search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105688"

    ராஜபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் பத்மஜா (வயது 25). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், ராஜபாளையம் மில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தனசேகர் (30) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 60 பவுன் நகை, ரூ.2ம லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    திருமணம் முடிந்தபின் கணவருடன் சென்னையில் வசித்து வந்தேன். அப்போது கணவர் ரூ. 75 ஆயிரம் கூடுதல் வரதட்சணை கேட்டும், குழந்தை பிறக்காததை சுட்டிக்காட்டியும் துன்புறுத்தி வந்தார்.

    இதற்கு அவரது பெற்றோர் பால்ராஜ்-ராஜேஸ்வரி, சகோதரி சுப்புலட்சுமி, அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜி விசாரணை நடத்தி தனசேகர், அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #Tamilnews
    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்கு பதிலாக 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்டுப் பெற்றுள்ளார்.
    புவனேஸ்வர்:

    திருமணத்தின்போது மணப்பெண் வீட்டாரிடம் பணம், நகை மற்றும் வாகனம் போன்றவற்றை மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டு பெறுகின்றனர்.

    ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்கு பதிலாக 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்டுப் பெற்றார்.

    அவரது பெயர் சரோஜ் காந்த் பிஸ்வால் (33). ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்துக்கு பெண் தேடினார். இறுதியில் அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மிரேகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    அப்போது மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். திருமணத்தின் போது ஆடம்பரமாக பூ அலங்காரம், பந்தல் அலங்காரம் தேவையில்லை. வாணவேடிக்கை வேண்டாம் என்பன போன்ற நிபந்தனைகள் வைத்தார்.

    இதை சற்றும் எதிர்பாராத மணப்பெண்ணின் தந்தை மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு சம்மதித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது.

    அதில் கிராம மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திருமணத்தின் போது தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி மணமகளின் தந்தை ஒரு லாரி நிறைய பழ மரக்கன்றுகளை கொண்டு வந்து ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வாலிடம் வரதட்சணையாக கொடுத்தார்.



    அவற்றை கிராம மக்களிடம் மணமக்கள் பரிசாக வழங்கினர். அனைத்து மரக்கன்றுகளையும் நட்டு வளர்த்து மரமாக வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

    ஆசிரியர் பிஸ்வால் ‘மரம் நண்பன்’ என்ற அமைப்பில் பிரசாரகராக இருக்கிறார். எனவே தனது திருமணத்தின் மூலம் மரம் வளர்ப்பை பிரபலப்படுத்த திட்டமிட்டு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார்.

    இதுகுறித்து கூறும்போது, “நான் வரதட்சணைக்கு எதிரானவன். மரம் வளர்ப்பு மற்றும் அதை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதை எனது திருமணத்தில் பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தேன். அதன்படி கிராம மக்களிடம் மரக்கன்று பரிசளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன்.

    எனது மனைவியும் ஆசிரிரியையாக இருக்கிறார். நாங்கள் இருவரும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்து ஊக்குவிப்போம். பொதுமக்களிடம் எடுத்துக்கூறி மரம் வளர்ப்பை ஊக்குவிப்போம்” என்றார்.

    ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணைக்காக மனைவியை அடித்து விரட்டிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 22). இவருக்கும் ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த 3.7.2017-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 12 பவுன் நகை, ரூ.2 லட்சம ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டன.

    திருமணம் முடிந்த பிறகு ஜெயப்பிரகாஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் தனது மனைவியின் நகை மற்றும் பணத்தை வாங்கி செலவு செய்து விட்டார். மேலும் கூடுதலாக 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் வாங்கி வரச் சொல்லி கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

    வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். இது குறித்து ஆர்த்தி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் ஜெயப்பிரகாஷ், அவரது தந்தை மணி, தம்பி அலெக்ஸ் பாண்டி, உறவினர் சிங்காரம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.#tamilnews
    தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் கே.கே.பட்டியை சேர்ந்தவர் சபிதா (வயது30). இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை மந்திச்சுணையை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 40 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. அந்த நகைகளை வேல்முருகனின் தாயார் லட்சுமி வாங்கி வைத்துள்ளார்.

    மேலும் வேல்முருகனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சபிதா தனது மாமியாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எனது மகனுடன் சேர்ந்து வாழவேண்டுமென்றால் மேலும் ரூ.10 லட்சம் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும். இல்லையென்றால் விவாகரத்து செய்து விடுவதாக கூறி சித்ரவதை செய்துள்ளார்.

    இதற்கு வேல்முருகனின் தந்தை அழகுபாண்டி மற்றும் உறவினர் கேசவன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சபிதா உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தியப்பிரதேசத்தில் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் தராததால் மணமேடையில் மணமகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Dowry

    குவாலியர்:

    மத்தியப்பிரதேச மாநிலம் குலாலியரை சேர்ந்தவர் சுமித் சிவ்ஹாரே. ராணுவ வீரர். இவருக்கும் குவாலியர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சுமித் சிவ்ஹாரேவுக்கு ரூ.11 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    இருவரின் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது மணமகன் சுமித்சிவ்ஹாரே திடீரென்று புல்லட் மோட்டார் சைக்கிள் மற்றும் ஏ.சி. வாங்க ரூ.2 லட்சம் கூடுதலாக வரதட்சணை தர வேண்டும் என்று கூறினார். ஆனால் மணமகள் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை தர மறுத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுமித் சிவ்ஹாரே தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். மேலும் மணமகளையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தினார்.

    மணமேடையில் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் மணமகன் சுமித்சிவ்ஹாரேயிடம் விசாரணை நடத்தினர். #Dowry

    ×