search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • விழா நிறைவடைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் முத்தாலம்மன் நிறை குளத்துஅய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி பொங்கல் மற்றும் முத்துராம லிங்கதேவர் 31-வது குருபூஜை விழா நடை பெற்றது.

    விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுக்கோட்டை கிராம ஊரணியின் மைதானத்தின் நடுவில் உரல் புதைத்து அதில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக, மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 13 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கபட்டன.

    இந்த காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்க மதுரை, விருது நகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன.இந்த எருது கட்டு விழாவை பெண்கள், சிறுவர்கள், முதியோர் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தலா 2 அண்டா, 2 குக்கர், ரூ.5000 ரொக்கம் மற்றும் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டது.

    இந்த வடமாடு மஞ்சு விரட்டு விழா நிறைவ டைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    • கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகர் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வைகாசி பெருந்திரு விழா விமரிசை யாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை(26-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றம் நடக்கிறது.

    14 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்மம், கருடன், அனுமார், சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 5-ந்தேதி சுவாமி குதிரை வாக னத்தில் வைகையாற்றில் இறங்கி ராமராயர் மண்ட பத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசா வதார நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ந்தேதி குதிரை வாகனத்தில் கோவிலுக்கு திரும்புகிறார். 8-ந்தேதி உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 9-ம் நாள் விழாவான வசந்த உற்சவ திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • சிவ வாத்திய வாசிப்பிற்கு ஏற்ப சிறுவர்கள் உற்சாக நடனமாடினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்த மான வண்டமர்பூங்குழலாள் சமதே பிரமபுரீஸ்வரர் சுவாமி, தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது.

    பழமை வாய்ந்த இக்கோவிலில் பிரம்மோற்சவ வைகாசி பெருந்திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராத னைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வந்தது. இந்நிலையில் 9-ம் நாள் திருவிழாவான வசந்த உற்சவர் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஏராளமான சிவ தொண்டர்கள் ஆரூரா தியாகேசா என்ற பக்தி முழக்கத்தோடு தியாகரா ஜரை சுமந்தபடி நடனமாடினர். பிரிங்க நடன கோலத்தில் தியாகராஜ சுவாமி

    கமலாம்பாளுடன் வசந்த மண்டபத்தில் சிவ வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சிவ வாத்திய வாசிப்பிற்கு ஏற்ப சிறுவர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தது பக்தர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    இதில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா இன்று தொடங்குகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காப்பு கட்டுதளுடன் தொடங்கு கிறது. விழாவையொட்டி இன்று மாலை 6 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு உற்சவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் எழுந்தரு ளுவார்.

    அங்கு சிறப்பு தீப, தூப, ஆராதனைகள் நடைபெற்று ஓதுவார்களால் பாடல் பாடப்படுகிறது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் மீண்டும் உற்சவர் வருகிற 1-ந் தேதி வரை மாலை தோறும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 2-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி வருடத்திற்கு ஒருமுறை சண்முகர் சன்னதியில் இருந்து வள்ளி தெய்வானை யுடன் கோவில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு வகையில் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 3-ந் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கியமானதாகும்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இது முக்கியமான கோவிலாகும். இந்தக் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கியமான தாகும். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா நாளை (25-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலையில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் வெள்ளி ரதமும், 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    தினமும் மாலையில் ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சிகள், சிறப்புநாதசுவர கச்சேரிகள், பட்டிமன்றம் நடைபெறும்.வைகாசி விசாக விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வைகாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். திருவிழா 17 நாட்கள் நடக்கிறது.

    இந்த ஆண்டுக்கான கொடியேற்றம் நடந்தது. அர்ச்சகர் சண்முகவேல் கொடி மற்றும் பொருட்களுடன் மேளதாளம் முழங்க 4 ரத வீதிகளில் வலம் வந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் திருவிழா கொடியேற்றும் விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

    திருவிழா கொடியேற்ற உபயதாரர் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தினர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேசுவரி, பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

    சுகாதாரப்பணி, குடிநீர்வசதி, கூடுதல் தெரு விளக்கு ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச் சட்டி, பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினர்.

    • சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.
    • சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் உலகப் பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுல்லா அடக்கமாகி உள்ளார். இந்த தர்காவில் வருடந்தோறும் உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த வருடம் 849-ம் ஆண்டு உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவின் முதல் நிகழ்ச்சி மகரீபு தொழுகைக்கு பின் மவ்லீது (புகழ் மாலை) ஓதப்பட்டு நேற்று தொடங்கியது. இதை யொட்டி தர்கா அக்தார்கள் முன்னிலையில் ராமநாத புரம் மாவட்ட டவுன் ஹாஜியார் சலாஹூதீன் ஆலிம் தலைமையில் புகழ்மாலை மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தொடர்ந்து தர்கா மண்டபத்தில் இருந்து ஹக்தார்களால் மவ்லீது ஷரீப் எனும் புகழ்மாலை 23 நாட்களுக்கு ஓதப்படுகி றது. அதனை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி 13-ந் தேதி அதிகாலை வரை நடக்கிறது. மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுக்க, நாட்டியக் குதிரைகள் நடன மாட, சந்தனக்கூடு பவனி வருகிறது. அனைத்து சமுதாயத்தினரின் அணி வகுப்புடன் புனித மக்பரா வில் சந்தனம் பூசப்படும்.

    19-ந் தேதி நிறைவு நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப்பின் கொடி யிறக்கம் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு விநியோகிக்கப்பட்டு 849-வது உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர். யாத்ரீகர்க ளுக்கான சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    • வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை தொடர்ந்து அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
    • வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருவிழாக்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகிறது.

    வேலூர்:

    வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை தொடர்ந்து அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    இந்த திருவிழாக்களில் சாமி ஊர்வலத்தின் போது கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சாகச நிகழ்ச்சிகள், மேள வாத்தியங்கள் என பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    தற்போது வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருவிழாக்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகிறது.

    நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளிலும் இந்த கலைநிகழ்ச்சி ஏட்டிக்கு போட்டியாக நடத்துகின்றனர்.

    இதனை காண சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி, ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இரவு 7 மணி அளவில் தொடங்கிய இந்த கலை நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 25 பேர் நடனமாடினர். இதனை காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இந்த நடன கலை நிகழ்ச்சியில் பெண்கள் அரை, குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடியது மட்டுமின்றி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றையும் செய்து காண்பித்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் முகம் சுழித்ததோடு, ஆபாசமாக இருப்பதாக கூறி நிகழ்ச்சியின் பாதியில் எழுந்து சென்றனர்.

    தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் இருந்தும் போலீசார் அதனை கண்டும், காணாமல் இருந்தனர். மேலும் போலீசாரும் பார்வையாளர்கள் போல் நடன நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகில் நின்று ஆபாசமாக நடனத்தை கண்டு ரசித்தனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் :-

    திருவிழாவில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக தெருக்கூத்து நாடகம், வில்லுப்பாட்டு, இன்னிசை கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது 'ரெக்கார்டு டான்ஸ்' என அழைக்கப்படும் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சியும் அதிகளவில் நடத்தப்படுகிறது.

    திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட இந்த நடன நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் மற்றும் பாரம்பரிய விழிப்புணர் பாடல்கள் இடம் பெற்றிருக்கும் என நம்பி வந்தோம்.

    ஆனால் இங்கு ஆபாச நடன நிகழ்ச்சி மட்டுமே நடந்தது. பெண்களே கையில் போதை பொருட்களை கையில் வைத்து சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்று அநாகரிகமாக நடனமாடினர்.

    இது போன்ற நடன நிகழ்ச்சிகளால் அடுத்த தலைமுறை போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் அபாயநிலை உள்ளது என்றனர்.

