என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 105098"
- உற்சவ கணபதிக்கு கடந்த 12 நாட்களாக பல்வேறு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது.
- விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக தொடர்ந்து 14 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி உற்சவ கணபதிக்கு கடந்த 12 நாட்களாக பல்வேறு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது.
13-ம் நாளான நேற்று மதியம் மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவர் கணபதி, மாணிக்க விநாயகர் மூலவருக்கும் திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முள்ளி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, கரும்புச்சாறு, திராட்சை, விளாம்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட பழ வகைகள், அன்னாபிஷேகம், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும், அதை தொடர்ந்து நர்த்தன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பின்னர் தீபாராதனை முடிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவில் மாணிக்க விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுபெறுகிறது.
- ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்.
ஆவணி மாதத்தில் பல தெய்வங்களுக்குரிய பண்டிகை தினங்கள் வருகின்றன. இந்த ஆவணி மாதத்தில் தெய்வங்களுக்குரிய வழிபாடு மற்றும் விரதம் இருப்பதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயமான வெற்றியை பெறும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆவணி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும். புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.
- விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.
- இந்த கோவிலில் தேங்காய் மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.
மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரே உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.
ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால், கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை கரு. கருப்பையா செய்து வருகிறார்.
- ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார்.
- விழுப்புரம் அடுத்த தீவனூரில் நெற்குத்தி விநாயகர், லிங்க வடிவில் அருள்கிறார்.
மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது, திருபுவனம் கோட்டை. இங்கு விநாயக கோரக்கர் அருள்பாலிக்கிறார். நோய்களை தீர்ப்பதிலும், சனி தோஷம் நீக்குவதிலும் இந்த விநாயகர் வல்லவர். விநாயகர் வடிவத்தில், கோரக்க சித்தர் அருள்பாலிப்பதால் இவருக்கு 'கோரக்க விநாயகர்' என்று பெயர்.
ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன புண்ணிய காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும் உத்திராயன காலங்களில் வடக்குப் பகுதியிலும் தன்னுடைய கதிர்களைப் பாய்ச்சி, சூரியன் இந்த விநாயகரை வணங்குகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் சிவலிங்க ஆவுடையாரின் மேல், வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திசையை நோக்கி விநாயகர் வீற்றிருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ளது, மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்துப் போகும் காலங்களில், இவரது உடலில் மிளகை அரைத்துத் தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.
விழுப்புரம் அடுத்த தீவனூரில் நெற்குத்தி விநாயகர், லிங்க வடிவில் அருள்கிறார். இந்த லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.
நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது, ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவரது சன்னிதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இங்கு சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள், நடராஜப் பெருமானுடன் பஞ்சமுக ஹேரம்ப கணபதி திருவீதியுலா வருகிறார்.
கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோவிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதி வீற்றிருக்கிறார். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
சிதம்பரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது, திருநாரையூர். இங்கு நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த பொள்ளாப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர் இவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார் என்பது, இவரது பெயரின் விளக்கம் ஆகும்.
- லால்ராஜா கணபதியை தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.
- நாளை(வெள்ளிக்கிழமை) ஆனந்த சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற லால்ராஜா கணபதியை தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை செலுத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் அங்கு காணிக்கையாக ரூ.3 கோடி அளவில் தங்கம், வெள்ளி, பணம் போன்றவை பெறப்பட்டது.
இந்தநிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆனந்த சதுர்த்தியையொட்டி லால்பாக் ராஜா கணபதி சிலை கரைப்பிற்காக ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மண்டல் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
- சங்கரன்காவு பகுதியில் 7 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை
- ஊர்வலம் வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கியது.
கன்னியாகுமரி:
தக்கலை ஒன்றியம் பத்மநாபபுரம் நகரம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று 153 ஊர்களில் விநாயகர் சிலைகள் பூஜையில் வைக்கப்பட்டது.
இந்த சிலைகள் குமாரபுரம், விலவூர், கோத நல்லூர், சடையமங்கலம், திருவிதாங்கோடு, இரணியல், முளகு மூடு, திக்கணங்கோடு,வாழ்வச்ச கோஷ்டம், மருதூர்குறிச்சி, கல்குறிச்சி, முத்தல குறிச்சி, கப்பியறை ஆகிய உள்ளாட்சி பகுதிகளில் உள்ள ஊர்களில் வைக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சங்கரன்காவு பகுதியில் 7 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை பூஜையில் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் பூஜையில் வைக்கப்பட்டி ருந்த அனைத்து விநாயகர் சிலைகளும் அலங்கரிக்கப் பட்ட வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகம் கொண்டுவரப்பட்டது.
அங்கு தொடங்கிய ஊர்வலமானது மணலி, மேட்டுக்கடை , தக்கலை பழைய பஸ் நிலையம் , கல்குறிச்சி , இரணியல், திங்கள் சந்தை , லட்சுமிபுரம் வழி மண்டைக்காடு கடற்க ரையை வந்து அடைந்தது. பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சுதேசன் உட்பட ஏராளமான போலீ சார் பங்கேற்று இருந்தனர். தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டது.
- அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நடந்தது.
- முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது
கன்னியாகுமரி:
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக் குட்பட்ட அனைத்து ஊர்களிலும் கடந்த 31-ந்தேதி 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் நேற்றுபிற்பகல் 2 மணிக்கு சுசீந்திரத்துக்கு கார், வேன், லாரி, மினி லாரி, டெம்போ, ஜீப், டிரக்கர் போன்ற வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு மாலை 3 மணிக்கு சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில் முன்பு இருந்து இந்த 108 விநாயகர் சிலைகளும் கன்னியாகுமரிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலம் வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, பொற்றையடி, மந்தாரம்புதூர், அச்சங்குளம், கொட்டாரம், பெருமாள்புரம், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், பழத்தோட்டம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு வழியாக மாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையை சென்றடைந்தது.
108 விநாயகர் சிலைகளுக்கும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நடந்தது.
- கடற்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நாகர்கோவில்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. இதேபோல் வீடுகள், கோவில்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.
பிரதிஷ்டை செய்யப்ப ட்ட சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
முதல் நாள் சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டது. நேற்று 2-வது நாளாக இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டது.
3-வது நாளான இன்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் 10 இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து இன்று மதியம் விநாயகர் ஊர்வலம் புறப்படுகிறது. பீச் ரோடு வழியாக சங்குத்துறை கடலில் சிலைகள் கரைக்கப்படுகிறது.
இதையடுத்து நாகராஜா கோவில் திடல் மற்றும் சங்குத்துறை கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது. சுசீந்திரத்தில் இருந்து மாலை 3 மணிக்கே விநாயகர் சிலை ஊர்வலம் புறப்படுகிறது. அங்கிருந்து புறப்படும் ஊர்வலம் வழுக்கம்பாறை, ஈத்தன்காடு, ஒற்றையடி, கொட்டாரம், மகாதா னபுரம், பழத்தோட்டம் வழியாக கன்னியாகுமரி திருவேணி சங்கமம் கடற்க ரையில் கரைக்கப்படுகிறது.
இதேபோல் வைகுண்ட புரம், திங்கள் நகர், பார்வதிபுரம், தோவாளை, மேல்புறம் மிடாலம், குலசேகரம், கருங்கல் உள்பட 10 இடங்களில் இருந்து இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 10 இடங்களில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு போலீசார் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பட்டாசு வெடிக்கக்கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
- கன்னியாகுமரி, குழித்துறை ஆற்றில் கரைக்கப்படுகிறது
- விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அரசின் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்
நாகர்கோவில்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் 1250-க்கு மேற்பட்ட இடங் களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோவில்கள், வீடுகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலை களை பிரதிஷ்டை செய்து உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. போலீசாரும் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று முதல் மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்ப டுகிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வாகம் 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது. கன்னியாகுமரி, பள்ளிகொண்டான் அணை, வெட்டுமடை, மிடலாம், தேங்காய்பட்டணம், திற்பரப்பு அருவி, தாமிர பரணி ஆறு உள்பட 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது.
இன்று சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல் லப்பட்டு கரைக்கப்படு கிறது. இதை யடுத்து நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பிரதிஷ்டை செய் யப்பட்டிருந்த சிலைகள் இன்று காலையில் பூஜை கள் செய்யப்பட்டு பிறகு டிராக்டர் மற்றும் மினி டெம்போக்களில் ஏற்றி னார்கள். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவி லுக்கு நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வந்தனர். இங்கி ருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இன்று மாலை புறப்பட்டு செல்கிறது.
கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, கொட்டா ரம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது. அங்கு கடற்கரையில் சிலை களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் மேல்புறம் பகுதியில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம் குழித்துறை தாமிரபரணி ஆற்றிற்கு கொண்டு செல் லப்படுகிறது. அங்கு ஆற்றங்க ரையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கரைக்கப்ப டுகிறது. விநாயகர் சிலை கள் கரைக்கப்படும். கன்னி யாகுமரி, குழித்துறை தாமிர பரணி ஆறு பகுதிகளில் பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப் படை வசதிகள், மின்வி ளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது அரசின் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவு றுத்தி உள்ளனர். ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைப்பதற்கும் கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.
- அந்த சுலோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும்.
- தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.
எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் 'சுக்லாம்பரதரம்' சொல்வோம். இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த சுலோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும்.
சுக்லாம்பரதி, விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
பிரஸந்த வதநம் தியோயேத் சர்வ விக்நோப சாந்தயே
'சுக்லாம்பரதர' - வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
'விஷ்ணு' என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர். 'சசிவர்ண'- நிலா மாதிரி நிறம் உடையவர்.
'சதுர்புஜ' - நான்கு கை உள்ளவர்.
'பிரஸந்த வதந'- நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது. இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.
தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.
மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது. மேலும் சிரசில் இருக்கும் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.
- முந்தி விநாயகர் 19 அடி 10 அங்குலம் உயரமும், 11 அடி 10 அங்குலம் அகலமும் கொண்டவர்.
- ராகு-கேது தோஷம், நவக்கிரக தோஷம் விலக இந்த விநாயகரை வணங்கலாம்.
