search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107099"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • லிங்கோத்பவ தரிசனத்தை எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனம் செய்யலாம்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. அன்று சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த ஆண்டு மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அனைத்துப் பிரபலங்களுக்கும் சாதாரணப் பக்தர்களுக்கும் என அனைவருக்கும் 'மகா லகு' தரிசனம் (சற்று தூரத்தில் நின்று வழிபடுவது) அளிக்கப்படும். குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து வரிசையில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    குறிப்பாக, லிங்கோத்பவ தரிசனத்தைப் பக்தர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனத்தில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் மனதை கவரும் வகையில் தூர்ஜெட்டி கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகா சிவராத்திரி அன்று மட்டும் கோவில் வளாகத்தில் உள்ள 3-வது கோபுரமான திருமஞ்சன கோபுர வழி அடைக்கப்பட உள்ளது. மற்ற 3 கோபுர வாயில்கள் வழியாக வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சாமி தரிசனம் செய்ததும் பக்தர்கள் முருத்யுஞ்சய சாமி சன்னதி அருகில் இருந்து வெளியே வரலாம்.

    இல்லையேல், கோவிலின் மேல் பகுதியில் இருந்தும் வரலாம் அல்லது நுழைவு வாயில் பகுதியிலேயே ஒரு பகுதியில் இருந்தும் வெளி வரலாம்.

    பக்தர்களுக்கு குளியல் அறைகள், கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நிரந்தரமாக 80 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி அன்று 180 நடமாடும் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகா சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்க 1½ லட்சம் லட்டுகள், வடைகள், புளியோதரை, ஜிலேபி ஆகியவை தயாரித்து வழங்கப்படும். சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று கல்ப, குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உக்கிரமான வியாக்ர வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

    அதன்பிறகு அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறுகள் மற்றும் நறுமண திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. வீதிஉலாவில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • இன்று சூரிய, சந்திரபிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், வெங்கடாத்திரி ராமுடுவாக எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வாகன வீதிஉலாவுக்கு முன்னால் மகா விஷ்ணு, ராமர், அனுமன் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. வசந்த காலத்தில் நடத்தப்படும் கைங்கர்யங்களால் சாமிகள் சோர்வடைவார்கள் என்பதால், அதில் இருந்து விடுபடும் நிகழ்ச்சியாக வசந்தோற்சவம் நடத்தப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பின்னர் 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந் தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்புநிலை துணை அதிகாரி வரலட்சுமி, கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திரபிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை ஹம்ச, யாளி வாகன வீதிஉலா நடந்தது.

    முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க உற்சவர்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கங்காதேவியுடன் ஹம்ச வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.

    வீதிஉலாவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருள்கிறார்கள்.

    • 18-ந்தேதி திருமஞ்சனம், கருடசேவை நடக்கிறது.
    • 19-ந்தேதி தீர்த்தவாரி, திருக்கல்யாணம் நடக்கிறது.

    காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவிலைச் சேர்ந்த நளபுரநாயகி நளநாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியார் நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிகம்பம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கொடிக்கம்பத்தில் கருடக்கொடியேற்றப்பட்டது. பின்னர், சாமிக்கும் கொடி கம்பத்துக்கும் சிறப்பு ஆராதனை நடந்தது.

    நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா புறப்பாடு நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும் ஹம்ச வாகனத்தில் நாச்சியார் கோலத்தில் வீதிஉலா புறப்பாடும் நடக்கிறது.

    18-ந் தேதி(சனிக்கிழமை) காலை திருமஞ்சனமும், மாலை கருடசேவையாகவும் பெருமாள் புறப்பாடும் நடக்கிறது. 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நளதீர்த்தத்தில் தீர்த்தவாரியும் மதியம் திருக்கல்யாணமும் நடக்கிறது.

    • கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.
    • பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை பல்லக்கு உற்சவம் நடந்தது.

    அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், 'ஜெகன்மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அவருடன் திருச்சி வாகனத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பல்லக்கு முன் கஜராஜர் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

    முன்னதாக சீனிவாசமங்காபுரத்தில் நடந்த கருடசேவையில் எழுந்தருளிய உற்சவா் கல்யாணவெங்கடேஸ்வரருக்கு திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் யானை மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அந்த மாலைகள் திருப்பதி கோசாலை, தாடிதோப்பு, பெருமாள்பள்ளம் வழியாக சீனிவாசமங்காபுரத்தை அடைந்தன. அந்த மாலையில் ஒன்று மூலவருக்கும், மற்றொரு மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டன.

    மாலை ஊர்வலத்தில் கோவில் சிறப்புநிலை துணை அதிகாரி வரலட்சுமி, கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கருடசேவை நடந்தது. உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருடசேவையில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • உற்சவர்களுக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்து அலங்கரித்தனர்.
    • வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை திருச்சி வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

    அதன்பின் அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறுகள் மற்றும் நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்து அலங்கரித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை அதிகார நந்தி வாகன வீதிஉலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
    • கோலாட்டங்கள் நடந்தன.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கங்காபவனியோடு சூரியபிரபை வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பலித்தனர்.

