search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க."

    • அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்குடி

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம் இளங்கோ, மாவட்ட எம்.ஜி.ஆர் இளை ஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், நகர செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், பொதுக் குழு உறுப்பினர் புலவர் பழனியப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திரா தேவி, நகர மகளிரணி தலைவி சுலோச்சனா, நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, ராம்குமார், பிரகாஷ், அமுதா, ராதா, நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், வட்ட செயலாளர் இலைக்கடை சரவணன், வழக்கறிஞர் காளீஸ்வரன் உள்பட நிர்வா கிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி,

    மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசு ப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தி, கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் ஆறுமுகம், செயலாளர் முத்துப்பாண்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்து சின்னத்துரை, ஜெயபாலன், வட்டச் செயலாளர்கள் பாறையடி மணி, பக்கீர் மைதீன், நத்தம் வெள்ளபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது.
    • கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., மாணவர்களை அழைத்து அவர்கள் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பண்பொழி சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது. அதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., கல்லூரி மாணவர்களை அழைத்து மாணவர்களின் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, நகராட்சி உதவி பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப பிரிவு உதவியாளர் சுரேஷ், அரசு ஒப்பந்ததாரர் வேல் துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநாட்டிற்கு பிறகு அ.தி.மு.க.வில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

    சிவகாசி

    சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடை–பெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.–வேலுமணி, தமிழக சட்ட மன்ற எதிர்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    மதுரை மாநாட்டில் விரு துநகர் இரண்டு மாவட்ட கழகம் சார்பாக ஆயிரக்க ணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு எடப்பாடியார் நன்மதிப்பை பெற்றுள் ளோம். தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த காலம் தி.மு.க.வுக்கு இறங்கு முகம், அ.தி.மு.க.வுக்கு ஏறு முகம். ஆகவே நாளை ஆட்சி நமதே, எடப்பாடியார் முதலமைச்சராக போவது உறுதி.

    தி.மு.க.வுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. வருகின்ற தேர்தல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வின் பொற்கால ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் உருவாக்கக்கூடிய தேர்த லாக அமையும். ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு தி.மு.க. வினர் மற்றும் தமிழக முதலமைச்சர் அலறு கின்றனர். ஒட்டு மொத்த தமிழகமும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சரா வதை எதிர்நோக்கி காத்தி ருக்கிறது என்றார்.

    தலைமை நிலைய செய லாளர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    தி.மு.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசக்கூடியவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. செய் யாத குற்றத்திற்காக அவரை தி.மு.க. அரசு பழி வாங்கியது. கொலை குற்ற வாளி போன்று போலீசார் தேடி னர். பொய் வழக்கு போடுவ தையே தி.மு.க. தொழிலாக கொண்டுள்ளது. கழக நிர்வாகிகள் யார் மீது பொய் வழக்கு போட்டாலும் அவர் களுக்கு கழகப் பொதுச்செய லாளர் எடப்பாடியார் உறு துணையாக இருப்பார்.

    விரைவில் நாடாளு மன் றத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. எந்தத் தேர்தல் வந்தாலும் விருது நகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி வாகைசூடும். முன் னாள் முதலமைச்சர் எடப் பாடியார் மீண்டும் முதல மைச்சர் ஆக வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பு கின்றனர். மதுரை மாநாட்டிற்கு பிறகு மிகப்பெ ரிய எழுச்சியை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எப்போது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், சந்திர பிரபா முத்தையா, சிவசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன் பத்தமிழன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் சேதுராமானு ஜம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட மகளி ரணி செயலாளர் சுபாஷினி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், விருதுநகர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கலாநிதி,

    சிவகாசி ஒன்றிய முன் னாள் பெருந்தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரம ணியம், மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், கழக சிறுபாண்மை பிரிவு துணைத் தலைவர் சித்திக், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட கழக இணைச்செயலாளர் அழகுராணி, விருதுநகர் நகர செயலாளர் முகமது நயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்ப சாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.

    • முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விழாவில் கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • விழாவின் போது பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் அ.தி.மு.க. சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி பொருளாளர் மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், தலைமை நிலைய பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர அவை தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், நகர பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, எழில்நகர் கிளை செயலாளர் பாபு, களப்பாகுளம் கிளை செயலாளர் பசும்பொன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் முருகன், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், சிவஞான ராஜா உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பாக நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் செய லாளர் டாக்டர் அசோக் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்ட பொருளாளர் திருப்பதி, முன்னாள் பேரூ ராட்சி துணைத்தலைவர் சோனை, வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ்கண்ணா, மகளிரணி மாவட்ட செய லாளர் வக்கீல்லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

    பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பலகட்ட ஆய்வுகளுக்குபின் முன்னாள் ஜனா திபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழுஆய்வு செய்து அந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள் அங்கு இருஅவைகளிலும் விவாதித்தபின் சட்டத்தை நிறைவேற்றிவிட்டால் அது தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியாவில் உள்ளஅனைத்து மாநிலங்க ளுக்கும் செல்லும் என்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தெரியாதா, அவர் அறியாமையில் புலம் புகிறார்.

