search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • முருகப்பெருமானுக்கு எத்தனையோ விழாக்கள் வைபவங்கள் நடை பெற்றாலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பங்குனி உத்திர தினம் உகந்த தினமாக கருதப் படுகிறது.
    • பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சேலம் அம்மா பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சேலம்:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரத்திருவிழா உலகமெங்கும் வாழும் தமிழக மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானுக்கு எத்தனையோ விழாக்கள் வைபவங்கள் நடை பெற்றாலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பங்குனி உத்திர தினம் உகந்த தினமாக கருதப் படுகிறது.இந்தப் பங்குனி உத்திர தினத்தில் முருகனுக்கு சிறப்பு வைபவங்கள் சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும்.

    அனைத்து முருகன் ஆலயங்களிலும், சிவ ஆலயங்களிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்ப டுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி- அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடைபெறும்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சேலம் அம்மா பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை முதல் முருகப்பெருமானுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    திருமணத்தடை நீங்கவும், தொழில் வளர்ச்சி அடையவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் என பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிய முருகப்பெரு மானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே விரதம் இருந்த பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் உடல் முழுவதும் எலுமிச்சம் பழத்தை குத்திக்கொண்டு முருக பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடியது பக்தர்க ளிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து கோவிலில் முருகனுக்கு சிவாச்சாரி யார்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவ ருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில், முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் முருகன் பக்தர்க ளுக்கு காட்சி யளித்தார். சீலநாயக்கன்பட்டி ஊத்துமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திரதை யொட்டி காலையில் மூலவருக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம் ஜாகீர் அம்மா பாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சாமிக்கு பால், பன்னீர், தயிர், இளநீர் உள்பட 64 வகை மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவில், சேலம் பெரமனூரில் உள்ள கந்தசாமி ஆறுமுகன் கோவில், சேலம் வின்சென்ட் முத்துக்கு மாரசாமி கோவில், குமாரசாமிப்பட்டி சுப்பிரமணிய சாமி கோவில், சூரமங்கலம் முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் ஆறுபடையப்பன் கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

    • கீழவளவு வீரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    • அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள கீழவளவு வீரகாளியம்மன் கோவில் பங்குனி பூக்குழி திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தியும், பெரியமந்தையில் இருந்து ஊர்வலமாக சென்று வீரகாளியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் கீழவளவு, வாச்சம்பட்டி, குழிச்சேவல்பட்டி, வடக்கு வலையபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    • மதுரை சோழவந்தான் காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.
    • உச்சிமாகாளியம்மன் 4 ரத வீதிகளில் பவனி வந்து கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பூமேட்டுத்தெருவில் உள்ள உச்சிமாகாளியம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.முதல் நாள் கொடியேற்றம், 4-ம் நாள் திருவிளக்குபூஜை, 7-ம்நாள் பூச்சொரிதல் விழா, 8-ம் நாள் வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சந்தனக்காப்பு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    இரவு வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், 9-ம் நாளான இன்று இரவு உச்சிமாகாளியம்மன் சிம்மவாகனத்திலும், ஜெனகை மாரியம்மன் ரிஷபவாகனத்திலும், எழுந்தருளி 4 ரத வீதிகளில் பவனி வந்து வடக்கு காளியம்மன் கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெறும். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

    • விடிய விடிய விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
    • சுவாமிக்கு வாழைக்குலைகள் படையல் செய்யப்பட்டது.

    நீலகிரி

    முதுமலை பெண்ணையில் பொம்மதேவர் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடினர். பொம்மதேவர் கோவில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பெண்ணை பகுதியில் ஆதிவாசி மற்றும் மவுண்டாடன்செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வ கோவிலான பொம்ம தேவர் கோவில் வனப்பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொம்ம தேவருக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல குடும்பங்கள் சன்னக்கொல்லி பகுதியில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பொம்மதேவர் கோவில் திருவிழா பெண்ணை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விடிய விடிய விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 2-வது நாள் காலை 10 மணிக்கு அருள்வாக்கும், தொடர்ந்து தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சுவாமிக்கு வாழைக்குலைகள் படையல் செய்யப்பட்டது.