கோயம்புத்தூர் புலியகுளத்தில் அமைந்துள்ளது முந்தி விநாயகர் திருக்கோவில். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான விநாயகரை இங்கே தரிசிக்கலாம்.
இங்கு அருளும் விநாயகப் பெருமானின் தும்பிக்கை, வலம் சுழிந்து காணப்படுகிறது. நான்கு கரங்களுடன் அருளும் இந்த விநாயகர் தன்னுடைய வலது முன் கரத்தில் தந்தமும், வலது பின் கரத்தில் அங்குசமும், இடது முன் கரத்தில் பலாப்பழமும், இடது பின் கரத்தில் பாசக் கயிறும் தாங்கி காட்சி தருகிறார். தும்பிக்கையில் லட்சுமியின் அம்சமான அமிர்தகலசத்தை வைத்திருக்கிறார்.
தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்த முந்தி விநாயகர், தன்னுடைய வயிற்றில் வாசுகி பாம்பை கட்டியிருக்கிறார். இதனால் நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வணங்கினால், அந்த தோஷங்கள் விலகி ஓடும். இந்த விநாயகரின் வலது பகுதி ஆண்களைப் போலவும், இடது பகுதி பெண்களின் வடிவிலும் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இந்த விநாயகர் அரச மரத்தடியின் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் அருள் கடாட்சம் அதிகம். மேலும் இவரது இடது திருவடியில் சித்த லட்சுமியின் அம்சமான பத்ம சக்கரம் இருப்பதால், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குபவராக இருக்கிறார்.
இந்த முந்தி விநாயகரின் பிரமாண்டமான உருவம், 21 சிற்பிகளைக் கொண்டு, 6 ஆண்டுகால உழைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தேடி அலைந்து, முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்ற இடத்தில் இந்த விநாயகரின் உருவம் செய்வதற்காக மிகப்பெரிய பாறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அங்கேயே வைத்து இந்த சிலை செய்யப்பட்டு, புலியகுளம் கொண்டுவரப்பட்டது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்ட முந்தி விநாயகர், சுமார் 19 அடி 10 அங்குலம் உயரமும், 11 அடி 10 அங்குலம் அகலமும் கொண்டவர். சுமார் 190 டன் எடை கொண்டவர்.
இந்த விநாயகர் சிலையை நிலைக்கு கொண்டுவர எந்த இயந்திரத்தின் துணையும் பயன்படுத்தப்படவில்லையாம். முழுக்க முழுக்க மனித சக்தியை பயன்படுத்தியே, இதை அதன் மூலஸ்தானத்தில் நிலை நிறுத்தியிருக்கிறார்கள். எனவேதான் இந்த பிரமாண்ட முந்தி விநாயகரை நிலை நிறுத்துவதற்கு 18 நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக சாய்வு தளம் ஒன்றை உருவாக்கி, இரும்பு சங்கிலி மற்றும் உருளைகளின் உதவியோடு, கொஞ்சம் கொஞ்சமாக மூலஸ்தானத்தில் நிலைநிறுத்தி உள்ளனர்.
இந்த ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை முதல் நாள் அன்று, பல்வேறு வகையான சுமார் 3 டன் பழங்களைக் கொண்டு விநாயகருக்கு அலங்காரம் செய்கிறார்கள். அதே போல் விநாயகர் சதுர்த்தி அன்று, மூன்று டன் எடை கொண்ட பல்வகை பூக்களும், மலர் மாலைகளும் கொண்டு விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படும். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்பான முறையில் நடக்கிறது.
சரஸ்வதி பூஜை அன்று, குழந்தைகளுக்கு நாக்கில் பிரணவ வடிவமான விநாயகரின் மூல மந்திரத்தை எழுதி, கல்விப் பயணத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. ராகு-கேது தோஷம், நவக்கிரக தோஷம் விலகஇந்த விநாயகரை வணங்கலாம். மேலும் திருமண வரம் கைகூட, குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பம் ஒற்றுமையாக நடைபெறவும் இந்த விநாயகரை வணங்கிச் செல்கிறார்கள்.
சித்திரை முதல் நாள், தை முதல் நாள், ஆடி வெள்ளி, வளர்பிறை சதுர்த்தி தினங்களில் இந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் செய்கிறார்கள்.
கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவில்.
- வைகை ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
- 108 சிறிய சிலைகளை பெண்கள் தூக்கி கொண்டு வந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இந்து மக்கள் கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் 1 அடி முதல் 9 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.. அதில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சிலைகளை கரைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 19 பெரிய சிலைகள் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட 108 சிறிய விநாயகர் சிலைகள் நேற்று மாலை கீழமாசி வீதி விளக்குத்தூண் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக மாசி வீதியில் வலம் வந்தது. அதில் 108 சிறிய சிலைகளை பெண்கள் தூக்கி கொண்டு வந்தனர்.இதையொட்டி போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் விநாயகர் சிலைகள் அனைத்தும் சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றின் தென்கரை பகுதியை வந்தடைந்தன. அங்கு சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக வைகை ஆற்றில் கரைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கை முன்னாள் எம்.பி.யோகேஸ்வரன் மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்