search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106242"

    • இதயவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
    • இதய அடைப்பு, இதயவலி உள்ளிட்ட பிரச்சனையும் வராது.

    செய்முறை

    முதலில் விரிப்பில் அமர்ந்து பத்மாசனம் போடவும். ஒவ்வொரு கையையும் தொடை இடுக்கில் மிக மெதுவாக நுழைக்கவும். பிறகு உள்ளங்கைகள் நன்றாக தரையில் ஊன்றியபடி மெதுவாக எழவும். இதே நிலையில் 10 விநாடிகள் இருக்கவும்.

    பிறகு கீழே அமர்ந்து, மெதுவாக கால்களை அகற்றி, கைகளை சாதாரணமாக வைக்கவும். பின்னர் ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மறுபடியும் இதே போல ஒருமுறை செய்யவும். மூன்று முறை இந்த பயிற்சியை செய்யவும்.

    சற்றே கடினமான ஆசனம் இது. எனவே அவசரப்படாமல் நிதானமாக இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும்.

    இந்த ஆசனத்தை, சிறுவர்கள், பள்ளிப் பருவத்தில் மிக எளிமையாகப் பயின்று விடலாம். மிகவும் உடல் பருமன் உள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், இதயவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம். ஆனால், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் அவர்களை செய்யச் சொல்லவும்.

    பலன்கள்

    கல்லீரல் மிகச் சிறப்பாக இயங்குவதோடு, அதிலுள்ள குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நமது உடலில் உள்ள மண்ணீரல், சக்தி பெற்று நன்றாக இயங்கும்.

    ராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படும். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் இந்த ஆசனத்தைப் பயின்றால், வளர்ந்தபிறகு அவர்களின் இதயமும் நுரையீரலும் பாதுகாக்கப்படும். இதய அடைப்பு, இதயவலி உள்ளிட்ட பிரச்சனையும் வராது.

    முழங்கால்வலி, மூட்டுவலி வராது. இருந்தாலும் நீங்கும். தசவாயுக்களும் சிறப்பாக இயங்கும். தோள்பட்டை வலி நீங்கும், தோள்பட்டை இறங்கியிருந்தால் சரியாகும். எனவே உடல் அழகுடன் இளமையாக நீங்கள் வாழலாம்.

    கை, கால்கள் நன்கு பலம் பெறும். கைவலி இருந்தால் சரியாகும். சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாகும். மனம் ஒரு நிலைப்படும். ஞாபகசக்தி வளரும். படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆசனத்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்!

    குக்குடம் என்றால் கோழி என்று பொருள். கோழி எப்படி காலையில் சுறுசுறுப்பாக எழுந்து கூவி, அனைவரையும் எழுப்பி சுறுசுறுப்பாக்குகிறதோ, அதே சுறுசுறுப்பு இந்த ஆசனம் செய்பவருக்கும் கிடைக்கும்!

    நரம்பு மண்டல இயக்கம் மிகச் சிறப்பாகும். கை கால் நடுக்கம், உடல் நடுக்கம் வராது.

    • கால் வலியை போக்குகிறது.
    • தோள்பட்டையை வலிமையாக்குகிறது.

    செய்முறை

    இந்த ஆசனம் செய்ய முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். பின்னர் கைகளை மேலே தூக்கவும். முட்டிபோட்டு நின்று முன்னால் தரையில் படுக்கவும். (படத்தில் உள்ளபடி) கைகள், தலை, மார்பு தலையில் இருக்க வேண்டும். இந்த நிலையில் 30 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முறை செய்ய வேண்டும்.

    முதுகு தண்டு, கால் மூட்டியில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

    பயன்கள்

    இந்த ஆசனம் முதுகின் தசைகளை நீட்டி முதுகுத்தண்டை சீரமைக்கும் நோக்கத்தில் இது அக்குள் மற்றும் தோள்களில் ஒரு பெரிய நீட்சியை வழங்குகிறது.