    முதல்வராக இருந்தும் கூட இது தெரியவில்லை என்பது வேதனையாக உள்ளது. திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்த வந்தவர் மாலையும், கழுத்துமாக காத்திருக்கும் வேளையிலே மணமக்களை வாழ்த் தாமல் ஆட்சி பறிபோகி விடுமோ என்ற பயத்தில் தனது கவலையை பகிர்ந்து கொண்டார். ஆட்சி அதிகா ரம் போய்விட்டால் என்ன செய்வது என்று கவலை யோடு பேசியிருக்கிறார்.

    எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகி றதோ, அப்போதெல் லாம் அவர்கள் ஆட்சி அற்ப ஆயு ளில் கவிழ்ந்துவிடும் என் பதுதான் கடந்த கால வரலாறு. அது கருணாநிதி காலத்திலிருந்து தொடர்கிறது. அது தற்போது மு.க.ஸ்டாலின் காலத்திலும் தொடர இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்திட்டங் களை அரசியல் காழ்ப்பு–ணர்ச்சி காரணமாக தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப் பட்டுள்ளது.

    சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். என்று ஐக்கிய நாட்டு சபையில் சொல்வார்கள். தி.மு.க. இன்று காலை உணவுத்திட்டம் கொண்டு வருவதில் எந்தவித ஆட்சேப னையும் இல்லை. மாண வர்கள் பயனடைகிறார்கள் என்றால் அதை வரவேற் போம். ஆனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் சத்துணவு 1 முதல் 10-ம் வகுப்பு வரை கொடுக் கப்படுகிறது.

    இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை காலை உணவு யார் கொடுப்பார் கள்? எதற்கு இந்த வேறு பாடு. காலை உணவு திட் டத்தை அமுல்படுத்தும் போது ஒரே மாதிரியாக அமுல்படுத்த வேண்டும். சத்துணவு திட்டம் நிறுத்தப் பட்டு விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. காரணம் சத்துணவுதிட்ட போர்டுகள் அகற்றப்பட்டு விட்டது.

    எம்.ஜி.ஆர். பெயரை தாங்கிய பெயர் பலகைகளை அகற்றிவிட்டு காலை உண வுத்திட்ட பெயர்பலகை வைப்பதனால் எம்.ஜி.ஆர். புகழை எந்த காலத்திலும் யாராலும் அழிக்கமுடியாது. அது இதயத்தில் ஊறிப்போய் உள்ளது, ரத்தத்தில் கலந்து போய் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்து கண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, வார்டு கவுன்சிலர்கள் சூர்யா, வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி, பஞ்சவர் ணம், கீதா, 18 வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

    • ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ஓ.பி.எஸ். புரட்சி பயணத்தின் தொடக்கமாக இந்த பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது.