    • பரதநாட்டிய கலைஞர்கள் 60 குழுக்களாக 100 பேர் கலந்து கொண்டனர்.
    • இன்று இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் தேசிய பரதநாட்டிய அகாடமி சார்பில் 53-வது அகில இந்திய பரதநாட்டிய திருவிழா நடைபெற்றது.

    விழாவில் இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பரதநாட்டிய கலைஞர்கள் 60 குழுக்களாக 100 பேர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை விழாக்குழு அலுவலர் ரவீந்திரக்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில் தனிநபர் பரதநாட்டியம், குழுக்கள் பரதநாட்டியம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரதநாட்டிய விழா நடந்து வருகிறது.

    இன்று இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் கர்நாடக தேசிய பரதநாட்டிய அகடாமி தலைவி அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பரதநாட்டிய கலைஞர் சுவாதி பரத்வாஜ் செய்திருந்தார்.

    பக்தர்கள் அலகு குத்தி, வேல் ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலகமாக வந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-ஊட்டி செல்லும் பிரதான சாலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தினமும் சிறப்பு பூைஜகள் நடைபெற்றது. நேற்று பக்தர்கள் அலகு குத்தி, வேல் ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலகமாக வந்தனர்.

    பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது அதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு எளிய கணித செயல்பாடுகள், அறிவியல் செயல்பாடுகளை கற்றுக்கொடுத்தனர்.
    • மூளைக்கு வேலை, மந்திரமா?தந்திரமா? போன்றவற்றை குறித்தும் கற்றுக்கொடுத்தனர்.

    சீர்காழி:

    எடமணலில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா அரசினர் உயர்நிலைப்பள்ளி நடைபெற்றது.

    இதில் பள்ளி தலைமையாசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர் கார்த்திக் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றனர்.

    சிறப்பு விருந்தினர்களாக ப.தமிழ்ச்செல்வன், பஞ்சாயத்தார் க.அறிவழகன் மற்றும் வார்டு உறுப்பினர் லெட்சுமி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ப.பவஸ்ரீ,ர.ரஞ்சிதா,வி.ரேகா,மு.அலமேலு, கு.கலைவாணி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வானவில் மன்ற கருத்தாளர் மீனாட்சி குழந்தைகளுக்கு எளிய கணித செயல்பாடுகள், அறிவியல் செயல்பாடுகள், மூளைக்கு வேலை, மந்திரமா? தந்திரமா? போன்றவற்றை மிகவும் சிறப்பான முறையில் கற்றுக் கொடுத்தார்கள்.

    முடிவில் தன்னார்வலர் பவஸ்ரீ நன்றி கூறினார்.

    • கிரிவலத்தின்போது கடம்ப மலர்களை பெண்கள் சூட்டி கொள்கின்றனர்.
    • கழுதிருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் கோடைகாலத்தில் அக்னி நட்சத்திர கழுதிருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத கடைசி 7 நாட்கள், வைகாசி மாத முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த நாட்களில் பக்தர்கள் காலை, மாலை வேளையில் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். அவ்வாறு கிரிவலம் வரும்போது சுத்தமான சஞ்சீவி காற்று வீசும் என்றும், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பது நம்பிக்கை. மேலும் கிரிவலத்தின்போது கடம்ப மலர்களை பெண்கள் சூட்டி கொள்கின்றனர்.

    அதன்படி இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கழு திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை வேளையில் பக்தர்கள் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்து வழிபட்டனர்.

    இந்நிலையில் கழுதிருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்தனர்.

    அப்போது பெண்கள் கடம்ப மலர்களை தலையில் சூடிக் கொண்டும், கையில் ஏந்தியும் சென்றனர். இதற்காக கிரிவீதியில் ஆங்காங்கே இலையுடன் கூடிய கடம்ப மலர்கள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பக்தர்கள் கிரிவலம் வந்தபோது அழகுநாச்சி அம்மன் கோவில், வனதுர்கை அம்மன், மகிஷாசூரமர்த்தினி அம்மன், வீரதுர்கை அம்மன் கோவில்களுக்கும் சென்று வழிபட்டனர். இன்று திருவிழா நிறைவு பெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×