வைத்து எரித்து இருந்தனர். தீ பெரிய அளவில் பிடிக்காமல் உடனடியாக அணைந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பலுக்கு நகை-பணம் சிக்காததால் ஆத்திரத்தில் வீட்டை தீ வைத்து எரித்து உள்ளனர்.

    இதையடுத்து அறையில் இருந்த டி.வி., 2 லேப்-டாப் மற்றும் மோட்டார்சைக்கிளை திருடி மர்ம கும்பல் தப்பி இருப்பது தெரிய வந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு கொள்ளை கும்பல் தீ வைத்த சம்பவம் புட்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    அவினாசி அருகே பனியன் தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசி:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் தனது மனைவி மாதவியுடன் அவினாசி அருகே உள்ள ஏ.வி.டி லே அவுட் எக்ஸ்டன்சன் பகுதியில் தங்கி உள்ளார். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வெள்ளத்துரை வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மாதவி உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை வீட்டிற்கு திரும்பிய மாதவி நகை-பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவினாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வாடகை பணம் தருவதாக கூறி காரை திருடி சென்றவரை பெருந்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    ஈரோடு, பெரிய சேமூர், நந்தவனத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத். இவரது மகன் சபீர் அகமது (வயது 33).

    இவர் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த காரை கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்த ராஜாராம் என்கிற ராஜா அடிக்கடி வாடகைக்கு எடுத்தார்.

    அந்த வாடகை பணம் பாக்கி தரவேண்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி ராஜாராமை சபீர் அகமது தொடர்பு கொண்டார்.

    பெருந்துறைக்கு நேரில் வந்து வாடகை பாக்கி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய சபீர் அகமது பெருந்துறைக்கு காரில் சென்றார்.

    புதிய பஸ் நிலையம் பகுதியில் காரை சாவியுடன் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த காரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராஜாராமிற்கு போனில் தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரின் உரிமையாளருக்கு சபீர் அகமது தகவல் தெரிவித்தார்.

    பல்வேறு இடங்களில் காரை தேடியும் கிடைக்கவில்லை. எனவே கார் திருடப்பட்டது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ், ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், காந்தி மற்றும் லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை பெருந்துறை டோல்கேட் அருகேயுள்ள வாய்ப்பாடி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். காரை ஒட்டிவந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    எனவே அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நூதன முறையில் சபீர் அகமதுவை பெருந்துறைக்கு வரவழைத்து காரை திருடிச் சென்றதை ராஜாராம் என்கிற ராஜா ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த அவர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர். #tamilnews
    உத்தங்குடியில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    உத்தங்குடி வளர் நகரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 51). மாட்டுத்தாவணியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பீரோவில் இருந்த பணம், 2 பவுன் நகை, 4 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பினான்.

    இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை தெற்குவெளி வீதியில் பட்டாணி கோவில் தெற்கு சந்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (41). நேற்று இரவு இவர், தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

    சத்தம் கேட்டு விழித்த சுப்பிரமணியன் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார்.

    போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் சிம்மக்கல் பச்சையா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் முத்துமணி (21) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கீரைத்துறை தாயுமானவர் நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் மணிகண்டன் (23). நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுப்பிரமணியபுரம் அரிஜன காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் திவாகரன் (20) என் பவர் வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடினார்.

    இது குறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் திவாகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம்- நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    சென்னையைச் சேர்ந்தவர் முத்து நதியா (வயது 25). இவர் மதுரை செல்வதற்காக தனது சகோதரருடன் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் கைப்பை வைத்திருந்தார். அதில் 4 பவுன் நகை மற்றும் பணமும் வைத்திருந்தார்.

    திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்த போது கைப்பையை பார்த்தார். அப்போது நகை மற்றும் பணம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை மர்ம நபர் துணிகரமாக அபேஸ் செய்துள்ளார்.

    இது குறித்து முத்து நதியா திண்டுக்கல் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    ரெயிலில் துளை போட்டு கொள்ளையடித்த ரூ.5.78 கோடி பணத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே பங்கு பிரித்து செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி இரவு புறப்பட்ட ரெயிலில் இருந்த சரக்கு பெட்டியில் ரூ.342 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டது.