    • கோவில் திருவிழாவில் கடைகளை திடீரென அடைக்க சொல்லி போலீசார் பதட்டத்தை ஏற்படுத்தினர்.
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டார்.

    விருதுநகர்

    விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 1 வாரமாக நடந்து வருகிறது. இதில் விருதுநகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று முன்தினம் திருவிழா வில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான அக்னிசட்டி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை விடிய விடிய 21,101 பக்தர்கள் அக்னிசட்டிகளை எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பெண்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதுபோன்று பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைகள் 24 மணி நேரமும் திறக்கப் பட்டிருந்தன. மேலும் திருவிழாவை முன்னிட்டு பல புதிய கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை கூறி விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரி திடீரென நேற்று இரவு கடைகளை அடைக்க கோரி வியாபாரிகளை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் திருவிழா வியாபாரத்தை நம்பி விடிய, விடிய கடை திறப்பது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் திடீர் கெடு பிடியால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை திருவிழா நடந்த பகுதியில் பதட்டத்தை உருவாக்கியது. விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரியின் நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்தார்.

    மேலும் அதற்குரிய பாதுகாப்பு அளிக்குமாறும் போலீசாருக்கு உத்தர விட்டார்.

    • சாத்தூர் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    மேலும் அம்பாள் தினமும் சப்பரங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    திருநங்கைகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காளியம்மன் கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் தீ மிதித்தும், அலகு குத்தியும், அம்மன் வேடமிட்டும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாத்தூர் டி.எஸ்.பி வினோஜி தலைமையில், இன்ஸ் பெக்டர் செல்லப்பாண்டின், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி யன் மற்றும் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்துவந்து வழிபாடு

    திருச்சி:

    திருச்சி மாநகர், விமானநிலையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் கோவிலின் 40-ம் ஆண்டு திருவிழா கடந்த 24-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து அம்பாள் அக்னிகரகத்துடன் வலம் வருதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து இன்றையதினம் அம்பாள் சக்தி கரகத்துடன் பால்குடம் எடுத்துவரும் வைபவம் நடைபெற்றது.

    திருச்சி கொட்டப்பட்டு கருப்பண்ணசுவாமி கோவிலில் இருந்து 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், காவடியுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து அங்காள ஈஸ்வரிக்கு பால்அபிஷேகம் செய்து பக்திபரவசத்துடன் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

    • புத்தக திருவிழாவை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திகொள்ளுமாறு டத்தோ பிரகதீஸ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

    பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பெரம்பலூர் நகராட்சி திடலில் 8வது புத்தகத் திருவிழா கடந்த 25 ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.

    இந்த புத்தகத்திரு விழாவில் ஏழாம் நாளான இன்று (வெள்ளிக் கிழமை). ப்ளஸ் மேக்ஸ் குருப் ஆப் கம்பெனி சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பூலாம்பாடி டத்தோ பிரகதீஸ்குமார் கலந்து கொண்டு இன்றைய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேச உள்ளார்.

    மேலும் எழுத்தாளர் அகர முதல்வன் "அறம் எனும் பொறுப்பு" எனும் தலைப்பில் கருத்துரை வழங்க உள்ளார்.

    தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ் அமுதத்தமிழ் ஆடரங்கு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

    இது குறித்து டத்தோ பிரகதீஸ்குமார் தெரிவிக்கையில்.