    இந்த போஸ் குழந்தையின் தோரணை மற்றும் கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாயின் நன்மைகளை ஒருங்கிணைக்கிறது, மேலும் நாய்க்குட்டி போஸ் என்பது கை சமநிலைக்கு உங்களை தயார்படுத்தும் சிறந்த தோள்பட்டை திறப்பாளர்களில் ஒன்றாகும்.

    உத்தான ஷிஷோசனம் என்றால் ஒரு இளம் விலங்கு போல நீட்டுவது. இங்கே நீங்கள் மனதை அமைதிப்படுத்த உங்கள் தலையை கீழே கொண்டு உங்கள் முதுகெலும்பை எளிதாக நீட்டிக்கலாம்.

    உங்களுக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக முழங்காலில் காயம் இருந்தால், உங்கள் முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களுக்குக் கீழே மடிந்த யோகா போர்வையை விரித்து கவனமாக இந்த ஆசனத்தை முயற்சிக்கவும்.

    முதுகுத்தண்டை வலிமையாக்குகிறது. கடினமான தோள்களைத் திறந்து மார்பை விரிவுபடுத்துகிறது

    • மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.
    • முகத்தில் வரும் சுருக்கங்களை கட்டுப்படுத்துகிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளுங்கள். மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும், உங்கள் இரு கால்களையும் மேல்நோக்கி உயர்த்தவும்.

    இரண்டு கால்களும் தரையுடன் 90 டிகிரி கோணத்தில் நிறுத்தவும். மூச்சை வெளியேற்றும் போது உங்கள் இடுப்பை உயர்த்தவும்; உங்கள் கால்களை தலைக்கு மேல் தள்ளுங்கள்.

    இடுப்பை உங்கள் இரு கைகளாலும் பிடித்து கொள்ளுங்கள். உங்கள் கால்கள், முதுகு மற்றும் இடுப்பை ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு செய்யவேண்டும்.

    உங்கள் கால்விரல்களை வானத்தை நோக்கி நீட்டவும், உங்கள் கண்களை உங்கள் கால்விரல்களில் வைத்திருங்கள். சிறிது நேரம் இந்த நிலையை வைத்திருங்கள், சாதாரண சுவாசத்தை வைத்திருங்கள்.

    பின்னர் மெதுவாக ஆரம்ப நிலைக்கு திரும்பவும். இதை மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.

    உயர் இரத்த அழுத்தம், முதுகு தண்டு பிரச்சனை, காது பிரச்சனை உள்ளவர்க இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். வயதானவர்கள் அல்லது பலவீனமானவர்கள் இந்த ஆசனத்திற்கு மாற்றாக விபரீதகரணியை முயற்சி செய்து தோள்கள் நிற்கும் போஸின் அனைத்து நன்மைகளையும் பெறுங்கள். உடலை உயர்த்த முடியாத போது தலையணைகளை பயன்படுத்தவும்.

    பயன்கள்

    பிறப்புறுப்பு உறுப்புகள் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது மற்றும் குணப்படுத்துகிறது.

    மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

    நரம்புகள் மற்றும் மூல நோய் குணமாகும்.

    தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும்.

    பாலியல் கோளாறுகளை குணப்படுத்துகிறது.

    விந்தணு திரவ இழப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    ஆஸ்துமா, நீரிழிவு, கல்லீரல் கோளாறுகள் மற்றும் குடல் கோளாறுகளில் நன்மை பயக்கும்.

    தோல்கள் சுருங்குவதையும் முகத்தில் வரும் சுருக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது.

    • தசை நார்கள், ரத்தக்குழாய்கள் சீரடைகிறது.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த ஆசனம் இது.

    சர்க்கரை நோய் இப்போது அனைவரும் வரக்கூடிய நோயாக மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் மாத்திரை எடுத்துக் கொண்டு வருகின்றனர். சர்க்கரை நோயாளிகளின் கால் விரல்களில் ஏற்படும் பாதிப்பைப் போக்க இவ்வகை யோகாசனம் பெரிதும் உதவுகிறது..