    இந்த ரெயிலின் மேற்கூரையில் கொள்ளையர்கள் துளையிட்டு மரப்பெட்டியில் இருந்த ரூ.5.78 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சேலம்-விருத்தாச்சலம் இடையே இந்த கொள்ளை நடந்தது தெரிய வந்தது.

    இஸ்ரோ உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர்சிங் தலைமையிலான கும்பல் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சென்னையில் பதுங்கி இருந்த மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தினேஷ், ரோகன் பார்தி ஆகிய 2 பேரை கடந்த மாதம் 12-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மோஹர் சிங், அவனது கூட்டாளி கள் ருசிபார்தி, கிருஷ்ணா, மகேஷ்பார்தி, பிராஜ்மோகன் ஆகிய 5 பேரை தமிழக சி.பி.சி.ஐ.டி, போலீசார் கடந்த 5-ந் தேதி கைது செய்தனர்.

    கைதான 5 பேரையும் சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவர்களிடம் விசாரணை நடத்த 15 நாள் போலீஸ் காவல் கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

    5 பேரையும் 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்களிடம் போலீசார் நேற்று நடத்திய விசாரணையின் போது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே பங்கு பிரித்து செலவு செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ஆனால் கொள்ளை சம்பவம் நடந்த 3 மாதத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் முழு பணத்தையும் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி அவர்களிடம் போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையடித்த பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும், சொத்துக்கள் வாங்கினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த கொள்ளை சம்பவம் சேலம்-விருத்தாசலம் இடையே நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட கொள்ளையர்களை அந்த ரெயில் நிலையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று அதிகாலை 3 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் இருந்து விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு கொள்ளையர்களை ஒரு வேனில் போலீசார் அழைத்து வந்தனர்.

    பின்னர் கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது? எந்த இடத்தில் நடத்தப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில் நிலைய 1-வது நடைமேடையில் வைத்து கொள்ளையர்கள் நடித்து காட்டினர். அப்போது அவர்கள் பல்வேறு தகவல்களையும் கூறினர்.

    பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு கொள்ளையர்களை அழைத்து சென்றனர். அங்கு விசாரணை முடிந்த பின்னர் அவர்கள் அனைவரும் சேலம் ரெயில் நிலையத்துக்கு விசாரணை நடத்த புறப்பட்டனர். #SalemTrainRobbery #TrainRobbery
    கோபியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.80 ஆயிரம் எடுத்து சென்ற முதியவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பட்டதாரி வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்ட கோபி தமிழ் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 70) ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர் நேற்று மதியம் கோபியில் உள்ள ஒரு பாங்கியில் ரூ.80 ஆயிரம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மர்ம ஆசாமி ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    திடீரென அவர் திருநாவுக்கரசை மிரட்டி அவரிடம் இருந்த 80 ஆயிரம் பணத்தை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்..திருடன்..” என சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர்.

    அவனை மடக்கி கையும்- களவுமாக பிடித்த காளீஸ்வரன், சக்திகுமார், வில்லியம்ஸ் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் கோபி போலீசில் ஒப்படைத்தனர்

    அந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனது பெயர் அருண்சுந்தர் என்றும் பவானி அருகே உள்ள கொத்தம்பாளையத்தை சேர்ந்தவர் என்றும் மேலும் அவன் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் தெரிய வந்தது.

    அருண்சுந்தர் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர் ஆக பணிபுரிந்து வந்தான். 6 மாதமாக அவன் வேலைக்கு போகவில்லை.

    இந்த நிலையில் தீபாவளிக்கு செலவுக்கு பணம் தேவைப்படவே இந்த வழிப்பறியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் பட்டதாரி வாலிபர் அருண்சுந்தர் கோபி வேலுமணி நகரில் செல்வராஜ் என்பவரது வீட்டில் வீடு வாடகைக்கு உள்ளதா? என்று கேட்டு உள்ளான். அவர் வீடு காலி இல்லை என்று கூறி உள்ளார். அவரது பின்னால் நைசாக வீட்டுக்குள் புகுந்த அருண்சுந்தர் அங்கிருந்த ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள “லேப்டாப்”பையும் திருடி உள்ளான் இதுவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×