என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 105991"
சென்னை:
பா.ஜனதா தலைவர் அமித் ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக நாளை மறுநாள் (2-ந்தேதி) வருகிறார்.
பா.ஜனதா போட்டியிடும் தூத்துக்குடி, சிவகங்கை, கோவை ஆகிய 3 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.
2-ந்தேதி காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கிருந்து எட்டயபுரம் ரோட்டில் தூத்துக்குடி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசையை ஆதரித்து நடை பெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார்.
நண்பகல் 12.30 மணிக்கு எச்.ராஜாவுக்கு ஆதரவாக நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை புறப்பட்டு செல்கிறார். கோவை சிவானந்தா கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு கோவை பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த பிரசார கூட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டு பேசுகிறார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அமித் ஷா கோவையில் இருந்து தனிவிமானத்தில் பெங்களூர் புறப்பட்டு செல்கிறார். #AmitShah #LokSabhaElections2019
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-
ஏப்ரல் 1-ந் தேதி தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளிலும், 2-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை தொகுதிகளிலும், 3-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தொகுதிகளிலும், 4-ந் தேதி தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
ஏப்ரல் 5-ந் தேதி மதுரை, திண்டுக்கல், தேனி பாராளுமன்ற தொகுதிகளிலும், 6-ந் தேதி தஞ்சை பாராளுமன்றம், சட்டமன்ற தொகுதிகளிலும், 7-ந் தேதி சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளிலும், மீண்டும் தஞ்சையிலும் பிரசாரம் செய்கிறார். 8-ந் தேதி செல்லும் இடம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 9-ந் தேதி ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளிலும், 10-ந் தேதி கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, 11-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், ஆரணி பாராளுமன்ற தொகுதிகளில ஜி.கே.வாசன் பிரசாரம் செய்கிறார்.
12-ந் தேதி சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளிலும், 13-ந் தேதி திருச்சி, தஞ்சை தொகுதிகளிலும், 14-ந் தேதி தஞ்சை, 15-ந் தேதி திருவாரூர், நாகை தொகுதிகளிலும் மீண்டும் தஞ்சாவூரிலும் பிரசாரம் செய்கிறார். 16-ந் தேதி ஜி.கே.வாசன் பிரசாரம் செய்யும் இடங்கள் பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #GKVasan
கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று இரவு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேனில் நின்று பிரச்சாரம் செய்ய கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு அவர் இரவு 9.57-க்கு கும்மிடிப்பூண்டி பஜாருக்கு வேனில் வந்தார். தினகரன் 10 மணியை தாண்டி பிரச்சாரம் செய்வாரா? தேர்தல் விதிமுறையை மீறுவாரா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளும் போலீசாரும் மறைமுகமாக காத்திருந்தனர்.
ஆனால் டி.டி.வி.தினகரன், வேட்பாளரின் பெயரைச் சொல்லி அவரை அறிமுகப்படுத்தினார். பின்னர் ‘‘நமக்கு எந்த சின்னம் கொடுக்கப்பட்டாலும் அது வெற்றியின் சின்னம்’’ என்று தனது கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவாறு சரியாக 3 நிமிடத்தில் தனது பேச்சை முடித்தார்.
பின்னர் சைகை மூலம் அவர் வாக்குகளை பொதுமக்களிடம் சேகரித்தார். தொண்டர் ஒருவர் கொடுத்த பூச்செண்டையும் அவர் வாங்க மறுத்து விட்டார். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அதனை மீறக்கூடாது என அந்த தொண்டரிடம் எடுத்து கூறினார். #TTVDinakaran
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை முறைகளை பற்றி விவரிக்கும் சிறப்பு கூட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
தாசில்தார் வில்சன் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் அலுவலர் பார்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிற கட்சிகள் மீது விமர்சனம் செய்யும் போது அக்கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனங்கள் மட்டும் இருக்க வேண்டும்.
ஆனால் பிறகட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சொந்த வாழ்கை பற்றிய விமர்சனங்கள், நிரூபிக்கப்படாத குற்றசாட்டுகள், மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனம் கண்டிப்பாக செய்யக்கூடாது.
மேலும் அரசியல் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தும் படங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும். வாக்குகளை பெறுவதற்காக இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கப்படக்கூடாது.
தேர்தல் பிரச்சார களமாக மசூதி, சர்ச் மற்றும் கோவில் போன்ற வழிபாடு தலங்கள் பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாற்றம் செய்தல் போன்ற குற்றசெயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு உதவி தேர்தல் அலுவலர் பார்வதி தெரிவித்தார்.