    செய்முறை:

    இவ்வகை யோகாசனம் செய்ய முதலில் விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து, விழிகளை திறந்து மூச்சை இயல்பாக விடவும். பிறகு சம்மண நிலையிலிருந்து கால்களை பிரிந்து, வலது காலை அமர்ந்த நிலையில் உள்பக்கம் மடித்து, இடது கால் பாதத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும். இருகைகளை நெஞ்சருகே வணங்கிய நிலையில் வைக்கவும். இந்த ஆசனம் செய்யும் போது நமது எண்ணத்தை முதுகு தண்டெலும்பில் கீழிருந்து மேல் நோக்கியிருக்கும்படி செய்யவும். அடுத்து இடக்கால் நிலையை வலது காலுக்கும், வலது கால் நிலையை இடது காலுக்கும் மாற்றி செய்யலாம்..

    இவ்வாறு இந்த ஆசனத்தை 3 செய்ய வேண்டும். முதுகு தண்டில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. எவ்வித அறுவை சிகிச்சை செய்தவர்களும் 6 மாத காலத்திற்கு பின் இந்த பயிற்சியை செய்யலாம்..

    பலன் : இடுப்பு, முழங்கால் பந்து கிண்ணங்கள், அவைகளை இணைக்கும் தசை நார்கள், ரத்தக்குழாய்கள் சீரடைகிறது. முதுகெலும்பு வளையங்களின் இடையே உள்ள ஜவ்வுப்பகுதி சீரடைகிறது. சர்க்கரை நோயாளிகள் பாதம், கால் விரல்களின் பாதிப்பு குறைகிறது. மாலை நேரங்களில் 15 நிமிடம் செய்வது ஏற்றது.

    • ஜீரண சக்தி நன்கு கிடைக்கிறது.
    • குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படுகிறது.

    உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இப்பெயர் பெற்றது.

    செய்முறை :

    விரிப்பில் பத்மாசனத்தில் அமர வேண்டும். உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும். இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே, புட்டப்பகுதியை முழங்கை வரை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

    இந்நிலையில் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், ஆசனத்தை விலக்கி சாதாரண நிலைக்கு வந்து, பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

    இந்த ஆசனத்தை நான்கு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும், 30 வினாடி முதல், 45 வினாடிகள் வரை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

    வலுவிழந்த மணிக்கட்டு உடையவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    பயன்கள் :

    தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன. ஜீரண சக்தி நன்கு கிடைக்கிறது. குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படுகிறது.

    உடல் எடை குறைகிறது. கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கிறது. கணையம் நன்கு வேலை செய்வதால் , நீரழிவு நோய் நீங்கவும் வராமல் இருக்கவும் இவ்வாசனம் செய்வது ஆசனம் சிறந்தது.

    • மூட்டுகளைப் பலப்படுத்துகிறது
    • நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

    வடமொழியில் 'அர்த்த' என்றால் 'பாதி', 'நமஸ்கார்' என்றால் 'வணக்கம்', 'பார்சுவ' என்றால் 'பக்கவாட்டு', 'கோணா' என்றால் 'கோணம்' என்று பொருள். அதாவது, இந்த ஆசனத்தில் பக்கவாட்டு கோணத்தின் அரை நிலையில் இருக்க வேண்டும், அதாவது பாதி பார்சுவ கோணாசனம். இது ஆங்கிலத்தில் Half Prayer Twist Pose என்று அழைக்கப்படுகிறது.

    பலன்கள்

    நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. முதுகுத்தண்டை நீட்சியடைய வைக்கவும் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது.

    இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. மூட்டுகளைப் பலப்படுத்துகிறது

    செய்முறை

    தவழும் நிலைக்குச் செல்லவும். உங்கள் மணிக்கட்டு தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.

    வலது காலை முன்னே கொண்டு வந்து இரண்டு கைகளுக்கு இடையில் வைக்கவும். வலது பாதம் வலது முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும்.

