search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானம்"

    டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யும்போது ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் மதுபானம் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களை குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.), தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது போன்ற குற்ற நடவடிக்கையை தடுக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, மதுபான சில்லரை விற்பனை கடைகளில் நடைபெறும் ஒவ்வொரு மதுபான விற்பனைக்கும் ரசீது கண்டிப்பாக வழங்க கடைப்பணியாளர்களை அறிவுறுத்த வேண்டும். அந்த விற்பனை ரசீதில் கடை எண், தேதி, மதுபானத்தின் பெயர், அதன் அளவு, அதன் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். மேலும், கடைப்பணியாளர் ரசீதின் மீது கையொப்பமிட வேண்டும்.

    வணிக வளாகங்கள் உள்பட சென்னையில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் விற்பனை தொகையை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் பெறுவதற்காக ‘ஸ்வைப்’ கருவி வழங்கப்பட்டுள்ளது.

    மதுபான விற்பனையாளர் அல்லது மேற்பார்வையாளர் இவர்களில் யார் ‘ஸ்வைப்’ கருவி மூலம் விற்பனை செய்து ஒப்புகை சீட்டு வழங்குகிறார்களோ, அவர் அந்த ஒப்புகை சீட்டின் பின்புறம், எந்த மதுபானம் விற்பனை செய்ததற்கு அந்த ஒப்புகை சீட்டு கருவியில் இருந்து பெறப்பட்டது என்பதை எழுத வேண்டும். அதாவது மதுபானத்தின் பெயர், அதன் அளவு, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தேதி ஆகிய விவரங்களை கண்டிப்பாக எழுத வேண்டும்.

    ‘ஸ்வைப்’ கருவியில் இருந்து பெறப்பட்ட ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தொகையும், மதுபானத்தின் விற்பனை விலையும் வேறுபட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து கடைகளிலும் ஒவ்வொரு நாளும் என்னென்ன அளவு கொண்ட மதுபானங்கள் எவ்வளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாக அதற்குரிய ஏடுகளில் பதிவு செய்ய வேண்டும்.

    மேற்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    கர்நாடகத்தில் ஆன்-லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக குமாரசாமி கூறினார். #kumaraswamy
    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ஆன்-லைனில் மதுபானம் விற்பனை செய்யும் முடிவு முந்தைய அரசால் எடுக்கப்பட்டது. இதை நான் அனுமதிக்க மாட்டேன். ஆன்-லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும். இதை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்ததாரருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பது இதன் நோக்கம் அல்ல.

    நான் சிவமொக்காவுக்கு சென்று வந்த பிறகு மதுபான விற்பனை அதிகரித்துவிட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். நான் அங்கு சென்று வந்த பிறகு பா.ஜனதாவினருக்கு பீதி ஏற்பட்டுள்ளது. அதனால் மதுபான விற்பனை அதிகரித்திருக்கும். ராமநகரில் பா.ஜனதா வேட்பாளர் விலகியது கடவுளின் செயலாக இருக்கலாம்.

    வேட்பாளரை விலை கொடுத்து வாங்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அங்கு பிரசாரத்திற்கு செல்லாவிட்டாலும், வாக்காளர்கள் எங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்வார்கள். கர்நாடக மேல்-சபைக்கு மொத்தம் 3 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். 2 நியமன உறுப்பினர்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நியமன உறுப்பினரை எங்கள் கட்சி சார்பில் நியமனம் செய்வோம்.



    இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு பெரிய அளவில் விவசாயிகள் மாநாடு நடத்தப்படும். அதில் கடன் தள்ளுபடிக்கான கடிதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தீபாவளிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாதமும் ஒரு இனிப்பான செய்தியை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். அதற்கு தேவையான திட்டங்களை தயாரித்து வைத்துள்ளேன்.

    மாநிலத்தில் உள்ள முக்கியமான அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். நெடுஞ்சாலைகளில் 10-க்கும் அதிகமான விபத்து சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவி கேட்டு ஜனதா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் என்னிடம் மனு கொடுக்கிறார்கள்.

    ஏழை மக்களுக்கு உதவ தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும். ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தனியார் பஸ்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக எனக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumaraswamy
    அரசு நிர்ணயம் செய்த விற்பனை நேரத்தினையும் மீறி ஒட்டன்சத்திரத்தில் 24 மணி நேரமும் படுஜோராக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
    ஒட்டன்சத்திரம்:


    ஒட்டன்சத்திரம் டவுன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புற்றீசல் போல் பரவிய முறைகேடாக 24 மணி நேரமும் அரசு மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனையால் ஆங்காங்கே குடிமகன்கள் அரைகுறை ஆடைகளுடன் அநாகரீகமான முறையில் சாலைகளில் வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரத்தில் மாநகராட்சி கழிவறை அருகில் அதாவது லட்சுமி திருமண மகால் அருகில் ஏ.கே.எம். சி காம்ப்ளக்ஸ் எதிரில் இந்தியன் தியேட்டர் அருகில் உள்ள சந்திலும், அத்தி கோம்பை ஊராட்சி மன்ற அலுவலகம், ரேசன் கடை அருகில் உள்ள பெட்டிக் கடையிலும், சத்திரப்பட்டி பெட்ரோல் பங்கிலும், வடகாடு ஊராட்சியிலும் புதுச்சத்திரத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் 2 வீட்டிலும், மூலச்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் வெங்கடாசலம் வீட்டின் அருகிலும் தனிநபர் வீட்டிலும் மது விற்கப்படுகிறது.

    இதுதவிர கவுண்டன் புதூர், பி.அம்மாபட்டி கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் மதுபான ஒரு குவாட்டர் நிர்ணய விலை ரூ.100-க்கு கூடுதலாக 140 குவாட்டர் விற்கப்பட்டு வருகிறது.

    அரசு நிர்ணயம் செய்த விற்பனை நேரத்தினையும் மீறி 24 மணி நேரமும் படுஜோராக மதுபானங்கள் விற்கபட்டு வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×