இதில் துணை வட்டாட்சியர் தாமோதரன், வருவாய் ஆய்வாளர் ரவி, இன்ஸ்பெக்டர்கள் அனுமந்த், மதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவீந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். #ParliamentaryElection
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
காவிரி பிரச்சனைக்காக. பாராளுமன்றத்தை முடக்கியவர்கள் அ.தி.மு.க. எம்.பிக்கள். தி.மு.க. எம்.பிக்கள் எதற்கும் குரல் எழுப்பியதில்லை. ஸ்டாலின் தனது தந்தையை பயன்படுத்தி தி.மு.க.வின் தலைவர் ஆனவர். ஆனால் நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனேன்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட தி.மு.க. எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாட்டு மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில், பாராளுமன்றத்தில் போதிய நிதி இருந்தும் மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதிகாரம் தான் அவர்கள் கண்ணுக்கு தெரிந்தது தவிர, மக்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
ஆனால் அதிமுக அரசு கிடைத்த உரிமையை முறையாக பயன் படுத்தியது. நாட்டில் உள்ள மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி எம்.எல்.ஏ., சிட்லபாக்கம் ராஜேந்திரன், தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., மற்றும் ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., ஆதிராஜாராம், கமலகண்ணன், பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீராமஜெயம், மூவேந்தர், பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், டால்பின் ஸ்ரீதர், மோகன்ராஜா, பா.ம.க. நிர்வாகிகள் சகாதேவன், விவேல், லோகநாதன், ராம்குமார், சிவகுமார், தே.மு.தி.க. வி.சி. ஆனந்தன், பிரபாகரன், தினகரன், முருகன்., த.மா.கா. மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மனோகர், சத்தியநாராயணன், புதிய நீதி கட்சி துரைராஜ், ரமேஷ், ஜெகன், புரட்சி பாரதம் கட்சி ராஜி, ஆதிவேந்தன், மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
இந்நிலையில், பாஜகவுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாளையும் நாளை மறுதினமும் 6 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.
நாளை காலை ஜம்மு காஷ்மீரில் பிரசாரத்தை தொடங்கும் மோடி, உத்தரகாண்ட் மற்றும் உ.பியின் மீரட்டில் பிரசாரம் செய்கிறார். மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஒடிசாவின் கோராபுத், தெலுங்கானாவின் மெஹ்புப் நகர், ஆந்திராவின் கர்னூல் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரமாண்ட பிரசார கூட்டங்களில் உரையாற்ற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் மீரட் பொதுக்கூட்டத்தில் 8 மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேச உள்ளார். இந்த தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. #LokSabhaElections2019 #ModiCampaign
இன்று காலை மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் அமைச்சர் பழனிசாமி காலை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் பழனிசாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சென்னை தொகுதியில் முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #LokSabhaElections2019
உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி தேடி தர அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
கடந்த வாரம் 3 நாட்கள் அவர் கங்கையில் படகு பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தை நடத்தினார். கங்கை கரையோர மக்களை அவர் வெகுவாக கவர்ந்தார்.
அடுத்த கட்டமாக அவர் பஸ் பயண பிரசாரத்தை நடத்த உள்ளார். பிறகு ரெயில் பயண பிரசாரத்துக்கும் பிரியங்கா திட்டமிட்டு இருக்கிறார்.
பிரியங்காவின் அடுத்த கட்ட பிரசார பயணம் தற்போது வெளியாக தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தி பகுதியில் நாளை மறுநாள் (27-ந்தேதி) அவர் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக ராகுலும், பிரியங்காவும் எந்த ஊருக்கு பிரசாரத்துக்கு சென்றாலும் அங்குள்ள இந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பிரியங்கா சமீபத்தில் குஜராத்துக்கு சென்றிருந்தபோதும் இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டார்.
அதே பாணியில் அவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு செல்வாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரியங்கா செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PriyankaGandhi
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்புறம் காவலாளி என்று குறிப்பிடப்படும் ‘சவுக்கிதார்’ என்ற இந்தி சொல்லை அடைமொழியாக பயன்படுத்தினார்.
மோடியை தொடர்ந்து அனைத்து மத்திய மந்திரிகளும், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதல் மந்திரிகளும், இதர மந்திரிகளும், கோடிக்கணக்கான பாஜக பிரமுகர்களும் ‘சவுக்கிதார்’ என்ற சொல்லை அடைமொழியாக பயன்படுத்தியதால் இந்த வார்த்தை டுவிட்டரில் பிரபலம் ஆனது.
இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த மாதம் 26-ம் தேதி இந்திய விமானப்படைகள் அத்துமீறி புகுந்து நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிக்கப்படாததால் இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘பாகிஸ்தானில் இருந்து 8 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து ஏதோ செய்து விட்டார்கள் என்பதற்காக நீங்கள் (இந்தியா) ஒட்டுமொத்த (பாகிஸ்தான்) நாட்டின்மீது எகிறிப்பாய முடியாது’ என கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்னும் தனிநாடு உருவாக வேண்டும் என 23-3-1940 அன்று லாகூர் நகரில் முஸ்லிம் லீக் கட்சி நிறைவேற்றிய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் மாதம் 23-ம் தேதியை தேசிய நாளாக பாகிஸ்தான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சாம் பிட்ரோடா தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அரசக்குடும்ப வாரிசுகள் முன்னர் நாடு இருந்த நிலையை மட்டுமே இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாத சக்திகளுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் முன்வந்ததில்லை. இப்போது இது புதிய இந்தியா - பயங்கரவாதிகளுக்கு வட்டியுடன் சேர்த்து அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும்.
இதற்காக #JantaMaafNahiKaregi (மக்கள் மன்னிக்க மாட்டார்கள்) என்னும் ஹேஷ்டாகை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள மோடி, நமது படைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகின்றன. 130 கோடி இந்தியர்களும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதை நாம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #JantaMaafNahiKaregi #Modi
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 20 தொகுதிகளின் வேட்பாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர். சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார்.
சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மிகப்பெரிய பாரதத்திற்கு நிலையான ஆட்சி தேவை. ஆகவே இந்த நிலையான ஆட்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தான்வருவார் என்று ஒட்டுமொத்த மக்களே தீர்மானித்து இருக்கின்றார்கள். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
நாங்கள் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. சார்பாக வெளியிட்டு இருக்கிறோம். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு இருக்கின்றோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி மிக சிறப்பாக இருப்பதற்காக அந்த தேர்தல் அறிக்கையிலே பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருக்கின்றன.
ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கின்ற அத்தனை வறுமை கோட்டு மக்களுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்பது தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த தேர்தலையொட்டி தான் எங்களுடைய தேர்தல் கள அறிக்கை அமைந்திருக்கின்றது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால் செய்வோம்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்ட 2-வது கட்டப்பணிக்கு அனுமதி கேட்டு இருக்கிறோம். அனுமதி விரைவில் கிடைக்க இருக்கின்றது. அனுமதி கிடைத்தவுடன் சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்டப்பணி தொடங்கப்படும்.
அதைபோல் கோவை மாநகரத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும். அதுவும் மத்திய அரசு அனுமதி பெற்று அம்மாவுடைய அரசு நிறைவேற்றும்.
அதுமட்டுமல்ல மாவட்ட சாலைகள், நெடுஞ்சாலைகள் அத்தனையும் விரிவாக்கப்படும். இதற்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. தேர்தலில் இடம் பெற்றுள்ள அறிக்கை பொய் அறிக்கை. சேலத்தில் எல்லா இடங்களிலும் பாலம் கட்டப்பட்டு விட்டது. வேண்டும் என்றே ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும் அதற்காக தி.மு.க. ஒரு அறிக்கையை கொடுத்து இருக்கின்றது.
கிட்டத்தட்ட 3, 4 இடங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேச பா.ஜ.க. கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றோம். தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் மோடி 4 இடங்களில் பேசுவார்.
எங்களுடைய பணி வேகமாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. அ.தி.மு.க. வேட்பாளர்களை எல்லாம் அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டார்கள்.
வருகிற 22-ந்தேதி கருமந்துறையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கப்படும். அம்மா அவர்கள் இருக்கின்றபோது புதுச்சேரி உள்பட 40 இடங்களில் போட்டியிட்டோம்.
அதாவது 39 இடங்களில் 37 இடத்தில் வென்றோம். பா.ம.க. ஒரு இடத்தில் வெற்றிப்பெற்றது. பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 39 தொகுதிகளும் வெற்றி பெற்ற கூட்டணி எங்களுடைய இந்த மெகா கூட்டணி.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #LSPolls #PMModi #EdappadiPalaniswami
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்