    இடது கையின் முட்டியை வலது முட்டிக்கு வெளிப்புறமாகக் கொண்டு வரவும். இடது கை விரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முதுகை நன்றாக வலப்புறம் திருப்பவும்.

    வலது கையைத் தரையிலிருந்து உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். வலது கை முட்டி மேல் நோக்கி இருக்க வேண்டும்.

    தலையை நேராக அல்லது மேல் நோக்கி வைக்கவும்.

    20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், தவழும் நிலைக்கு வந்து கால்களை மாற்றிச் செய்யவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 அல்லது 5 முறை செய்யவும்.

    முதுகுத்தண்டு, இடுப்பு, முட்டி ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைப் பயில்வதைத் தவிர்க்க வேண்டும்.

    கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்தைத் திருப்பி மேலே பார்க்காமல் நேராக அல்லது தலையைக் குனிந்து இந்த ஆசனத்தைப் பயிலலாம்.

    • கால் நரம்புகள் பலம் பெறும். கைவலி, தோள்பட்டை வலி நீங்கும்.
    • தொடர்ந்து ஒரு மண்டலம் பயிற்சி செய்தால், நிச்சயம் பலன் உண்டு.

    எளிமையான யோகாசனங்களை தினமும் காலையில் நீங்கள் 10 நிமிடம் பயிற்சி செய்தாலே, கணையம் ஒழுங்காக இயங்கும். நமது பண்புகள் மாறும். நீரிழிவு இருந்தால் சரியாகும். அர்த்த சலபாசனம் செய்து வாருங்கள். நீரிழிவு பிரச்சனை நிச்சயம் குணமாகும்!

    செய்முறை :

    விரிப்பில் புஜங்காசனத்துக்குப் படுத்ததுபோல, படுக்கவும். கைகளை உடலுக்கு அருகில் வைக்கவும். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளே இழுத்தபடியே முதலில் இடது காலை மேல்புறமாகத் தூக்கவும். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வரவேண்டும். இதேபோல், வலது காலைத் தூக்கி இறக்கவும். இது ஒரு சுற்று. இதுபோல ஆறு முறை செய்ய வேண்டும். இடையில் மூச்சுவாங்கினால், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.

    பலன்கள்:

    கணையம் நன்றாக இயங்கும். நீரிழிவிற்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைத்து விடலாம்! தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) பயிற்சி செய்தால், நிச்சயம் பலன் உண்டு.

    மூட்டு சவ்வுகள் நன்றாக செயல்படும். மூட்டுவலி வராது. வலி இருந்தாலும், தொடர்ந்து பயிற்சி செய்யும்போது விரைவிலேயே சரியாகும்.

    கால் நரம்புகள் பலம் பெறும். பாதங்களில் வலியோ, வீக்கமோ வராது.

    அதிகப்படியான வயிற்று சதை குறையும். உடல் அழகாக இருக்கும். அதிக உடல் எடையையும் பக்கவிளைவின்றி சரிபடுத்தும்.

    இரு கைகளுக்கும், தோள் பட்டைக்கும் பிராண ஆற்றல் நன்றாகக் கிடைக்கும். இதனால் கைவலி, தோள்பட்டை வலி நீங்கும். கைகள் நன்றாக பலம் பெறும்.

    குப்புறப் படுத்தபடி இந்த ஆசனம் செய்வதால், இதயமும், நுரையீரலும் நன்றாக அமுக்கப்படும். இதனால் நுரையீரலிலுள்ள அசுத்தக் காற்றானது வெளியேறும். நல்ல பிராண சக்தியும் உள்வாங்கப்பட்டு உடலுக்கு வலு கிடைக்கும். தவிர, இதயம் சம்பந்தமான எந்த பிரச்சனையும் எப்போதும் வராது.