    அவர்களுடன் மூஷிக வாகனத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பக்த கண்ணப்பர் சப்பரங்களில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகனங்களுக்கு முன்னால் மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோலாட்டங்கள் நடந்தன. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி சென்றனர். நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம், நெய் தீபாராதனை காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • தீபதூப நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.
    • சுவாமிக்கும், தாயாருக்கும் ஏழு வகையான மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    திருமலையில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, கல்யாண மண்டபத்தில் சுவாமி மற்றும் தாயாருக்கு காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பாலாஜி ரங்காச்சாரியார் தலைமையில் திருமஞ்சனம் நடைபெற்றது.

    முன்னதாக விஷ்வக் சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், நவகலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. தொடர்ந்து தீபதூப நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.

    பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. சுவாமிக்கும், தாயாருக்கும் ரோஜா, சம்பங்கி போன்ற ஏழு வகையான மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    • இன்று இரவு சிறப்பு கருட வாகனசேவை நடைபெறும்.
    • கோவிலில் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் கல்ப விருட்ச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகன வீதி உலாவுக்கு முன்னால் நடன கலைஞர்களின் கோலாட்டம் நடந்தது. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை சர்வ பூபாலை வாகன வீதிஉலா நடந்தது. வீதிஉலாவில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    5-வது நாளான இன்று (புதன்கிழமை) இரவு சிறப்பு கருட வாகனசேவை நடைபெறும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுவாமி கருடவாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இதற்காக கோவிலில் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    மதியம் 2 மணிக்கு திருப்பதியில் உள்ள தேவஸ்தன நிர்வாகக் கட்டிடத்தில் இருந்து திருமலை லட்சுமி ஹாரம் கருடசேவையில் சுவாமியை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். காலை 7 மணிக்கு கோவிந்தராஜசுவாமி கோவிலில் இருந்து ஆண்டாள் அம்மனுக்கு மாலை அணிவித்தல் ஊர்வலம் தொடங்குகிறது. பகல் 11 மணிக்கு நகர வீதிகள் வழியாக சீனிவாசமங்காபுரத்தை ஊர்வலம் சென்றடையும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த விழா 26-ந்தேதி வரை நடக்கிறது.
    • ராகு, கேது பூஜைகள் வழக்கம்போல் நடக்கும்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவின் 2-வது நாளான நேற்று வெள்ளி பல்லக்குகளில் சாமி, அம்மையார் 4 மாட வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 26-ந் தேதிவரை விழா நடக்கிறது. மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் 13 நாட்களும் தினந்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடைபெறும்.

    மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நகரை அழகுப்படுத்தியுள்ளனர். சாமி ஊர்வலத்திற்கு முன்னதாக சாலைகளை தூய்மைப் படுத்தி, தண்ணீரை தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது மூலவரின் சேவையை விட உற்சவமூர்த்திகள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    இதனால் மகாசிவராத்திரி நடைபெறும் 26-ந்தேதி வரை கோவிலில் நடக்கும் ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், பச்சை கற்பூர அபிஷேகம் ரத்து செய்யப்படுவதோடு, கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது.

    வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது இரண்டு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான சுவாமி, அம்பாள் 4 மாட வீதிகளில் வீதிஉலா வருகின்றனர். அப்போது பக்தர்களை அபிஷேகங்களில் அனுமதித்தால் கால நிர்வாகம் செய்ய இயலாது என்பதால் பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது.

    ஆனால் பக்தர்கள் மிகவும் பக்தி பாவசத்துடன் ஈடுபடும் ராகு, கேது, சர்ப்பதோஷ நிவாரண பூஜைகள் வழக்கம் போல் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் நடக்கும் என்றும், இப்பூஜைகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    • சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • யாகம் வளர்த்து பூர்ணாஹூதி நடைபெற்றது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காளஹஸ்தீஸ்வரருக்கு கொடியேற்றம் நடைபெற்றது. நுழைவுவாயில் அருகில் சுமார் 40 அடி உயரத்தில் கல்லால் ஆன கொடி மரமும், அதன் அருகில் குரு தட்சிணாமூர்த்திக்கு தங்கக்கொடி மரமும் உள்ளது. தங்கத் தகடு பொருத்தியுள்ள மற்றொரு காளஹஸ்தீஸ்வரர் கொடிமரமும் உள்ளது.

    மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் கொடியேற்றத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக வேத பண்டிதர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் மூலவர் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரம் அருகில் பஞ்சமூர்த்திகளை அமர்த்தி சிறப்பு கலசங்களை ஏற்பாடு செய்தனர்.

    அங்கு யாகம் வளர்த்து பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய புடவைகளை தர்ப்பை கயிறுடன் இணைத்து கொடியுடன் சேர்த்து வேத பண்டிதர்கள் ஏற்றினர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தம்பதியினர், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு தம்பதியினர், ஆர்.டி.ஓ. ராமாராவ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×