    இதைத் தொடர்ந்து தன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க மாவட்டம்தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து, இந்த சந்திப்புக்கு 'புரட்சி பயணம்' என்று பெயரிட்டார். இதன் துவக்கமாக இன்று காஞ்சிபுரம் அருகே கலியனூர் பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. இன்றைய பொதுக்கூட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், வேறொரு நாளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்று இருக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரன் அறிவித்து இருக்கிறார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
    • ஒரே நாடு ஒரே தேர்தல்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோண த்தில் தொழிற்பயிற்சி பள்ளி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய புதிய கட்டிடம் ரூ.2.40 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., துணை மேயர் மேரி பிரின்சிலதா, மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி குமரி மாவட்ட த்தில் படித்த இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் வகையில் திறன் பயிற்சி மையம் அமைக்க ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் தொழில்பயிற்சி மையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறைகளில் மூலமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பாரதிய ஜனதா சொல்லி வருகிறது. இதனை அ.தி.மு.க. ஆதரிக்கிறது. பாரதிய ஜனதா எதை சொல்கிறதோ அதை ஆதரிப்பது தான் அ.தி.மு.க.வின் வழக்கம். அ.தி.மு.க.வை பற்றி சொல்வ தற்கு எதுவும் இல்லை. அவர்களுக்கு ஒரு நிரந்தர கொள்கை கிடையாது. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை எதிர்த்தார்கள். ஆனால் இப்போது பாரதிய ஜனதா சொல்வதை கேட்டு ஆதரிக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா வழி நடப்ப வர்கள் அ.தி.மு.க.வினர். அதனால் அ.தி.மு.க.வை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பாரதிய ஜனதா நேர்மையான கட்சி, நேர்மையான ஆட்சி என்று கூறி வந்தது. தற்போது மத்திய அரசின் சி.ஏ.ஜி. அறிக்கையில் ரூ.7 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சி.ஏ.ஜி. அறிக்கை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரதிய ஜனதா கூறுகிறது.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி விவகாரத்தில் சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்து தான் பாரதிய ஜனதாவினர் பெரிதாக பிரசாரம் செய்தார்கள். இப்போது அது மிகப் பெரிய ஊழல் என்று கூறி வந்தனர். அவர்களுக்கென்று வந்தவுடன் அதில் ஒன்று மில்லை என்று கூறுகிறா ர்கள். ஊழலற்ற நேர்மை யான ஆட்சி என்று கூறிவரும் பாரதிய ஜனதாவி னர் செய்துள்ள மிகப்பெரிய ஊழல் இதுவாகும். தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த ஊழல் குறித்து பதில் கூற வேண்டும்.

    பால் கொள்முதல் முறையாக நடைபெற்று வருகிறது. பால் கொள்மு தலை அதிகரிக்க பால்வள த்துறை தேவை யான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை அ.தி.மு.க. கட்சி உறுதியாக ஆதரிக்கும்.

    செப்டம்பர் மாதம் 18-ம் தேதியில் இருந்து பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக, நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் உள்ளிட்டவைகளை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, இந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது.

    இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை அ.தி.மு.க. கட்சி உறுதியாக ஆதரிக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

    "மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும்," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். 

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு நிர்வாகிகள் தயாராகின்ற வகையில் பூத் கமிட்டி அமைப்பது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு பகுதி 25-வது வார்டு அ.தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகர 25-வது வார்டு வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான அக்ஷயா கண்ணன் ஏற்பாட்டில் வடிவீஸ்வரத்தில் நடைபெற்றது. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு நிர்வாகிகள் தயாராகின்ற வகையில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான கையேடுகளை வழங்கி, சீரிய முறையிலும், சிறப்பாக நிர்வாகிகள் செயல்பட ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், நாகர்கோவில் மாநகர பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், ஜெபின்விசு, முருகேஸ்வரன், நாகர்கோவில் மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலிஜா, கோபாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகி திவ்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொண்டார்.
    • அ.தி.மு.க. கிளை அமைப்பு ஏற்பாடுகளை ஆனக்குழி எஸ்.சதீஸ் செய்திருந்தார்.

    குளச்சல் :

    கேரள மாநிலம் திருவ னந்தபுரம் மாவட்டம் அருவிக் கரை பஞ்சாயத்தில் அ.தி.மு.க கிளை அமைப்ப தற்கு அருவிக்கரை பிரமுகர் அஜீஸ் குளச்சல் நகர அ.தி.மு.க அலுவலகத்தில் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், நகராட்சி கவுன்சிலர் ஆறுமு கராஜா ஆகியோரிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லுக்கூட்டம் பேரூர் செயலர் வக்கீல் அகஸ்டின், மண்டைக்காடு பேரூர் செயலாளர் விஜயகுமார், குளச்சல் நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் வினோத், நகர இளைஞர் பாசறை செயலாளர் மலுக்கு முகமது மற்றும் மரியலூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருவனந்தபுரம் அருவிக்கரை பஞ்சாயத்தில் அ.தி.மு.க. கிளை அமைப்பு ஏற்பாடுகளை ஆனக்குழி எஸ்.சதீஸ் செய்திருந்தார்.

    • கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் மகேந்திரன் ஸ்மித் வெற்றி பெற்றார்.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார்.

    செங்கோட்டை:

    கடையநல்லூர் அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் 12 வயதான மகேந்திரன் ஸ்மித். இவர் கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கு பெற மகேந்திரன் ஸ்மித் தகுதி பெற்றார்.

    இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் தந்தை சந்திரசேகர் தமிழக அரசுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் சர்வதேச போட்டிக்கு செல்ல தேவையான செலவிற்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது மாணவனின் தந்தை சந்திரசேகர், யோகா பயிற்சி ஆசிரியா் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×