    பெண்களுக்கு அடிவயிற்றில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் வெள்ளைப்படுதல் அதிகமாகும். உடலும் களைப்பாக இருக்கும். உடலுறவில் நாட்டமிருக்காது. இந்த ஆசனமானது அடி வயிற்றுச் சூட்டை சமன்படுத்துகிறது. அதனால் வெள்ளைப்படுதலும், மாதவிடாய் பிரச்சனையும் சரியாகும்.

    • ஆசனங்கள் செய்ய வயது வரம்பும் தடையல்ல.
    • இந்த ஆசனத்தை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.

    நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனையே, மனதை ஒருநிலைப்படுத்துதல் தான். ஆசனங்களுள் ஒன்றான விருக்ஷாசனம் செய்தால், மனதை ஒருநிலைப்படுத்தி, நினைத்த காரியங்களை மிக சுலபமாக செய்ய முடியும். விருக்ஷாசனம் செய்ய, உடல் தசைகள், வளையும் தன்மையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

    ஆசனங்கள் செய்ய வயது வரம்பும் தடையல்ல. அதிகாலையிலோ, அல்லது மாலை நேரங்களிலோ இந்த ஆசனத்தை செய்யலாம். விருக்ஷாசனம் என்றால், மரம் போன்ற தோற்றம் என்று பொருள். இந்த ஆசனத்தை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். ஆசனங்களை கட்டாயப்படுத்தி செய்வதால், எந்த பயனையும் பெற முடியாது. அதேபோல், வெறும் தரையிலும் செய்யக்கூடாது.

    செய்முறை : வலது கால் முட்டியை மடக்கி, அதன் பாதங்களை, இடது காலின் தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். முதல் கட்ட பயிற்சியின்போது, போதுமான அளவு இடது கால் முட்டி, மடங்காத வகையில் செய்ய வேண்டும். பின், நன்கு பயின்ற பிறகு, முட்டி முழுவதுமாக மடங்காமல் செய்ய வேண்டும்.

    தொடர்ந்து, இரண்டு கைகளையும், தலைக்கு மேல் உயர்த்தி, கைகளை ஒன்றாக சேர்ந்து வணங்க வேண்டும். இப்பயிற்சியின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும். மூச்சை அடக்குவதோ, அல்லது வாய் வழியாக மூச்சு விடுவதோ கூடாது. இதேநிலையில், 20 முதல், 30 விநாடிகள் நிற்க வேண்டும். பின்னர் காலை மாற்றி செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை 3 முறை செய்யவேண்டும்.

    பயிற்சியின்போது, உடலின் மொத்த எடையும், ஒரு காலில் தாங்குவதால், கால் தசைகள் வலுப்பெறும். அதேபோல், சீராக மூச்சு விடுவதாலும், எடையை தாங்கும்போது இடுப்பு பகுதியில் வளைவு தன்மை அதிகரிப்பதாலும், நன்றாக பசி எடுக்கும். உரிய நேரத்தில் பசி எடுக்காமல், அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம்.

    உடல் எடையை தாங்குவது மட்டுமின்றி, சமநிலைப்படுத்தி பூமியின் புவி ஈர்ப்பு சக்திக்கு இணையாக, உடலை சமப்படுத்துவதால், மனம் ஒரு நிலைப்படும். இதனால், மனதும் அறிவும் ஒன்றுபட்டு செயல்பட முடியும். இந்த நிலையை நன்றாக பழகிய பின், கண்களை மூடி, இந்த ஆசனத்தில் நிற்க பயிற்சி எடுக்கலாம். ஆண், பெண் என இருபாலரும் இந்த ஆசனத்தை செய்யலாம்.

    கால்கள் வலுப்படுத்த உதவும். புஜங்கள் விரிவடையும். மனதை ஒரு நிலைப்படுத்தமுடியும். முதுகில் நெகிழ்வுத்தன்மை உண்டாகும். ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    • பிடரி நரம்புகளை வலு பெற செய்யும்
    • கழுத்துப் பிடிப்பு, நரம்பு பிடிப்பு விடுபடும்.