    வாசிப்பு ஒருமனிதனை மேம்படுத்தும். நல்ல புத்தகங்களை படிக்கும் போது விசாலமான சிந்தனையும், பிறதுறை அறிவும் ஏற்படும்.எனவே புத்தக வாசிப்பு அவசியமாகிறது. ஒரே அரங்கின் கீழ் அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும் என்பதால் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை நம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    • ஈசன் அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டினார்
    • ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் குடமுழுக்கு விழா நேற்றைய முன் தினம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேரோடும் வீதியில் பட்டனப் பிரவேசமும், பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றது.இதையடுத்து, ஈசன் நாமபுரீஸ்வரருக்கும், அம்பாள் தர்மஸம்வர்த்தினிக்கும் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.சந்தன காப்பு அலங்காரத்தில் ஈசன் காட்சியளித்தார். சிவனடியார்களால் திருவாசகம், முற்றோதுதல் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறிய ரச தேரில் திருமண மேடை அமைக்கப்பட்டது. இதில், உற்சவ மூர்த்திகளான ஈசன், அம்பாள் திருவுருவங்கள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவன் கோவில் அருகே உள்ள நாடியம்மாள் கோவிலிருந்து திருமாங்கலியம், பட்டு வஸ்திரங்கள், தேங்காய், பழங்கள், இனிப்புகள் போன்ற சீர்வரிசைகளோடு மேள தாளம் முழங்க மணமேடைக்கு கொண்டு வரப்பட்டது. ஈசன்- அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்களால் அலங்காரம் ெ சய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. சிவச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர். பல சடங்குகளுக்கு பின் புதிய திருமாங்கல்யம் கொண்டு ஈசன்- அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலங்குடி சொர்ண பைரவ சிவாச்சாரியர் குழுவினர் தெய்வானை திருக்கல்யாண விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • விழாக்காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

    அரியலூர்,

    அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகுகலியுகவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொருஆண்டும் 10 நாட்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம்.இந்த ஆண்டு நாளை (வியாழக்கிழமை) ராமநவமி அன்று கொடிஏற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா வரும் 7-ந் தேதியும், 8-ந் தேதி ஏகாந்தசேவையும் மிகசிறப்பாக நடைபெறும். திருவிழா காலங்களில் தினசரி நாதசுர இசை, திருமஞ்சனம், கிளாரினட், பொய்க்கால் குதிரைஆட்டம், நாட்டியம், வேதபாரண்யம், பஜனைகள், கிராமியகலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.பக்தர்கள் வருகையை முன்னிட்டு தண்ணீர்பந்தல், அன்னதானம், தங்கும் வசதி, குடிநீர்வசதி, மருத்துவவசதிகள் அமைத்து தரப்படுகிறது. அரசுபோக்குவரத்துகழகம் சார்பில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், சேலம், துறையூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், திட்டகுடி, ஆகிய பகுதிகளிலிருந்து விழாக்கால சிறப்பு பஸ் இயக்கப்படவுள்ளது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவினை முன்னிட்டு மாவட்டகலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படும். அரியலூர் மாவட்டபோலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

    • கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .
    • 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலில் இருந்து நந்தவனத்துக்கு சென்று பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நேற்று காலை மேளதாளங்களுடன் சென்று கொடிப்பட்டம் வாங்கி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதன் பின்பு காலை 9 மணிக்கு மேல் முத்துமாரியம்மன் சிலை முன்புள்ள கொடிமரத்தில், கொடியேற்றப்பட்டது.

    பின்பு மூலிகைகள், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு நேர்த்திகடன் செலுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டிக் கொண்டனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் காப்புகட்டி நேற்று முதல் விரதத்தை தொடங்கினர். இரவு கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 14 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அம்மன் ரிஷபம், பூதம், யானை, அன்னப்பறவை, கேடயம், வெள்ளிக்குதிரை காமதேனு உள்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி 17 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 22-ந் தேதி கம்பத்தில் திருவிழா கொடியேற்ற நிகழ்வும், மே 30-ந் தேதி பால்குடம், தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், மே 31-ந் தேதி பூக்குழி விழாவும், ஜூன் 6-ந் தேதி தேரோட்டமும், ஜூன் 7-ந் தேதி வைகையாற்றில் தீர்த்தவாரி விழாவும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் 3 மாத கொடிக்கம்ப நிகழ்ச்சியின் உபயதாரர் ராசு காவல் குடும்பத்தினர் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×