    இளமையைத் தக்க வைக்கும் நிகரற்ற ஆசனம் அர்த்த மச்சேந்திராசனம். தோள்களைத் திரட்டி உடம்பை அழகு பெறச் செய்யும். வயிற்றுவலியை பறந்ததோடச் செய்யும் ஆசனம்.

    செய்முறை

    விரிப்பில் உட்கார்ந்து இடதுகாலை 'ட' போல் மடக்கி கணுக்காலின் மீது உட்கார்ந்து கொண்டு வலது காலை மடக்கி இடதுகால் தொடைக்கு அப்பால் ( படத்தில் உள்ளபடி) தரைவிரிப்பில் வலது கால் பாதத்தை இடதுகால் தெடையை ஒட்டி வைக்கவும். இடது கை கக்கத்துக்குள் வலது முழங்கால் போகும்படி செய்து இடது உள்ளங்கையால் இடது கால் மூட்டைப் பிடித்துக் கொள்ளவும்.

    வலது கையை முதுகுக்குப் பின்புறம் கொண்டு வந்து வலது கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும். இந்த நிலையே அர்த்த மச்சேந்திராசனம் நிலை ஆகும். பின்னர் சுவாசத்தை வெளியே விட்டுக் கொண்டே வலது பக்கம் நன்றாகத் திரும்பி தலையையும் திருப்பி கண்களால் இடப்புறம் பார்வையைச் செலுத்தவும்.

    பின்னர் தலையை இடதுபக்கம் திரும்பி கண்களால் வலது புறம் பார்வையைச் செலுத்தவும். பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இம்மாதிரி இரண்டு, மூன்று முறை செய்யலாம்.

    பலன்கள்

    வயிற்று வலியை போக்க வல்லது.

    முதுகெலும்பை வலுப்படுத்தி இளமை நிலைக்கும்.

    நரம்புகளை வலுப்படுத்தும்.

    கழுத்துப் பிடிப்பு, நரம்பு பிடிப்பு விடுபடும்.

    பிடரி நரம்புகளை வலு பெற செய்யும்.

    கண்களின் பார்வையை தெளிவாக்கும்.

    தோள்களை திரட்டி தேகத்தை அழகுபெறச் செய்யும்.

    • கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.
    • ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும்.

    செய்முறை

    விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். பின்னர் உடல் சற்று பின்னோக்கி முழங்கால்களை மீண்டும் உடலை நோக்கி கொண்டு வரவும். உங்கள் தொடைகள் வழியாக கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் முழங்கைகளை மடித்து உள்ளங்கைகளை ஒன்றாக இணைக்கவும் அல்லது உங்கள் உள்ளங்கைகளால் உங்கள் வாயைப் பிடிக்கவும். சுமார் 30 முதல் 60 வினாடிகள் இந்த நிலையில் இருந்து சாதாரணமாக சுவாசிக்கவும். கால்களை கீழே இறக்கி, கால்களுக்கு இடையில் இருந்து கைகளை ஒவ்வொன்றாக தளர்த்தி, கால்களை நேராக்கி ஓய்வெடுக்கவும். அதே படிகளுடன் திரும்பி வாருங்கள். இந்த ஆசனத்தை 3 முதல் 4 முறை செய்யவும்.

    பயன்கள்

    வயிற்றில் படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை நீக்க கர்ப்ப பிண்டசனா உதவுகிறது.

    முழங்கால்கள், கணுக்கால் மற்றும் இடுப்புகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் முதல் மூன்று மாதங்களில் பயிற்சி செய்யலாம்.

    கர்ப்பப்பை மற்றும் மலக்குடலை வலுப்படுத்த கர்ப்ப பிண்டாசனம் உதவுகிறது.

    இந்த ஆசனத்தின் வழக்கமான பயிற்சிகள் உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு அனைத்து வகையான வயிற்று கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்கின்றன.

    செறிவு அதிகரிக்கவும், ஞாபக சக்தியை மேம்படுத்தவும் இந்த ஆசனம் சிறந்தது.

    • வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலியும்.
    • வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும்.

    குறுக்குவாட்டு முக்கோணத் தோற்றம். 'பரிவிருத்த' என்றால் குறுக்கு வாட்டு. 'திரிகோண' என்றால் முக்கோணம். உச்ச நிலையில் உடல் குறுக்குவாட்டு முக்கோணம் போன்று இருக்கும்.

    செய்முறை:

    விரிப்பில் உள்ளங்கைகள் இரு பக்கவாட்டிலும் தொடையை ஒட்டி இருக்கும்படி நேராக நிற்கவும். கால்களை அகட்டிக்கொள்ளவும். காலை அசைக்காமல் இடுப்பை மட்டும் இடது புறம் திருப்பவும். இடுப்பை வளைத்து, வலது உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் தரையில் ஊன்றவும்.

    உயர்த்திய இடது உள்ளங்கையின் மேல் பார்வை இருக்கட்டும். இப்போது மூச்சை வெளியே விடவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடியே மேலெழும்பி உடம்பு வலதுபுறம் நோக்கியிருக்க, கைகள் தோள் மட்டத்தில் நீட்டியிருக்கவேண்டும்.

    கால்களை நகர்த்தாமல் உடலை முன்னுக்குத் திருப்பவும். கைகளைக் கீழே தொங்கவிடவும். வலது காலைத் தூக்கி இடது காலின் அருகில் ஊன்றவும். இதே போல் மறுபுறம் செய்யவேண்டும்.

    பலன்கள்:

    வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும். செரிமானமும் மேம்படும். ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத் தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி ஆகிய பகுதிகளின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலியும். சிறுநீரகம் வலுவடையும்.

    இந்த யோகா ஆசனத்தை பயிற்சி செய்வது கால்களுக்கு நல்ல நீட்சியை கொடுக்க உதவுகிறது மற்றும் அவற்றை மிகவும் வலிமையாக்குகிறது.

    இந்த ஆசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் மார்பு பகுதி திறக்கிறது, அதனால் சுவாசம் பெரிய அளவில் மேம்படும்.

    முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தைப் பயன்படுத்தி பலன் பெறலாம். இது முதுகு வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

    எச்சரிக்கை:

    தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்புக் கீல் வாயுவினால் அவதிப்படுபவர்கள், இதய நோயாளிகள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.

    • முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்யக்கூடாது.
    • வயிற்றில் பிரச்சனை உள்ளவர்களும் செய்யக்கூடாது.

    இந்த ஆசனத்தை செய்ய, மேலே உள்ள படத்தில் உள்ள படி காட்டியுள்ள படி தரையில் அமர்ந்து கால்களை முன்னோக்கி நீட்டியபடி உட்காரவும். இப்போது உங்கள் கைகளை இடுப்புக்கு பின்னால் தரையில் படும்படி தரையில் வைக்கவும். அதன் பிறகு உங்கள் கால்களால் உடலை மேல்நோக்கி உயர்த்தி, தலையை பின்னோக்கி நகர்த்த முயற்சிக்கவும். சாதாரணமாக புஷ்-அப் செய்யும் நிலைக்கு நேர் மாறாக நிலை இது.

    இந்த நிலையில் 30 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முறை செய்யவும்.

    இந்த ஆசனம் செய்வதால் உங்கள் முதுகு, தோள்கள், கைகள், முதுகுத்தண்டு, மணிக்கட்டு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது.

    இந்த ஆசனம் உங்கள் மார்பு, தோள்கள், பைசெப்ஸ் மற்றும் உங்கள் கணுக்கால் முன்புறம் வரை நெகிழ்வடையச்செய்கிறது. இந்த ஆசனம் மனச்சோர்வுக்கு ஒரு நல்ல சிகிச்சையாகும், மேலும் இது உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது.

    இந்த ஆசனம் உங்கள் கைகள், மணிக்கட்டுகள், தொடை எலும்புகளை பலப்படுத்துகிறது.

    ×